Translate

திங்கள், 3 ஏப்ரல், 2017

சஹஸ்ரார பூஜை சொற்பொழிவின் சுருக்கம்


கபேலா, இத்தாலி 1997

 இன்று நாம் எல்லோரும் சகஸ்ரார பூஜை வழிபாட்டிற்காகக் கூடியிருக்கின்றோம்.  இது முக்கியமான தினமாகும்.  1970 ம் வருடத்தில் தான் சகஸ்ரார சக்கரம் திறந்து கொண்டது.  ஆனால் இதிலிருந்து நாம் என்ன அடையப் பெற்றோம் என்று நாம் கவனிக்க வேண்டும்.குண்டலினி மாதா எழும்பிக் கிளம்பும் பொழுது, அவர்கள் வாய்ட் சக்கரத்திற்கு சென்று நாபிச் சக்கரத்தைச் சுற்றிலும் தர்மத்தை நிலைனிறுத்தம் செய்வார்கள்.  அது மிகவும் இயற்கையாக, பிறப்புடன் கூடியதாகவும், புனிதமாகவும், எல்லாவற்றையும் சார்ந்ததாகவும் இருக்கும்.  பின் குண்டலினி மாதா மேன் மேலும் எழும்பிக் கிளம்ப ஆரம்பிப்பார்கள்.
   தர்மம் நிலை நிறுத்தம் பெற ஆரம்பித்ததும் நாம் மற்றவர்களிடமிருந்து விலகியிருக்க ஆரம்பிப்போம்.  ஏனெனில் அவர்கள் தர்மம் இல்லாதவர்களாக தவறுகள் நிறைந்தவர்களாகக் காணப்படுவார்கள்.  அவர்களது அதர்மம் நம்மைப் பற்றிக் கொள்ளுமோ என்ற பயமும் நமக்கு உண்டு. அந்த நிலையில் சஹஜயோக எல்லையைக் கடந்து செல்ல நாம் விரும்ப மாட்டோம். சஹஜயோகிகளுடன் இருக்கவே விரும்புவோம்.  நமது தனிப்பட்ட வாழ்க்கையிலும் சஹஜயோகாவையே சார்ந்திருப்போம்.  நமது நாபிச் சக்கரத்தையும் சுவாதிஸ்டான சக்கரத்தையும் ஊட்டத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும்.  சுவாதிஸ்டானம் சக்கரத்தின் மூலமாகத்தான் நமது மூளைக்கு சக்தி வினியோகம் செய்யப்படுகின்றது. தர்மம் நன்கு நிலை நிறுத்தம் அடைந்ததும் குண்டலினியானது மிகுந்த சக்தியை சகஸ்ராரத்திற்கு எடுத்துச் செல்லும்.  அப்பொழுது தர்மம் நிலை நிறுத்தப்பட்டதால் சுவாதிஸ்டானம் சக்கரத்திற்குக் கிடைத்த சக்தியும் அதனுடன் பாய்ந்து செல்ல ஆரம்பிக்கும்.
  இது நடைபெறும் வரையிலும் நாம் முழுமையான சகஜயோகிகள் அல்ல.  ஏனெனில் இவ்வாறு நடைபெறாத வரையில் நாம் சில கொள்கைகளைப் பற்றிக் கொண்டவர்களாகவே இருக்கக் கூடும்.  சிலர் சஹஜயோகிகளைத் தவிர மற்றவர்களைச் சிந்திக்கவே பயப்படுவார்கள். தீமை நிறைந்த மனிதர்களை நீங்கள் சந்திக்கத் தேவை இல்லைதான். சஹஜயோகத்திற்கு எதிராக இருப்பவர்களை சந்திக்கத் தேவை இல்லைதான்.   ஆனால் உண்மையைத் தேடுபவர்களிடம் அவர்களை நாடிச் செல்வது நமது கடமையாகும்.
 தர்மமானது நமது மூளையில் நிலைனிறுத்தம் அடைந்ததும் நாம் தர்மாதித் தர்மத்தையும் கடந்தவர்கள் ஆகி விடுகின்றோம்.  சஹஜயோக தர்மம் நம்மிடம் ஒருங்கிணைவது மிகவும் பெரிய சாதனையாகும். ஏனெனில் அதன்பின் நாம் சமயச் சடங்குகள் செய்யத் தேவையில்லை. மற்ற மனிதர்களைச் ந்திக்க கவலைப்படத் தேவையில்லை.  உங்களுடைய நுண் அதிர்வுகளானது பாதிக்கப்படுமோ என்று கவலை கொள்ளத் தேவையில்லை.  அதன்பின் மற்றவர்களிடமுள் எந்த எதிர்மறைகளோ, தோஷங்களோ உங்களைப் பாதிக்காது.  உங்களது சிரத்தியின் முழுமை என்று நான் கூறுகின்றேன்.  அந்த நேரத்தில் உங்கள் சஹஸ்ராரம் முழுமையாகத் தெளிவடைந்து நீங்கள் தர்மத்தின் வடிவமாக மாறுகின்றீர்கள்.
தர்மத்திற்கும் உண்மைக்கும் ஒரு சிறிய வேறுபாடு உள்ளது. சிலர் தர்மத்தில் மிகுந்து கணப்படுவார்கள்.  அவர்கள் தன்னை உயர்ந்தவர்களாக நினைத்துக் கொள்வார்கள்.  நாம் மற்றவர்களைக் காப்பாற்றுவதைப் பற்றி ஏன் கவலை கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். அல்லது சஹஜ யோகத்தில் புதிய ஒழுங்குகளைப் புகுத்த ஆரம்பிப்பார்கள்.  ஆனால் உண்மையைப் பற்றி உணரும் நிலை வரும் பொழுது எந்த விதச் சடங்கு சம்பிரதாயங்களோ, அதைப் பற்றின அக்கறையோ, தேவையில்லை உண்மை என்பது தர்மத்தை விட மிகவும் உயர்ந்த விஷயமாகும்.
உண்மையை உணர்ந்தவர்கள் சமயம் சம்பிரதாயம் சம்பந்தப்பட்ட எந்த முட்டாள்தனமான கருத்துக்களையும் பொருட் படுத்த மாட்டார்கள்.  அது சஹஜ யோகம் சம்பிரதாயமாக இருந்தால் கூட அவர்கள் அதையும் கடந்து

சென்று விடுவார்கள்.  இதன் பொருளானது அவர்கள் உலகளாவிய உண்மையைத் தங்களுக்குள் காண்பவர்கள் ஆவார்கள்.  அவர்கள் எங்கும் நிறைந்திருக்கும் உண்மையைக் காண்பவர்கள் ஆவார்கள்.  அறிந்தவர்கள் ஆவார்கள்.  உணர்ந்தவர்கள் ஆவார்கள்.  ஆகவே தர்மமானது உண்மையாக மலரும் பொழுது அது மிகவும் அழகான நிகழ்ச்சியாகும்.  அது உங்கள் எல்லோருக்கும் நடைபெற் வேண்டும்.
தர்மம் என்ற அளவில் மட்டும் முன்னேற்றம் அடைந்து இருந்தால் எவ்வளவோ ஊசலாடும் நிலைகள் இருக்காலாம்.  அதாவது நீங்கள் ஆணவம் அடையலாம்,  பொருள் ஈட்டுவதையே பணம் பண்ணுவதையே குறிக்கோளாக நினைக்கலாம். சஹஜயோகத்திற்கு நல்லது. அல்லாதவற்றைச் செய்யலாம்.  அவர்களிடம் பணிவு, அடக்கம் இருக்காது.  இந்த தர்மமானது உண்மையின் வழியில் உள்ளதா, உண்மைக்குப் புறம்பானதா  என்று கூடப் புரிந்து கொள்ள மாட்டார்கள்.  ஆகவே நாம் தர்மத்தின் அடிப்படையான உண்மையை நோக்கிச் செல்ல வேண்டும்.
இந்த வாழ்க்கை என்ற மரமானது வேர்கள் மூளையிலும், கிளைகள் உடலெங்கும் கூடினதாகவும் இருப்பாதாகும். சஹஸ்ராரத்தில் முழுமையாக நிலை நிறுத்தம் பெற்றால் வேர்களை நோக்கிச் செல்ல ஆரம்பிப்பீர்கள்.  நமது எண்ணங்க்களுக்கு எல்லாம் வேர்களாக இருப்பது சஹஸ்ராரம் தான்.
தர்மத்தின் வழியில் இருக்க வேண்டிய அவசியம் என்ன? எவ்வளவோ பேர் மிகவும் அதர்மத்தின் வழியில் நடப்பவர்கள் இருக்கின்றார்கள்.வெளியில் பார்ப்பதற்கு மிகவும் என்றாக வாழ்வதாகக் காணப்படுவார்கள்.  நாம் நினைப்போம் அவர்கள் மிகவும் ஆனந்தமாக இருப்பதாக, நன்றாக வாழ்வதாக எல்லாவற்றையும் நன்கு அனுபவிப்பதாக ஏதோ நாம் இவை எல்லாவற்றையும் இழந்து விட்டாற்போல தர்மத்தின் வழியில் மட்டும் நின்று பார்த்தால் சில சமயங்களில் பொருட்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகத் தோன்றலாம்.  அதனால் தர்மம், உண்மையின் வழியில் நில்லாமல் கூடப் போகலாம்.  எவ்வளவோ சஹஜயோகிகள் தர்மம் என்ற நிலையை எய்திய பின்னும் தடுமாற்றம் அடைகின்றனர்.  கெட்ட பழக்க வழக்கங்களை விட்டும்,
அவர்கள் நடவடிக்கைகள் நல்ல விதமாக மாறினாலும் கூட தர்மத்தின் வழியில் நிற்கிறோம் என்ற உணர்வு அவர்களிடம் இருக்கின்றது.  அந்த உண்ர்வு அவர்களை விட்டுப் போக வேண்டும். சஹஸ்ராரத்தில் சஹஸ்ரார நிலையில் இந்த உண்ர்வு மறைந்து விடுகின்றது.  ஏனெனில் உண்மை என்பது அன்பாகும்.அன்பு என்பது உண்மையாகும்.  இந்தக் கட்டத்தில் தான் குண்டலினியானது இதயச் சக்கரத்தைச் சந்திக்கின்றது.  சஹஸ்ராரத்தில் தான் இதயத்தின் இருப்பிடம் அமைந்துள்ளது. குண்டலினியானது இதயச் சக்கரத்தை துளைத்துக் கொண்டு கிளம்பும் பொழுது, அது மூளையில் சகஸ்ராரத்தில் பாய்ந்து செல்ல ஆரம்பிக்கும் பொழுது, அத்வே உண்மையாகும்.  அந்த உண்மையே அன்பாகும்.  உண்மை என்பதற்கும், அன்பே உண்மை என்பதற்கும் ஒரு வித்தியாசம் உள்ளது.
ஒரு வரிடத்தில் தூய்மையான அன்பு இருக்கும் பட்சத்தில் அவர்களை நாம் நோக்கும் விதமே வேறாக இருக்கும்.  அது மிகவும் இனிமையானதாக இருக்கும்.  இல்லையெனில் உண்மை என்பது மிகவும் கசப்பானதாகவும் மிகவும் வலியைக் கொடுக்க கூடியதாகவும் இருக்கும்.  ஆனால் அன்பால் அலங்கரிக்கப்பட்ட உண்மையானது முட்கள் இல்லாத மலரைப் போன்றது.
ஒரு நபர் அன்பைப் பொழிபவராகவும் அதே நேரத்தில் உண்மையின் மீதும் இருப்பாராயின் அது போன்ற குணாதிசயத்தில் தான் நீங்கள் மாற வேண்டும்.
அன்பு என்பது ஒருவரை மற்றவரிடத்தில் நெருக்கமாகக் கொண்டு வர முயற்சி செய்யும்.  ஆகவே இது வரையில் நாம் உபயோகித்துக் கொண்டிருந்த ஒருவரிடமிருந்து ஒருவரை பிரிக்கும் வழிகளையெல்லாம் மறந்து ஒருவரையொருவர் எவ்வாறு இணைப்பது என்ற வழி முறைகளைப் பற்றிப் புரிந்து கொள்ள ஆரம்பிப்போம்.  நீங்கள் ஒட்டு மொத்தமான உணர்வு நிலையில் இருக்கின்றீர்கள்.  இந்த உணர்வு ஆழமான நிலையில் இல்லாத பொழுது கூட அழகான ஆசிரமங்களை அமைப்பது போன்ற பெரிய விஷயங்களை நீங்கள் செய்து முடிக்க இயலும்.  ஆனால் இந்த ஒட்டு மொத்தமான உணர்வு நிலை அன்பால் நிரப்பப் படும் பொழுது, உங்களது சந்தோஷம் முழுமையடைகின்றது.
மனிதர்கள் அமைதியைப் பற்றிப் பேசுகின்றார்கள்.  இந்த ஒட்டு மொத்தமான உணர்வு நிலை என்ற விழிப்புணர்வு உங்களுக்கு வராத வரையில் நீங்கள் உண்மையான அமைதியுடன் இருக்க இயலாது.  ஆனால் அதில் அன்பு என்ற முக்கியமான தத்துவம் இருக்க வேண்டும்.  மனிதர்கள் மற்றவர்களிடமும், மற்ற சஹஜயோகிகளிடமும் அன்பைப் பிரதிபலிக்கும் பொழுது அவர்கள் எவ்வாறு கவரப்படுகின்றார்கள் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.  இது நிகழ ஆரம்பித்ததும் நம்மால் எவ்வாறு இந்த உலகை மாற்றி அமைக்க இயலும் என்று உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்.
மனிதர்களின் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் வெறுப்பு.  ஆனால் ஒருவரை வெறுப்பது என்பது பாவத்திற்குரிய செயலாகும்.  நீங்கள் பாவத்தை வெறுக்கலாம்.  தீமையை வெறுக்கலாம்.  ஆனால் வெறுக்க வேண்டும் என்பதற்காக மனிதர்களை வெறுக்க கூடாது.  இந்த வெறுப்பு என்பதுதான் இவ்வளவு நாளும் நாம் அடைந்த பிரச்சனைகளுக்குப் பொறுப்பாகும்.  ஒருவர் மற்றவர்களை ஒருவரிடமிருந்து ஒருவரைப் பிரிப்பதில் மிகவும் செயல் திறன் வாய்ந்தவராக இருக்கலாம். இந்த மாதிரி பிரித்து வைக்கும் தந்திரங்கள் எல்லாம் எத்தனையோ நாடுகளை அழித்திருக்கின்றது.  பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவில் செய்தது போல் ஆனால் பிரிவினையை ஆதரித்ததால் அவர்கள் நாடு ஏழ்மை நிலையை அடைந்தது.  ஆகவே வெறுப்பானது அதனை எவ்வாறு வெளிப்படுத்திக் கொண்டுள்ளது என்பதை நீங்கள் தெளிவாகப் பார்க்கலாம்.  வெறுப்பு ஒரு சிறிய புள்ளியில் ஆரம்பித்து எல்லா இடங்களிலும் வெளிப்பட ஆரம்பிக்கும். எந்த நாட்டிலும் பிரிவினை தேவையில்லை.  அது மேன் மேலும் வெறுப்பையும், துன்பத்தையும் உருவாக்கும்.
இதே முறையிலேயே சஹஜ யோகாவிலும் பிரிவுகள் இருக்க வேண்டும் என்று நாம் நினைக்கக் கூடாது.  சில சஹஜயோகிகள் கங்கை நதிக்கருகில் உள்ள சஹஜயோக நிலங்களில் தனி வீடுகள் வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்கள்? ஏன்? நீங்கள் ஒட்டு மொத்தமான வாழ்க்கையை அனுபவித்து மகிழ்கின்றீர்கள்.  ஒருவரிடமிருந்து மற்றவர் என்ன இரகசியம் வைத்துக் கொள்ளப் போகின்றோம்? எல்லாம் நுண் அதிர்வுகளின் மூலம் தெரியும்.  சஹஜயோகாவில் தனிப்பட்ட இரகசியங்கள் என்பது கிடையாது, நமக்கு எல்லோரைப் பற்றியும் தெரியும்.  அவர்களுடைய பிரச்சனைகள் என்ன? அவர்களின் குறைபாடுள்ள சக்கரங்கள் என்னென்ன என்பதெல்லாம் தெரியும்.
சஹஜயோகாவில் தனிப்பட்ட சட்ட திட்டங்கள் எல்லாம் கிடையாது. அதை வைத்து நீங்கள் ஒன்றாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றீர்கள் என்று இல்லை. ஆனால் தூய்மையான ஒட்டு மொத்தமான உணர்வும் அதன் அன்புமே உங்களை சந்தோஷ்ப்படுத்தும். நமக்கு உகந்த சரியான சங்க அமைப்பை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. நம்மிடம் சமயங்களைப் போதிக்கும் சமய குருமார்களும் கிடையாது.  வழி காட்டி முன் செல்பவர்களும், கங்கை நதியானது தன் பாதையை மாற்றிக் கொள்வதைக் காட்டிலும் அடிக்கடி மாற்றப்படுகின்றனர். நாம் நின்று கொண்டிருப்பது நம்பிக்கைக்குப் பாத்திரமற்ற தந்திரமான மணல் மீதாகும். உங்கள் தாயாரும் வெவ்வேறு விதமான தந்திரங்களை முயற்சி செய்து பார்க்கின்றார்கள்.இதன் காரணம் யாதெனில், நீங்கள் எல்லோரும் உறுதியான பாறையின் மேல் நிற்பவர்களாக இருக்க வேண்டும். அந்தப் பாறை தெய்வீக அன்பை வெளிப்படுத்துவதாக இருக்கும். அந்த அன்பினால் கிடைக்கும். ஆனந்தம் உண்மையிலேயே மிகவும் அழகு வாய்ந்ததாக இருக்கும்.
அன்புடன் கூடிய சமுத்திரத்தைப் போன்ற ஒரு சமுதாயத்தைப் பற்றின பொது கருத்தை நீங்கள் கொண்டு இருக்க வேண்டும். அந்த சமுதாயமானது எப்படி சமுத்திரம் அலைகள் பொங்கௌம் பொழுது ஒன்றாக எழுந்து, அலைகள் வீழ்ச்சி அடையும் பொழுது, ஒன்றாக, வீழ்ச்சி அடையுமோ, அவ்வாறு இருக்கும். அன்பின் அடிப்படையில் ஒன்றாக இசைந்து போகும் தன்மையாகும் இது.  நான் இந்த மாதிரி சமுதாயத்தை இமயமலையின் அடிவாரத்தில் எதிர்பார்க்கின்றேன்.  இமய மலையும் சஹஸ்ராராவைப் போன்றதே. அங்கே குண்டலினி எழும்புவது உண்டு.  அங்கிருந்து நுண் அதிர்வுகள் வருவது உண்டு.  ஆனால் இந்த இமய மலை, ருத்திர கடவுலான சிவனால் ஆளப்பட்டு வருகின்றது.  இது மிகவும் அபாயகரமான பகுதியாகும்.  ஆகவே நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  நாம் விளையாட முயற்சி செய்தாலோ, நமக்குள் வெற்ப்பை ஏற்படுத்திக் கொள்ள முயற்சி செய்தாலோ, பிரிவினைகளை ஏற்படுத்தினாலோ, சஹஜ அல்லாத எதையும் செய்தாலோ, இந்த ருத்திரமான கடவுள் உங்கள் தலை மீது இருக்கின்றார் என்பதை நினைவு வையுங்கள்.
கடந்த வருடம் கணபதி புல்லேயில் தீ விபத்து நடந்த பொழுது இந்த ருத்ர கடவுள் உங்களை தீண்டவில்லை.  ஏனெனில் உங்கள் தாயாரின் சக்தி வாய்ந்த அன்பின் பாதுகாப்பில் நீங்கள் இருந்தீர்கள்.  இதே முறையிலேயே நீங்களும் மற்றவர்கள் மீதும் மற்ற சஹஜயோகிகள்  மீதும் மற்ற உயிரினங்கள் மீதும் இந்த பூமி மாதாவின் மீதும் உங்கள் அன்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்.  உங்களது அன்பானது உங்களை மட்டும் பாதுகாக்காது.  மற்றவர்களையும் பாதுகாக்கும்.
உங்கள் கவனம் எந்த அளவிற்கு உங்கள் மேல் உள்ளதோ அந்த அளவிற்கு நீங்கள் மிக மிகச் சிறியவர்களாக உணர்வீர்க்ள். நீங்கள் தூய்மையான ஆத்மா என்றால் அது அன்பு என்பதை தவிர வேறு ஒன்றுமில்லை.  இந்த அன்பினால் மற்றவர்களைப் பற்றி நினைப்பீர்கள்.  அவர்கள் பிரச்சனைகளைப் பற்றி நினைப்பீர்கள் மற்றவர்களை செளகரியமாக வைத்திருக்க முயற்சி செய்வீர்கள்.  உங்களைப் பற்றி அக்கறை கொள்வதையும், கவனித்துக் கொள்வதையும் விடுத்து, மற்றவர்களைக் கவனித்துக் கொள்ள முயற்சி செய்வீர்கள்.  இந்த நிலையைத் தான் நீங்கள் அடைய வேண்டும்.  நீங்கள் என்னதான் தர்மத்தின் வழி நடப்பவர்கள் ஆனாலும் சஹஜ வழிகளை முழுமையாகப் பின் பற்றினாலும் உங்கள் சகஸ்ராரத்தில் இந்த நிலையை அடையும் வரையில் நீங்கள் சரியாக இருக்கின்றீர்கள் என்று நான் சொல்ல மாட்டேன்.  இதை அடைய நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்.
இதை அடைவதற்குத் தியானம் செய்வது மிகவும் முக்கியம்.  ஆனால் அதைத் தடுப்பது உங்கள் மனமே.  அது எவ்வாறெல்லாம் உங்களை வழி டத்திச் செல்கிறதோ, என்னவெல்லாம் சொல்கின்றது ‘ என்னைக் குறித்து என்ன செய்வது என் வீட்டைக் குறித்து என்ன செய்வது, எனது குழந்தைகளைக் குறித்து என்ன செய்வது என் னாட்டைக் குறித்து என்ன செய்வது என்றெல்லாம் நினைக்கின்றது.  கடைசியில் அதனால் ஆகப் போவது ஒன்றுமில்லை.
நீங்கள் மற்றவர்களின் கோணத்திலிருந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்.  உங்களுடைய குருவிடத்திலோ, கடவுள் இடத்திலோ கூறும் பொழுது நீங்கள் நான் இல்லாமல் போய் விட்டேன்.  நான் முழுவதுமாக கரைந்து விட்டேன்.  நான் என்பது முடிவுக்கு வந்து விட்டது.  நான் என்பது இந்த அன்பு சாகரத்தில் ஒரு துளியாக மாறி ஒன்றாக கலந்து விட்டது என்று கூற வேண்டும்.  அதே போல் மற்றவர்களிடமும் நீங்கள் இல்லாமல் போய் விட்டீர்கள்.  நீங்கள் முழுவதுமாகக் கரைந்து விட்டீர்கள்.  நீங்கள் என்பது முடிவுக்கு வந்து விட்டது.  நீங்கள் என்பது இந்த அன்பு என்ற சமுத்திரத்தின் துளிகளாக மாறிவிட்டது என்றே கூற வேண்டும். இது தான் சஹஜ நாகரீகம்.
ஒருவரித்தில் தவறான அபிப்ராயம் இருக்கும் பொழுதே, நான் உங்களிடம் மிகவும் அன்பு இருக்கின்றேன் என்று பொய்மையாகச் சிலர் கூறுவர். சஹஜயோகிகளை பொறுத்த வரையில் இந்த மாதிரியெல்லாம் செய்யாத நிலையை அவர்கள் அடைந்து விட்டார்கள். ஆனால் தாங்கள் அவ்வாறு இருக்கின்றோம் என்ற உணர்வு அவர்களிடம் இருக்கின்றது.  அவர்கள் அடைந்ததை நினைத்து மிகவும் பெருமை அடைகின்றார்கள்.  நீங்கள் ஒரு பொருளை இயல்பாக அடைந்திருப்பின் அதை நினைத்துப் பெருமைப்பட வேண்டிய அவசியமென்ன?
சிலர் என்னிடம் கேட்பார்கள்.  நீங்கள் ஆதிசக்தி என்பதால் உங்களுக்குப் பெருமையாக இல்லையா என்று நான் கூறுவேன்.  னான் ஆதிசக்தியாக இருக்கும் பட்சத்தில் அதை நினைத்து ஏன் பெருமைப்பட வேண்டும்.  ஏனெனில் நான் தான் ஆதிசக்தியாயிற்றே, இது எப்படிஎன்றால்நான் கண்கள், காதுகள், மூக்குடன் மனிதப் பிறவியைப் போன்ற தோற்றத்துடனே இருக்கின்றேன் என்று செருக்குடன் கூறுவதை போன்றதாகும். இது இயல்பாக உள்ள ஒன்று கர்வப்பட என்ன இருக்கின்றது? சிலர் நினைப்பார்கள். சஹஜயோகா என்பது அவர்களுக்கு வழங்கப்பட்ட உயர்ந்த அதிகாரம் என்று.
நான் சஹஜயோகி என்று எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருக்கும் உணர்வு மறைய வேண்டும்.  அந்த கர்வம் விடை பெற்றுச் செல்ல வேண்டும். நான் என்பது இல்லாமல் போய், மொத்தத்தில் ஒரு பகுதியாக ஒன்றிப் போய்விட்டேன் என்று உணருங்கள். அந்த சமுத்திரமாகவே மாறுங்கள்.  இதற்கு எல்லையே கிடையாது.  இந்த மாதிரி உணர்வு நிலையில் நீங்கள் பேசினாலும், பேசாவிட்டாலும், புன்முறுவல் பூத்தாலும் இல்லாவிட்டாலும் உங்கள் இதயமானது சந்தோஷத்தில் மட்டுமே நிலைத்திருக்கும். அங்கு அன்பு கொப்பளித்துக் கொண்டிருக்கும்.
சகஸ்ராரத்தில் அமைந்துள்ள இதய சக்கரத்தின் பீடமானது உண்மை என்ற ஒளியால் நிரப்பப்படுகின்றது.  முன் காலத்தில் சொல்லப்பட்டது உண்மையே பேசுக.  இனிமையாகப் பேசுக என்று.  ஆனால் உண்மையும் இனிமையும்  ஒன்றோடு ஒன்று இணைந்தது அல்லவே என்ற ஆச்சரியம் வரும். ஏனெனில் உண்மை சுவையாக இருக்காது.  ஆகவே ஸ்ரீகுருஷ்ண பரமாத்மா கூறுகின்றார் உண்மையே பேசுங்கள் இதமாகப் பேசுங்கள் இனிமையாகப் பேசுங்கள் என்று நீங்கள் கூறும் உண்மை உங்கள் ஆன்மாவிற்கு உறைவிடம் அளிப்பதாக இருக்க வேண்டும்.  அவ்வாறு இருப்பின் அது நன்மையை உண்டாக்கும்.  இனிமையான உண்மையாக மாறும்.
நீங்கள் சில சமயங்களில் மற்றவர்கள் நன்மைக்காக ஏதாவது கூறினால் முதலில் அவர்கள் அதை விரும்பாமல் இருக்கலாம்.  ஆனால் பிற்பாடு உங்களுக்கு நன்றி கூறலாம்.  ஆனால் மற்றவர்களிடம் கடினமாக இருக்க வேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை.  மற்றவர்களைத் திருத்தி அமைப்பதும் உங்கள் வேலை இல்லை.  இதெல்லாம் அஹங்காரம் என்பதின் விளையாட்டாகும்.  யாரையும் கண்டிப்பதற்கு உங்களுக்கு அதிகாரம் இல்லை. நீங்கள் முதிர்ச்சி பெற்ற சஹஜயோகிகள் ஆக இருந்தால் உங்கள் அன்பிற்கு ஏற்படும் சவாலாக இதனை எடுத்துக் கொள்வீர்கள்.  ஒரு மருத்துவராக இருக்கப்பட்டவர். நோயாளிகளிடம் உங்களுக்கு ஏன் நோய் வந்தது என்று கடிந்து கொள்ளாமல் வைத்தியம் செய்து அவர்களைக் குணப்படுத்துவதைப் போல, ஒரு சஹஜயோகியாக இருக்கப்பட்டவர், மற்றவர்களை நடந்து முடிந்த தவறுகளுக்காகக் கடிந்து கொள்ள மாட்டார்கள்.  மற்றவர்களிடம் ஏதும் வாய் மொழியாகக் கூறாமலேயே உரியதைச் செய்வார்கள்.நீங்கள் மற்றவர்களைக் கடிந்து கொண்டாலோ கண்டனம் செய்தாலோ நீங்கள் எல்லாம் அமையப் பெற்றவர்கள் நிரம்ப ஞானம் பெற்றவர்கள் என்ற உணர்விலிருந்து வருவதாக்கும் . உங்களுக்கு விஷய ஞானம் உள்ளதுதான்.  ஆனால் அந்த உணர்வு இருக்கும் வரையில் அது இல்லாதவர்கள் ஆகின்றீர்கள்.  அந்த உணர்வு அற்றுப் போகும் நிலையில் தான் நீங்கள் சஹஜயோகிகள் ஆகின்றீர்கள்.
ஆகவே நீங்கள் அனைவரும் இதே விதமான முன்னேற்றத்தை உங்கள் சஹஸ்ராரத்தில் அடைய வேண்டுமென்று நான் எதிர்பார்க்கின்றேன்.  நாம் சஹஜயோகத்தையும் அதைத் தேடுபவர்களையும் பற்றி மட்டும் நினைத்துக் கொண்டிராமல் அகில உலகத்தைப் பற்றியும் நினைத்துப் பார்க்க வேண்டும்.  அங்கே எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளது.  எவ்வளவோ காரியங்கள் செய்ய வேண்டியுள்ளது. உங்கள் நாட்டில் என்னென்ன பிரச்சனைகள் உள்ளது என்று கண்டுபிடியுங்கள்.  அவர்களுக்காகப் பொது இயக்கங்கள் ஆரம்பித்து அவர்களது பிர்ச்சனைகளைத் தீர்த்து வைக்க முயற்சி செய்யுங்கள்.
முடிந்த வரையில் உதவி செய்யுங்கள்.  இது ஏதோ வெகுமதிக்காக ஒருவரை ஒரு மதத்திலிருந்து மற்ற மதத்திற்கு மாற்றும் சமயக் குழு போன்றதல்ல.  உங்களது சுய மகிழ்ச்சிக்காக இதைச் செய்கின்றீர்கள்.  இந்த மாதிரி நீங்கள் சமுதாயத்திற்குப் போகும் பட்சத்தில் ஏதாவது எதிர்மறைகளோ தோஷங்களோ உங்களைப் பிடித்துக் கொள்ளும் என்று நீங்கள் அச்சப்படத் தேவையில்லை.
நீங்கள் அதைப் பற்றி அச்சமோ, உங்கள் ஆணவத்தைப் பற்றிய கவலைகளோ இல்லாத நிலையை அடைய வேண்டும்.  உங்களுக்கு அதிகமான சக்திகள் வழங்கப்பட்டிருக்கின்றது.  ஆனால் அதை உப்யோகிக்காவிட்டால் நீங்கள் என்னவாக இருப்பீர்கள்? ஒரு விளக்கானது தெளிவான நிலையில் இல்லையென்றால், அதை வைத்து என்ன செய்ய? வெறும் அலங்காரத்திற்குத் தான் வைத்துக் கொள்ளலாம்.
இந்த சக்திகள் எல்லாம் நாம் உயர்ந்தவர்கள், இன்ன காரியத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்ற உணர்வு இல்லாமலேயே உபயோகிக்கப்பட வேண்டும்.  இந்த மாதிரி ஒரு அருளும் புரிந்து கொள்ளும் தன்மையும் இருந்தால், சஹஜயோகா வெகு விரைவில் பரவத் தொடங்கும்.  சில முட்டாள்தனமான மனிதர்களின் செய்கைகளை பார்த்துக் சிரித்து விட்டு சென்றாலே, அந்த பிரச்சனையை கடந்து சென்றவ்ர்கள் ஆகி விடுவோம்.  ஆனால் அவ்வாறு சிரிப்பதின் மூலம் அவர்களைக் காயப்படுத்துபவர்கள் ஆகிவிடக் கூடாது.
நீங்கள் செய்யும் செயல்களின் விளைவுகளைக் கவனித்துப் பார்க்க வேண்டும்.  அது மிகவும் புத்திசாலித்தனமான ஒன்றாகும்.  அப்பொழுது தான் விஷயங்களை எவ்வாறு கூறுவது எவ்வாறு நடந்து கொள்வது என்று தெரியும்.  அன்புடன் இருங்கள்.  இந்த தெய்வீக அன்பானது உங்கள் மேல் உங்களுக்கு சுய கட்டுப்பாட்டையும் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளும் தன்மையையும் ஏற்படுத்தும்.  எவ்வாறு மற்றவர்களிடம் நடந்து கொள்வது எவ்வாறு மற்றவர்களுடன் உரையாடுவது எவ்வாறு மற்றவர்களை நிர்வகிப்பது போன்ற விஷயங்கள் எல்லாம் தெரிய ஆரம்பிக்கும்.
ஸ்ரீ கிருஷ்ணாவைப் பொறுத்த வரையில் கோபம் என்பது மனிதர்களிடையே காணப்படும் மிகவும் மோசமான குண்மாகும்.  ஆனால் என்னைப் பொறுத்த வரையில் பொறாமை என்பதே மோசமான குணம். பொறாமை என்பது பலனில்லாத ஒன்று.  உங்களுக்குள் இருக்கும் பொறாமையைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்.  சஹஜயோகத்தில் கூட சிலர் இந்த மாதிரியான மிகவும் கூர்மையான பொறாமை குணத்துடன் இருக்கின்றார்கள்.  உதாரணத்திற்கு, நான் ஒருவரைச் சந்தித்து விட்டு, மற்றவரைச் சந்திக்காமல் போனால் நான் யாரைச் சந்தித்தேனோ அவர் மீது அந்த மற்றவர்களுக்குப் பொறாமை உண்டாகி விடுகின்றது.  என்னைச் சந்திக்க நீங்கள் ஏன் விரும்ப வேண்டும்.  நான் தான் எங்கேயும், எல்லா இடத்திலும் இருக்கிறேனே.  பின் என்னைச் சந்தித்துப் பேச வேண்டிய அவசியமென்ன? நான் உங்களுக்கு மட்டுமில்லை.  எல்லோருக்கும் பொது தான்.
நீங்கள் சமுத்திரத்தின் ஒரு துளியாக மாறிவிட்ட பின் எங்கே பயணம் செய்ய வேண்டும் எந்தக் கரையை நோக்கிச் செல்ல வேண்டும் என்று பொருட்படுத்த வேண்டியதில்லை.
அந்த சமுத்திரத்தின் ஒரு துளியாக மாறிவிட்ட பின் எங்கே பயணம் செய்ய வேண்டும் எந்தக் கரையை நோக்கிச் செல்ல வேண்டும் என்று பொருட்படுத்த வேண்டியதில்லை.
அந்த சமுத்திரத்தினுடனேயே மேலும் கீழுமாகச் செல்ல ஆரம்பிப்பீர்கள்.  இந்த மாதிரி அன்பு என்ற சமுத்திரத்தில் ஒரு துளியாக மாற வேண்டும்.  மற்றவர்களை அதிகாரம் செய்யாமல் பகட்டாக இல்லாமல் உங்களுக்குள் நீங்களே முழுமையாக நிரம்பப் பெற்றவர்களாக உங்கள் மேல் திருப்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும்.  பின் நீங்கள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ஆகிவிடுவீர்கள்.
நிச்சயமாக உலகத்தில் உள்ள எல்லோருடைய சஹஸ்ராராவும் திற்ந்து கொள்ளும் நாள் வரும்.  இதைத் தான் நாம் செய்ய வேண்டும்.  நமக்கு என்று தனிப்பட்ட இடங்களில் மறைந்து விடக் கூடாது.  இமயத்திற்குக் கூட நீங்கள் செல்லலாம்.  ஆனால் உலகிலிருந்து உலக வாழ்க்கையிலிருந்து தப்புவதற்காக அது இருக்கக் கூடாது.  உங்களது தியானத்திற்காகவும் ஆன்மாவின் முன்னேற்றத்திற்காகவும் மட்டுமே இருக்கலாம்.
நீங்கள் எவ்வளவு மதிப்ப்பு மிக்க குறிப்பிடத் தக்க முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.  இந்த சமயத்தில் பிறந்து ஆன்ம தரிசனம் பெற்றிருக்கின்றீகள்? எதற்காக? இந்த உலகத்தை அடிமைத் தலத்தில் இருந்து விடுவிப்பதற்காகவும், மனிதர்களை மாற்றி அமைப்பதற்காகவும், உலகம் முழுவதையும் கடவுளின் சாம்ராஜ்யத்திற்குள், எல்லைக்குள் கொண்டு வருவதற்காகத்தான் அதற்காகத் தான் நீங்கள் இங்கே இருக்கின்றீர்கள்.
கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.



ஆதிசக்தி பூஜை கபேலா, இத்தாலி, 1997



ஆதிசக்தியானவர் எங்கும் நிறைந்த பரம்பொருளான சதாசிவத்தின் சக்தியாகும்.  அவளே அவருடைய சுவாசமாகவும், விருப்பமாகவும் இருப்பவள். சிலர் கூறுகின்றார்கள். ஆதிசக்தியே சதாசிவத்தின் முழுமையான சக்தி.  அந்த சக்தியின்றி சதாசிவத்தால் ஏதும் செய்ய இயலாது.  ஆதிசக்தி முதலில் குண்டலினியை உருவாக்கியது, பூமிமாதாவில் தான். பின் ஸ்ரீகணேசாவை பூமி மாதாவிலினின்று உருவாக்கினார்கள்.  ஆகவே பூமாதேவி நமக்கு மிகவும் முக்கியமான விஷயமாகும்.  நாம் பூமாதேவிக்கு எவ்வாறு மரியாதை செலுத்தத் தெரியாதவர்கள் ஆவோம்.
ஆதிசக்தி குண்டலினியை உருவாக்கியதின்மூலம், அவர்களுடைய பிரதிபலிப்பையும், விருப்பங்களையும், நமக்குள் உருவாக்கியுள்ளார்கள்.  ஆகவே ஆதிசக்தி என்பது சதாசிவம் குண்டலினி ஆகியவற்றின் மொத்த விருப்பமாகவும், ஆதிகுண்டலினி என்பது ஆதிசக்தியின் முழுமையான விருப்பமாகவும், அமைகின்றது. பூமிதேவியின் பூமியின் உட்பகுதியை குண்டலினியானது குளிரிசிசியடையச் செய்யும் வகையில் கிளம்பி பூமாதேவியின் மேற்புறத்தில் விதம் விதமான சக்கரங்களாக வெளிப்பட்டுப் பிரதிபலிக்கின்றது.  குண்டலியானது வெவ்வேறு மையங்களைப் பூமியில் கடந்து வெவ்வேறு மையங்களைப் பூமியில் தோற்றுவித்து இறுதியில் கைலாசத்தைத் தகர்த்துக் கொண்டு ஊடுருவிச் செல்வதை நீங்கள் காணலாம்.  கைலாசத்திலிருந்து மிகுந்த நுண் அதிர்வுகள் வெளிப்பட்டுக் கிளம்புவதை பூமாதேவியை அவமதிக்கும் பொழுது ஆதிசக்தியை அவமதிப்பவர்கள் ஆவோம்.  நாம் பூமாதேவியை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
 ஏனெனில் பூமியிலுள்ள புவிஈர்ப்பு சக்தியிலிருந்து எல்லா இயக்கங்களும் அதனுள் அமையப் பெற்ற குண்டலினி சக்தியால் கட்டுப்படுத்தப்படுகின்றது.  இந்தியாவில் எல்லோரும் காலையில் படுக்கையை விட்டு எழுந்து பூமியில் கால்களை வைக்கும் பொழுது பூமி மாதாவிடம் அம்மா தயவுசெய்து நாங்கள் உங்களைப் பாதத்தால் மிதித்து, நடப்பதற்காக மன்னித்துக் கொள்ளுங்க்கள் என்று கூறிக் கொள்ள வேண்டும். பூமி மாதா சமுத்திரம், பஞ்ச பூதங்கள் ஆகியவற்றின் படைப்புகளை நாம் மரியாதை செய்யத் தவறுவதாலேயே, இந்தக் கிரஹத்தில் நாம் துன்பத்திற்கு உள்ளாகின்றோம். நமது வாழ்க்கைக்கு ஆதாரமாக உள்ள பஞ்சபூதங்களின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளாததாலேயே, பூமியில் நிறைய மாசுக்கள் முதலிய பிரச்சனைகள் உண்டாகின்றன.
  பூமிதேவியை மதிக்கத் தவறும் பொழுது அவர்கள் நிலநடுக்கும்  போன்றவற்றை உண்டாக்குகின்றார்கள்.  அவர்களுக்குத் தெரியும், என்ன  நடக்கிறதென்று ஆனால் மக்களுக்குத்தான் புரிவதில்லை இது ஏன் இவ்வாறு நடைபெறுகின்றது என்று பூமி மாதாவிற்குத் தெரியும் சாதுக்கள் யார் என்று. அதனால்தான் நில அதிர்ச்சியின் பொழுது அவர்களுக்கு ஊறுவிளைவிப்பதில்லை.  அதனால் தான் மோஸஸிற்கு சிவப்பு சமுத்திரத்தைப் பிரித்தார்.  ஸ்ரீ ராமனுக்கு இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையில் பாலம் உருவாக்கினார். பூமியில் நடக்கும் எந்தவிதமான விபத்துக்களுக்கும் பூமிமாதாவை கடிந்து கொள்ளக் கூடாது.  பூமிமாதாவிற்கு தன் முதுகின் மேல் நடக்கும் மனிதர்களின் நுண் அதிர்வுகளை வைத்தே அவர்களைப் பற்றி அறிந்து கொள்வார்கள். மனிதர்கள் சாதுக்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள்.
 சில இடங்கள் புனிதமாக இருக்கின்றன. இங்கிலாந்தில் ஆக்ஸ்டட் என்ற இடத்தைப் போன்று, அங்கு நிலவி வரும் காந்த சக்தியை வைத்தே இதை அறிந்து கொள்ளலாம். ஆகவே பூமிமாதாவானவர்கள் சாதுக்களுக்கு என்றே சிலவிஷயங்களை நிர்மாணித்துத் தருகின்றார்கள், அவர்கள் சாதுக்களுக்கு எல்லாம் அன்பே உருவான பாதுகாப்பு தருகின்றார்கள்.  அந்த சூழ்னிலை அங்கு பொழியும் மழை சரியான நேரத்தில் பொழிகின்றது.  சந்திரன், சூரியன் எல்லாம் சரியான நேரத்திற்கு  வந்து போகின்றது.  எல்லாமே உரிய முறையில் அழகாக நடந்தேறி வருகின்றது.  ஏனெனில் அவைகளுக்குத் தெரியும், இவர்கள் சாதுக்கள் வாழ்வின் சாரமாக இருப்பவர்கள், இவர்களை கவனித்துக் கொள்வது தமது கடமையென்றும், பலனில்லாத மனிதர்களை அவைகள் பொருட்படுத்துவதில்லை.
  புனிதஸ்தலங்களான இந்தியாவிலுள்ள அமர்நாத்திற்குச் செல்வதாலோ, மெக்காவிற்குச் செல்வதாலோ, நமக்கு ஆன்மீக உயர்வு கிட்டி விடாது என்று பூமிமாதா காண்பித்து உள்ளார்கள். சமயச் சடங்கு என்ற பெயரில் மக்கள் செல்வதால் அங்கும்  நில நடுக்கம் ஏற்படுவது உண்டு.  நான் ஜனித்தது சிந்த்வாராவில். மெக்காவும், சிந்த்வாராவும் பூமத்திய ரேகையிலிருந்து ஒரே நேர் எல்லைக் கோட்டில் உள்ளது.  மெக்கா என்பது மகேஸ்வர சிவமாகும். அதாவது சிவமாகும். முகம்மதுவிற்குத் தெரியும்.  மெக்காவிலுள்ள கருங்கல் ஸ்வயம்புவாக வந்தது என்று.  அவரால் நுண் அதிர்வுகளை உணர இயலும்.  ஆனால் மெக்காவிற்கு செல்வதாலேயே மட்டும் ஏதும் அடைந்து விட இயலாது. வித்தியாசம் என்னவெனில் நம்பிக்கையான உண்மையான மனிதர்களுக்கு மெய்மை கிட்டும்.  போலியானவர்களுக்கு அது இல்லை.பூமிமாதாவும் பஞ்ச பூதங்களும் எல்லாவற்றைப் பற்றியும் ஆழ்ந்து அறிந்து கொள்ளும் தன்மை வாய்ந்தவர்கள். ஏனெனில் அவர்களுடைய குண்டலினி புனிதத்தன்மை வாய்ந்தது.  ஆனால் உங்களுடைய மனித பிரயத்தனங்களாலும், தவறுகளாலும் ஆணவத்தாலும், கழிவிரக்கத்தாலும் எல்லாவிதமான முட்டாள் தனங்களாலும் உங்களுடைய குண்டலினியானது அவ்வளவாக உணர்ச்சி மிக்கதாக இல்லை.  யாருடைய மனதாவது மற்றவர்களைப் பற்றி எதிராக நினைக்குமானால் அந்த மற்றவர்களைப் பற்றி எதிர்மறையினர் என்று கூற ஆரம்பிப்பார்கள். உண்மையில் அவ்வாறு கூறுபவர்களைத் தான் எல்லா எதிர்மறைகளும் பிடித்திருக்கின்றது.
நாம் உண்மையிலேயே ஆதிசக்தியின் பிம்பமாக இருப்போமானால், புனிதமாக மிகவும் புனிதமாக வெண்மையின் மீது ஏதாவது படியுமானால் காண்பித்து விடும். நீங்கள் மிகவும் வெண்மையாக மிக நுண்மையான கரும்புள்ளிகள் கூட உங்களுக்குத் தெளிவாக மற்றவர்களின் கரும்புள்ளிகளையும் உணரக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.  அந்த மாதிரி உயரத்தைத் தூய்மையான வாழ்க்கையினால் தூய்மையான சிந்தனையால் தூய்மையான இதயத்தால் அடைந்து விட்டால் எதையும் பார்த்துப் பார்த்துத் திறமையாக கையாள வேண்டிய அவசியமில்லை. பூமிமாதாவைப் போன்று எல்லாம் இயற்கையாகவே அமைந்து விடும்.
பூமிமாதா எதற்காகவாவது திறமையைக் கையாளுகின்றார்களா? ஒரு விதை விதக்கிறோம்.  அது தானாகவே முளைவிட்டுக் கிளம்புகின்றது. அது மிகவும் தன்னிச்சையானது. அதைப் பற்றி நாம் ஆச்சரியம் அடைவதில்லை.  பூமிமாதாவின் ஒவ்வொரு அணுவிலும், மூலக்கூறுகளிலும் புலன்களை அறியும் தன்மை உள்ளது.
நீங்கள் பூமியின் மீது அமர்ந்து தியானம் மிகவும் நல்லது. துரதிர்ஷ்டவசமாக உங்கள் பிரச்சனைகளையெல்லாம் நான் கிரஹித்துக் கொள்வது போல் பூமிமாதாவும் கிரஹித்துக் கொள்கிறார்கள். எந்த விதக் கஷ்டமும் இல்லாமல் உங்கள் பிரச்சனைகளிலிருந்து விடுபட இயலும்.  எவ்வாறு தரையின் மீது உட்கார இயலவில்லையெனில் ஒரு கல்லின் மீதோ அல்லது சலவைக் கல்லின் மீதோ அல்லது இயற்கையான ஏதோ ஒன்றின் மீதோ அமர வேண்டும்.  ப்ளாஸ்டிக்கின் மீது அமர்வது   நல்லதல்ல.  இயற்கையான பொருட்கள் உங்கள் பிரச்சனைகள் எளிதில் கிரஹித்துக் கொள்ளும்.  இதைப் போன்றே ஒவ்வொருவரும் மனோநிலையைப் பொறுத்த அளவில் இயற்மையாக இருக்க வேண்டும்.  நாம் தொடர்ந்து விவாதம் செய்து கொண்டிருந்தாலோ அல்லது விவரித்துக் கொண்டிருந்தாலோ, அதற்கு முடிவே இல்லை.
தலைவலி தான் மிஞ்சும். ஆனால் நீங்கள் தன்னிச்சையாக இருந்தீர்கள் என்றால் மற்றவ்ர் என்ன செய்ய முயற்சி செய்கிறார் எதைக் கூற விரும்புகின்றார் எதைத் தெரிவிக்கப் போகின்றார் என்று உடனடியாகத் தெரிந்து விடும்.  இதைப் பற்றி நீங்கள் அதிகம் சிந்தித்துப் பார்க்க வேண்டிய அவசியமில்லை.  ஏனெனில் மற்றவர் எண்ணத்தை உங்களால் கிரஹித்துக் கொள்ள இயலும்.  கிரஹித்துக் கொள்ளுதல் என்பது மற்றவர்களிடமுள்ள கெட்ட விஷயங்களை எடுத்துப் பார்ப்பது என்பது அல்ல. இது சல்லடைப் போட்டு நன்மையானவைகளை மட்டும் சலித்து எடுத்துக் கொள்ளுதல் போன்றதாகும்.  மற்றவ்ர்கள் கூறும் யாவற்றையும் கிரஹித்துக் கொண்டு நல்லவற்றை மட்டும் சலித்து எடுத்துக் கொள்வீர்கள்.
இப்பொழுது இந்த ஆதிசக்தியின் பிரச்சனை யாதெனில் உங்கள்
எல்லோரையும் என் சரீரத்தில் கிரஹித்துக் கொள்ள முடிவு செய்வதுதான்.  இது மிகவும் ஆபத்தான விளையாட்டு என்று எனக்குத் தெரியும். ஆனால் இந்த நேரத்தில் இதை நான் செய்ய வேண்டியதாகின்றது.  ஆகவே இதைச் செய்தேன்.  உங்கள் எல்லோரையும் சரீரத்தில் சிரஹித்துக் கொண்டுள்ளேன். உங்கள் பிரச்சனைகள் எல்லாம் என்னுள் புகுந்து விட்டது.  இது எவ்வாறு எனில் ஒரு சமுத்திரத்தில் உங்களை ஆழ்த்தி உங்களை தூய்மைப்படுத்துவது போன்றதாகும்.  ஆனால் சமுத்திரத்தின் நிலை என்ன? சமுத்திரம் உங்கள் பிரச்சனைகள் எல்லாம் நிறைந்ததாகவும் விஷயங்கள் எல்லாம் விலகாமல் தாமதமாகவும் இருக்கின்றது. இது மிகுந்த தொல்லை கொடுப்பதாக உள்ளது.
ஆகவே சிறந்த வழியாதெனில் சுயபரிசோதனையின் மூலம் உங்களை நீங்கள் தூய்மைப் படுத்திக் கொள்வதாகும்.  சிந்தனையின் மூலம் சுயபரிசோதனை செய்து கொள்வது என்பது இதன் அர்த்தம் அல்ல. சுய பரிசோதனை என்பது தியானத்தின் மூலம் செய்வதாகும். நீங்கள் எல்லோரும் கண்டிப்பாகத் தியானம் செய்ய வேண்டும்.
தாயாரகிய நான் நீங்கள் நன்றாகவும், தூய்மையாகவும் இருப்பதைப் பார்த்து வேறு எதையும் பொருட்படுத்துவதில்லை. எவ்வாறு பூமிமாதா எல்லாவற்றைபும் பொறுத்து உங்கள் மேல் அக்கறை கொள்கின்றார்களோ, அவ்வாறே நானும் உங்கள் மேல் கவனம் செலுத்துகின்றேன்.  நீங்கள்  நல்லவர்களாக இருந்தாலும், கெட்டவர்களாக இருந்தாலும், எவ்வாறு பூமிமாதா உங்கள் மேல் அன்பு செலுத்துகின்றார்களோ, அவ்வாறே நானும் உள்ளேன்.  ஆனால் நீங்கள் என்னிடம் அன்பாக இருப்பீர்கள் என்றால் உண்மையிலேயே  நல்ல சகஜயோகிகளாக இருக்க முயற்சி செய்வீர்கள் என்றால், பகட்டாக இருக்காதீர்கள், வியாபாரிகளைப் போன்று வியாபாரத் தனத்துடன் இருக்காதீர்கள், சிந்தனையாளர்களாக மட்டுமே இருக்காதீர்கள்.
விவாதம் புரிபவர்களாக இருக்காதீர்கள். மற்றவர்களைக் கண்டனமோ, கிண்டலோ செய்யாதீர்கள்.  நீங்கள் தினமும் பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் தியானம் செய்ய முயற்சி செய்தீர்கள் என்றால் நிச்சயமாகக் கூறுகின்றேன், என் ஆரோக்கியம் மிகவும் நல்ல முறையில் இருக்கும்.
உங்கள் எல்லோருடைய எண்ணங்களையும், கருத்துக்களையும் என்னுள் நான் எடுத்துக் கொண்டுள்ளதால் தேவையில்லாத சித்ரவதை , வேதனை எனக்கு உண்டாகின்றது.  இது மிகவும் ஆபத்தானதுதான் நீங்கள் எல்லோரும் அறிவுள்ளவர்கள் புரியும்.  உங்களுக்குத் தெரியுமா, சில சமயங்களில் தினமும் சிலுவையில் அறையப் படுவது போன்று எனக்கு இருக்கின்றது.  என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை.
அருகாமை என்பதற்கு விளைவு உண்டு. பிரச்சனைகள் குறைந்த மனிதர் எனக்கு மிகவும் அருகாமையில் வரும் பொழுது எனது கவனத்தின் அருகாமையில் வரும் பொழுது நான் சிலுவையைச் சுமக்க வேண்டியுள்ளது.  நாம் உயர்வதற்காக மேன்மேலும் செல்வதற்காகச் சஹஜயோகாவில் இருக்கின்றோம். ஆனால் அதைக் குறித்து நாம் செய்வது என்ன? மனமாற சிந்தித்துப் பார்க்க வேண்டும்.  நாம் தியானம் செய்து கொண்டிருக்கின்றோமா? மற்றவர்களும் மேன்மையடைய ஏதாவது செய்திருக்கிறோமா? மற்றவர்கள் ஆன்ம தரிசனம் பெற வகை செய்திருக்கிறோமா? குறிப்பாகப் பெண்கள் தயாராக இருப்பதால் அவர்கள் தங்களூக்குள் இந்தக் கேள்விகளைக் கேட்டுக் கொள்ள வேண்டும்.
ஆண்கள் சுறுசுறுப்பு மிகுந்து காணப்படுவார்கள்.  ஆனால் தியானம் செய்ய மாட்டார்கள். பெண்கள் தியானம் செய்வார்கள்.  ஆனால் வெளி வேலைகளைக் கவனிக்க மாட்டார்கள்.  இந்த வழியில் இருந்தால் அது வேலை செய்யாது.  இரண்டு வேலைகளுமே செய்யப்பட வேண்டும்.  இல்லையெனில் குண்டலினி உங்களுக்கு உதவி புரியாது. சஹஜயோகம் என்பது தனிப்பட்ட முறையில் அமைந்த ஒன்று அல்ல. இது ஏதோ தனியாக ஒருவர் எங்கோ அமர்ந்து கொண்டு முனிவராக ஆவதற்காக ஏற்பட்ட ஒன்றல்ல.  இது கூட்டுமுறையில் அமைந்த ஒன்றாகும்.  குண்டலினியும் கூட்டுத் தியானம் வரை உதவி புரிபவர்களுக்கு மட்டுமே உதவிபுரியும்.
சஹஜயோகா என்பது எல்லா உறுப்புகளுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் வாழ்ந்து கொண்டிருக்கும் வளர வேண்டிய ஒன்று.  சக்தியைப் பெற்றுக் கொள்ள நீங்கள் தியானம் செய்ய வேண்டும். நீங்கள் வளர வேண்டும். நீங்கள் வளர்ச்சி பெறவில்லையென்றால் முடிவு பெற்று விடுவீர்கள்.  அதற்கு மேல் நீங்கள் ஒரு சஹஜயோகி அல்ல குறைந்த பட்சம் ஒரு நபருக்காவது ஆன்ம தரிசனம் பெற உறுதுணை செய்யாத வரை நான் சஹஜயோகி என்று அழைக்க மாட்டேன். மற்ற எல்லா செயல்களுடனும் சேர்த்து உங்களது முக்கியமான காரியமானது மற்றவர்களுக்கு நீங்கள் எவ்வாறு ஆத்ம தரிசனம் கொடுக்கிறீர்கள் என்பதாக இருக்க வேண்டும்.  வாழ்க்கையின் இந்தப் பழக்கத்தை நோக்காத வரையில் நிச்சயமாக உங்களால் சஹஜயோகாவில் வளர்ச்சியடைய முடியாது.
எனது அன்பின் காரணமாக எத்தனையோ சஹஜயோகிகள் மீது விருப்பம் கொண்டுள்ளேன்.  என்னிடம் மிகுந்த அன்பு உள்ளது.  அதை வழிமுறைப்படுத்துதல் வேண்டும்.  இல்லையென்றால் எனக்கு மூச்சுத் திணறி விடும்.  என்னையே நான் நேசித்துக் கொள்ள முடியாது.  ஆகவே இந்த அன்பானது பரவ வேண்டும்.  ஆகவே உங்கள் மூலமாக இந்த அன்பானது மற்றவர்களுக்குப் பரவிட நீங்கள் அவர்களைச் சந்தோஷப்படுத்த வேண்டும். இது எனக்குள்ள ஒரு பார்வையாகும்.  இந்த விசேஷமான நேரத்தில் இது முன்பே பல முனிவர்களால் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.  நீங்கள் எல்லோரும் அதற்காகத் தேர்ந்து எடுக்கப்பட்ட விசேஷமானவர்கள் என்பது மிகவும் தெளிவாகத் தெரிகின்றது.  நீங்களும் உங்கள் அன்பை வழிமுறைப்படுத்த வேண்டும்.  நான் ஒரு நீர்முழ்கி, தொலைப்பேசியை பழுது பார்த்துவிட்டு அதை உபயோகிக்காமல் இருந்தால் அதனால் என்ன பயன்?
ஆகவேஆதிசக்தியின்குழந்தைகளாகியநாம்இன்றுமுடிவெடுக்கவேண்டியது, எல்லாஇடங்களுக்கும்எல்லாமூலைமுடுக்குகளுக்கும்செல்லவேண்டும்.  சஹஜயோகிகளாகஇருந்துநீங்கள்செய்யவேண்டியபொறுப்புகளையெல்லாம்என்னசமுதாயத்தில்வசிக்கின்றோம்என்றெல்லாம்சத்தம்போட்டு உரக்கக்கூறவேண்டும்நீங்கள்இங்கேஇருப்பதற்கு நிச்சயம்ஏதாவதுகாரணம்இருக்கவேண்டும்.
உங்களதுமுற்பிறவியில்நீங்கள்சிவாஜியாகவோநெப்போலியனாகவோ ராஜாவாகவோ ராணியாகவோ இருந்திருக்கலாம்.அதனாலென்ன?அவர்கள்என்னசெய்தார்கள்?யாருடையகுண்டலினியையாவதுஎழுச்சிபெறச்செய்தார்களா?இயேசுவின்சீடர்களும்தேவர்களும்கூடயாருக்கும்ஆத்மவிழிப்புணர்வு கொடுத்ததில்லை.ஆனால்உங்களால்அதுமுடியும்.
உங்களைப்பற்றிநான்பெருமைக்கொள்கின்றேன்.ஆனால்திரும்பத்திரும்பக்
,கூறுகின்றேன் இன்னும்அதிகவேகத்தில்சென்றுஅதிகமக்களைசகஜயோகத்திற்குக்கொண்டுவரவேண்டும்எல்லோரையும்கட்டாயப்படுத்திகடினமாகஇருக்கக்கூடாது.  கோபம்கொள்ளுதல்கூடாதுஎன்றெல்லாம்கூறுவதுஎனதுசுபாவத்திற்கு மாறானது.அவ்வாறுகூறுவதுஎனக்குக்கஷ்டமானதும்கூட ஆனால்இதிலெல்லாம்நீங்கள்தவறினால்என்னைமுழுமையாகத்தவற வைத்தவர்கள்ஆவீர்கள்.நான்உங்களைக்கேட்கின்றேன்.இன்றுஒரு உறுதிமொழிஎடுத்துக்கொள்ளுங்கள்.சஹஜயோகாவைப்பரப்புவதாகநீங்கள்சஹஜயோகாவைப்பற்றிப்பேசவேண்டும்அதைப்பற்றி அறிந்திருத்தல்வேண்டும்.எல்லாவிதமானமுட்டாள்தனமானபிரச்சனைகளையும்சஹஜயோகாவில்மனிதர்கள் எனக்குஉருவாக்கித்தருகின்றார்கள்.நீங்கள்சஹஜயோகத்தில்இருப்பதுமற்றமனிதர்களின்பிரச்சனைகளைத்தீர்ப்பதற்காகவாஅல்லதுபிரச்சனைகளைஉண்டுசெய்வதற்காகவா?ஆகவேமொத்தத்தில்நாம்நல்லமுறையில்செயல்பட்டு வந்துள்ளோம்என்றுகூறினாலும்அதுமுடிவல்ல.இன்னும்அதிகவேகத்துடன் , உற்சாகமாகவும்  மகிழ்ச்சியாகவும்நாம்காரியங்கள்செய்யவேண்டும்.  மற்றவர்களுக்குவிழிப்புணர்வு கொடுக்கும்போதுஉங்களுக்குக்கிடைக்கும்சந்தோஷம்என்னஎன்றுதெரியுமா?நீங்கள் உங்கள்பார்வையில்படும்அனைவருக்கும்ஆன்மவிழிப்புணர்வுகொடுத்துக்கொண்டேசெல்லவேண்டும்.கிறிஸ்துவஆலயங்களுக்குச்செல்லுங்கள்.சர்வகலாசாலைகளுக்குச்செல்லுங்கள், பொதுக்கூட்டங்களுக்குச்செல்லுங்கள்.நாம்வாழ்க்கையில்எதைப்பெறமுயல
வேண்டும்என்றுஒருவிதமானகருத்துக்களும்இல்லாதவர்களிடத்தில்   பயமின்றி வன்மம்இல்லாமல்பின்வருமாறுகூறுங்கள்:
           “எங்களதுநன்மைக்காகஎன்றுஇல்லைஉங்களதுநன்மைக்காகவே நாங்கள்இங்குவந்திருக்கின்றோம்ஆகவேநாங்கள்கூறுவதைக்கவனியுங்கள்என்றுகூறுங்கள், நான்நிச்சயமாகமிகவும்உறுதியாகக்கூறுகின்றேன்.  உங்களுள்இருக்கும்குண்டலினி மாதாஉங்களின்இந்தச்செயலுக்காகமிகவும்மகிழ்ச்சிஅடைவார்கள்.அவர்களைமுழுமையாகஉபயோகப்படுத்தாத மக்களிடத்தில்அவர்கள்மகிழ்ச்சி கொள்வதில்லை.ஆகவேஉலகைஅடிமைத்தளத்திலிருந்துவிடுவிக்கநீங்கள்
செய்யும்செயல்களுக்குகுண்டலினிமாதா மிகவும்மகிழ்ச்சியுடன்துணைப்புரிவார்கள்.
கடவுள்உங்களைஆசீர்வதிப்பாராக.