Translate

திங்கள், 30 மே, 2011

பவசாகரம்






தேவதை : ஆதிகுரு தத்தாத்ரேயா
ஸ்தூல வெளிப்பாடு : ஜீரணப் பகுதி
தன்மைகள் : சமநிலை, தர்மத்தின் வழி, மனஉறுதி, ஆளுமைத் தன்மை
கனிமம் : நெருப்பு, நீர்
இருப்பிடம்: கைவிரல் மேடுகள் ( உள்ளங்கையின் வெளிவட்டம்)
தடைகளுக்கான காரணங்கள் : ஆதிக்கம் செலுத்துதல், உண்மையற்ற கருத்துக்களை அழகாக வெளிப்படுத்துதல், பிளாக் மேஜிக் , சமயப் பிரச்சாரம், தவறான குரு, தவறான ஞானம்.
மானிட வர்க்கத்தின் பரிணாம வளர்சசியில் இன்றுவரை அறியாமைக்கும் , மாயைக்கும் இடையில் தொடர்ந்து போர் நடந்து கொண்டுள்ளது. இந்த அறியாமையை மனிதன் முதலில் விரட்ட வேண்டும். ஆன்மாவின் உண்மை நிலையை அனுபவிப்பதற்கு முன்னதாக இந்த அறியாமையை மனிதன் முதலில் வெற்றி கொள்ள வேண்டும்.
மாயையிடமிருந்து ஆன்மாவின் உண்மையை அறிந்து கொள்வதற்குமிடையே உள்ள இடைவெளியை கடினமாக போராடிக் கடக்க வேண்டும். இதை பவசாகரம் என்று அழைக்கிறோம்.
தன்மை
பவசாகரம் நமது ஞானத்தின் கருவூலம் எனலாம். இப்பகுதியில் நமது குண்டலினி சக்தி பிரகாசிக்கும் பொது நாம் நமக்கே குருவாக ஆகி விடுகிறோம். குரு என்பவர் மிகவும் கடினமானவர். அல்லது ஈர்ப்பு சக்தி கொண்டவர். புவிஈர்ப்பு காரணமாக தான் நாம் நேர்மையற்ற சூழ்நிலையிலும் சமநிலை அடைந்து விடுகிறோம். முடிவாக நமது உள்நோக்கும் உணர்வால் நமது வினாக்களுக்கு விடை கிடைத்து விடுகிறது. பல சந்தர்ப்பங்களில் பிரச்சனைகளுக்கு விடை காண முடிகிறது. நாம் நமக்கு குருவாக மாறிய பிறகு எது சரி எது தவறு என்பதை உள்ளிலிருந்து அறிய முடிகிறது. உண்மையான சீடர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளில் முக்கியமானது பணிவோடும் , திறந்த மனதோடும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதாவது ஈர்ப்பு சக்தி வாய்ந்த குரு அறிவுரை கூறுவதாக எடுத்துக் கொள்ள வேண்டும். எல்லா காலங்களிலும் மிகவும் சிறந்து விளங்கிய குருக்கள் அடக்கமும் , எளிமையும் உடையவர்களாக இறைவனுக்கு சீடர்களாக இருந்திருக்கிறார்கள். இந்த நிலையில் அவர்கள் தங்களது அகங்காரத்தை இறைவனிடம் சமர்ப்பித்து விடுகிறார்கள். அவர்கள் முழுமையான அதிகாரம் பெற்றவர்கள் ஆகிறார்கள். பிறருக்கும் கற்பிக்க முடிகிறது.

இது நேரடியாக நாபி சக்கரத்துடன் இணைந்திருப்பதால் தர்மத்தின் விதிகளுக்கு உட்பட்டு நடப்பது அவசியமாகிறது . எல்லா காலகட்டத்திலும் குருவாகவும், போதகர்களாகவும் இருந்து தங்களை சீடர்களாக வழி நடத்தி சென்றவர்கள் தர்மத்தை சூத்திரமாக கொண்டு தங்களது வாழ்க்கையில் பின்பற்றியும் வெந்தனர். பிறருக்கும் கற்பித்தனர். நாம் நல்ல மக்களையும் , மற்றவர்களையும் நிந்திக்காமலும் நிலையிழக்க செய்யாமலும், இயற்கையுடன் இணைந்து அதன் நியதிகளுக்கு உட்பட்டு வாழ முடிகிறது.

குரு, சீடர் தத்துவம் இந்தப் பகுதியில்தான் அமைந்துள்ளது. இதைப் புராணங்களில் லவா, குஷா, போன்றவர்களின் குணங்களிலிருந்து வெளிப்படுகின்றன. அதுபோல் மார்க்கண்டேயா, ஆதிசங்கராச்சாரியா, டேவிட், ஜான் பேட்ஸ்ட், புத்தா, மகாவீரா, கபீர்தாஸ், மைக்கேலாங்கலோ, கலில் கிப்ரான், வில்லியம் சேக்ஸ்பியர், வில்லியம் பிளேக் மற்றும் பலர்.

இந்த வழியில் வாழ்ந்த போதகர்கள் உலகின் பிற பகுதியில் மறு அவதாரம் எடுத்து முன்னோடிகள் செய்த தவறான போதனைகளிலிருந்து காப்பாற்றினார். முகமது நபி இந்த உலகில் பிறந்து அன்றையக் காட்டுமிராண்டி மக்களுக்கு தர்மத்தை போதித்தார். ஆனால் அவர்கள் அவரைக் கொடுமைப்படுத்தினர். முடிவில் மனம் வெறுத்து இது தான் கடைசி முறை போதகர் வருவது என சூளுரைத்தார். என்றாலும் அவரது இரக்கம் குப்பைத் தொட்டியில் நாய்களுக்கு தூக்கி எறியப்பட்டதைக் கண்டதும் இந்து - முஸ்லிம் ஒற்றுமையை போதிக்க குருநானக்காக அவதாரம் செய்தார். ஆனால் அவருடைய தொண்டர்கள் முகமதியர்களை வெறுக்கிறார்கள். அவர்களும் இவர்களை வெறுக்கிறார்கள். அதுபோலவே, ஆதிசங்கராச்சாரியா, கபீர்தாசராகவும் ஜனனம் எடுத்தார். அவர் முயற்சி செய்து அவரது தொண்டர்களை சடங்குகளிலிருந்தும் உருவ வழிபாடுகளிலிருந்தும் விடுவித்தார்.

மனித குலத்திற்கு வழிகாட்டியாக இருந்து உதாரண புருஷர்களாக வாழ்ந்து சென்ற குருமார்கள் பலர். இவர்கள் இருக்கும் இடம் பவசாகர சக்கரம்.




அதிதேவதை ஆதிகுரு தத்தாத்ரியேயர் மற்றும் ஆப்ரஹாம், மோசஸ் , லாவோட்சே , ஜனகர் , குருநானக், முகமது நபி, ஷீரடி சாய்நாத், கன்ப்யுசியஸ், சாக்ரட்டீஸ் ஆகிய போதகர்கள் ஆதிகுருமார்களாக இந்த சக்கரத்தில் அமைந்திருக்கிறார்கள். இவர்கள்தான் நமக்கு நேர்மையாக வாழும் வாழ்க்கை முறையும் தர்மத்தின் பாதையையும் காட்டியவர்கள். இதனால் அதர்ம வழியை சமுதாயத்தில் தடை செய்தவர்கள்.

ஸ்தூல வெளிப்பாடு:
பவசாகரம் என்பது குண்டலினிக்கும் வேகஸ் நரம்புக்கும் உள்ள இடைவெளி ஆகும். இது பரிணாம துவக்கத்திற்கும், இன்றைய மனிதகுல வளர்ச்சிக்கும் இடையிலுள்ள காலமும், இடைவெளியுமாகும். இது உணர்வுக்கும் பரி பூரணத்திற்கும் உள்ள இடைப்பட்ட வெற்றிடம் . நமது ஆன்மா சுயப்பிரகாச நிலை அடையாத நிலையில் இந்த வெற்றிடம் இருந்து கொண்டிருக்கும். பவசாகரம் நாபியை சுற்றிவரும் சுவாதிஸ்டானாவின் வெளிச்சுற்று பாதையாகும். இது சூரியன் மற்றும் சந்திர நாடிகளுடன் தொடர்புடைய இரண்டு மையங்களைக் கொண்டுள்ளது.

நாம் எப்போது நமது குரு தத்துவத்திலிருந்து விலகுகிறோமா அப்போது நமது ஜீரணசக்தி குறையும். இதை அறிந்து கொள்ளலாம். இதனால் வாந்தியும் , வயிற்றுவலியும் ஏற்பட வாய்ப்பு உண்டு. நாம் ஏதேனும் அதர்மமான வழியில் செயல்படும்போது அல்லது நமது உடலை அல்லது சூட்சும சக்திகளை தவறாக பயன்படுத்தினால் ஏற்படும் மாறுதல்களை இந்தப் பகுதியில் உணரலாம். சிலருக்கு பரீட்சைக்கு செல்வதற்கு முன் வயிற்றுப் பகுதியில் நரம்பு வலி ஏற்படுவதுண்டு. சிலருக்கு பரீட்சைக்கு செல்வதற்கு முன் வயிற்றுப் பகுதியில் நரம்பு வலி ஏற்படுவதுண்டு. இதுபோன்று சில உபாதைகள் நமது குரு தத்துவத்திற்கு சவாலாகின்றன.

இதுபோலவே , நாம் தவறான போதனைகளை அறிந்து கொள்ள முடிகிறது. நுண்ணதிர்வு பூர்வமான உணர்வும் இந்த அறிகுரிகளும்தான் நமக்கு, நாம் சரியான ஆத்மா விசாரத்தில் முன்னேருகிறோமோ அல்லது ஸ்தூல விஷயங்களில் ஈடுபட்டுள்ளோமா என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. நாம் நமது சுட்ஷுமா சரீரத்துடன் இவ்வாறு தொடர்பு கொள்ள முடிகிறது. இறுதியாக எது நமக்குத் துன்பத்தைத் தருகிறதோ அதை மறுத்து விட்டு எது நன்மை செய்கிறதோ அதைப் பின்பற்ற முடிகிறது. நமக்குள் இருக்கும் குரு தத்துவம் மிகவும் சக்தி வாய்ந்தது. இறைவனால் நமக்கு அருளப்பட்டது. ஆனால் நாம் அறிகுறிகளைத் தெரிந்து கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும்.

மதிப்பு மிகுந்த சக்தியாக நமககுள்ளிருப்பது குரு தத்துவம். எது சரி , எது தவறு என இது உணர்த்தும். இது நமக்குள் இருக்கும் நிலையான சக்தி ஆகும். இந்த சக்தியை பெற நமக்கு உரிமை இருக்கிறது. நமக்கு நாமே குருவாக ஆகிறோம். சிலர் பொருளீட்டும் நோக்கோடு , பொய்யான போதனைகளை உபதேசிக்கிறார்கள். இந்த தவறான போதனைகளை புரிந்து கொள்ள முடியும். தவறான குருவின் போதனைகளை கேட்டால் ஆவிகள் பீடிப்பு ஏற்படும். ஆன்மாவின் வெளிச்சத்தின் பாதை இதயத்திலிருந்து வெளிப்படுகிறது. ஆன்ம விசாரம் பூர்த்தி அடைகிறது.


சுத்திகரிப்பு :
I . கனிமங்களைப் பயன்படுத்தி,
* உப்பு நீரில் கால்களை அமிழ்த்து, தியானம் செய்தல்.
* மெழுகுவர்த்தியை பவசாகரத்தில் காண்பித்தல்.

II . உறுதிமொழி
* " அன்னையே , எனக்கு நானே, குரு. தாங்களே எனக்கு குரு. "
* பவசாகரம் மந்திரம் : குரு மந்திரம் _ பத்து குருக்களுக்கும் அல்லது ஏதேனும் ஒரு குருவின் மந்திரத்தையோக் கூறி தியானம் செய்ய வேண்டும்.

இதய செயல்முறைகள் :
* இடது கை அன்னையின் படத்தை நோக்கி வைத்துக் கொண்டு, வலது கை பவசாகரத்தில் வைத்துக் கொண்டு தியானம் செய்ய வேண்டும்.
*காலனி அடிப்பு, உப்பு நீரில் கால்களை வைத்து சுத்திகரித்தல் போன்றவைகளை செய்யலாம்.
* ஒழுக்க நெறிகளை பின்பற்ற வேண்டும். தினமும் தியானம் செய்ய வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக