n[a; =khjh[p
சிவராத்ரி
பூஜை 23.02.1990.
ஆன்ம விழிப்புணர்வு பெற்ற
பிறகு நம்முடைய அன்றாட வாழ்க்கை தெய்வீகமாகவும் ,சுபமாகவும் ,மிக புனிதமாகவும் மாறும்.இதுவே மனிதன் சாதிக்கவேண்டிய மிக
முக்கியமான ஒன்று .ஆன்ம விழிப்புணர்வு பெறாமல் நாம் சமநிலையான வாழ்க்கையை வாழ
இயலாது .இதனால் உண்மையான கூட்டு வாழ்கையை வாழ இயலாது .உண்மையான அன்பை கொண்டவராக
இருக்க இயலாது .சத்தியத்தை தெரிந்து கொள்ள இயலாது .
ஆன்மாவுடைய முழு வெளிச்சத்தில் மட்டுமே, நாம் நிர்மல் வித்யாவை புரிந்து ஏற்று கொள்ள
முடியும் .ஆன்ம
விழிப்புணர்வு பெற்ற பிறகு நம் சித்தம் கூட நிர்மலமாக மாறும்
.அவன் எதிலும்
சிக்காமல் இருப்பான். அவனுடைய சித்தத்தின் வழியாக மட்டுமே ஒரு
விஷயத்தைl
பற்றிமுழுமையானஞானத்தைஅவன்பெறுவான்.ஒருமனிதன்முழுமையானஆன்ம
விழிப்புணர்வுபெறாவிட்டால்அவன்
எப்போதும் அவனைl பற்றி மட்டுமே சிந்தித்து
கொண்டிருப்பான் .அதை போன்úற மனிதன் நான்இப்போது என்ன சாப்பிட வேண்டும் ?எனக்கு
சுவையான உணவு
எப்போது கிடைக்கும்?நான் எவ்வித உணவை தயார்
செய்ய
வேண்டும்?இன்று நான் எங்கு செல்ல
வேண்டும்?எனக்கு எவ்விடம் தகுந்த முக்கியத்துவம்
கிடைக்கும்?மனிதர்கள் என்னை எப்போது போற்றுவார்கள்?எனக்கு எந்த சமுதாயத்தில்
அங்கீகாரம் கிடைக்கும் என்றும் யோசித்து கொண்டிருப்பான்.மற்றொரு வகை மனிதன்
பிள்ளைகளைl பற்றியும் ,பேரன்,பேத்தி,சொந்தகாரர்கள்
போன்றவர்களைl பற்றியும் சிந்தித்து
கொண்டிருப்பான்?என்னுடைய நிலையென்ன?இந்த வேலையை செய்தால் எனக்கு என்ன
கிடைக்கும்?நான் எந்த விதமான உடையை அணிய வேண்டும்?நான்
அறிவுடையவன்,சிறந்தவனென்று மக்களை எப்படிநம்பவைப்பது?இதை போன்ற
சிந்தனையெல்லாம் சுயநலமானது .
சிலர் பணிவும்,நாகரீகமும் கொண்டு எல்லோரிடமும் மரியாதையுடம் நடந்து கொள்வது போல்
நடித்து ஒவ்வொருவரிடமும்
மிகுந்த பணிவோடு விழுந்து விழுந்து
கும்பிட்டு
கொண்டிருப்பார்கள்.
சிலர் தாங்கள் படித்த மேதை எனவும் ,தாங்கள் மற்றொரு மேதையுடன் சர்ச்சையில் ஈடுபட வேண்டும்
என்றும் பெருமையாக சொல்லிகொண்டிருப்பார்கள்
.
சிலர் தங்கள் கலையைப்
பற்றியும்,சங்கீதத்தைப் பற்றியும்
தங்கள் பெருமைகளையும் சொல்லி கொண்டிருப்பர்.
இன்னொரு வகை மனிதன் அதிக
நேரம் மற்றவர்களை எப்படி நம்ப வைப்பதென்று நினைத்துகொண்டிருப்பான் .
சிலர் நிறைய சமுதாய
சேவைகளை செய்து கொண்டிருப்பார்கள் . சிலர் பிறந்த நாட்டிற்காக தியாகம் செய்வார்கள்
. சிலர் தன் நாடு சுகமாகவும், பசுமையாகவும் இருக்க வேண்டுமென்று நினைப்பார்கள் .
மனிதன்
தான் மனித சமுதாயத்தில் இவ்வாறு கலந்து போவதை பார்த்து ஆனந்தமாக
இருப்பான். ஆனால்
இதற்கு, பின்னால் அவன் வெற்றியும் ,அவனை அடையாளம்
காண்பிக்கும் எண்ணமும், அவனை
மற்றவர்கள் போற்ற வேண்டும் என்ற எண்ணமும் தான்
மறைந்துள்ளது .
மேலே சொன்ன ஏதோ ஒரு காரணத்தை எப்போதும் எதிர்பார்ப்பதால் அவன் சுகம், துக்கம் என்ற
வட்டத்தில் சிக்கி தவித்து கொண்டிருப்பான் . அவன் என்றும்
நான் என்ற குறுகிய மனப்பான்மை
கொண்டவனாக இருப்பான் . ஆனால் மனிதன் முழு ஆன்ம விழிப்புணர்வு பெற்ற பின்பு
மட்டுமே
மற்றொரு விதமாக சிந்திக்க தொடங்குவான் .அவ்விதமான மனிதன் ,மனித
குலத்திற்கு இந்த
பொருள் எப்படி உபயோகமாக இருக்கமென்று சிந்திப்பான் .
மனிதர்கள் அனைவரும் பிரச்சனை எனும் கடலில் மூழ்கி உள்ளனர் .அவர்களைக் காப்பாற்ற நான் என்ன செய்ய வேண்டும் என்று
நினைப்பான் .
தன் சிந்தனைகள் அனைத்தும்
தன் சுயநலத்திற்கு மாறாக இருக்கும் .ஒரு மரத்தை பார்க்கும் போது கடவுள் இதை
எவ்வளவு அற்புதமாக படைத்துள்ளார் .நானும் இந்த மரத்தை போல் மற்றவர்களுக்கு நிழலை கொடுக்க வேண்டும் ,பூக்கள் கொடுக்க வேண்டும் ,காய்கனிகள் தர வேண்டும் என்றெல்லாம் நினைப்பான் .
இமய மலையை பார்க்கும்
போது அதன் பெருமையை வர்ணித்து பாடலாக பாடுவôன் .
ஆன்ம விழிப்புணர்வு
பெறாதவன் இமய மலையைப் பார்த்தேன் ,இதை செய்தேன் அதை செய்தேனென்று தன் பெருமையை சொல்லிக்கொண்டிருப்பôன் .தன் நாட்டு கொடியை அங்கு Fன்றி அவனுடைய பெருமையை பாடிக்கொண்டிருப்பான் .
இங்கு இரண்டு வகையான
மனிதர்கள் இருப்பார்கள் .முதல் வகை மனிதன் ஆன்ம விழிப்புணர்வு பெற்றவர்கள் .
அவர்கள் ஆத்ம வெளிச்சத்தில் ஒவ்வொன்றையும் பார்த்து கொண்டிருப்பார் .அவர்
அவ்விதமான செயல் செய்வதால் தமக்கு பேரும் புகழும் கிடைக்குமென்று யோசிக்கமாட்டார்
.
அவர்கள் கொல்லபட்டாலும் ,இம்சைக்கு ஆளானாலும் சிலுவையில் ஏற்றப்பட்ட ஏசுநாதரை போல்
கொஞ்சம் கூட பின் தங்கமாட்டர்கள் .சிலுவையில் ஏற்றப்பட்ட சமயத்தில் கூட ஏசுநாதர்
கடவுளிடம் அவர்கள் அறியாமையால் தவறு செய்வதால் அவர்களை மன்னிக்குமாறு
வேண்டிக்கொண்டார் .
ஆன்ம விழிப்புணர்வு
பெற்றவர் இது நடக்க வேண்டும், அது செய்ய வேண்டும் என்ற மன ஈர்ப்புக்கு அப்பாற்பட்டவர்
அப்படித்தான் நடக்க
வேண்டும் இப்படி தான் நடக்க வேண்டுமென்று பிடிவாதமாக இருக்கமாட்டார் .அந்த வேலை
நிறைவேற்றபட்டாலும் சரி ,நிறைவேறபடாவிட்டாலும் ஒரே
மாதிரியாக எடுத்து கொள்வார்.
அவர் புகழையும் ,போற்றுதலையும் விரும்ப மாட்டார் .அதனால் அவர் சுக
துக்கங்கள் எனும் வட்டத்தில் சிக்கி தவிக்க மாட்டார் .
அவருக்கு இரண்டு
நிலைகளும் ஒன்றாகவே இருக்கும் .
இவை இரண்டும் பகல் இரவு
போன்றதென்றே அவர் உணர்வார் .
தன்னுடைய ஆத்மாவின்
ஆனந்தத்தில் மூழ்கி உள்ளதால் தன் மனதை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை .தன்
மனமும் , தன் புலன்களும்
முழுமையாக அவருடைய கட்டுப்பாட்டில் இருக்கும் .
சிலர்
தங்கள் வாழ்க்கை முழுவதும் ஏதாவது ஒரு குறிக்கோளுடன் ,அதன்
பின்னே ஓடிக்கொண்டிருப்பர். அதை பெற்ற பிறகு மற்றொரு விசயத்திற்காக
ஓடிக்கொண்டிருப்பர் . தான் நினைத்தது கிடைக்காவிட்டால் தன் முழு வாழ்க்கையும் அழிந்து விட்டதாக நினைத்து ஆழ்ந்த
வருத்தத்துடன் இருப்பார் .
ஆன்ம விழிப்புணர்வு
பெற்றவன் தன் சித்தத்தின் மூலம் ஒவ்வொரு விசயத்தையும் சரியாக அறிந்து முன்னுக்கு சென்று
கொண்டிருப்பான் .அவனுடைய சித்தம் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும்.
அவனுடைய சித்தம் எதன்
மீது செல்கிறதோ , அந்த செயல் தொடங்கி
செயல்பட ஆரம்பிக்கும் .
சித்தம் பிரம்மாவின்
வரப்பிரசாதம் ஆகும்.ஆன்ம விழிப்புணர்வு பெற்றவரின் சித்தம்
மிகவும் சக்திவாய்ந்ததாகவும், அன்பாகவும் , எவ்வளவோ அறிவு
பூர்வமாகவும்
,விவேகமாகவும்
மாறும்.சித்தமானது பரமசைத்தன்யாவுடன் இணைந்து மிக சுலபமாக
காரியங்களை நிறைவேற்றித்
தரும் . இந்த உலகம் முழுவதும் பிரம்மாவின் சக்தியான
பரம
சைத்தன்யத்தின் மூலமே எல்லா
காரியங்களும் நடைபெற்று கொண்டுவருகிறது .
ஆதலால் ஆன்ம
விழிப்புணர்வு பெற்றவன் தான் தான் எல்லா பணிகளையும் செய்வதாக நினைக்க மாட்டான் .அவ்வாறு சிந்திக்க வேண்டிய
அவசியமும் அவனுக்கிருக்காது .
அந்த காரியம் பிரம்மாவின்
சக்தியால்தான் நடக்கிறது என்பதை உணர்வார் . எல்லா செயல்களும் பரம சைத்தன்யம் செய்வதால் தான் எதுவும் செய்வதில்லை என்பதை உணர்வார் .தான் வெறும் கருவி
என்பதையும் உணர்வார் .
எல்லாம் நானே செய்கிறேன்
என்ற சிந்தனையுடைய ஆன்ம விழிப்புணர்வு பெறாத மனிதன் , எல்லாவற்றையும் கடவுளிடம் ஒப்படைத்தேனென்று வெளிப்படையாக
சொன்னாலும் ,உண்மையில் அவன் கடவுளிடம்
விட்டுவிடுவதில்லை .
உண்மை என்னவென்றால் பரம சைத்தன்யம் தான் எல்லா காரியங்களையும் செய்கிறது .அந்த
புனித சக்தியின் ஆற்றல் மிக அற்புதமானது .
சில காரியங்கள்
நிறைவேறும் போது எப்படி நிறைவேறியதென்று தெரியாமல் ஆச்சரியத்தில் ஆழ்வான் மனிதன் .
நாம் எதுவும் செய்ய
மாட்டோம் எல்லா செயல்களும் கடவுளின் சக்தி மூலமே
நிறைவேற்றப்படும் . ஆன்ம விழிப்புணர்வு பெற்றவன் மட்டும் தான் பரம சைத்தன்யாவின் அனுபவத்தை பெற இயலும் .
பரம சைத்தன்யம்
ஆதிசக்தியின் ஒரு சக்தி.சதாசிவரின் இச்சா சக்திதான் ஆதிசக்தி .
ஆதிசக்தியின் ஆதரவால்
தான் பரம சைதன்யம் ஒவ்வொரு காரியத்தையும் நிறைவேற்றுகிறது .
ஆன்ம விழிப்பபுணர்வுக்கு
பின்புதான் நீங்கள் ஒப்பிட இயலாத உயர்ந்த மனிதர்களாக மாறுவீர்கள் .
ஸ்ரீ மாதாஜி .