Translate

புதன், 26 அக்டோபர், 2011

எண்ணங்களற்ற உணர்வு நிலை - தீபாவளி பூஜா

எண்ணங்களற்ற உணர்வு நிலை - தீபாவளி பூஜா
லாஸ் ஏன்ஜெல்ஸ் --- 3 .11 .2002




உங்கள் அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்களை மன மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களை இங்கு காண்பது எங்கு மிக மகிழ்ச்சியினை அளிக்கிறது. நீங்கள் அனைவரும் சஹஜ யோகாவினை மேற்கொள்வதை கண்டு மிக அக மகிழ்வு கொண்டுள்ளேன். இது உங்களுடையதே. ஆன்மா உங்களுடையதே. ஆனால் உள்ளுக்குள் செல்வது மிக கடினம். உங்களின் விருப்பத்தினால் தான் நீங்கள் உங்கள் ஆன்ம விழிப்புணர்வு பெற்று விருப்பத்தினை நிறைவு செய்துள்ளீர்கள் என் எண்ணுகிறேன்.

நீங்கள் எங்கு அறிந்த வண்ணம் அனைவரையும் நிர்பந்தப்படுத்த முடியாது. உங்கள் சொந்த விருப்பத்தினாலும் , சரணடைவதாலும் மட்டுமே இதனை செய்ய முடியும். பேசுவதாலும், வாதாடுவதாலும் எவ்வித உபயோகமும் இல்லை. உங்கள் விருப்பமும் , நம்பிக்கையும் மட்டுமே இதை செயலாக்க முடியும். இது தான் மிக எளிதான வழியாகும். உங்கள் உள்ளத்தின் விருப்பமும், இச்சையின் சக்தி மட்டுமே இதை செயலாக்க முடியும்.

உலகமெங்கும் ஆன்மீக விழிப்புணர்வு பெற்ற அநேகர் இங்கு நம்மிடம் இல்லை. நான் அவர்களை நினைவு கூறுகிறேன். நீங்களும் அவர்களை நினைவு கூறுங்கள்.


இன்று இனிமையான நாள். உலகமெங்கும் விழிப்புணர்வு பெற்றவர்களைப் பற்றி நினைவு கூறுகிறேன். மானிடர்களின் விழிப்புர்ணர்வு தான் உண்மையான தீபாவளி ஆகும். மெழுகுவர்த்தியோ , விளக்குகளோ அல்ல. மானிடர்கள் தான் முக்கியமானவர்கள். இவர்கள் விழிப்புணர்வு பெற்றால் இனி எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாது. மனிதர்கள் இருளின் பிடியில் உள்ளதால் அவர்களுக்கு பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. அவர்கள் இருளில் தள்ளாடிக் கொண்டிருக்கிறார்கள். அவரில் சிலர் உண்மையைப் பற்றி தெரியாமல் இருக்கிறார்கள்.

சஹஜ யோகத்தில் வந்து நீங்கள் விழிப்புணர்வு அடைந்த உடன் அவ்வொளியில் எது நல்லது , எது கெட்டது என அறியத் தொடங்குவீர்கள். எல்லா நேரமும் மகிழ்ச்சியினை அளித்து சந்தோசத்தை கொடுக்கும் இந்த மலர்களைப் போல் அழகாக வளர்வீர்கள். அதே போல் அவ்வொளி பெற்ற உடன் வேறு எதையும் தேட மாட்டீர்கள். எப்பொழுதும் அவ்வொளியினை பிரகாசிக்க செய்யுங்கள்.
உங்களில் உள்ள அந்த ஒளி மூலமாக மற்றவர்களை விழிப்புணர்வு அடைய செய்வது மற்றொரு கடமையாகும். நாம் இங்கு ஒரு மெழுகுவர்த்தி மூலமாக மற்றவற்றை ஒளிமயமாக்குகிறோம். இவ்வொளி உங்களில் உள்ளதால் நீங்கள் அனைவரும் இதே போல் செய்யலாம். அந்த ஒளியின் மூலமாக மற்றவர்களை விழிப்புணர்வு பெற செய்து அவர்கள் ஆன்மாவின் மகிழிச்சியில் நீங்களும் பங்கு கொள்ளலாம். இங்கு பல விளக்குகளை ஒளிப் பெற செய்ததுப் போல் , நீங்களும் இந்த உலகின் ஒளிகளாக உள்ளீர்கள். ஒளியினை நீங்கள் பெற்றது மட்டும் போதாது, மற்றவர்களையும் பெற செய்வது முக்கியம்.

நீங்கள் அவ்வாறு செய்யத் தொடங்கியதும் நீங்கள் பெற்ற பொக்கியஷ்த்தினை உணர்வீர்கள். உங்கள் மீது உங்களுக்கு மரியாதை உண்டாகும். ஒன்றும் வெளிப்படுத்தாமல் உள்ள ஞானியினை போல் இருப்பீர்கள். அழகான, மிக அமைதியான சுபாவத்தை கொண்டு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் உங்கள் உள் மனம் அபிவிருத்தி அடையும். உண்மை எதுவோ, அதுவே உங்களில் இருக்கும். நீங்கள் ஆன்மீக விழிப்புணர்வு பெற்றவர்கள் என்பதை மற்றவர்கள் அறிவார்கள்.

இந்தியாவில் இருந்தோ, அமெரிக்கவில் இருந்தோ, இங்கிலாந்தில் இருந்தோ, வந்திருப்பவர்கள் யாவராயினும், உங்கள் அனைவரின் உள்ளத்திலும் தெய்வீக அன்பின் சாகரமும், ஞானமும் உள்ளதையும், உங்கள் நேர்த்தியான சுபாவத்தையும், மெய்மையினையும், அவர்கள் தங்களுக்குள் நன்கு உணர்வார்கள். உங்கள் அன்பின் சாரத்தினை முதலில் நீங்கள் அன்பவித்து ஆனந்தப்பட்டு இங்கு இருப்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களில் அமைந்துள்ளதை முதலில் அனுபவித்து ஆனந்தப்படுங்கள். பின்பு மற்றவர்களின் அன்பில் மகிழ்ந்து கொள்ளலாம்.

ஒருவருக்கொருவர் நேசிக்க வேண்டும் என்று கூறத் தேவையில்லை . நீங்கள் அன்புடன் நேசிப்பீர்கள், புரிந்து கொள்வீர்கள். உங்கள் ஒளியினை உங்கள் மத்தியில் பரவிட செய்வீர்கள். சில நேரங்களில், உங்கள் வீட்டிலோ, நகரத்திலோ, கிராமங்களிலோ, ஆன்மீக விழிப்புணர்வு பெற வில்லையே என ஏக்கம் ஏற்படலாம். இதனை செய்து முடிக்க வேண்டியது தான். இதை உன்னால் செய்து முடிக்கப் பட வேண்டும். மிக வயது முதிர்ந்த பெண்மணி ஒருவர் என்னிடம் முதன் முதலில் ஆன்மீக விழிப்புணர்வு பெற்றாள். இப்பொழுது நீங்கள் அனைவரும் ஆன்மீக விழிப்புணர்வு பெற்று என்முன் இங்கு உள்ளீர்கள். இதே போல் ஆன்மீக விழிப்புணர்வு அடைய செய்யும் பணியினை நீங்களே செய்யலாம். இதற்கு எந்த ஒரு திட்டமிடுதலும், தேவையில்லை. இதனை செய்ய நன்றி நவிலல் அவசியம் இல்லை. செயல்பாடு மாபெரும் சக்தி அங்கு உள்ளது. யாவும் தானாகவே செயலாக்கப்படும்.

ஒளி பெற என்ன செய்வீகள்? மெழுகுவர்த்தி அருகில் நெருப்பு வைத்ததும் ஒளி பெறப்படுகிறது. அதேபோல் உங்களிடம் அமைந்த விழிப்புணர்வு, உலகில் உள்ள ஆயிரம் ஆயிரம் மனிதர்களுக்கு ஒளியினை அளிக்கக் கூடும். இன்னும் அனேக நாடுகளை நாம் நாடி செல்ல வேண்டியவர்களாக உள்ளோம் என்பதை அறிவீர்கள். நீ எங்கு செல்ல வேண்டும்? எங்கு இப்பணியினை செய்ய வேண்டும்? என்று கண்டுபிடித்து இடங்காண்.

முதலாவதாக , ஆன்ம விழிப்புணர்வு அளிக்கத் தகுதி வாய்ந்தவராக நீ உள்ளாய். யாருடைய உதவியும் இன்றி உன்னால் ஆன்மீக விழிப்புணர்வு அளிக்க இயலும் என்று தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள். தனிப்பட்ட மனிதரால் இது இயலும். நாம் மற்றவர்களுக்கு ஆன்மீக விழிப்புணர்வு அளிப்பது மிக முக்கியமான உலகின் தீபாவளி ஆகும். இது மிக முக்கியமானதாகும்.

சஹஜயோகாவில் அநேகர் கடந்த கால நிகழ்வுகளைப் பற்றி சிறிது கசப்படைந்தவர்களாக உள்ளனர். கடந்த கால நிகழ்வுகளை அறவே மற. கடந்த காலம் முக்கியமல்ல. நிகழ் காலம் மட்டுமே முக்கியம். தற்கால வினாடியில் என்ன செய்ய வேண்டும் நான் அவ்வாறு செய்தேன் , இவ்வாறு செய்தேன் என்று கடந்த காலத்தினை குறித்து கவலைப்படாதே. செய்தவைகள் எதுவோ அது முடிந்தவை . தற்போது நிகழ்காலத்தினை நோக்கிப்பார். நான் எதிர் காலத்திற்கு என்ன செய்ய வேண்டும்? உங்கள் ஒளியில் உங்கள் பாதையினை காண்பீர்கள். இருளின் அந்தகாரங்களை விட்டு அகலுங்கள். நீங்கள் எந்த அளவுக்கு செல்ல வேண்டும். எவ்வாறு மனிதர்களை சந்திக்க வேண்டும். எவ்வாறு சஹஜயோகாவை பரப்ப வேண்டும் என்பனவற்றை தாங்களே அறிவீர்கள்.

உங்கள் உள்ளத்தில் ஏற்கனவே பெற்றுள்ளதுடன் உங்கள் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் உள்ளில் உள்ள சமுத்திரத்துடன் நீங்கள் இணைப்பினை ஏற்படுத்திக் கொண்டால் நீங்கள் உண்மையிலேயே இவ்வேலையினை நன்றாக செயலாக்க முடியும். மிக அழகாக செயல்படுத்தப்படும். நீங்கள் எவ்வாறு வெற்றிகரமாக செயல்படுகிறது என்பதை கண்டு ஆச்சரியப்படுவீர்கள்.

இந்த அறியாமையில் இருந்து பெரும் வெற்றியினைக் கண்டு திகைக்க செய்யும். ஆனால் உங்களிடம் ஒளி உள்ளது. ஒளியின் மூலமாக எல்லா இருளையும் அகற்றி விடுங்கள். ஒன்றைக் குறித்து நினையாமல் உங்களிடம் உள்ள ஒளியினால் அகற்றுங்கள். அது உங்களிடம் இல்லையென்றால் அதனைப் பற்றி பேசுவது எவ்வித பிரயோசனமும் இல்லை. எந்த செயலும் செய்து பிரயோசனமும் இல்லை. இதனால் எவ்விதமான வெற்றியும் கிட்டாது, அதற்கு மாறாக தோல்வியும் மிக மோசமான தோல்விதான் கிட்டும், இது நமக்கு மிக ஆபத்தானதாக அமையும்.

இந்த நாட்டில் அனைவரும் ஒவ்வொரு தவறினை ஒவ்வொன்றாக செய்ய கற்று கொள்கிறார்கள் என்று எண்ணுகிறேன். உங்கள் கண்களை மறைப்பவனவறறை கண்டு பிடிக்க வேண்டும். அமெரிக்க பணம் சார்ந்த நாடாக விளங்குகிறது. இந்நாடு உலகம் முழுவதுமாக பணம் சார்ந்த நாடுகளாக மாறிட நாடுகளை மயக்குகிறது. சஹஜயோகாவின் மூலமாக பணம் திரட்ட வேண்டும் என்ற எண்ணம் உருவெடுக்கலாம். சிலர் அவ்வாறு செய்யாமல் பணத்தின் பின்னே ஓடிக் கொண்டு உள்ளனர். பணம் திரட்ட வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல் பணத்தின் மூலம் பாதுகாப்பும் பெறவும் அவசியம் ஏற்படாது. உங்கள் பாதுகாப்பு உங்களின் உள்ளேயே உள்ளது.


எனவே இவ்வாறான புற காரியங்கள் அனைத்து உங்களுக்கு அவசியமற்றதாக உள்ளது. இவைகள் உங்கள் கண்களை மறைக்க கூடாது. ஒளி உங்களிடம் இருப்பின் , தெளிவாக காண்பதுடன் வாழ்வின் ஒவ்வொரு முக்கிய கால கட்டங்களில் இறைவனின் இவ்வுதவி எவ்வாறு கிடைத்தன என்று தெளிவாக காண்பீர்கள். ஸ்ரீ மாதாஜி நான் என் பிரச்சனையில் இருந்து விடுபட்டேன், என் பகைவர்களை அகற்றி விட்டேன், என்று பல வகையானவைகளைப் பற்றி எனக்கு அநேகரிடமிருந்து கடிதங்கள் வரும். இது குறித்து நான் ஒன்றும் செய்ய வில்லை. உங்கள் ஒளி இருளை அகற்றி உள்ளது. நீங்கள் அறியாதவராக இருப்பின் உங்கள் அறியாமையின் இருளை இந்த ஒளி அகற்றி விடும்.

ஒளியின் மாபெரும் சக்தியினை அறியாதவர்களாக உள்ளோம். இங்கு காண்பது போல் ஒவ்வொரு ஒளியும் சக்தியினை அளிப்பதுடன் முழு காட்சியையும் அளிக்கிறது. எனவே தெளிவாக அறிய இயலும். உதாரணமாக ஒருவர் ஆன்ம விழிப்புணர்வு பெற்றவரா இல்லையா என்று அறிய இயலும். அவர் அருகில் சென்று தனியான ஒரு முறையினை கடைப் பிடிக்க வேண்டியது அவசியம் இல்லை. இவர் விழிப்புணர்வு பெற்றவரா? இல்லையா? என்று உடனடியாக நீங்கள் அறிவீர்கள்.

ஆன்ம விழிப்புணர்வு பெற்றவர்கள் யார் என்று அறிய இயலாமல் மனிதர்கள் இருப்பதை என் அனுபவத்தில் கண்டுள்ளேன். இது எங்கு மிக வியப்பினை அளிக்கிறது. விழிப்புணர்வு பெற்றவர்கள் யார் என்று உங்களால் உணர முடிந்தால் பாதி பிரச்சனைகள் முடிந்தன. ஒருவன் தான் செய்ய இயலும் செயலை செய்ய நம்ப வைப்பது இரண்டாவது பிரச்சனையாகும். இந்த பிரச்சனை சஹஜயோகிகளிடம் இருப்பதை காண்கிறேன். உலகம் முழுவதும் செயலாற்ற இயற்கையான திறம் படைத்தவர்களாக சஹஜயோகிகள் உள்ளனர். சாதாரண மனிதர்களால் கண்டு கொள்ளாதவைகள் இவர்களால் கண்டு பிடிக்க இயலும். சஹஜயோகிகள் தான் சந்திக்கும் நபர் எப்படிப்பட்டவர் என்பதை உடனடியாக உணர இயலும். இதுதான் வேறுபாடு. எனவே உண்மையினை அறிவீர்கள்; எல்லோருடைய உண்மைகளை அறிவீர்கள் எல்லா சூழ்நிலையின் உண்மையையும், யார் தற்புகழ்ச்சி செய்கிறார் என்பதையும் சில கட்டுக் கதைகளையும் யார் கபட வேடதாரி என்பனவைகளையும் அறிவீர்கள்.இதனை அறிவதில் எவ்வித சிரமமும் இல்லை. உங்களிடம் ஒளி இருப்பதால் இது இயலும். ஒளியின் மூலமாக மற்றவர்களிடம் எது நல்லது , எது கெட்டது என்பதைத் தெளிவாக காண இயலும். எல்லா நேரங்களிலும் இறைவனால் வழி நடத்தப்பட்டு அவரால் பாதுகாக்கப்பட்டு வருவதால் உங்களை யாராலும் ஏமாற்ற முடியாது என்ற மிகப் பெரிய ஆசிவாதம் உங்களுக்கு உள்ளது. இறைவனின் மீது நம்பிக்கை வையுங்கள் . இறைவனின் மீது முழு நம்பிக்கை வைப்பது மிக அவசியம். இறைவன் நல்லது செய்வார், நேர்மையான இடத்திற்கு கொண்டு செல்வார், உங்கள் பாதையினை வழி காட்டுவார், தேவையான ஒளியினை அளிப்பார் என்ற உண்மையான, உறுதியான நம்பிக்கையை இறைவன் மீது வையுங்கள்.

இது போன்ற பல அனுபவங்களை உங்களிடம் காண்பீர்கள். அவர்களுக்கு எவ்வாறு பல காரியங்கள் செயல்பட்டன என்று பலர் எனக்கு கடிதங்கள் மூலமாக தெரிவித்துக் கொண்டு உள்ளார்கள். நாம் கூட்டாக இருப்பினும் ஒருவருக்கொருவர் நன்முறையில் இருந்தும், போய் கூறாமலும், மற்றவர்களை அழிக்க நினைக்காமலும், இருக்கிறோம். நாம் மற்ற மனிதர்களின் மனப்பான்மையில் இருந்து வேறுபட்டவர்களாக இருக்கின்றோம் என்பது தான் இதன் பொருள். இது இந்த ஒளியினால் தான் இயலுகிறது. எங்கு நீங்கள் தவறுகிறீர்கள் என காணலாம். நீங்களே உங்களை கண் காணியுங்கள். இவைகளுக்கு தியானம் மிக முக்கியமானது.

தினமும் தியானம் செய்ய வேண்டும். தியானம் என்பது விளக்கில் எண்ணெய் இடுவது போல் என்பதால் தியானம் செய்ய வேண்டும். தியானம் செய்யாதவர்கள் கீழே விழுவார்கள். தியானம் செய்யாமல் செயல் பட முடியும் என்று தியானிக்காதவர்கள் எண்ணுகிறார்கள். இது மிகவும் வருத்தத்திற்குரியது. தினமும் தியானிக்க வேண்டும்.

பிரச்சனைகள் கைக்கடங்கியவாறு உள்ளன. இது மிக சுலபமானது. தியானம் மிக முக்கியமானது என்று அவர்கள் அறிவதில்லை. நீங்கள் அல்ல. ஆண்மவிழிப்புணர்வு பெற்றவர்கள் அநேகர் தியானம் செய்வதில்லை. அவர்கள் பாணியே தனியானது. சுபாவம் தனித்தன்மை வாய்ந்தது.

தியானம் மிக சுகமானதாகவும், இறைவனோடு இணைக்கும் அழகான ஒரு வழி முறையாகும். இவ்வைனைப்பால் தியானத்தில் உங்கள் பிரச்சனைகள் யாவும் நிவர்த்தியடையும். தியானம் செய்யாமலும், தியான வழிமுறைகளை கடைப்பிடிக்காமலும் இருப்பின் உங்களில் குடிகொண்டுள்ள ஒழி மங்கிப் போய் கீழே செல்லும். இதனால் தேவையான அளவுக்கு ஒளி கொடுக்காது. தியானத்தில் உங்களைப் பற்றியும் அறிந்து கொள்வது மிக மிக முக்கியமானதாகும்.

தியானம் செய்வது எப்படி? என்று அநேகர் என்னிடம் கேட்கின்றனர். ஒன்றும் செய்யாமல் சாதரணமாக எண்ணங்கள் அற்ற உணர்வு நிலைக்கு செல்ல பிரயாசப்படுங்கள்.நீங்கள் அவ்வாறு எண்ணங்கள் அற்ற நிலைக்கு அடைந்தீர்களினால் நீங்கள் உங்கள் வேலையினை செய்து முடித்தாகி விட்டது என்பது பொருள். அந்நிலையில் நீங்கள் மெய்மையுடனும், உண்மையுடனும், மகிழ்ச்சியுடனும் யாவருடனும் இருக்கின்றீர்கள். அந்நிலை தான் மிகவும் அடிப்படையானது ஆகும்.தியானிக்கும் போது ஒரு வினையினை செய்யும்படி எத்தனிக்க கூடாது. உங்களை அமைதிபடுத்துவதும், எண்ணங்களை அமைதிப்படுத்துவதும் , உங்கள் உள்ளில் உள்ள சமுத்திரத்திற்கு செல்லுதலும் தான் தியானம் என குறிப்பிடலாம். நீங்கள் தியானிக்க விட்டால் யார் தியானிக்க வில்லை , யார் தியானிக்கிரீர்கள் என்று என்னால் எளிதாக கண்டு கொள்ள இயலும். இது எங்கு மிகவும் எளிதானக் காரியம்.

தியானம் செய்யாதவர்கள் எப்பொழுதும் தயக்கம் உடையவர்களாகவும் , மனக் குழப்பமான நிலையினைக் கொண்டவர் களாகவும் இருப்பார். அவர்களால் அறிந்து கொள்ள இயலாது. அதனால் தான் சஹஜ யோகாவில் தியானம் மிக முக்கியம் என்று கூறுவது மின்சாரம் பாய்வதால் மின்விளக்கு எரிகிறது போலவும், மெழுகுவர்த்தியினால் விளக்கு எரிகிறது என்பது போலவும், தியானம் என்பது இறைவிநின் மாபெரும் சக்தியினை தொடர்ந்து அளித்துக் கொண்டிருப்பதாகும். இவை உங்கள் அச்சங்களை குறைக்கும். அது மட்டுமின்றி எதிமறையான எண்ணங்களையும் அகற்றிவிடும். எல்லா நம்பிக்கையினை குறைக்கும் காரியங்களை அறவே அகற்றும். அவ்வாறு எண்ணங்களற்ற உணர்வு நிலையில் தியானிக்கும் போது எவ்வாறு உங்களுக்கு உள்ளும் வெளியிலும் இறைவனின் உதவி கிட்டுகிறது என்பதை அறிந்து திகைப்பீர்கள். எண்ணங்களற்ற உணர்வு நிலை மிதமிஞ்சிய சக்தி வாய்ந்தமையாக செயல்படுகிறது.

எனவே தியானிக்காதவர்கள் சஹஜ யோகோவின் நன்மைகளை அதிக அளவில் பெற இயலாது. ஒருவர் தியானம் செய்து எண்ணங்களற்ற நிலையினை பெற பிரயாசப்பட வேண்டும். உனக்கு அந்நிலையில் என்ன நடக்கிறது? எண்ணங்களற்ற உணர்வு நிலையில் உங்களுக்கு தன்னம்பிக்கையும், இறைவனின் மீதான உறுதியான நம்பிக்கையும் கிடைக்கின்றன. இவைகள் அனைத்தும் நீங்கள் அடைந்துள்ளீர்கள் என்று அறிவீர்கள். தர்மசாலா பள்ளியில் இருந்து வெளிவரும் நம் குழந்தைகள் மிகவும் நம்பிக்கையுடனும், மிகவும் பணிவாகவும் இருப்பதை நான் காண்கிறேன். நீங்கள் என்ன செய்வீர்கள் என்று அவர்களிடம் கேட்பேன், அதற்கு அவர்கள், " நாங்கள் தியானிப்போம், மாலையில் தியானிப்போம் ," என்பார்கள். அந்த தியானம் இவர்களுக்கு உதவுகிறது. இந்த சிறு பிள்ளைகள் இவ்வாறு கூறும் போது தியானம் நமக்கு பாதுகாப்பு அளிக்கிறது. உண்மையான விழிப்புணர்வு ஏற்படுகிறது. இறைவனோடு முழுமையான இணைப்பு ஏற்படுகிறது என்று ஏன் உங்களால் அறிந்து கொள்ள முடியாது? இறைவனோடு இணைப்பு ஏற்படாமல் சஹஜயோகோவினை மேற்கொள்வதால் என்ன உபயோகம்? தியானம் செய்பவர்கள் அவர்கள் உள்ளத்தின் ஆழத்திற்கு செல்வதால் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளார்கள் என்பதை நான் நன்கு அறிவேன்.அதேபோல் மேற்பரப்பில் மட்டுமுள்ளவர்கள் யார் என்றும் நான் நன்கு அறிவேன். உங்களின் ஆழம் எண்ணங்களற்ற உணர்வு நிலையில் தான் உள்ளது. இந்த நிலையினை அடைவது மிக முக்கியமானதாகும், ஏதாவது என்றினை காணும்போது எண்ணங்களற்ற நிலையில் இருப்ப்பின் நீங்கள் உண்மையினேயே அதன் பிரதிபலிப்பாய் உள்ளீர்கள் எனலாம். இவ்வாறு இது செயல்படுகிறது.






இந்நிலையில் எவ்வளவு நேரம் உங்களால் இருக்க முடியும் என்று எனக்குத் தெரியாது. ஒரு நொடியானாலும் இது உங்கள் செயலுக்கு முயன்று கிடைக்கப் பெற்ற ஒரு வெற்றி எனலாம். இதனைத் தொடர்ந்து அதிக அளவில் வெற்றியினை பெறுவீர்கள் தியானத்தினைக் குறித்து அதிக அளவில் ஏற்கெனவே பேசியுள்ளேன். ஆனால் இன்று எரிந்து கொண்டுள்ள இந்த மெழுகுவர்த்திகளைக் காணும்போது இவைகளும் தியானித்துக் கொண்டுள்ளது என்று எண்ணுகிறேன். இவைகள் தியானத்தில் இருப்பதால் தான் எரிந்து கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.எண்ணங்களற்ற நிலையினை அடைவது தான் மிக முக்கியமான முதல்படியாகும். இதற்கு பிறகு மற்றவைகளை பெறலாம். இருப்பினும் முதல்படி என்பது எண்ணங்களற்ற உணர்வு நிலையாகும். இடது பக்கமிருந்தோ, வலது பக்கமிருந்தோ, கடந்த காலத்திலிருந்தோ எதிர்காலத்தில் இருந்தோ எந்த எண்ணங்களும் வராமல் இருப்பதால் எண்ணங்களற்ற உணர்வு நிலை மிக முக்கியமானதாக உள்ளது. அந்நிலையில் தற்காலத்தில் உள்ளீர்கள். இவைகள் ஏற்கனவே உங்களிடம் உண்டு. இதனை உங்களுக்கு சொல்ல அவசியமில்லை. எல்லோரிடமும் இது உண்டு. இருப்பினும் உங்களை இதில் நிலைப்படுத்திக் கொள்ளுங்கள். எண்ணங்களற்ற உணர்வு இந்லையில் உங்களை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். எவ்வளவு காலம் என்பது முக்கியம் அல்ல, ஒரு தடவை இந்நிலையை அடைந்தீர்களானால் தொடர்ந்து அடைவீர்கள்.

அனேக மனிதர்கள் தியானிக்கிறார்கள் . ஆனால் அவர்கள் தியானத்தில் எண்ணங்களின் உருவாக்கம் நடந்து கொண்டுள்ளது . அவைகள் எண்ணங்கள் அற்ற அமைதி நிலையல்ல. இது ஒரு முக்கியமான ஒரு கட்டமாகும். நீங்கள் வளரவேண்டுமெனில் எண்ணங்களற்ற நிலையின் மூலமாக இறைவனோடு முழுமையான இணைப்பு ஏற்படவேண்டும். பிரார்த்தனை செய்ய வேண்டியது இல்லை. யாரையும் அழைக்கவோ, எதையும் கூப்பிடவோ வேண்டியதில்லை. இது தானாகவே நடைபெறுகிறது. இது உன் உள்ளில் உள்ளது. எண்ணங்கள் அனைத்தும் மிக தீவிரமாக உங்கள் மனத்தின் இருப்பக்கங்களிளிருந்தும் தாக்குதல்களை மேற்கொள்கின்றன. வரும் எண்ணங்களுக்கு எவ்விதப் பொருளும் இல்லை. அவைகளால் உங்களை நிரூபிக்க இயலாது. நீங்களோ ஒரு சமுத்திரம். நீங்கள் எண்ணங்களற்ற உணர்வு நிலையினை அடைய வேண்டும்.

எல்லா மிகப் பெரிய ஆன்மிக புத்தகங்களில் இவைகள் கூறப்பட்டுள்ளன. ஆனால் தான் கூறுவது போல் தெளிவாக குறிப்பிடவில்லை . எண்ணங்களற்ற உணர்வு நிலை பெற இயலாதவர்களை உபயோகமற்றவர்கள் என்று நான் குறிப்பிடவில்லை. ஆனால் தயவு செய்து முயற்சி செய்யுங்கள். அனைவரும் எண்ணங்களற்ற நிலையினை பெற இயலும். ஒரு வினாடி கால அளவில் இந்நிலையில் இருந்தாலும் இது மிகவும் நன்று . பின்பு தொடர்ந்து அந்த வினாடி கால அளவு நீட்டிப்பு ஏற்படும். இது மனதின் பிரதிபலிப்பு என நினைக்கின்றேன் . ஒன்றினை காணும் போது உங்களால் எண்ணங்களற்ற நிலையினை அடைய இயலும். அப்போது காணும் காட்சியினை ஆழமாக காண உங்கள் மனம் பிரதிபலிக்கும். அவ்வாறுதான் நீங்கள் அனைவரும் படைப்பாற்றல் பெற்ற சஹ்ஜயோகிகளாக மாறுகிறீர்கள்.

எண்ணங்களற்ற உணர்வு நிலையினை உங்களால் நிலைநிருத்தப்படாவிட்டால், இது நலமன்று. தீபாவளியான இன்று எண்ணங்களற்ற உணர்வு நிலையினால் நீங்கள் விழிப்புணர்வு பெறப்பட வேண்டும் என்று கோருகிறேன். இது மிகக் கடினம் இல்லை. இது உன்னிடம் உள்ளது. எண்ணங்கள் உன் மூளையின் அலைகள் அல்ல; இவைகள் யாவும் உன்னுடைய எதிர் செயலாகும். அவைகள் இப்பக்கம் இருந்தும் அப்பக்கமிருந்தும் வருகின்றன. உண்மையிலேயே தியானிப்பாயானால், எண்ணங்களற்ற நிலையினை அடைவாய் என்பது திண்ணம். மற்ற உபயோக மற்ற அர்த்தமற்ற எண்ணங்கள் அனைத்தும் மறைந்து போகும். அவைகள் அங்கு இருக்காது. இதனால் உன்னால் வளர இயலும். நீ மிக நன்றாக வளர்ச்சி பெறுவாய். இங்குள்ள அநேகர் ஸ்ரீ மாதாஜி நாங்கள் அந்நிலையினை அடையவில்லையே எனக் கூறலாம். முயலுங்கள். முயற்சி செய்யுங்கள் உங்கள்ளல் செய்ய இயலாது என்று என்னால் நம்ம முடியவில்லை. நான் அடையும் நிலையினை அனைவராலும் அடைய இயலும். நீங்கள் பெறுவீர்கள். இதில் ஒன்றினையும் ஒதுக்காமல் ஒன்றையும் காணாமல் தியனத்தினுள் செல்லுங்கள். இவைகள் யாவும் எவ்வாறு திறம்பட செயல்படுகின்றன என்று அறிய மிக வியப்பாக இருக்கும்.

நீங்கள் அனைவரும் அங்கு உள்ளீர்கள் இருப்பினும் எண்ணங்களற்ற உணர்வு நிலைப் பகுதியினை நீட்டிபாக்குங்கள். இன்று தீபாவளி என்பதால் மிக முக்கியமான நாளாகும். தீபாவளி விழிப்புணர்வு நாள் எனக் கொள்ளலாம். எவ்வளவு தூரம் எண்ணங்களற்ற உணர்வு நிலையில் உள்ளீர்கள் என்பதையும், தெய்வ சமுத்திரத்தில் இருப்பதால் யாவும் திறம்பட செயலாக்கப்படுவதும், உங்கள் விழிப்புணர்வு நிலையினை தெளிவாகக் காட்டும், உங்களில் இந்த மாபெரும் பொக்கிஷத்தைப் பெற்று உள்ளீர்கள் நீங்கள் இதில் இருந்து அல்ல வேண்டும். இதனை அள்ளாவிட்டால் திறம்பட செயல்படாது. இதனை அள்ளுவதால் இது எல்லா மகிழ்ச்சிக்கும் ஆனந்தத்திற்கும் சந்தோஷத்திற்கும் மூலகாரணம் இதுதான் என்று அறிந்து வியப்படைவீர்கள். உண்மையான விழிப்புணர்வின் "மூலமே" இதுதான் என்று கூறுவேன்.
நீங்கள் அனைவரும் அங்கு உள்ளீர்கள் இருப்பினும் எண்ணங்களற்ற உணர்வு நிலைப் பகுதியினை நீட்டிபாக்குங்கள். இன்று தீபாவளி என்பதால் மிக முக்கியமான நாளாகும். தீபாவளி விழிப்புணர்வு நாள் எனக் கொள்ளலாம். எவ்வளவு தூரம் எண்ணங்களற்ற உணர்வு நிலையில் உள்ளீர்கள் என்பதையும், தெய்வ சமுத்திரத்தில் இருப்பதால் யாவும் திறம்பட செயலாக்கப்படுவதும், உங்கள் விழிப்புணர்வு நிலையினை தெளிவாகக் காட்டும், உங்களில் இந்த மாபெரும் பொக்கிஷத்தைப் பெற்று உள்ளீர்கள் நீங்கள் இதில் இருந்து அள்ள வேண்டும். இதனை அள்ளாவிட்டால் திறம்பட செயல்படாது. இதனை அள்ளுவதால் இது எல்லா மகிழ்ச்சிக்கும் ஆனந்தத்திற்கும் சந்தோஷத்திற்கும் மூலகாரணம் இதுதான் என்று அறிந்து வியப்படைவீர்கள். உண்மையான விழிப்புணர்வின் "மூலமே" இதுதான் என்று கூறுவேன்.

எனவே தியானிக்கும் போது எண்ணங்களற்ற உணர்வு நிலைக்கு செல்லுங்கள் என்பதுதான் இன்றைய செய்தியாகும். எந்த எண்ணமும் முக்கியம் அல்ல. எண்ணங்கள் உன்னுடைய படைப்பு என்பதால் முக்கியம் அல்ல. இறைவனின் படைப்போடு ஒன்றிணைய வேண்டுமானால் குறைந்தளவாவது எண்ணங்களற்ற உணர்வு நிலையினைப் பெற வேண்டும். அது தானாகவே உங்களுக்கு வரும். மெதுவாக வளர்ந்து சஹஜயோகாவில் மிகப் பெரிய அளவில் வளருவதைக் கண்டு வியப்படைவாய்.

உங்கள் அனைவருக்கும் என் நன்றி!