ஆதிசக்தியானவர் எங்கும் நிறைந்த
பரம்பொருளான சதாசிவத்தின் சக்தியாகும்.
அவளே அவருடைய சுவாசமாகவும், விருப்பமாகவும் இருப்பவள். சிலர்
கூறுகின்றார்கள். ஆதிசக்தியே சதாசிவத்தின் முழுமையான சக்தி. அந்த சக்தியின்றி சதாசிவத்தால் ஏதும் செய்ய இயலாது. ஆதிசக்தி முதலில் குண்டலினியை உருவாக்கியது, பூமிமாதாவில்
தான். பின் ஸ்ரீகணேசாவை பூமி மாதாவிலினின்று உருவாக்கினார்கள். ஆகவே பூமாதேவி நமக்கு மிகவும் முக்கியமான விஷயமாகும். நாம் பூமாதேவிக்கு எவ்வாறு மரியாதை செலுத்தத்
தெரியாதவர்கள் ஆவோம்.
ஆதிசக்தி குண்டலினியை
உருவாக்கியதின்மூலம், அவர்களுடைய பிரதிபலிப்பையும், விருப்பங்களையும், நமக்குள்
உருவாக்கியுள்ளார்கள். ஆகவே ஆதிசக்தி
என்பது சதாசிவம் குண்டலினி ஆகியவற்றின் மொத்த விருப்பமாகவும், ஆதிகுண்டலினி என்பது
ஆதிசக்தியின் முழுமையான விருப்பமாகவும், அமைகின்றது. பூமிதேவியின் பூமியின்
உட்பகுதியை குண்டலினியானது குளிரிசிசியடையச் செய்யும் வகையில் கிளம்பி
பூமாதேவியின் மேற்புறத்தில் விதம் விதமான சக்கரங்களாக வெளிப்பட்டுப்
பிரதிபலிக்கின்றது. குண்டலியானது வெவ்வேறு
மையங்களைப் பூமியில் கடந்து வெவ்வேறு மையங்களைப் பூமியில் தோற்றுவித்து இறுதியில்
கைலாசத்தைத் தகர்த்துக் கொண்டு ஊடுருவிச் செல்வதை நீங்கள் காணலாம். கைலாசத்திலிருந்து மிகுந்த நுண் அதிர்வுகள்
வெளிப்பட்டுக் கிளம்புவதை பூமாதேவியை அவமதிக்கும் பொழுது ஆதிசக்தியை
அவமதிப்பவர்கள் ஆவோம். நாம் பூமாதேவியை
மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
ஏனெனில் பூமியிலுள்ள புவிஈர்ப்பு
சக்தியிலிருந்து எல்லா இயக்கங்களும் அதனுள் அமையப் பெற்ற குண்டலினி சக்தியால்
கட்டுப்படுத்தப்படுகின்றது. இந்தியாவில்
எல்லோரும் காலையில் படுக்கையை விட்டு எழுந்து பூமியில் கால்களை வைக்கும் பொழுது
பூமி மாதாவிடம் அம்மா தயவுசெய்து நாங்கள் உங்களைப் பாதத்தால் மிதித்து,
நடப்பதற்காக மன்னித்துக் கொள்ளுங்க்கள் என்று கூறிக் கொள்ள வேண்டும். பூமி மாதா
சமுத்திரம், பஞ்ச பூதங்கள் ஆகியவற்றின் படைப்புகளை நாம் மரியாதை செய்யத்
தவறுவதாலேயே, இந்தக் கிரஹத்தில் நாம் துன்பத்திற்கு உள்ளாகின்றோம். நமது
வாழ்க்கைக்கு ஆதாரமாக உள்ள பஞ்சபூதங்களின் முக்கியத்துவத்தைப் புரிந்து
கொள்ளாததாலேயே, பூமியில் நிறைய மாசுக்கள் முதலிய பிரச்சனைகள் உண்டாகின்றன.
பூமிதேவியை மதிக்கத் தவறும் பொழுது அவர்கள்
நிலநடுக்கும் போன்றவற்றை
உண்டாக்குகின்றார்கள். அவர்களுக்குத்
தெரியும், என்ன நடக்கிறதென்று ஆனால்
மக்களுக்குத்தான் புரிவதில்லை இது ஏன் இவ்வாறு நடைபெறுகின்றது என்று பூமி
மாதாவிற்குத் தெரியும் சாதுக்கள் யார் என்று. அதனால்தான் நில அதிர்ச்சியின் பொழுது
அவர்களுக்கு ஊறுவிளைவிப்பதில்லை. அதனால்
தான் மோஸஸிற்கு சிவப்பு சமுத்திரத்தைப் பிரித்தார். ஸ்ரீ ராமனுக்கு இந்தியாவிற்கும், இலங்கைக்கும்
இடையில் பாலம் உருவாக்கினார். பூமியில் நடக்கும் எந்தவிதமான விபத்துக்களுக்கும்
பூமிமாதாவை கடிந்து கொள்ளக் கூடாது. பூமிமாதாவிற்கு
தன் முதுகின் மேல் நடக்கும் மனிதர்களின் நுண் அதிர்வுகளை வைத்தே அவர்களைப் பற்றி
அறிந்து கொள்வார்கள். மனிதர்கள் சாதுக்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள்
பாதுகாக்கப்படுவார்கள்.
சில இடங்கள் புனிதமாக இருக்கின்றன.
இங்கிலாந்தில் ஆக்ஸ்டட் என்ற இடத்தைப் போன்று, அங்கு நிலவி வரும் காந்த சக்தியை வைத்தே
இதை அறிந்து கொள்ளலாம். ஆகவே பூமிமாதாவானவர்கள் சாதுக்களுக்கு என்றே சிலவிஷயங்களை
நிர்மாணித்துத் தருகின்றார்கள், அவர்கள் சாதுக்களுக்கு எல்லாம் அன்பே உருவான
பாதுகாப்பு தருகின்றார்கள். அந்த சூழ்னிலை
அங்கு பொழியும் மழை சரியான நேரத்தில் பொழிகின்றது. சந்திரன், சூரியன் எல்லாம் சரியான
நேரத்திற்கு வந்து போகின்றது. எல்லாமே உரிய முறையில் அழகாக நடந்தேறி வருகின்றது. ஏனெனில் அவைகளுக்குத் தெரியும், இவர்கள்
சாதுக்கள் வாழ்வின் சாரமாக இருப்பவர்கள், இவர்களை கவனித்துக் கொள்வது தமது
கடமையென்றும், பலனில்லாத மனிதர்களை அவைகள் பொருட்படுத்துவதில்லை.
புனிதஸ்தலங்களான இந்தியாவிலுள்ள
அமர்நாத்திற்குச் செல்வதாலோ, மெக்காவிற்குச் செல்வதாலோ, நமக்கு ஆன்மீக உயர்வு
கிட்டி விடாது என்று பூமிமாதா காண்பித்து உள்ளார்கள். சமயச் சடங்கு என்ற பெயரில்
மக்கள் செல்வதால் அங்கும் நில நடுக்கம்
ஏற்படுவது உண்டு. நான் ஜனித்தது
சிந்த்வாராவில். மெக்காவும், சிந்த்வாராவும் பூமத்திய ரேகையிலிருந்து ஒரே நேர்
எல்லைக் கோட்டில் உள்ளது. மெக்கா என்பது
மகேஸ்வர சிவமாகும். அதாவது சிவமாகும். முகம்மதுவிற்குத் தெரியும். மெக்காவிலுள்ள கருங்கல் ஸ்வயம்புவாக வந்தது
என்று. அவரால் நுண் அதிர்வுகளை உணர
இயலும். ஆனால் மெக்காவிற்கு செல்வதாலேயே
மட்டும் ஏதும் அடைந்து விட இயலாது. வித்தியாசம் என்னவெனில் நம்பிக்கையான உண்மையான
மனிதர்களுக்கு மெய்மை கிட்டும்.
போலியானவர்களுக்கு அது இல்லை.பூமிமாதாவும் பஞ்ச
பூதங்களும் எல்லாவற்றைப் பற்றியும் ஆழ்ந்து அறிந்து கொள்ளும் தன்மை வாய்ந்தவர்கள்.
ஏனெனில் அவர்களுடைய குண்டலினி புனிதத்தன்மை வாய்ந்தது. ஆனால் உங்களுடைய மனித பிரயத்தனங்களாலும்,
தவறுகளாலும் ஆணவத்தாலும், கழிவிரக்கத்தாலும் எல்லாவிதமான முட்டாள் தனங்களாலும்
உங்களுடைய குண்டலினியானது அவ்வளவாக உணர்ச்சி மிக்கதாக இல்லை. யாருடைய மனதாவது மற்றவர்களைப் பற்றி எதிராக
நினைக்குமானால் அந்த மற்றவர்களைப் பற்றி எதிர்மறையினர் என்று கூற ஆரம்பிப்பார்கள்.
உண்மையில் அவ்வாறு கூறுபவர்களைத் தான் எல்லா எதிர்மறைகளும் பிடித்திருக்கின்றது.
நாம் உண்மையிலேயே
ஆதிசக்தியின் பிம்பமாக இருப்போமானால், புனிதமாக மிகவும் புனிதமாக வெண்மையின் மீது
ஏதாவது படியுமானால் காண்பித்து விடும். நீங்கள் மிகவும் வெண்மையாக மிக நுண்மையான
கரும்புள்ளிகள் கூட உங்களுக்குத் தெளிவாக மற்றவர்களின் கரும்புள்ளிகளையும்
உணரக்கூடியவர்களாக இருக்க வேண்டும். அந்த
மாதிரி உயரத்தைத் தூய்மையான வாழ்க்கையினால் தூய்மையான சிந்தனையால் தூய்மையான
இதயத்தால் அடைந்து விட்டால் எதையும் பார்த்துப் பார்த்துத் திறமையாக கையாள வேண்டிய
அவசியமில்லை. பூமிமாதாவைப் போன்று எல்லாம் இயற்கையாகவே அமைந்து விடும்.
பூமிமாதா எதற்காகவாவது
திறமையைக் கையாளுகின்றார்களா? ஒரு விதை விதக்கிறோம். அது தானாகவே முளைவிட்டுக் கிளம்புகின்றது. அது
மிகவும் தன்னிச்சையானது. அதைப் பற்றி நாம் ஆச்சரியம் அடைவதில்லை. பூமிமாதாவின் ஒவ்வொரு அணுவிலும், மூலக்கூறுகளிலும்
புலன்களை அறியும் தன்மை உள்ளது.
நீங்கள் பூமியின் மீது
அமர்ந்து தியானம் மிகவும் நல்லது. துரதிர்ஷ்டவசமாக உங்கள் பிரச்சனைகளையெல்லாம்
நான் கிரஹித்துக் கொள்வது போல் பூமிமாதாவும் கிரஹித்துக் கொள்கிறார்கள். எந்த
விதக் கஷ்டமும் இல்லாமல் உங்கள் பிரச்சனைகளிலிருந்து விடுபட இயலும். எவ்வாறு தரையின் மீது உட்கார இயலவில்லையெனில்
ஒரு கல்லின் மீதோ அல்லது சலவைக் கல்லின் மீதோ அல்லது இயற்கையான ஏதோ ஒன்றின் மீதோ
அமர வேண்டும். ப்ளாஸ்டிக்கின் மீது
அமர்வது நல்லதல்ல. இயற்கையான பொருட்கள் உங்கள் பிரச்சனைகள்
எளிதில் கிரஹித்துக் கொள்ளும். இதைப்
போன்றே ஒவ்வொருவரும் மனோநிலையைப் பொறுத்த அளவில் இயற்மையாக இருக்க வேண்டும். நாம் தொடர்ந்து விவாதம் செய்து கொண்டிருந்தாலோ
அல்லது விவரித்துக் கொண்டிருந்தாலோ, அதற்கு முடிவே இல்லை.
தலைவலி தான் மிஞ்சும்.
ஆனால் நீங்கள் தன்னிச்சையாக இருந்தீர்கள் என்றால் மற்றவ்ர் என்ன செய்ய முயற்சி
செய்கிறார் எதைக் கூற விரும்புகின்றார் எதைத் தெரிவிக்கப் போகின்றார் என்று
உடனடியாகத் தெரிந்து விடும். இதைப் பற்றி
நீங்கள் அதிகம் சிந்தித்துப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் மற்றவர் எண்ணத்தை உங்களால் கிரஹித்துக்
கொள்ள இயலும். கிரஹித்துக் கொள்ளுதல்
என்பது மற்றவர்களிடமுள்ள கெட்ட விஷயங்களை எடுத்துப் பார்ப்பது என்பது அல்ல. இது
சல்லடைப் போட்டு நன்மையானவைகளை மட்டும் சலித்து எடுத்துக் கொள்ளுதல்
போன்றதாகும். மற்றவ்ர்கள் கூறும்
யாவற்றையும் கிரஹித்துக் கொண்டு நல்லவற்றை மட்டும் சலித்து எடுத்துக் கொள்வீர்கள்.
இப்பொழுது இந்த
ஆதிசக்தியின் பிரச்சனை யாதெனில் உங்கள்
எல்லோரையும் என்
சரீரத்தில் கிரஹித்துக் கொள்ள முடிவு செய்வதுதான். இது மிகவும் ஆபத்தான விளையாட்டு என்று எனக்குத்
தெரியும். ஆனால் இந்த நேரத்தில் இதை நான் செய்ய வேண்டியதாகின்றது. ஆகவே இதைச் செய்தேன். உங்கள் எல்லோரையும் சரீரத்தில் சிரஹித்துக்
கொண்டுள்ளேன். உங்கள் பிரச்சனைகள் எல்லாம் என்னுள் புகுந்து விட்டது. இது எவ்வாறு எனில் ஒரு சமுத்திரத்தில் உங்களை
ஆழ்த்தி உங்களை தூய்மைப்படுத்துவது போன்றதாகும்.
ஆனால் சமுத்திரத்தின் நிலை என்ன? சமுத்திரம் உங்கள் பிரச்சனைகள் எல்லாம்
நிறைந்ததாகவும் விஷயங்கள் எல்லாம் விலகாமல் தாமதமாகவும் இருக்கின்றது. இது மிகுந்த
தொல்லை கொடுப்பதாக உள்ளது.
ஆகவே சிறந்த வழியாதெனில்
சுயபரிசோதனையின் மூலம் உங்களை நீங்கள் தூய்மைப் படுத்திக் கொள்வதாகும். சிந்தனையின் மூலம் சுயபரிசோதனை செய்து கொள்வது
என்பது இதன் அர்த்தம் அல்ல. சுய பரிசோதனை என்பது தியானத்தின் மூலம் செய்வதாகும்.
நீங்கள் எல்லோரும் கண்டிப்பாகத் தியானம் செய்ய வேண்டும்.
தாயாரகிய நான் நீங்கள்
நன்றாகவும், தூய்மையாகவும் இருப்பதைப் பார்த்து வேறு எதையும்
பொருட்படுத்துவதில்லை. எவ்வாறு பூமிமாதா எல்லாவற்றைபும் பொறுத்து உங்கள் மேல்
அக்கறை கொள்கின்றார்களோ, அவ்வாறே நானும் உங்கள் மேல் கவனம் செலுத்துகின்றேன். நீங்கள்
நல்லவர்களாக இருந்தாலும், கெட்டவர்களாக இருந்தாலும், எவ்வாறு பூமிமாதா
உங்கள் மேல் அன்பு செலுத்துகின்றார்களோ, அவ்வாறே நானும் உள்ளேன். ஆனால் நீங்கள் என்னிடம் அன்பாக இருப்பீர்கள்
என்றால் உண்மையிலேயே நல்ல சகஜயோகிகளாக
இருக்க முயற்சி செய்வீர்கள் என்றால், பகட்டாக இருக்காதீர்கள், வியாபாரிகளைப்
போன்று வியாபாரத் தனத்துடன் இருக்காதீர்கள், சிந்தனையாளர்களாக மட்டுமே
இருக்காதீர்கள்.
விவாதம் புரிபவர்களாக
இருக்காதீர்கள். மற்றவர்களைக் கண்டனமோ, கிண்டலோ செய்யாதீர்கள். நீங்கள் தினமும் பத்து அல்லது பதினைந்து
நிமிடங்கள் தியானம் செய்ய முயற்சி செய்தீர்கள் என்றால் நிச்சயமாகக் கூறுகின்றேன்,
என் ஆரோக்கியம் மிகவும் நல்ல முறையில் இருக்கும்.
உங்கள் எல்லோருடைய
எண்ணங்களையும், கருத்துக்களையும் என்னுள் நான் எடுத்துக் கொண்டுள்ளதால்
தேவையில்லாத சித்ரவதை , வேதனை எனக்கு உண்டாகின்றது. இது மிகவும் ஆபத்தானதுதான் நீங்கள் எல்லோரும்
அறிவுள்ளவர்கள் புரியும். உங்களுக்குத்
தெரியுமா, சில சமயங்களில் தினமும் சிலுவையில் அறையப் படுவது போன்று எனக்கு
இருக்கின்றது. என்ன சொல்வதென்று எனக்குத்
தெரியவில்லை.
அருகாமை என்பதற்கு விளைவு
உண்டு. பிரச்சனைகள் குறைந்த மனிதர் எனக்கு மிகவும் அருகாமையில் வரும் பொழுது எனது
கவனத்தின் அருகாமையில் வரும் பொழுது நான் சிலுவையைச் சுமக்க வேண்டியுள்ளது. நாம் உயர்வதற்காக மேன்மேலும் செல்வதற்காகச்
சஹஜயோகாவில் இருக்கின்றோம். ஆனால் அதைக் குறித்து நாம் செய்வது என்ன? மனமாற
சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம்
தியானம் செய்து கொண்டிருக்கின்றோமா? மற்றவர்களும் மேன்மையடைய ஏதாவது செய்திருக்கிறோமா?
மற்றவர்கள் ஆன்ம தரிசனம் பெற வகை செய்திருக்கிறோமா? குறிப்பாகப் பெண்கள் தயாராக
இருப்பதால் அவர்கள் தங்களூக்குள் இந்தக் கேள்விகளைக் கேட்டுக் கொள்ள வேண்டும்.
ஆண்கள் சுறுசுறுப்பு
மிகுந்து காணப்படுவார்கள். ஆனால் தியானம்
செய்ய மாட்டார்கள். பெண்கள் தியானம் செய்வார்கள்.
ஆனால் வெளி வேலைகளைக் கவனிக்க மாட்டார்கள். இந்த வழியில் இருந்தால் அது வேலை
செய்யாது. இரண்டு வேலைகளுமே செய்யப்பட
வேண்டும். இல்லையெனில் குண்டலினி
உங்களுக்கு உதவி புரியாது. சஹஜயோகம் என்பது தனிப்பட்ட முறையில் அமைந்த ஒன்று அல்ல.
இது ஏதோ தனியாக ஒருவர் எங்கோ அமர்ந்து கொண்டு முனிவராக ஆவதற்காக ஏற்பட்ட
ஒன்றல்ல. இது கூட்டுமுறையில் அமைந்த
ஒன்றாகும். குண்டலினியும் கூட்டுத்
தியானம் வரை உதவி புரிபவர்களுக்கு மட்டுமே உதவிபுரியும்.
சஹஜயோகா என்பது எல்லா
உறுப்புகளுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் வாழ்ந்து கொண்டிருக்கும் வளர வேண்டிய
ஒன்று. சக்தியைப் பெற்றுக் கொள்ள நீங்கள்
தியானம் செய்ய வேண்டும். நீங்கள் வளர வேண்டும். நீங்கள் வளர்ச்சி
பெறவில்லையென்றால் முடிவு பெற்று விடுவீர்கள்.
அதற்கு மேல் நீங்கள் ஒரு சஹஜயோகி அல்ல குறைந்த பட்சம் ஒரு நபருக்காவது ஆன்ம
தரிசனம் பெற உறுதுணை செய்யாத வரை நான் சஹஜயோகி என்று அழைக்க மாட்டேன். மற்ற எல்லா
செயல்களுடனும் சேர்த்து உங்களது முக்கியமான காரியமானது மற்றவர்களுக்கு நீங்கள்
எவ்வாறு ஆத்ம தரிசனம் கொடுக்கிறீர்கள் என்பதாக இருக்க வேண்டும். வாழ்க்கையின் இந்தப் பழக்கத்தை நோக்காத வரையில்
நிச்சயமாக உங்களால் சஹஜயோகாவில் வளர்ச்சியடைய முடியாது.
எனது அன்பின் காரணமாக
எத்தனையோ சஹஜயோகிகள் மீது விருப்பம் கொண்டுள்ளேன். என்னிடம் மிகுந்த அன்பு உள்ளது. அதை வழிமுறைப்படுத்துதல் வேண்டும். இல்லையென்றால் எனக்கு மூச்சுத் திணறி
விடும். என்னையே நான் நேசித்துக் கொள்ள
முடியாது. ஆகவே இந்த அன்பானது பரவ
வேண்டும். ஆகவே உங்கள் மூலமாக இந்த
அன்பானது மற்றவர்களுக்குப் பரவிட நீங்கள் அவர்களைச் சந்தோஷப்படுத்த வேண்டும். இது
எனக்குள்ள ஒரு பார்வையாகும். இந்த
விசேஷமான நேரத்தில் இது முன்பே பல முனிவர்களால் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. நீங்கள் எல்லோரும் அதற்காகத் தேர்ந்து
எடுக்கப்பட்ட விசேஷமானவர்கள் என்பது மிகவும் தெளிவாகத் தெரிகின்றது. நீங்களும் உங்கள் அன்பை வழிமுறைப்படுத்த
வேண்டும். நான் ஒரு நீர்முழ்கி,
தொலைப்பேசியை பழுது பார்த்துவிட்டு அதை உபயோகிக்காமல் இருந்தால் அதனால் என்ன பயன்?
ஆகவேஆதிசக்தியின்குழந்தைகளாகியநாம்இன்றுமுடிவெடுக்கவேண்டியது, எல்லாஇடங்களுக்கும்எல்லாமூலைமுடுக்குகளுக்கும்செல்லவேண்டும். சஹஜயோகிகளாகஇருந்துநீங்கள்செய்யவேண்டியபொறுப்புகளையெல்லாம்என்னசமுதாயத்தில்வசிக்கின்றோம்என்றெல்லாம்சத்தம்போட்டு உரக்கக்கூறவேண்டும். நீங்கள்இங்கேஇருப்பதற்கு நிச்சயம்ஏதாவதுகாரணம்இருக்கவேண்டும்.
உங்களதுமுற்பிறவியில்நீங்கள்சிவாஜியாகவோநெப்போலியனாகவோ ராஜாவாகவோ ராணியாகவோ இருந்திருக்கலாம்.அதனாலென்ன?அவர்கள்என்னசெய்தார்கள்?யாருடையகுண்டலினியையாவதுஎழுச்சிபெறச்செய்தார்களா?இயேசுவின்சீடர்களும்தேவர்களும்கூடயாருக்கும்ஆத்மவிழிப்புணர்வு கொடுத்ததில்லை.ஆனால்உங்களால்அதுமுடியும்.
உங்களைப்பற்றிநான்பெருமைக்கொள்கின்றேன்.ஆனால்திரும்பத்திரும்பக்
,கூறுகின்றேன் இன்னும்அதிகவேகத்தில்சென்றுஅதிகமக்களைசகஜயோகத்திற்குக்கொண்டுவரவேண்டும். எல்லோரையும்கட்டாயப்படுத்திகடினமாகஇருக்கக்கூடாது. கோபம்கொள்ளுதல்கூடாதுஎன்றெல்லாம்கூறுவதுஎனதுசுபாவத்திற்கு மாறானது.அவ்வாறுகூறுவதுஎனக்குக்கஷ்டமானதும்கூட ஆனால்இதிலெல்லாம்நீங்கள்தவறினால்என்னைமுழுமையாகத்தவற வைத்தவர்கள்ஆவீர்கள்.நான்உங்களைக்கேட்கின்றேன்.இன்றுஒரு உறுதிமொழிஎடுத்துக்கொள்ளுங்கள்.சஹஜயோகாவைப்பரப்புவதாகநீங்கள்சஹஜயோகாவைப்பற்றிப்பேசவேண்டும்அதைப்பற்றி அறிந்திருத்தல்வேண்டும்.எல்லாவிதமானமுட்டாள்தனமானபிரச்சனைகளையும்சஹஜயோகாவில்மனிதர்கள் எனக்குஉருவாக்கித்தருகின்றார்கள்.நீங்கள்சஹஜயோகத்தில்இருப்பதுமற்றமனிதர்களின்பிரச்சனைகளைத்தீர்ப்பதற்காகவாஅல்லதுபிரச்சனைகளைஉண்டுசெய்வதற்காகவா?ஆகவேமொத்தத்தில்நாம்நல்லமுறையில்செயல்பட்டு வந்துள்ளோம்என்றுகூறினாலும்அதுமுடிவல்ல.இன்னும்அதிகவேகத்துடன் , உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும்நாம்காரியங்கள்செய்யவேண்டும். மற்றவர்களுக்குவிழிப்புணர்வு கொடுக்கும்போதுஉங்களுக்குக்கிடைக்கும்சந்தோஷம்என்னஎன்றுதெரியுமா?நீங்கள் உங்கள்பார்வையில்படும்அனைவருக்கும்ஆன்மவிழிப்புணர்வுகொடுத்துக்கொண்டேசெல்லவேண்டும்.கிறிஸ்துவஆலயங்களுக்குச்செல்லுங்கள்.சர்வகலாசாலைகளுக்குச்செல்லுங்கள், பொதுக்கூட்டங்களுக்குச்செல்லுங்கள்.நாம்வாழ்க்கையில்எதைப்பெறமுயல
வேண்டும்என்றுஒருவிதமானகருத்துக்களும்இல்லாதவர்களிடத்தில் பயமின்றி வன்மம்இல்லாமல்பின்வருமாறுகூறுங்கள்:
“எங்களதுநன்மைக்காகஎன்றுஇல்லைஉங்களதுநன்மைக்காகவே நாங்கள்இங்குவந்திருக்கின்றோம். ஆகவேநாங்கள்கூறுவதைக்கவனியுங்கள்”என்றுகூறுங்கள், நான்நிச்சயமாகமிகவும்உறுதியாகக்கூறுகின்றேன். உங்களுள்இருக்கும்குண்டலினி மாதாஉங்களின்இந்தச்செயலுக்காகமிகவும்மகிழ்ச்சிஅடைவார்கள்.அவர்களைமுழுமையாகஉபயோகப்படுத்தாத மக்களிடத்தில்அவர்கள்மகிழ்ச்சி கொள்வதில்லை.ஆகவேஉலகைஅடிமைத்தளத்திலிருந்துவிடுவிக்கநீங்கள்
செய்யும்செயல்களுக்குகுண்டலினிமாதா மிகவும்மகிழ்ச்சியுடன்துணைப்புரிவார்கள்.
கடவுள்உங்களைஆசீர்வதிப்பாராக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக