Translate

திங்கள், 16 மே, 2011

சுவதிஸ்டானா சக்கரம்







தேவதை : ஸ்ரீ பிரம்மா தேவா சரஸ்வதி
ஸ்துல சரீரம் : அயோட்டிக் நரம்பு மையம்
வெளிப்பாடு : கல்லீரல் , சிறுநீரகம் , மண்ணீரல், கணையம்.
தன்மைகள் : படைப்பாற்றல், ஊக்கம், கலையுணர்வு, புத்தி கூர்மை, சித்தத்தின் அடித்தளம்.
இதழ்கள் : ஆறு
கனிமப் பொருள் : தீ
குறியீடு : டேவிட் நட்சத்திரம்
கைகளில் : பெருவிரல்
கால்களில் : மூன்றாவது விரல்

தடைகளுக்கான காரணங்கள் :
இடது : தேவைக்கு அதிகமான சமய சடங்கு , பிளாக் மேஜிக், தவறான குரு போதனை, மதுபானங்கள், போதை மருந்துகள், அடிமைத்தளம், ரகசிய உறவுகள், அதிகமாகக் கீழ்படிதல்.

வலது : அதிகமாக சிநிதித்தல், எதிர்காலத் திட்டமிடல், அரசியல் அராஜகம், தவறான உணவுப் பழக்கம், தன்னை அதிகமாக முன்னிலைப் படுத்துதல், அகந்தை (அகங்காரம்) ,
சுவதிஸ்டான சக்கரம் நாடி சக்கரத்திற்கு ஒரு செயற்கை கோள் போல் செயல்படுகிறது . இது பத்து இதழ்களுக்கு உயிர்ரோட்டமாக இருந்து வருகிறது. பத்து குருக்களின் பத்து கட்டளைகளை இது வெளிப்படுத்துகிறது.
குண்டலினி மேலே எழும் போது முதலில் நாபி சக்கரத்திர்க்குத் தான் சென்று அடைகிறது. அதன் பின் தொப்புள் கொடி வழியாக சுவதிஸ்டான சக்கரம் வந்து பிரகாசிக்க செய்து , மீண்டும் நாபி சக்கரத்தை நோக்கி தன் பிரயாணத்தைத் தொடர்கிறது. பரிணாம வளர்ச்சியில் மனிதன் தனது அடிப்படை தேவையான இருப்பிடத்தைத் தேடி கொண்டான். பிறகு அதுவே மாட மாளிகைகளைத் தேடுவதாக அமைந்து விட்டது. அவனது கலை உணர்வு அதிகரிக்க அதிகரிக்க அழகான கட்டிடங்கள் கலையுணர்வுடன் உருவாக்கத் தொடங்கினான். இந்த கலை உணர்வு ஒரு கற்பனையாக இருந்து , மனதில் எழும் எண்ணங்களின் உந்து சக்தியால் விளைவது, இதற்கு வெளிப்படையாக எந்த ஸ்தூல சக்தியும் , கிடையாது. இவ்வகை வெளிப்பாடே படைப்பாற்றல் திறன் எனலாம்.

தன்மைகள் :
இச்சக்கரத்தின் அடிப்படைத் தன்மை படைப்பாற்றல் ஆகும். இங்குதான் நமது படைப்பாற்றலின் சக்தி உருவாகிறது.
இது மூளையிலுள்ள அணுக்களுக்கு சக்தியைக் கொடுக்கிறது. கொழுப்பு அணுக்களிலிருந்து மூளை அணுக்களுக்கு ஊட்ட சக்தியை மாற்றி அனுப்புகிறது. ஆன்ம விழிப்புணர்வு பெற்ற பின்பு படைப்பாற்றலைப் பெறுவதற்கான 'சாவி' - ' எண்ணங்களற்ற நிலையே' . இது தியானத்தின் மூலமாக தான் அடைய முடியும்.

இயற்கை அழகின் தோற்றம் நமக்குள் அழகான குளமாக பிரதிப்பலிக்கிறது எனும் உண்மையை இவற்றிலிருந்து அறிய முடிகிறது. நாம் நமக்குள் இருக்கும் தடாகத்தை அறிந்து கொண்டால் , நாம் அந்த தாடகத்தின் வடிகாலாக மாற முடியும். இதை 'வேர்ட்ஸ் வொர்த் ' என்பவர் இதயம் எவற்றை கண்காணிக்கிறதோ அவற்றை பெறுகிறது என கூறுகிறார்.

படைப்பாற்றல் உருவாகும் செயல்முறை சுவதிஸ்டான சக்கரத்தில் தான் துவங்குகிறது. இந்த சக்கரத்தில் சம நிலையுடன் செயல்பட்டால் (சுழு முனை வழியாக) நாம் ஆன்மீக முன்னேற்றம் அடைந்துள்ளோம் எனலாம். ஆன்மீக விழிப்புணர்வு பெற்ற பின் ஏற்படும் படைப்பாற்றல் முழுமை அடைந்ததாகவும், பரிப்பூர்ணத்துவம் பெற்றதாகவும் இருக்கும். இதை பண்டைய கால வல்லுநர் ' மோஷார்ட்', மைக்கேலேங்கலோ', எழுதிய புத்தகத்திலிருந்து நாம் உணர முடியும்.

அவர்கள் பிறப்பிலேயே ஆன்ம ஞானம் பெற்றவர்கள். இது போன்ற கலை படைப்புகள் என்றும் அழியாது. அமரத்துவம் பெற்றது. இது மகிழ்ச்சியையும் , அழகும் தரக் கூடியது. இருப்பினும் இன்றைய காலத்தில் கலைஞன் தனது இதயத்தின் ஆழத்திலிருந்து ஏதேனும் கலைப் படைப்பினை செய்தப் பின்னர் , இதர படைப்புகள் தரமற்றதாக இருக்கும். மற்றவர்களை ஏமாற்றக் கூடிய வகையில் அமையும். இதற்கு அடிப்படை காரணம் அகங்காரம் எனலாம். கலைஞன் படைப்பில் வெற்றியடைவதற்கு மிகவும் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது . பிங்கள நாடி அதிகமாக பயன்படுகிறது. இதனால் அகங்காரம் அதிகரிக்கிறது. இதன் வெப்பம் மூளையின் இடது பக்கம் சென்றடைந்து , பலூன் போன்று விரிவடைகிறது. இதன் விளைவாக வெறிக்கு காரணமான தெய்வீக உணர்வு மைய நாடி வழியாக இறங்குவது தடைப்படுகிறது. தெய்வீக ஷக்தி நீங்கிவிடுகிறது.
இதயத்திலிருக்கும் ஆன்மாதான் படைப்பு ஆற்றலுக்கு தேக்கமாக உள்ளது. மிக அதிகமாக சிந்திக்கும் பொது இந்த சக்கரமும் , பழுது அடைந்து சக்தி குறைந்து விடுகிறது. இதனால் நாடிகளின் சமநிலை பாதிக்கிறது. போட்டி மனப்பான்மை அதிகரிக்கும். இது அகங்காரத்தை மேலும் வலுக்கும். ஆகையால் இன்றைய சுழலில் பொதுவாக படைப்பாற்றல்கள் ஆதார சக்தி இழந்ததாகவும் ஆன்ம பலமற்றதாகவும் உள்ளது.
இந்த சக்கரத்திற்கு முன்னோடியான தேவதை ஸ்ரீ பிரம்ம தேவ சரஸ்வதி எனலாம். இவர் எல்லா படைப்புகளுக்கும் ஆதாரமானவர். இவரிடமுள்ள சக்தி ஸ்வருபம் சரஸ்வதி. இந்த சக்தியே சங்கீதத்திற்கும் , கலைக்குமுரிய தெய்வமாக கூறப்படுகிறது.
ஸ்தூல வெளிப்பாடு :
இந்த சக்கரத்தின் பணி மிகவும் முக்கியமானது. வயிற்று பகுதியிலிருக்கும் கொழுப்பு அணுக்களே கிரே அணுக்களாகவும் , வெள்ளை அணுக்களாகவும் பிரிக்கப் பட்டு மூளைக்கு அனுப்பபடுகிறது. ஆகவே சிந்திக்கும் ஆற்றலுக்கும் சக்தியை ஊட்டுவது இதன் பணியாகும். மிக அதிகமாக சிந்திப்பது, திட்டமிடுதலும் இந்த சக்கரத்தை சக்தி இழக்க செய்யும். இந்த சக்கரம் நாபி சக்கரத்துடன் இணைந்து கல்லீரலை செயல்பட வைக்கிறது. இந்த சக்கரத்தை அதிகமாக பயன்படுத்தும் பொது இதனுடன் தொடர்புடைய உறுப்புக்கள் கல்லீரல், கணையம், சிறுநீரகம், மண்ணீரல், கர்ப்பப்பை, போன்றவைகள் பாதிப்படையும். இந்த பாதிப்பு வலது கையின் கட்டை விரல், நடு விரல், போன்றவற்றில் அதிர்வு துடிப்புகளாக தெரிய வரும், அல்லது குத்துணர்வு மூலம் கைகளில் தெரிய வருகிறது.
கல்லிரலானது நமது கவனத்தின் அல்லது சித்தத்தின் இருப்பிடமாக உள்ளதால் அதற்கென்று தனி முக்கியத்துவம் உள்ளது. அகங்காரம் , மற்றும் மமகாரம் கூடிய நினைவுகளுடன் சேர்ந்து கவனத்தை குழப்பிக் கொள்ளக்கூடாது. சித்தம் என்பது பிற எண்ணங்கள் அற்ற ஒரு முகப்பட்ட நிலையாகும். நாம் வசந்த காலங்களில் மலர்களை காண்கிறோம் . நாம் தூய்மையான சித்தத்தை நிலை நிறுத்தி அழகை அனுபவிக்கின்றோம். அவற்றைக் கண்காணிக்கும் போது அதை பற்றி சிந்திக்கவும் செய்கின்றோம். சித்தத்திற்கு சார்புடைய எண்ணங்கள் கிடையாது. இது ஒரு தூய ஒரு முகப்பட்ட தூய எண்ணக் குவியல் , கண்காணித்தல், சாட்சி பாவம் என்றும் கூறலாம்.
சமநிலையிலுள்ள கல்லிரலானது நமது சித்தத்திற்கு சக்தியைத் தருகிறது. மேலும் அதிலுள்ள தூய்மையற்ற எண்ணங்களை நீக்கி தூய்மைப்படுத்துகிறது. இவ்வாறு துய்மைப்படுத்தப்பட்ட சித்தத்திலிருந்து நமது தியானத்திற்கு தேவையான அமைதி மற்றும் ஒரு நிலைப்பட்ட நிலை கிடைக்கிறது. அதிக வெப்பத்தினால் கல்லீரல் பாதிப்புக்குள்ளாகும் போது நமது சித்தத்தையும் பாதிக்கிறது. இதனால் நமது தியான சக்தியின் பலம் குறைகிறது.
சுவதிஸ்டான சக்கரத்தின் தடைகள்:
வலிமையற்ற சுவதிஸ்டான சக்கரத்தினால் பின் வரும் தடைகள் ஏற்படுகிறது.

1 .நீரழிவு நோய், இதய நோய், கோபம், இரத்த அழுத்தம் , சிறுநீரகக் குறைப்பாடுகள்

2 . ஆவிகளின் மீது ஆர்வம், பேய் கதைகள், வேண்டாத கட்டுரைகள் படித்தல், மந்திர தந்திரத்தில் ஆர்வம் ஆகிய செயல்களால் நமது மனம் கட்டுண்டு நமது மனம் ஆழ் நிலை உணர்வுக்கு சென்று விடுகிறது. இதனால் கூடுதலான சோம்பல், பய உணர்வு, எதிமறை உணர்வு, போன்றவைகளின் ஆதிக்கத்திற்கு உள்ளாகிறோம் .


வலது சுவதிஸ்டான சக்கரம் சுத்திகரித்தல் :
1 . கனிமத்தைப் பயன்படுத்துதல்:- ஒரு பாத்திரத்தில் கணுக்கால் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு கல் உப்பு கையளவு போட்டு தியானத்தின் மூலம் எதிர்மறை சக்திகளை உப்புக் கரைசலில் இறக்க வேண்டும்.
2 . உறுதி மொழிகள் : " அன்னையே நான் எதுவும் செய்வதில்லை, உண்மையில் நீங்களே எல்லாவற்றையும் செய்கிறீர்கள்".
3 . பொதுவான அறிவுரை : இடது கையை இச்சக்கரத்தின் மீது வைத்துக் கொண்டு வலது கையை அன்னையின் படத்தை நோக்கி வைத்துக் கொண்டு தியானம் செய்ய வேண்டும்.
இடது கையை அன்னையின் படத்தை நோக்கி வைத்துக் கொண்டு வலது கையினால் தெய்வீக அதிர்வுகளை இடது பக்கத்திலிருந்து வலது பக்கத்திற்கு மாற்ற வேண்டும். 108 முறை செய்ய வேண்டும்.
கல்லிரலுக்கு வேண்டிய உணவை மட்டும் உண்ண வேண்டும்.

இடது சுவதிஸ்டான சக்கரம் சுத்திகரித்தல் :
1 . கனிமத்தைப் பயன்படுத்துதல்:- எரியும் மெழுகுவர்த்தியை பயன்படுத்தி சுத்திகரிக்கலாம். கற்பூரமும், ஓமமும் சுத்திகரிக்கலாம்.
2 . உறுதி மொழிகள் : " அன்னையே தங்களது கிருபையினால் தூய்மையான ஞானத்தைப் பெற்றேன். "

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக