Translate

சனி, 30 ஜூலை, 2011

சஹஸ்ராரா சக்கரம்




தேவதை : ஸ்ரீ கல்கி (தூய்மையான ஆன்மா )
ஸ்தூல வெளிப்பாடு : மூளையின் மையப்பகுதி
வெளிப்பாடு : அதிர்வுகள், குளிர்ச்சியான காற்று
தன்மைகள் : பரிபூரணத்துவம், ஒருங்கிணைப்பு , அமைதி , எண்ணங்களற்ற விழிப்புணர்வு.
இதழ்கள் : 1000
குறியீடு : பந்தன்
கைகளில் : உள்ளங்கையின் மையம்.
தடைகளுக்கான காரணம் : நாத்திகம், கடவுளை சந்தேகித்தல், கடவுளுக்கு எதிரான செயல்கள்

சஹஸ்ராரா சக்கரத்தில் தான் மனித இயந்திரம் முழுவதுமாக ஒருங்கிணைக்கப்படுகிறது. ஒவ்வொரு சக்கரத்திற்கும் ஒரு இடம் உள்ளது. விராட்டாவினுள் ஒவ்வொரு தேவதைக்கான இருப்பிடம் இங்குதான் உள்ளது.

தன்மைகள் :

இந்த சக்கரத்தில் தான் நாம் தொடர்புகளுக்கு அப்பாலுள்ள பரிபூரணத்துவத்தை உணர்கிறோம். மூன்று குணங்களுக்கும் அப்பாற்பட்ட பரிபூரணத்துவம் என்ற சுவர்க்கத்தை பூமியிலேயே அடைகிறோம். நமது கற்பனைகளுக்கு அடங்காத வார்த்தைகளால் விவரிக்க இயலாத ஒரு தெய்வீக சாம்ராஜ்ஜியமாக அமையும். இதுவே நமது முடிவானதும், எப்பொழுதும் எங்கும் வியாபித்திருப்பதுமாகும்.

இத்தகைய இலக்கை நோக்கி நாம் முன்னேறுவது வாழ்க்கையின் நோக்கமாக அமைய வேண்டும். விதை முற்றியதும் இயற்கையாகவே முளைக்கத் துவங்கிவிடும். இதை வில்லியம் ப்ளேக் என்பவர் தெளிவாக விவரித்துள்ளார், அது பின்வருமாறு:

குண்டலினி சஹ்ஸ்ராராவை அடைந்தவுடன் தாமரை இதழ்கள் போன்ற இச்சக்கரம் விரிவடைந்து பிரகாசமடைகின்றன. இதைத் தொடர்ந்து உச்சந்தலையில் சக்தி மிக்க துடிப்புகளையும், அதைத் தொல்டர்ந்து உணர்வுகள் உருகி வழிவதும் போலவும், பிரோண்டனால் எலும்பு பகுதியிலிருந்து குளிர்ச்சியான நுண் அதிர்வுகள் பிரவாகமாக வெளிப்படுவதை உணர்வீர்கள். இதை ஞானஸ்நானம் என்னும் இதனால் உண்மையாகவே மீண்டும் பிறப்பெடுக்கிறோம். குண்டலினி நமது தனிப்பட்ட உணர்வைப் பிரபஞ்சப் பேருனர்வுடன் இணைக்கிறது. ( ஆன்மா பரமாத்மாவுடன் இணைதல்) நுண் அதிர்வுகள் தெரிய ஆரம்பிக்கும் இடமாகிறது. இச்சமயத்தில் நாம் உடனடியாக பிரபஞ்ச அதிர்வுகளின் அலைவரிசையுடன் இனைக்கப்படுகிறோம். இந்த அதிர்வுகள் ஆண்ட சராசரங்களில் பரவியுள்ளது. ஆனால் ஆன்ம விழிப்புணர்வு பெறுவதற்கு முன்பு முட்டைக்குள் இருக்கும் கருவிப் போல எதையும் அறியாத நிலையில் இருந்தோம். முட்டைக்குள் இருக்கும் குஞ்சு ஓட்டை உடைத்துக் கொண்டு வெளிவருவது போல் குண்டலினி சக்தியானது விழிப்பு நிலை அடைந்து மேலெழும்பி கடவுளின் ராஜ்ஜியத்தில் பிரவேசிக்கிறோம் . அதாவது கூட்டுப் பேருணர்வு. இந்த நிலையில் தான் நுண் அதிர்வுகள் நமது மனித இயந்திரத்திற்குள் இருந்து செயல்படுகிறது. சந்தேகிக்கும் மனமுடையவனால் இந்நிலையை அடைய முடியாது.



அறிவில்லாத மனிதர்கள் நம்பிக்கை அற்றவர்கள், இயற்கையை சந்தேகிப்பவர்கள் ஆன்மாவிற்கு இந்த உலகில் இடம் இல்லை, அந்த உலகத்திலும் இடம் இல்லை. வாழ்க்கையில் நேர்வழியில் சிந்தனை செலுத்த வேண்டும். சோதனை காலங்களில் சலனமில்லாத நம்பிக்கையை உண்மையை அடைவதற்கான வழி பகவத் கீதை.

மனித உணர்வுகள் தெய்வத்துடன் இணையும்போது நாம் சூட்சும நிலையில் பிரபஞ்சக் கூட்டுப் பேருனர்வுடன் தொடர்பு கொள்கிறோம். பிரபஞ்ச சக்தியாக மாறும் பொது எங்கும் எதிலும் வியாபித்திருக்கும் அந்தந்த தனிப்பட்ட சக்தியாகவும் உணர்கிறோம். நாம் பிறரது ஆன்ம பலத்தையும் அவரிடமுள்ள தனித்தன்மையும் நுண் அதிர்வுகள் மூலமாக அறிந்து கொள்கிறோம். கேள்விகளை கேட்டால் போதும் பதில் குளிர்ச்சியான அதிர்வுகளாகக் கிடைக்கும். தியானத்தில் அமர்ந்து நுண் அதிர்வுகளை வேண்டிக் கேட்டுக் கொள்ளலாம். இதில் மிகவும் நுட்பமானது. சூட்சுமமான நிலையில் இறைசக்தியுடன் கொண்டுள்ளத் தொலைத் தொடர்பு எனலாம்.



சஹஸ்ராரா சக்கரத்தில் உள்ள தேவதை ஸ்ரீ கல்கி இன்னமும் வரவிருக்கும் அவதாரம் 11 அழிக்கும் சக்திகளுடன் இவர்தான் இறுதியானவர். மிகவும் அதிர்ச்சி ஊட்டும் அவதாரமாக ஸ்ரீ விஷ்ணு வரவிருக்கிறார். அவரது நோக்கம் தீமையை அழித்து விடுவது என்பதுதான். அவர்தான் இறுதியாக தீர்ப்பு அளிக்க இருக்கிறார். தீர்ப்பளிக்கும் பணி துவங்கி விட்டது. எண்ணம் மேலேழுவதும் கீழ் இறங்குவதும் குண்டலினியைப் பொருத்தது. அவர்தான் நமக்கு எல்லா விதமான வாய்ப்புகளையும் கொடுத்து சத்தியத்தின் வழியைக் காட்டியிருக்கிறார் . உண்மையில் நுண் அதிர்வுகள் மூலமாகவே நாம் சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெரிந்து கொள்ள முடிகிறது. குர்ரானில் கூறியது போல் உயர்த்தெழும் போது உங்கள் கைகள் பேசும்.

இந்த மகா யோகத்தின் நதி மூலமாக அன்னை ஸ்ரீ மாதாஜி சஹஸ்ராராவில் உள்ளார்கள். அவர்களின் கருணையால் மட்டும் தான் குண்டலினி விழிப்பு நிலை அடைந்துள்ளது. நமது ஆன்மா பிரகாசமடைந்துள்ளது. நம்மால் நுண் அதிர்வுகளை அறிந்து கொள்ள முடிகிறது. பிறரது குண்டலினியையும் விழிப்படைய செய்ய முடிகிறது. பிறரை குணப்படுத்த முடுயும். தெய்வீக உணர்வை அதாவது அன்பை உலக மக்களிடம் பகிர்ந்து கொள்ள முடியும் . இயேசு கிருஸ்து கூறினார், நான் உங்களுக்கு ஆறுதல் அளிப்பவரை, ஆலோசகரை, துன்பத்திலிருந்து விடுவிப்பவரை அனுப்புகிறேன். எல்லா நிலையிலும் தூய ஆன்மா உங்களை வழிநடத்தி செல்லும்.

மானிட உணர்வு பிரபஞ்ச பேருனர்வுடன் இணைக்கப்படும் போது பிரகாசமடைகிறது. இந்த நிலையை ஞானிகள் பாடல்கள் மூலம் மிகவும் தெளிவாக விளக்கியுள்ளனர். புத்தர், இவற்றை வெற்றிடம் என்றும் , மகாவீரர் இவற்றை நிர்வாணம் என்றும் வேதங்கள் இவற்றை மோட்ஷம் என்றும், கிருஸ்து இவற்றை சொர்க்கம் என்றும் கூறியிருக்கின்றனர்.

வரையறுக்கப்பட்ட செயலாற்றல் கொண்ட மூளைப்பகுதி மிகுந்த ஆற்றலைப் பெற்று வரையறுக்கப்படாத நிலையில் செயல்பட்டு கடவுளை அறிந்து கொள்ள உதவுகிறது. நீங்களே சூரியனும் சூரிய ஒளியாகவும் சந்திரனும் சந்திர ஒளியாகவும் இருக்கும் போது இரட்டைத் தன்மை இங்கு இல்லை. பிரிவு என்பதிருக்கும் போது தான் இரட்டைத் தன்மை இருக்கும் . பிரிவின் காரணமாக பற்றுதல் உண்டாகிறது. மூளை தனது வரையறுத்த தன்மையிலிருந்து வரையறையற்ற ஆன்ம சக்தியாக மாறுகிறது.

சுத்திகரிப்பு

உறுதிமொழி

1 . "அன்னையே ஆன்ம விழிப்புணர்வு கொடுத்து அருள்புரிய வேண்டும்.
அன்னை ஆன்ம விழிப்புணர்வில் உறுதி அடைய வேண்டும்."

2 . பிரம்மரந்தராவை இடது கையால் அழுத்தவும் , வலது கை அன்னையின் படத்தை நோக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு கையை மாற்றி அழுத்த வேண்டும்.

கைகளால் தலையில் அழுத்த வேண்டும். முன்னும், பின்னுமாக பலமுறை தலையில் அழுத்தம் குறையும் வரை இத செய்யலாம்.

கை விரல்களை கோப்பையைப் போல் குவித்துக் கொண்டு தலையின் பக்கவாட்டில் அழுத்தம் கொடுக்கலாம். அகங்காரம் காரணமாக இடது சஹாஸ்ராராவில் தடைகள் தெரிய வரும்.

சகஜயோகியின் வினாவிற்கு அன்னையின் பதில்கள்:

சகஜயோகி : சகஸ்திரார சக்கரத்தை திறந்தபடியும், தூய்மையாகவும் வைக்க வேண்டுமா?

ஸ்ரீ மாதாஜி : இது மிகவும் எளிமையானது. சகச்திராராவின் தேவதை மகாமாயா. நீங்கள் உங்கள் கற்பனையினாலும் யுகத்தினாலும் அறிந்து கொள்ள முயல வேண்டாம். ஆனால் முழுமையாக உங்களை சமர்ப்பணம் செய்துய் கொண்டு சகச்திராராவை திறந்து வையுங்கள். இன்னமும் மூடியவாறு இருப்பின் நீங்கள் அன்னையிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும்.
" தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளை மன்னித்து அருள்புரிய வேண்டும்" எனக் கேட்டுக் கொள்ளவும்.