Translate

புதன், 26 அக்டோபர், 2011

எண்ணங்களற்ற உணர்வு நிலை - தீபாவளி பூஜா

எண்ணங்களற்ற உணர்வு நிலை - தீபாவளி பூஜா
லாஸ் ஏன்ஜெல்ஸ் --- 3 .11 .2002




உங்கள் அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்களை மன மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களை இங்கு காண்பது எங்கு மிக மகிழ்ச்சியினை அளிக்கிறது. நீங்கள் அனைவரும் சஹஜ யோகாவினை மேற்கொள்வதை கண்டு மிக அக மகிழ்வு கொண்டுள்ளேன். இது உங்களுடையதே. ஆன்மா உங்களுடையதே. ஆனால் உள்ளுக்குள் செல்வது மிக கடினம். உங்களின் விருப்பத்தினால் தான் நீங்கள் உங்கள் ஆன்ம விழிப்புணர்வு பெற்று விருப்பத்தினை நிறைவு செய்துள்ளீர்கள் என் எண்ணுகிறேன்.

நீங்கள் எங்கு அறிந்த வண்ணம் அனைவரையும் நிர்பந்தப்படுத்த முடியாது. உங்கள் சொந்த விருப்பத்தினாலும் , சரணடைவதாலும் மட்டுமே இதனை செய்ய முடியும். பேசுவதாலும், வாதாடுவதாலும் எவ்வித உபயோகமும் இல்லை. உங்கள் விருப்பமும் , நம்பிக்கையும் மட்டுமே இதை செயலாக்க முடியும். இது தான் மிக எளிதான வழியாகும். உங்கள் உள்ளத்தின் விருப்பமும், இச்சையின் சக்தி மட்டுமே இதை செயலாக்க முடியும்.

உலகமெங்கும் ஆன்மீக விழிப்புணர்வு பெற்ற அநேகர் இங்கு நம்மிடம் இல்லை. நான் அவர்களை நினைவு கூறுகிறேன். நீங்களும் அவர்களை நினைவு கூறுங்கள்.


இன்று இனிமையான நாள். உலகமெங்கும் விழிப்புணர்வு பெற்றவர்களைப் பற்றி நினைவு கூறுகிறேன். மானிடர்களின் விழிப்புர்ணர்வு தான் உண்மையான தீபாவளி ஆகும். மெழுகுவர்த்தியோ , விளக்குகளோ அல்ல. மானிடர்கள் தான் முக்கியமானவர்கள். இவர்கள் விழிப்புணர்வு பெற்றால் இனி எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாது. மனிதர்கள் இருளின் பிடியில் உள்ளதால் அவர்களுக்கு பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. அவர்கள் இருளில் தள்ளாடிக் கொண்டிருக்கிறார்கள். அவரில் சிலர் உண்மையைப் பற்றி தெரியாமல் இருக்கிறார்கள்.

சஹஜ யோகத்தில் வந்து நீங்கள் விழிப்புணர்வு அடைந்த உடன் அவ்வொளியில் எது நல்லது , எது கெட்டது என அறியத் தொடங்குவீர்கள். எல்லா நேரமும் மகிழ்ச்சியினை அளித்து சந்தோசத்தை கொடுக்கும் இந்த மலர்களைப் போல் அழகாக வளர்வீர்கள். அதே போல் அவ்வொளி பெற்ற உடன் வேறு எதையும் தேட மாட்டீர்கள். எப்பொழுதும் அவ்வொளியினை பிரகாசிக்க செய்யுங்கள்.
உங்களில் உள்ள அந்த ஒளி மூலமாக மற்றவர்களை விழிப்புணர்வு அடைய செய்வது மற்றொரு கடமையாகும். நாம் இங்கு ஒரு மெழுகுவர்த்தி மூலமாக மற்றவற்றை ஒளிமயமாக்குகிறோம். இவ்வொளி உங்களில் உள்ளதால் நீங்கள் அனைவரும் இதே போல் செய்யலாம். அந்த ஒளியின் மூலமாக மற்றவர்களை விழிப்புணர்வு பெற செய்து அவர்கள் ஆன்மாவின் மகிழிச்சியில் நீங்களும் பங்கு கொள்ளலாம். இங்கு பல விளக்குகளை ஒளிப் பெற செய்ததுப் போல் , நீங்களும் இந்த உலகின் ஒளிகளாக உள்ளீர்கள். ஒளியினை நீங்கள் பெற்றது மட்டும் போதாது, மற்றவர்களையும் பெற செய்வது முக்கியம்.

நீங்கள் அவ்வாறு செய்யத் தொடங்கியதும் நீங்கள் பெற்ற பொக்கியஷ்த்தினை உணர்வீர்கள். உங்கள் மீது உங்களுக்கு மரியாதை உண்டாகும். ஒன்றும் வெளிப்படுத்தாமல் உள்ள ஞானியினை போல் இருப்பீர்கள். அழகான, மிக அமைதியான சுபாவத்தை கொண்டு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் உங்கள் உள் மனம் அபிவிருத்தி அடையும். உண்மை எதுவோ, அதுவே உங்களில் இருக்கும். நீங்கள் ஆன்மீக விழிப்புணர்வு பெற்றவர்கள் என்பதை மற்றவர்கள் அறிவார்கள்.

இந்தியாவில் இருந்தோ, அமெரிக்கவில் இருந்தோ, இங்கிலாந்தில் இருந்தோ, வந்திருப்பவர்கள் யாவராயினும், உங்கள் அனைவரின் உள்ளத்திலும் தெய்வீக அன்பின் சாகரமும், ஞானமும் உள்ளதையும், உங்கள் நேர்த்தியான சுபாவத்தையும், மெய்மையினையும், அவர்கள் தங்களுக்குள் நன்கு உணர்வார்கள். உங்கள் அன்பின் சாரத்தினை முதலில் நீங்கள் அன்பவித்து ஆனந்தப்பட்டு இங்கு இருப்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களில் அமைந்துள்ளதை முதலில் அனுபவித்து ஆனந்தப்படுங்கள். பின்பு மற்றவர்களின் அன்பில் மகிழ்ந்து கொள்ளலாம்.

ஒருவருக்கொருவர் நேசிக்க வேண்டும் என்று கூறத் தேவையில்லை . நீங்கள் அன்புடன் நேசிப்பீர்கள், புரிந்து கொள்வீர்கள். உங்கள் ஒளியினை உங்கள் மத்தியில் பரவிட செய்வீர்கள். சில நேரங்களில், உங்கள் வீட்டிலோ, நகரத்திலோ, கிராமங்களிலோ, ஆன்மீக விழிப்புணர்வு பெற வில்லையே என ஏக்கம் ஏற்படலாம். இதனை செய்து முடிக்க வேண்டியது தான். இதை உன்னால் செய்து முடிக்கப் பட வேண்டும். மிக வயது முதிர்ந்த பெண்மணி ஒருவர் என்னிடம் முதன் முதலில் ஆன்மீக விழிப்புணர்வு பெற்றாள். இப்பொழுது நீங்கள் அனைவரும் ஆன்மீக விழிப்புணர்வு பெற்று என்முன் இங்கு உள்ளீர்கள். இதே போல் ஆன்மீக விழிப்புணர்வு அடைய செய்யும் பணியினை நீங்களே செய்யலாம். இதற்கு எந்த ஒரு திட்டமிடுதலும், தேவையில்லை. இதனை செய்ய நன்றி நவிலல் அவசியம் இல்லை. செயல்பாடு மாபெரும் சக்தி அங்கு உள்ளது. யாவும் தானாகவே செயலாக்கப்படும்.

ஒளி பெற என்ன செய்வீகள்? மெழுகுவர்த்தி அருகில் நெருப்பு வைத்ததும் ஒளி பெறப்படுகிறது. அதேபோல் உங்களிடம் அமைந்த விழிப்புணர்வு, உலகில் உள்ள ஆயிரம் ஆயிரம் மனிதர்களுக்கு ஒளியினை அளிக்கக் கூடும். இன்னும் அனேக நாடுகளை நாம் நாடி செல்ல வேண்டியவர்களாக உள்ளோம் என்பதை அறிவீர்கள். நீ எங்கு செல்ல வேண்டும்? எங்கு இப்பணியினை செய்ய வேண்டும்? என்று கண்டுபிடித்து இடங்காண்.

முதலாவதாக , ஆன்ம விழிப்புணர்வு அளிக்கத் தகுதி வாய்ந்தவராக நீ உள்ளாய். யாருடைய உதவியும் இன்றி உன்னால் ஆன்மீக விழிப்புணர்வு அளிக்க இயலும் என்று தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள். தனிப்பட்ட மனிதரால் இது இயலும். நாம் மற்றவர்களுக்கு ஆன்மீக விழிப்புணர்வு அளிப்பது மிக முக்கியமான உலகின் தீபாவளி ஆகும். இது மிக முக்கியமானதாகும்.

சஹஜயோகாவில் அநேகர் கடந்த கால நிகழ்வுகளைப் பற்றி சிறிது கசப்படைந்தவர்களாக உள்ளனர். கடந்த கால நிகழ்வுகளை அறவே மற. கடந்த காலம் முக்கியமல்ல. நிகழ் காலம் மட்டுமே முக்கியம். தற்கால வினாடியில் என்ன செய்ய வேண்டும் நான் அவ்வாறு செய்தேன் , இவ்வாறு செய்தேன் என்று கடந்த காலத்தினை குறித்து கவலைப்படாதே. செய்தவைகள் எதுவோ அது முடிந்தவை . தற்போது நிகழ்காலத்தினை நோக்கிப்பார். நான் எதிர் காலத்திற்கு என்ன செய்ய வேண்டும்? உங்கள் ஒளியில் உங்கள் பாதையினை காண்பீர்கள். இருளின் அந்தகாரங்களை விட்டு அகலுங்கள். நீங்கள் எந்த அளவுக்கு செல்ல வேண்டும். எவ்வாறு மனிதர்களை சந்திக்க வேண்டும். எவ்வாறு சஹஜயோகாவை பரப்ப வேண்டும் என்பனவற்றை தாங்களே அறிவீர்கள்.

உங்கள் உள்ளத்தில் ஏற்கனவே பெற்றுள்ளதுடன் உங்கள் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் உள்ளில் உள்ள சமுத்திரத்துடன் நீங்கள் இணைப்பினை ஏற்படுத்திக் கொண்டால் நீங்கள் உண்மையிலேயே இவ்வேலையினை நன்றாக செயலாக்க முடியும். மிக அழகாக செயல்படுத்தப்படும். நீங்கள் எவ்வாறு வெற்றிகரமாக செயல்படுகிறது என்பதை கண்டு ஆச்சரியப்படுவீர்கள்.

இந்த அறியாமையில் இருந்து பெரும் வெற்றியினைக் கண்டு திகைக்க செய்யும். ஆனால் உங்களிடம் ஒளி உள்ளது. ஒளியின் மூலமாக எல்லா இருளையும் அகற்றி விடுங்கள். ஒன்றைக் குறித்து நினையாமல் உங்களிடம் உள்ள ஒளியினால் அகற்றுங்கள். அது உங்களிடம் இல்லையென்றால் அதனைப் பற்றி பேசுவது எவ்வித பிரயோசனமும் இல்லை. எந்த செயலும் செய்து பிரயோசனமும் இல்லை. இதனால் எவ்விதமான வெற்றியும் கிட்டாது, அதற்கு மாறாக தோல்வியும் மிக மோசமான தோல்விதான் கிட்டும், இது நமக்கு மிக ஆபத்தானதாக அமையும்.

இந்த நாட்டில் அனைவரும் ஒவ்வொரு தவறினை ஒவ்வொன்றாக செய்ய கற்று கொள்கிறார்கள் என்று எண்ணுகிறேன். உங்கள் கண்களை மறைப்பவனவறறை கண்டு பிடிக்க வேண்டும். அமெரிக்க பணம் சார்ந்த நாடாக விளங்குகிறது. இந்நாடு உலகம் முழுவதுமாக பணம் சார்ந்த நாடுகளாக மாறிட நாடுகளை மயக்குகிறது. சஹஜயோகாவின் மூலமாக பணம் திரட்ட வேண்டும் என்ற எண்ணம் உருவெடுக்கலாம். சிலர் அவ்வாறு செய்யாமல் பணத்தின் பின்னே ஓடிக் கொண்டு உள்ளனர். பணம் திரட்ட வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல் பணத்தின் மூலம் பாதுகாப்பும் பெறவும் அவசியம் ஏற்படாது. உங்கள் பாதுகாப்பு உங்களின் உள்ளேயே உள்ளது.


எனவே இவ்வாறான புற காரியங்கள் அனைத்து உங்களுக்கு அவசியமற்றதாக உள்ளது. இவைகள் உங்கள் கண்களை மறைக்க கூடாது. ஒளி உங்களிடம் இருப்பின் , தெளிவாக காண்பதுடன் வாழ்வின் ஒவ்வொரு முக்கிய கால கட்டங்களில் இறைவனின் இவ்வுதவி எவ்வாறு கிடைத்தன என்று தெளிவாக காண்பீர்கள். ஸ்ரீ மாதாஜி நான் என் பிரச்சனையில் இருந்து விடுபட்டேன், என் பகைவர்களை அகற்றி விட்டேன், என்று பல வகையானவைகளைப் பற்றி எனக்கு அநேகரிடமிருந்து கடிதங்கள் வரும். இது குறித்து நான் ஒன்றும் செய்ய வில்லை. உங்கள் ஒளி இருளை அகற்றி உள்ளது. நீங்கள் அறியாதவராக இருப்பின் உங்கள் அறியாமையின் இருளை இந்த ஒளி அகற்றி விடும்.

ஒளியின் மாபெரும் சக்தியினை அறியாதவர்களாக உள்ளோம். இங்கு காண்பது போல் ஒவ்வொரு ஒளியும் சக்தியினை அளிப்பதுடன் முழு காட்சியையும் அளிக்கிறது. எனவே தெளிவாக அறிய இயலும். உதாரணமாக ஒருவர் ஆன்ம விழிப்புணர்வு பெற்றவரா இல்லையா என்று அறிய இயலும். அவர் அருகில் சென்று தனியான ஒரு முறையினை கடைப் பிடிக்க வேண்டியது அவசியம் இல்லை. இவர் விழிப்புணர்வு பெற்றவரா? இல்லையா? என்று உடனடியாக நீங்கள் அறிவீர்கள்.

ஆன்ம விழிப்புணர்வு பெற்றவர்கள் யார் என்று அறிய இயலாமல் மனிதர்கள் இருப்பதை என் அனுபவத்தில் கண்டுள்ளேன். இது எங்கு மிக வியப்பினை அளிக்கிறது. விழிப்புணர்வு பெற்றவர்கள் யார் என்று உங்களால் உணர முடிந்தால் பாதி பிரச்சனைகள் முடிந்தன. ஒருவன் தான் செய்ய இயலும் செயலை செய்ய நம்ப வைப்பது இரண்டாவது பிரச்சனையாகும். இந்த பிரச்சனை சஹஜயோகிகளிடம் இருப்பதை காண்கிறேன். உலகம் முழுவதும் செயலாற்ற இயற்கையான திறம் படைத்தவர்களாக சஹஜயோகிகள் உள்ளனர். சாதாரண மனிதர்களால் கண்டு கொள்ளாதவைகள் இவர்களால் கண்டு பிடிக்க இயலும். சஹஜயோகிகள் தான் சந்திக்கும் நபர் எப்படிப்பட்டவர் என்பதை உடனடியாக உணர இயலும். இதுதான் வேறுபாடு. எனவே உண்மையினை அறிவீர்கள்; எல்லோருடைய உண்மைகளை அறிவீர்கள் எல்லா சூழ்நிலையின் உண்மையையும், யார் தற்புகழ்ச்சி செய்கிறார் என்பதையும் சில கட்டுக் கதைகளையும் யார் கபட வேடதாரி என்பனவைகளையும் அறிவீர்கள்.இதனை அறிவதில் எவ்வித சிரமமும் இல்லை. உங்களிடம் ஒளி இருப்பதால் இது இயலும். ஒளியின் மூலமாக மற்றவர்களிடம் எது நல்லது , எது கெட்டது என்பதைத் தெளிவாக காண இயலும். எல்லா நேரங்களிலும் இறைவனால் வழி நடத்தப்பட்டு அவரால் பாதுகாக்கப்பட்டு வருவதால் உங்களை யாராலும் ஏமாற்ற முடியாது என்ற மிகப் பெரிய ஆசிவாதம் உங்களுக்கு உள்ளது. இறைவனின் மீது நம்பிக்கை வையுங்கள் . இறைவனின் மீது முழு நம்பிக்கை வைப்பது மிக அவசியம். இறைவன் நல்லது செய்வார், நேர்மையான இடத்திற்கு கொண்டு செல்வார், உங்கள் பாதையினை வழி காட்டுவார், தேவையான ஒளியினை அளிப்பார் என்ற உண்மையான, உறுதியான நம்பிக்கையை இறைவன் மீது வையுங்கள்.

இது போன்ற பல அனுபவங்களை உங்களிடம் காண்பீர்கள். அவர்களுக்கு எவ்வாறு பல காரியங்கள் செயல்பட்டன என்று பலர் எனக்கு கடிதங்கள் மூலமாக தெரிவித்துக் கொண்டு உள்ளார்கள். நாம் கூட்டாக இருப்பினும் ஒருவருக்கொருவர் நன்முறையில் இருந்தும், போய் கூறாமலும், மற்றவர்களை அழிக்க நினைக்காமலும், இருக்கிறோம். நாம் மற்ற மனிதர்களின் மனப்பான்மையில் இருந்து வேறுபட்டவர்களாக இருக்கின்றோம் என்பது தான் இதன் பொருள். இது இந்த ஒளியினால் தான் இயலுகிறது. எங்கு நீங்கள் தவறுகிறீர்கள் என காணலாம். நீங்களே உங்களை கண் காணியுங்கள். இவைகளுக்கு தியானம் மிக முக்கியமானது.

தினமும் தியானம் செய்ய வேண்டும். தியானம் என்பது விளக்கில் எண்ணெய் இடுவது போல் என்பதால் தியானம் செய்ய வேண்டும். தியானம் செய்யாதவர்கள் கீழே விழுவார்கள். தியானம் செய்யாமல் செயல் பட முடியும் என்று தியானிக்காதவர்கள் எண்ணுகிறார்கள். இது மிகவும் வருத்தத்திற்குரியது. தினமும் தியானிக்க வேண்டும்.

பிரச்சனைகள் கைக்கடங்கியவாறு உள்ளன. இது மிக சுலபமானது. தியானம் மிக முக்கியமானது என்று அவர்கள் அறிவதில்லை. நீங்கள் அல்ல. ஆண்மவிழிப்புணர்வு பெற்றவர்கள் அநேகர் தியானம் செய்வதில்லை. அவர்கள் பாணியே தனியானது. சுபாவம் தனித்தன்மை வாய்ந்தது.

தியானம் மிக சுகமானதாகவும், இறைவனோடு இணைக்கும் அழகான ஒரு வழி முறையாகும். இவ்வைனைப்பால் தியானத்தில் உங்கள் பிரச்சனைகள் யாவும் நிவர்த்தியடையும். தியானம் செய்யாமலும், தியான வழிமுறைகளை கடைப்பிடிக்காமலும் இருப்பின் உங்களில் குடிகொண்டுள்ள ஒழி மங்கிப் போய் கீழே செல்லும். இதனால் தேவையான அளவுக்கு ஒளி கொடுக்காது. தியானத்தில் உங்களைப் பற்றியும் அறிந்து கொள்வது மிக மிக முக்கியமானதாகும்.

தியானம் செய்வது எப்படி? என்று அநேகர் என்னிடம் கேட்கின்றனர். ஒன்றும் செய்யாமல் சாதரணமாக எண்ணங்கள் அற்ற உணர்வு நிலைக்கு செல்ல பிரயாசப்படுங்கள்.நீங்கள் அவ்வாறு எண்ணங்கள் அற்ற நிலைக்கு அடைந்தீர்களினால் நீங்கள் உங்கள் வேலையினை செய்து முடித்தாகி விட்டது என்பது பொருள். அந்நிலையில் நீங்கள் மெய்மையுடனும், உண்மையுடனும், மகிழ்ச்சியுடனும் யாவருடனும் இருக்கின்றீர்கள். அந்நிலை தான் மிகவும் அடிப்படையானது ஆகும்.தியானிக்கும் போது ஒரு வினையினை செய்யும்படி எத்தனிக்க கூடாது. உங்களை அமைதிபடுத்துவதும், எண்ணங்களை அமைதிப்படுத்துவதும் , உங்கள் உள்ளில் உள்ள சமுத்திரத்திற்கு செல்லுதலும் தான் தியானம் என குறிப்பிடலாம். நீங்கள் தியானிக்க விட்டால் யார் தியானிக்க வில்லை , யார் தியானிக்கிரீர்கள் என்று என்னால் எளிதாக கண்டு கொள்ள இயலும். இது எங்கு மிகவும் எளிதானக் காரியம்.

தியானம் செய்யாதவர்கள் எப்பொழுதும் தயக்கம் உடையவர்களாகவும் , மனக் குழப்பமான நிலையினைக் கொண்டவர் களாகவும் இருப்பார். அவர்களால் அறிந்து கொள்ள இயலாது. அதனால் தான் சஹஜ யோகாவில் தியானம் மிக முக்கியம் என்று கூறுவது மின்சாரம் பாய்வதால் மின்விளக்கு எரிகிறது போலவும், மெழுகுவர்த்தியினால் விளக்கு எரிகிறது என்பது போலவும், தியானம் என்பது இறைவிநின் மாபெரும் சக்தியினை தொடர்ந்து அளித்துக் கொண்டிருப்பதாகும். இவை உங்கள் அச்சங்களை குறைக்கும். அது மட்டுமின்றி எதிமறையான எண்ணங்களையும் அகற்றிவிடும். எல்லா நம்பிக்கையினை குறைக்கும் காரியங்களை அறவே அகற்றும். அவ்வாறு எண்ணங்களற்ற உணர்வு நிலையில் தியானிக்கும் போது எவ்வாறு உங்களுக்கு உள்ளும் வெளியிலும் இறைவனின் உதவி கிட்டுகிறது என்பதை அறிந்து திகைப்பீர்கள். எண்ணங்களற்ற உணர்வு நிலை மிதமிஞ்சிய சக்தி வாய்ந்தமையாக செயல்படுகிறது.

எனவே தியானிக்காதவர்கள் சஹஜ யோகோவின் நன்மைகளை அதிக அளவில் பெற இயலாது. ஒருவர் தியானம் செய்து எண்ணங்களற்ற நிலையினை பெற பிரயாசப்பட வேண்டும். உனக்கு அந்நிலையில் என்ன நடக்கிறது? எண்ணங்களற்ற உணர்வு நிலையில் உங்களுக்கு தன்னம்பிக்கையும், இறைவனின் மீதான உறுதியான நம்பிக்கையும் கிடைக்கின்றன. இவைகள் அனைத்தும் நீங்கள் அடைந்துள்ளீர்கள் என்று அறிவீர்கள். தர்மசாலா பள்ளியில் இருந்து வெளிவரும் நம் குழந்தைகள் மிகவும் நம்பிக்கையுடனும், மிகவும் பணிவாகவும் இருப்பதை நான் காண்கிறேன். நீங்கள் என்ன செய்வீர்கள் என்று அவர்களிடம் கேட்பேன், அதற்கு அவர்கள், " நாங்கள் தியானிப்போம், மாலையில் தியானிப்போம் ," என்பார்கள். அந்த தியானம் இவர்களுக்கு உதவுகிறது. இந்த சிறு பிள்ளைகள் இவ்வாறு கூறும் போது தியானம் நமக்கு பாதுகாப்பு அளிக்கிறது. உண்மையான விழிப்புணர்வு ஏற்படுகிறது. இறைவனோடு முழுமையான இணைப்பு ஏற்படுகிறது என்று ஏன் உங்களால் அறிந்து கொள்ள முடியாது? இறைவனோடு இணைப்பு ஏற்படாமல் சஹஜயோகோவினை மேற்கொள்வதால் என்ன உபயோகம்? தியானம் செய்பவர்கள் அவர்கள் உள்ளத்தின் ஆழத்திற்கு செல்வதால் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளார்கள் என்பதை நான் நன்கு அறிவேன்.அதேபோல் மேற்பரப்பில் மட்டுமுள்ளவர்கள் யார் என்றும் நான் நன்கு அறிவேன். உங்களின் ஆழம் எண்ணங்களற்ற உணர்வு நிலையில் தான் உள்ளது. இந்த நிலையினை அடைவது மிக முக்கியமானதாகும், ஏதாவது என்றினை காணும்போது எண்ணங்களற்ற நிலையில் இருப்ப்பின் நீங்கள் உண்மையினேயே அதன் பிரதிபலிப்பாய் உள்ளீர்கள் எனலாம். இவ்வாறு இது செயல்படுகிறது.






இந்நிலையில் எவ்வளவு நேரம் உங்களால் இருக்க முடியும் என்று எனக்குத் தெரியாது. ஒரு நொடியானாலும் இது உங்கள் செயலுக்கு முயன்று கிடைக்கப் பெற்ற ஒரு வெற்றி எனலாம். இதனைத் தொடர்ந்து அதிக அளவில் வெற்றியினை பெறுவீர்கள் தியானத்தினைக் குறித்து அதிக அளவில் ஏற்கெனவே பேசியுள்ளேன். ஆனால் இன்று எரிந்து கொண்டுள்ள இந்த மெழுகுவர்த்திகளைக் காணும்போது இவைகளும் தியானித்துக் கொண்டுள்ளது என்று எண்ணுகிறேன். இவைகள் தியானத்தில் இருப்பதால் தான் எரிந்து கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.எண்ணங்களற்ற நிலையினை அடைவது தான் மிக முக்கியமான முதல்படியாகும். இதற்கு பிறகு மற்றவைகளை பெறலாம். இருப்பினும் முதல்படி என்பது எண்ணங்களற்ற உணர்வு நிலையாகும். இடது பக்கமிருந்தோ, வலது பக்கமிருந்தோ, கடந்த காலத்திலிருந்தோ எதிர்காலத்தில் இருந்தோ எந்த எண்ணங்களும் வராமல் இருப்பதால் எண்ணங்களற்ற உணர்வு நிலை மிக முக்கியமானதாக உள்ளது. அந்நிலையில் தற்காலத்தில் உள்ளீர்கள். இவைகள் ஏற்கனவே உங்களிடம் உண்டு. இதனை உங்களுக்கு சொல்ல அவசியமில்லை. எல்லோரிடமும் இது உண்டு. இருப்பினும் உங்களை இதில் நிலைப்படுத்திக் கொள்ளுங்கள். எண்ணங்களற்ற உணர்வு இந்லையில் உங்களை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். எவ்வளவு காலம் என்பது முக்கியம் அல்ல, ஒரு தடவை இந்நிலையை அடைந்தீர்களானால் தொடர்ந்து அடைவீர்கள்.

அனேக மனிதர்கள் தியானிக்கிறார்கள் . ஆனால் அவர்கள் தியானத்தில் எண்ணங்களின் உருவாக்கம் நடந்து கொண்டுள்ளது . அவைகள் எண்ணங்கள் அற்ற அமைதி நிலையல்ல. இது ஒரு முக்கியமான ஒரு கட்டமாகும். நீங்கள் வளரவேண்டுமெனில் எண்ணங்களற்ற நிலையின் மூலமாக இறைவனோடு முழுமையான இணைப்பு ஏற்படவேண்டும். பிரார்த்தனை செய்ய வேண்டியது இல்லை. யாரையும் அழைக்கவோ, எதையும் கூப்பிடவோ வேண்டியதில்லை. இது தானாகவே நடைபெறுகிறது. இது உன் உள்ளில் உள்ளது. எண்ணங்கள் அனைத்தும் மிக தீவிரமாக உங்கள் மனத்தின் இருப்பக்கங்களிளிருந்தும் தாக்குதல்களை மேற்கொள்கின்றன. வரும் எண்ணங்களுக்கு எவ்விதப் பொருளும் இல்லை. அவைகளால் உங்களை நிரூபிக்க இயலாது. நீங்களோ ஒரு சமுத்திரம். நீங்கள் எண்ணங்களற்ற உணர்வு நிலையினை அடைய வேண்டும்.

எல்லா மிகப் பெரிய ஆன்மிக புத்தகங்களில் இவைகள் கூறப்பட்டுள்ளன. ஆனால் தான் கூறுவது போல் தெளிவாக குறிப்பிடவில்லை . எண்ணங்களற்ற உணர்வு நிலை பெற இயலாதவர்களை உபயோகமற்றவர்கள் என்று நான் குறிப்பிடவில்லை. ஆனால் தயவு செய்து முயற்சி செய்யுங்கள். அனைவரும் எண்ணங்களற்ற நிலையினை பெற இயலும். ஒரு வினாடி கால அளவில் இந்நிலையில் இருந்தாலும் இது மிகவும் நன்று . பின்பு தொடர்ந்து அந்த வினாடி கால அளவு நீட்டிப்பு ஏற்படும். இது மனதின் பிரதிபலிப்பு என நினைக்கின்றேன் . ஒன்றினை காணும் போது உங்களால் எண்ணங்களற்ற நிலையினை அடைய இயலும். அப்போது காணும் காட்சியினை ஆழமாக காண உங்கள் மனம் பிரதிபலிக்கும். அவ்வாறுதான் நீங்கள் அனைவரும் படைப்பாற்றல் பெற்ற சஹ்ஜயோகிகளாக மாறுகிறீர்கள்.

எண்ணங்களற்ற உணர்வு நிலையினை உங்களால் நிலைநிருத்தப்படாவிட்டால், இது நலமன்று. தீபாவளியான இன்று எண்ணங்களற்ற உணர்வு நிலையினால் நீங்கள் விழிப்புணர்வு பெறப்பட வேண்டும் என்று கோருகிறேன். இது மிகக் கடினம் இல்லை. இது உன்னிடம் உள்ளது. எண்ணங்கள் உன் மூளையின் அலைகள் அல்ல; இவைகள் யாவும் உன்னுடைய எதிர் செயலாகும். அவைகள் இப்பக்கம் இருந்தும் அப்பக்கமிருந்தும் வருகின்றன. உண்மையிலேயே தியானிப்பாயானால், எண்ணங்களற்ற நிலையினை அடைவாய் என்பது திண்ணம். மற்ற உபயோக மற்ற அர்த்தமற்ற எண்ணங்கள் அனைத்தும் மறைந்து போகும். அவைகள் அங்கு இருக்காது. இதனால் உன்னால் வளர இயலும். நீ மிக நன்றாக வளர்ச்சி பெறுவாய். இங்குள்ள அநேகர் ஸ்ரீ மாதாஜி நாங்கள் அந்நிலையினை அடையவில்லையே எனக் கூறலாம். முயலுங்கள். முயற்சி செய்யுங்கள் உங்கள்ளல் செய்ய இயலாது என்று என்னால் நம்ம முடியவில்லை. நான் அடையும் நிலையினை அனைவராலும் அடைய இயலும். நீங்கள் பெறுவீர்கள். இதில் ஒன்றினையும் ஒதுக்காமல் ஒன்றையும் காணாமல் தியனத்தினுள் செல்லுங்கள். இவைகள் யாவும் எவ்வாறு திறம்பட செயல்படுகின்றன என்று அறிய மிக வியப்பாக இருக்கும்.

நீங்கள் அனைவரும் அங்கு உள்ளீர்கள் இருப்பினும் எண்ணங்களற்ற உணர்வு நிலைப் பகுதியினை நீட்டிபாக்குங்கள். இன்று தீபாவளி என்பதால் மிக முக்கியமான நாளாகும். தீபாவளி விழிப்புணர்வு நாள் எனக் கொள்ளலாம். எவ்வளவு தூரம் எண்ணங்களற்ற உணர்வு நிலையில் உள்ளீர்கள் என்பதையும், தெய்வ சமுத்திரத்தில் இருப்பதால் யாவும் திறம்பட செயலாக்கப்படுவதும், உங்கள் விழிப்புணர்வு நிலையினை தெளிவாகக் காட்டும், உங்களில் இந்த மாபெரும் பொக்கிஷத்தைப் பெற்று உள்ளீர்கள் நீங்கள் இதில் இருந்து அல்ல வேண்டும். இதனை அள்ளாவிட்டால் திறம்பட செயல்படாது. இதனை அள்ளுவதால் இது எல்லா மகிழ்ச்சிக்கும் ஆனந்தத்திற்கும் சந்தோஷத்திற்கும் மூலகாரணம் இதுதான் என்று அறிந்து வியப்படைவீர்கள். உண்மையான விழிப்புணர்வின் "மூலமே" இதுதான் என்று கூறுவேன்.
நீங்கள் அனைவரும் அங்கு உள்ளீர்கள் இருப்பினும் எண்ணங்களற்ற உணர்வு நிலைப் பகுதியினை நீட்டிபாக்குங்கள். இன்று தீபாவளி என்பதால் மிக முக்கியமான நாளாகும். தீபாவளி விழிப்புணர்வு நாள் எனக் கொள்ளலாம். எவ்வளவு தூரம் எண்ணங்களற்ற உணர்வு நிலையில் உள்ளீர்கள் என்பதையும், தெய்வ சமுத்திரத்தில் இருப்பதால் யாவும் திறம்பட செயலாக்கப்படுவதும், உங்கள் விழிப்புணர்வு நிலையினை தெளிவாகக் காட்டும், உங்களில் இந்த மாபெரும் பொக்கிஷத்தைப் பெற்று உள்ளீர்கள் நீங்கள் இதில் இருந்து அள்ள வேண்டும். இதனை அள்ளாவிட்டால் திறம்பட செயல்படாது. இதனை அள்ளுவதால் இது எல்லா மகிழ்ச்சிக்கும் ஆனந்தத்திற்கும் சந்தோஷத்திற்கும் மூலகாரணம் இதுதான் என்று அறிந்து வியப்படைவீர்கள். உண்மையான விழிப்புணர்வின் "மூலமே" இதுதான் என்று கூறுவேன்.

எனவே தியானிக்கும் போது எண்ணங்களற்ற உணர்வு நிலைக்கு செல்லுங்கள் என்பதுதான் இன்றைய செய்தியாகும். எந்த எண்ணமும் முக்கியம் அல்ல. எண்ணங்கள் உன்னுடைய படைப்பு என்பதால் முக்கியம் அல்ல. இறைவனின் படைப்போடு ஒன்றிணைய வேண்டுமானால் குறைந்தளவாவது எண்ணங்களற்ற உணர்வு நிலையினைப் பெற வேண்டும். அது தானாகவே உங்களுக்கு வரும். மெதுவாக வளர்ந்து சஹஜயோகாவில் மிகப் பெரிய அளவில் வளருவதைக் கண்டு வியப்படைவாய்.

உங்கள் அனைவருக்கும் என் நன்றி!

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

ஸ்ரீ கணேஷ தத்துவம்

ஸ்ரீ கணேஷ பூஜா (10 .8 .1989 )
லஸ் டயாப்னாறேட்ஸ் , ஸ்விட்சர்லாந்து ( ஸ்ரீ மாதாஜி சொற்பொழிவுகள் )







ஸ்ரீ கணேசனின் அடையாளம் குழந்தைத்தன்மை. எல்லாப் பூஜைகளுக்கும் ஆரம்பத்தில் ஸ்ரீ கணேசனை வழிபடுவோம். நம் எல்லோருக்கும் கணேஷர் என்றால் பக்தியும், சிரத்தையும் இருக்கின்றது. ஸ்ரீ கணேஷ தத்துவத்தை நாம் உணரவில்லை என்றால், நாம் பகவான் சாம்ராஜ்யத்தில் நுழைய முடியாது. அதனால் ஸ்ரீ கணேசரின் ஆசிர்வாதத்தை நாம் பெற வேண்டும். நமக்குள் குழந்தை சுபாவம் பரிபூரணமாக பிரகாசமாக இருக்க வேண்டும். அதனால் நாம் ஸ்ரீ கணேசனைத் துதி செய்கின்றோம். அவர் மிகவும் எளிதில் பிரசன்னமாகி வருவார். சஹாஜயோகாவில் சேர்வதற்கு முன் நாம் என்ன தவறுகள் செய்தாலும், அவர் அதை மன்னிப்பார். நீங்கள் குழந்தைகளைக் கவனித்துப் தாருங்கள் நீங்கள் அவர்களை அடித்தாலோ, கோபித்தாலோ, அவர்கள் எளிதில் அதை மறந்து விடுவார்கள். மாதாவின் கர்ப்பத்திலிருந்து இந்தப் பூமிக்கு வந்தது முதல் என்ன நடந்தது என்று குழந்தைகளுக்குத் தெரியாது. அதன் பின்தான் ஞாபக சக்தி வேலை செய்ய ஆரம்பிக்கும். அப்பொழுது அந்தக் குழந்தையானது விஷயங்களை மனதினுள் வைத்துக் கொள்ள ஆரம்பிக்கும். சிறு வயதில் குழந்தைகள் அவர்கள் மீது யார் அன்பு செலுத்துகின்றார்களோ அவர்களைத் தான் நினைவில் வைத்து கொள்வார்கள். வளர்ந்து கொண்டுருக்கும் போது தான் கெடுதல் செய்தவர்களை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டு பழகுவார்கள். அதே போன்று கால போக்கில் அவர்கள் விசித்திரமான. துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளை உருவாக்குவார்கள்.


ஸ்ரீ கணேஷ தத்துவம் மிகவும் நுண்மையானது. அந்த தத்துவம் சிருஷ்டியில் சகல ஜீவராசிகளும் இருக்கும். அந்த தத்துவம் சைத்தன்ய லஹரி ரூபத்தில் இருக்கும். சைத்தன்ய லஹரி இல்லாமல் உலகில் எந்தப் பொருள்களும் இல்லை. எல்லாப் பொருட்களிலும் ஒவ்வொரு அணுவிலும் நுண் அதிர்வுகள் முழுமையாக இருக்கும். ஸ்ரீ கணேஷர் பொருட்களை உருவாக்கும் முழு முதற்கடவுள் . சூரியனில் , சந்திரனில் மொத்தப் பிரபஞ்சத்தில், அவர் இருப்பதை நீம் கவனிக்கலாம். அவர் மனிதர்கள் உள்ளும் குடிகொண்டு இருக்கின்றார். சில மனிதர்கள் இந்த குழந்தை ஸ்பாவத்தை மூடி வைத்துக் கொள்ளும் பாவத்துடன் இருக்கின்றார்கள் . அவர்கள் ஸ்ரீ கணேஷா தத்துவத்தை தங்களுக்குள் மூடிக் கொண்டு அவர் இல்லை என்ற வாதத்தில் இருப்பார்கள். அதனால் தான் பல மனிதர்கள் விரும்பத்தகாத பயங்கரமான காரியங்கள் செய்வதை நாம் காண்கின்றோம் . ஆனால் ஸ்ரீ கணேஷர் அவர் செய்ய வேண்டிய காரியத்தை செய்வார். நம்முடைய பாவ காரியங்களுக்கு ஏற்ற முடிவுகள் வருமாறு அவர் செய்வார். ஸ்ரீ கணேஷருக்குப் பிடிக்காத காரியங்களில் நீங்களில் ஈடுபட்டால் அவர் ஓரளவு உங்களை மன்னிப்பார். அதன்பின் அவர் ஆண்களுக்கு உடல் ரீதியாகவும், பெண்களுக்கு மன ரீதியாகவும், நோய்கள் உற்பத்தி செய்வார். (பிரக்ருதி) - இயற்கையிலும் கூடப் பிரச்சனைகளை உண்டு பண்ணுவார். இயற்கைக்கு விரோதமான அறிகுறிகள் எல்லாமே ஸ்ரீ கணேசனின் சாபத்தின் விளைவுகளே, மனிதர்கள் எப்பொழுது பாவ காரியங்களில் ஈடுபடுவார்களோ, துஷ்ட பாதையில் போக ஆரம்பிப்பார்களோ, அப்பொழுது அவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க ஸ்ரீ கணேஷர் இயற்கை சீற்றத்தை ஏற்படுத்துவார். ஸ்ரீ கணேஷர் உலகின் எல்லாப் பொருள்களிலும், இருந்தாலும் கூட அவருக்குக் கோபம் வந்தால் எல்லாவற்றையும் அழிக்கும் சகதியும் இருக்கின்றது.


ஸ்ரீ கணேஷர் மூஷிக வாகன மேல் பிரயாணம் செய்வதால் சிறிய உருவத்தில் இருப்பார். அவர் எவ்வளவு மகோன்னதமானவரோ அவ்வளவுக்கு சிறிய உருவத்தில் இருப்பார். ஆனால் விவேகத்தின் மூலம் அவர் மற்ற கடவுள்களை விட மேலான இடத்தில் இருப்பவராவார். அவர் ஞானத்தின் இருப்பிடம். நமக்கு ஞானம் வருமாறு செய்வதில் குருவைப் போன்றவர். நாம் எவ்வாறு நடக்க வேண்டுமென்று அவர் கற்றுத் தருவார். ஸ்ரீ கணேசருக்கு எதிராக நடப்பவர்கள் , ஸ்ரீ மாதாஜியும் மன்னிக்க மாட்டார்கள். ஸ்ரீ கணேஷர் ஆதி மாதாவிற்குத் தன்னைப் பரிபூர்ணமாக அர்ப்பணம் செய்து கொண்டவர். அவருக்கு வேறு தேவதைகள் கிடையாது. எல்லாக் கடவுள்களிலும, மேலான கடவுள் சக்தி வாய்ந்தவர் அவர்தான். அவர் சக்தி மேற்பட்ட சக்தி கிடையாது.

குழந்தைகள் வளரும் போது ஸ்ரீ கணேஷரும் அவர்களுடன் வளர்வதைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் வளர்ந்து மனிதராக இருக்கும் போது ஸ்ரீ கநேஷருடைய சக்தியை விட அதிகமாக செய்வதற்கு முயற்சி செய்வார்கள். ஆகையால் பெற்றோர்கள், குழந்தைகளை அந்தக் குணாதிசயங்களை தக்க வைத்துக் கொள்ளுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அது அவர்கள் தலையாய கடமை. ஒரு சிசுவுக்கு முதலில் இருக்க வேண்டிய குணம் ஸ்ரீ கணேஷ தத்துவம். அதாவது விவேகம். விநேகம் இல்லாவிடில் எப்படி நடந்து கொள்வதென்று தெரியாமல் எல்லோருக்கும் தலைவலியாக அந்தக் குழந்தை இருக்கும். இதனால் அந்தக் குழந்தையின் மூலாதார சக்கரம் சரியான நிலையில் இல்லை என்று தெரிகின்றது. அந்தக் காலத்தில் இந்த மாதிரி நிறைய பேர் இருந்தனர். குழந்தை ஸ்வாபம், விவேகம் இந்த இரண்டு ஸ்பாவமும் எப்பொழுதும், பழுதடைந்த நிலையில் இருக்கின்றது. இந்தக் குழந்தைகளைக் கட்டுப்படுத்தப் பெரியவர்களுக்கு எவ்வாளவு தூரம் போகலாம். எவ்வளவு தூரம் போகக் கூடாது என்று தெரியாமல் இருந்தது. ஒரு வரைமுறைக்கு உட்பட்டு அவர்களை வைத்திருப்பது இயலாமல் போகின்றது.
ஸ்ரீ கணேஷர் விவேகத்தை நமக்குக் கொடுப்பவர்கள். அதனால் தாய் தந்தையர்க்கும் விவேகத்தை நமக்குக் கொடுப்பவர்கள். அதனால் தாய் தந்தையர்க்கு விவேகத்தை கொடுப்பவரும், ஸ்ரீ கணேஷர். தாய் தந்தையர் விவேகத்துடன் இருந்தால், குழந்தைகளைப் புரிந்து நடந்து கொள்ளும் ச்பாவம் தாய் தந்தையர்க்கு வரும். இந்த விவேகம் தாய் தந்தையர்க்கு இல்லை என்றால் குழந்தைகள் வழி மாறிப் போக வாய்ப்பு உண்டு. அதிகமாக குழந்தைகளைக் கண்டிக்க கூடாது. எவ்வாறு ஸ்ரீ கணேஷர் தன தாயாரான ஆதிமாதாவை வழிபடுகின்றாரோ அவ்வாறே நீங்களும் உங்கள் குழந்தைக்கு, பெற்றோரை மரியாதையுடன் நடத்தக் கற்றுக் கொடுக்க வேண்டும். குழந்தைகள் தாயாரை மதிக்க வேண்டு. இல்லையென்றால் அந்தக் குழந்தை நல்ல பிரஜையாக உருவாக்க முடியாது . தந்தை விஷயத்திலும் கூட குழந்தைகள் அவர்கள் பொறுப்பை மறக்கக் கூடாது. அதிகாரம் தந்தையின் கையில் இருந்தாலும் தாயை அதிகமாக மதித்தல் வேண்டும். இதே போன்றுதான் மனைவியும், கணவனை மதித்தல் வேண்டும். கணவனும், மனைவியும் குழந்தைகள் எதிரில் சண்டைப் போடக் கூடாது. அது ஸ்ரீ கணேஷ தத்துவத்தை பாதிக்கும். பகவான் கிருபையால், உங்கள் குழந்தைகள் ஆத்ம தரிசனம் பெற்றவர்கள். அதனால் குழந்தைகளை சரியாக வளர்க்க வேண்டும் என்பது சஹஜ யோகத்தில் மிகவும் அவசியமாகிறது. உங்கள் குழந்தைகளை ஞானத்துடன், நீதி தர்மத்துடன், வளர்ப்பதற்கு, நீங்கள் முதலில் அவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும். முதலில் குழந்தையின் விவேகத்தை பாதுகாக்க முயற்சி செய்யுங்கள். குழந்தைகள் ஏதாவது கூறினால் ஊக்கம் கொடுத்து உற்சாகம் செய்யுங்கள். அர்த்தமில்லாமல் பேசினால் அதை சீர்திருத்துங்கள். குழந்தைகள் விவேகத்துடன் இருந்தால் அவர்கள் புத்திசாலித்தனம் சுடர் விட்டுப் பிரகாசிக்கும்.

நமது உடலில் ஸ்ரீ கணேஷர் எவ்வாறு வேலை செய்கின்றார் என்று பார்ப்போம். உதாரணமாக நுண் அதிர்வுகள் கொடுக்கப் கட்ட தண்ணீர் உட்கொண்டால் உங்கள் வயிற்றுக்குள் போனாலும், வேறு எங்கு சென்றாலும் அந்தத் தண்ணீர் அங்கே கணேஷா தத்துவத்தை அதிகரிக்கும். விவசாயத்தில் கணேஷ தத்துவத்தின் அற்புதத்தை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். விதைக்கு நுண் அதிர்வுகள் செய்தால், அந்த விதியின் மூலம் பூமி மாதாவே நுண் அதிர்வுகள் பெறுவார்கள். சஹஜ யோகிகள் பூமி மேல் வெறும் காலுடன் நடந்தால், பூமி மாதாவிற்கு மிகுந்த நுண் அதிர்வுகள் வரும். மரம், செடி, கோடி, வைக்கோல், புல் எதுவானாலும் இந்த நுண் அதிர்வுகள் மிகுந்த பலனைக் கொடுக்கும்.

ஸ்ரீ கணேஷ தத்துவத்தை உணர்ந்து கடை பிடித்தால், நீங்கள் எல்லா விஷயங்களிலும் மிகவும் சரியாக நடந்து கொள்வீர்கள். நுண் அதிர்வுகள் கொடுக்கப்பட்ட விதைகள் அதன் அணுக்கள் மூலம் மண் , தண்ணீர் இருக்கும் இடங்களை அறிந்து அதற்கேற்றவாறு, நீண்டு நெளிந்தும் நிமிர்ந்தும் விரைவாக வளரும். இது மனிதர்களுக்கும் பொருந்தும். கணேஷ தத்துவத்தின் மூலம் மனிதர்களும் எப்படி வாழ வளர வேண்டும் என்பது தெரியும். ஸ்ரீ கணேஷ தத்துவம் ஆக்ஞா சக்கரத்தில் வரும் பொழுது, மிகவும் நுண்மையாக மாறிவிடும். ஏனெனில் ஆக்ஞா சக்கரத்திலிருந்து கணேஷ தத்துவம் மிகவும் தெய்வ ஷக்தி வாய்ந்ததாகி விடும். உதாரணமாக விதையானது வளர்ந்து பெரிய செடி, மரம் ஆவது போன்று கணேஷ தத்துவமானது மேலே செல்ல செல்ல அதிகரிக்கும். அதனால்தான் தியானம் செய்யும் பொழுது கண்களை மூடிக் கொண்டு தியானம் செய்வார்கள். அவர்கள் வெளியில் இருக்கும் பொருட்களைக் காண்பதற்கு விருப்பம் காண்பிக்க மாட்டார்கள். குண்டலினி சக்தியை அதிகரிப்பதற்கு ஸ்ரீ கணேஷ தத்துவத்தை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். கண்களை மூடிக் கொண்டு இருந்தால் தன அதிகமான கணேஷ தத்துவத்தை உணர முடியும். தூங்கும் பொழுது கண்ணின் கருவிழிகளில் அசைவுகள் இருக்கும். நிலையான புத்தி கணேஷ தத்துவத்தைப் பொறுத்து அமைகின்றது. ஸ்திர புத்தி இல்லையென்றால் கணேஷ தத்துவம் பாதிக்கப்படும். ஆண்களும், பெண்களும் இனக் கவர்ச்சியால், அதிகப்படியாய், எந்த நேரமும் ஒரு ஆண் பல பெண்களைப் பார்த்து நினைத்துக் கொண்டிருப்பது, அதே போல் ஒரு பெண் பல ஆண்களை நினைத்துக் கொண்டிருப்பது என்று இருந்தால் கணேஷ தத்துவம் பாதிக்கப்படும். அந்த மாதிரி ஜனங்களுக்கு தெய்வீகத்தன்மை உடைய குணங்கள் வருவது மிகவும் கடினம். அவர்களது ஆக்ஞா சக்கரம் சரியான நிலையில் இல்லாததால் இவ்வாறு உள்ளது. நீங்கள் மிகவும் சுகபோக விரும்பியாக சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் படபடப்பு அடைவது, கோபம் கொள்வது எளிதில் உணர்ச்சி வசப்படுவது என்று இருந்தால் கணேஷ தத்துவம் பாதிக்கப்படும். வெளியிலும் சென்று விடும். நீங்கள் பொருட்கள் வாங்கும் பொழுது மற்றவர்கள் ஆனந்தப் படுமாறு அவர்களோடு போட்டி போடாமல், உங்கள் தேவைக்காக மட்டும் வாங்கி அவர்களது ஆலோசனையையும் , கேட்டு வாங்கினால் உங்கள் கணேஷ தத்துவம் உயரும். அல்லாமல், மற்றவர்கள் வாங்குகின்றார்கள் நாமும் வாங்க வேண்டும் என்று இருந்தால் கணேஷ தத்துவம் பாதிக்கப்படும்.

தாயார் தன குழந்தைகளுக்குப் பல விதமான பொருட்கள் கொடுப்பார்கள். அவ்விதமே கணேஷ தத்துவமும் தாய்மையின் வடிவமானது. நீங்களும் தாய்மையின் வடிவமாக இருந்தால் கணேஷ தத்துவத்தை திருப்தி செய்தவர்கள் ஆவீர்கள். கலைஞர்களைப் பாருங்கள். அவர்கள் பல கலைகளைக் கற்று திறமையுடன் இருப்பாது, கணேஷ தத்துவம் அவர்கள் சுவாதிஷ்டான சக்கரத்தில் நல்ல முறையில் நெல்லை செய்வதால் தான். ஸ்ரீ கணேஷர் சுவாதிஷ்டான சக்கரத்தில் சரியாக வேலை செய்யாவிடில் பொருட்கள் அழகாக அமையாது. இன்றைய தேதியில் கலைஞர்களின் படைப்ப்புகள் விகாரமாக உள்ளது. அதுவும் இன்றையத் தேதிக்கு விற்பனையாகின்றது. சீக்கிரத்தில் உபயோகம் இல்லாமல் போய் விடுகின்றது . நீங்கள் கணேஷ தத்துவத்துடன் கூடிய அழகான பொருட்களையே உபயோகிக்க வேண்டும். அது மனதிற்கு அமைதி, சந்தோசம், சாந்தம் தரத் தக்கதாயிருக்க வேண்டும். இதையே நீங்கள் ஊக்குவிக்க வேண்டும்.

ஸ்ரீ கணேஷா உங்களை ஒரு சிறந்த தலைமகனாக உருவாக்குவார். மட்டரகமான பொருட்கள் சம்பந்தப் பட்டவைகளுக்கு தினம் தினம் வாழ்க்கையில் முக்கியத்துவத்தை கொடுத்து வருபவர்களுக்கு தாழ்ந்த மனப்பான்மை வந்து விடும். நீங்கள் மோனாலிஷா படத்தை ஒரு முறை பாருங்கள். அவர்கள் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் முகப் பொலிவு, பரிசுத்தமான அன்னையை நினைவூட்டும். அதற்குக் காரணம் மோனாலிஷாவிடம் கணேஷ தத்துவம் நிறைந்து காணப்படுவதால் தான். அவர்கள் ஒரு சாதாரணமான தாயார் தான். அவர்களின் ஒரே குழந்தை இறந்து விட்டதால், அதற்குப் பின் அவர்கள் சிரிக்கவுமில்லை. அழவுமில்லை. அந்த துரதிர்ஷ்டமான நேரத்தில் ஒரு சிறிய குழந்தையிடம் மிகவும் பிரியமாக இருந்த நேரத்தில் தான் ஓவியர் லியோனாட் மோனாலிஸாவை ஓவியமாகத் தீட்டினார். லியோனார்ட் ஓவியத்தில் முதலையானது தனக்கு அப்பொழுது தான் பிறந்த குட்டிகளை கண்களில் பாசத்துடன் தாய்மைப் பரிவுடனும், நோக்குமாறு ஒரு ஓவியம் உண்டு. அதே போல் மனிதர்களும் தங்கள் குழந்தைகளைப் பிரியத்துடன் நோக்குவார்கள். ஆனால் சஹஜ யோகத்தில் சொந்தக் குழந்தைகளை மட்டுமல்லாது மற்றக் குழந்தைகளையும் அதே தாய்மை உணர்வுடன் நோக்க வேண்டும்.

உங்கள் அன்பை குழந்தைக்கு எவ்வாறு வெளிப்படுத்துவது என்று நீங்கள் பழகிக் கொள்ள வேண்டும். நீங்கள் அன்பு என்ற பெயரில் குழந்தைக்கு நல்லது செய்கின்றீர்களா, கெட்டது செய்கின்றீர்களா என்று யோசிக்க வேண்டும். குழந்தைகளின் போக்குப்படி நடக்க கூடாது . அன்புடன், அதே சமயம் கண்டிப்புடன் நடக்க வேண்டும். சரியான வழியில் வளர்க்கிறோமா என்று அடிக்கடி சரி பார்த்துக் கொள்ள வேண்டும். சிறிய வயதில் கண்டிப்புடன் வளர்க்க வேண்டும். பெற்றோரிடம் எப்பொழுதும் மரியாதையையாக இருக்குமாறு பழக்க வேண்டும். பெற்றோர் ஒருவருக்கொருவர அன்யோன்யமாக இருக்க வேண்டும். சாதாரணமாகப் பிள்ளைகள் தங்கள் தாய் தந்தையரை இன்றையத் தேதியில் கொடுமைப் படுத்துகின்றார்கள். அதனால் உங்கள் குழந்தைகளை விவேகத்துடனும், சொற் பேச்சுக் கேட்குமாறும் வளர்த்து வாருங்கள். முதலை தன குட்டிகளை எப்படிப் பாசத்துடன் பார்த்துக் கொள்கின்றதோ அதே மாதிரி நீங்கள் உங்கள் குழந்தையின் மீது அன்பு செலுத்த வேண்டும்.

நம்முடைய சுற்றத்தாருடன் சுமூகமான உறவு வைத்துக் கொள்வதற்கு பின்வரும் விஷயங்களைப் புரிந்து கொள்ள சரியாக முயற்சி செய்ய வேண்டும். நம்முடன் குறைந்த வயது உடையவர்கள், செல்வத்தில் பின் தங்கியவர்கள். சஹஜயோகாவில் பின் தங்கியவர்கள் திறமை குறைந்தவர்கள். எல்லோரையும் ஒரு தாயைப் போல், தந்தையைப் போல் அரவணைத்து செல்ல வேண்டும். உங்கள் எல்லோருள்ளும் கணேஷ தத்துவம் இருக்கின்றது. அதை அதிகரிக்க வேண்டும். மற்றவர்கள் உங்களைப் போல் ஆன்ம தரிசனத்தில் முன்னேற்றம் பெற நீங்கள் முதலில் முழுமையான சஹஜ யோகிகளாக மாற வேண்டும். குரு தத்துவம் கணேஷ தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. இது இல்லாதவர்கள், பயங்கரமானவர்களாக மாறி விடுவார்கள்.

மனிதர்களின் வாழ்க்கை ஓடும் நதியைப் போன்றது. மனிதர்கள் எப்பொழுதும் கடவுளிடம் தொடர்பு உள்ளவர்களாக இருக்க வேண்டும். அப்படி இல்லையெனில், பிள்ளைங் கபடமில்லாத பரிசுத்தமான முழுமையை நீங்கள் புரிந்து கொள்ள முடியாது. அப்பா, அம்மா, என்ற வித்தியாசம் தெரியாமல், குழந்தையானது எல்லோரின் மடியிலும் அமர்வதைப் போன்று நீங்கள் கள்ளங்கபடம் இல்லாமல் பரிசுத்தமானவர்களாக வெள்ளை மனத்துடன் இருக்க வேண்டும்.





ஸ்ரீ கணேஷ தத்துவத்தை நுண் அதிர்வுகளைப் பிரபஞ்சம் முழுவதும் பரப்புவதற்கு நீங்கள் ஷக்தி வாய்ந்த கருவியாக இருக்க வேண்டும். ஸ்ரீ கணேஷர் ஓம்கார ஸ்வரூபம். தாய்க்கும் குழந்தைக்கும் நடுவில் இருக்கும் உண்மையான தெய்வீக அன்புதான் சைதன்ய லஹரி. அந்த இடைவெளி தான் சைதன்ய லஹரி.

கடவுளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள தொடர்பானது ஸ்ரீ கணேஷ தத்துவத்தின் மூலமாக வருகிறது. உங்களுக்கும், கடவுளுக்கும் தொடர்பு இருக்கும் பொழுது அங்கே சைதன்ய லஹரி இருக்கின்றது. அதே போல் இந்தப் பூமி முழுவதும் நீங்கள் செய்கின்ற எல்லாக் காரியங்களுக்கும் உங்களுக்கும் நடுவே சைதன்ய லஹரி இருக்க வேண்டும். எது எல்லா காரியமோ அதற்கும் உங்களுக்கும் நடுனே சைதன்ய லஹரி இருக்கும்.





நாம் சதா சர்வகாலமும் கேட்டுக் கொண்டிருக்கின்ற பிரபஞ்ச முழுவதும் உள்ள திவ்ய சக்தியைப் பற்றி உங்களுக்குக் கூற விரும்புகின்றேன். அதுதான் சைதன்ய லஹரி. எங்கு எல்லாம் நான் பெரியவன் நான் முக்கியம் வாய்ந்தவன் என்று நான் என்ற சொல் இல்லாமல் நான் என்ற அடையாளம் மறைந்து போகுமோ அங்கு தான் பரம சைதன்யம் உள்ளது. அது தான் சைதன்ய லஹரி.

எங்கு எல்லாம் அம்மா அப்பா என்று உடல் ரீதியான சம்பந்தம் மட்டுமல்லாமல் எங்கே நுண்மையான அன்பு மட்டுமே நிலைக்கிறதோ அந்த சிருஷ்டியில் சகலப் பொருட்களும் உற்பத்தியாகி அங்கேயே முடிகிறது. அதுதான் சைதன்ய லஹரி. உதாரணத்திற்கு சூரியனின் கதிர்கள் குளோர்பில் உற்பத்தி செய்யும். சமுத்திரத்திலிருந்து நீர் ஆவியாகி மேலே சென்று மேகமாகி பின் அதே நீர் பூமியில் மழையாகப் பெய்து கடலில் கலக்கின்றது. இது எல்லாம் பரம சைதன்யத்தில் தான் இருக்கின்றது. இது தான் ஞானம் . வேறொன்றுமில்லை. இதுதான் உண்மை. வேறொன்றுமில்லை. சர்வம் ஜோதி மயம் தவிர வேறு இல்லை. எப்பொழுது பரம சைதன்யம் சென்று விடுகின்றதோ அப்பொழுது உள்ளுக்குள் ஞானம் விடைப் பெற்று சென்று விடும். அஞ்ஞானம் வந்து சேரும். வெளிச்சம் இல்லையென்றால் அந்த இடத்தில் இருள் இருக்கும். நிஜம் என்ற வெளிச்சம் இருக்குமிடத்தில் அஞ்ஞானம் என்ற இருள் இருப்பதில்லை. ஒரு தடவை நிஜத்தைத் தரிசித்து விட்டால் அஞ்ஞானம் என்ற இருள் வர சந்தர்ப்பம் இல்லை. மனிதர்கள் உடல் ரிஈதியான சம்பந்தங்கள் என்ற குறுகிய வட்டத்திற்குள் இருந்து கொண்டு அவர்களது உண்மையான நிலையை ஆன்மா என்ற அடையாளத்தை மறந்து விடுகின்றார்கள் . நீங்கள் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். எல்லோரும் பரமம் சைதன்யத்தில் இருக்கின்றீர்கள். பரம சைதன்யம் தான் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகின்றது. பரம சைதன்யம் தான் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகின்றது. . உலகிலுள்ள பிரச்சனைகளில் உழன்று நாம் ஆன்மா என்ற அடையாளத்தை நாம் மறந்து விடுகின்றோம். ஏன் அப்படி நடக்கிறது என்றால் நமது சொந்த அஜாக்கிரதையால் தான்.

நீங்கள் இந்தப் பிரபஞ்சத்தின் மொத்தமும், முழுமையிலும் ஐக்கியமாகி தனிப்படுத்தப்பட முடியாதவர்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும். இந்த உலகம் முழுவதும் நடப்பவையெல்லாம் கடவுளின் திருவிளையாடல்களே. அது எப்படி என்றால் உதாரணமாக நீங்கள் சூரியனைப் பார்க்க வேண்டுமென்று நினைக்கின்றீர்கள். அப்பொழுது குளத்திலுள்ள தண்ணீரைப் பார்க்கின்றீர்கள். சூரியனின் பிம்பம் தெரிகின்றது. ஆனால் அது உண்மையான சூரியன் இல்லை. அதே போல் கோடை காலத்தில் சாலையில் செல்லும் போது தூரத்தில் தண்ணீர் ஓடுவது போல் தெரியும். அது கானல் நீர். உண்மையான தண்ணீரில்லை. அதுபோல் பரம சைதன்யம் உண்மையானது என்றாலும், நீங்கள் மாயையால் மூடப் பெற்று மாயைகளை உண்மையென நினைக்கின்றீர்கள். இந்த மாதிரி உலக நாடகம் நடக்கின்றது. நீங்கள் பந்தன் போடுவதால் பரம சைதன்யம் வேலை செய்யத் தொடங்குகின்றது. ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு வேளையிலும் பரம சைத்தன்யம் தான் எல்லாவற்றையும் செய்கின்றது என்று புரிந்து கொள்ள வேண்டும். விழிப்புணர்ச்சியோடு நீங்கள் பரம சைதன்யத்தின் காரியங்களை கவனமாகப் பார்க்க வேண்டும். நீங்கள் பரம சைதன்யத்தின் காரியங்களைப் பற்றிய முழுக் கவனத்தோடு இருக்க முயற்சி செய்ய வேண்டும். பலர் சுற்றி நடக்கும் காரியங்களை அவர்கள் புத்தியால் புரிந்து கொண்டாலும் மனதளவில் உணர்ந்து கொள்ள மாட்டார்கள். அப்படியே உணர்ந்து கொண்டாலும் சித்தத்திர்குல் கொண்டு வர மாட்டார்கள். அதனால் மூன்று முக்கிய விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.




1 . தலைப் பகுதி 2 . இருதயப் பகுதி 3 . குடல் பகுதி மூன்றையும் அபிவிருத்தி செய்ய வேண்டும். நீங்கள் இந்த மூன்றுப் பகுதியையும் அபிவிருத்தி செய்தால் இந்தப் பரம சைதன்யம் எல்லா முறையில் வேலை செய்யும். பணம் சம்பந்தப்பட்ட லளஹிக விஷயங்கள் பரம சைதன்யத்தி ற்கு கிடையாது. பரம சைதன்யம் எல்லாவற்றையும் உங்களுக்கு செய்து காட்டும். அதற்கு மனசு கிடையாது. பரம சைதன்யம் பணத்தை உருவாக்குவதில்லை. ஆனால் பணம் சம்பாதிப்பதற்கான வழிமுறைகளை பரம சைதன்யம் உருவாக்கிக் கொடுக்கின்றது. இந்த விஷயங்களை நீன்கள் அழகாகப் புரிந்து கொள்ள வேண்டும். இது மிகவும் பரமானந்தத்தைக் கொடுக்கின்ற விஷயமாதலால் பரம சைதன்யத்தை சரியாகப் புரிந்து கொண்டு, அனுபவசாலிகள் ஆகலாம். பரம சைதன்யத்திடம் அதிகாரம் செய்யாமல் தேவையானவற்றை அன்புடன் பிரார்த்தித்துக் கேட்டால் அதன் வேலைகளை அது செய்யும் . பரம சைதன்யத்தில் இருந்து நீங்கள் பிரிக்க முடியாத பகுதி என்று புரிந்து கொண்டால் இனிமையானவர்களாகவும், அன்பானவர்களாகவும், விவேகம் உள்ளவர்களாகவும், கருணை உள்ளவர்களாகவும் மாறுவீர்கள் என்பதில் எந்த வித சந்தேகமுமில்லை.

ஜெய் ஸ்ரீ மாதாஜி
திருக்குறள் ஸ்ரீ மாதாஜியின் பொன்மொழிகளுடன் ஒத்து போதல்

"God is nothing but pure science"
தூய அறிவே கடவுள்

" கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன்
நற்றான் தொழா ஆர்எனின் " ---- இறைவனுக்கு கட்டிய முதற் பெயர் தூய அறிவாளி ஆகும்.

" God is REALIZATION OF TRUTH "
உண்மையை உணரும் உயர்நிலையே கடவுள்
சத், சித், ஆனந்தம்
1 . அன்பு வழி
2 . அறிவு வழி, ஞான vazhi
3 . அமைதி வழி, தவ வழி
4 . விழிப்புணர்வு வழி
5 . ஆனந்த வழி
6 . உண்மை வழி

சனி, 30 ஜூலை, 2011

சஹஸ்ராரா சக்கரம்




தேவதை : ஸ்ரீ கல்கி (தூய்மையான ஆன்மா )
ஸ்தூல வெளிப்பாடு : மூளையின் மையப்பகுதி
வெளிப்பாடு : அதிர்வுகள், குளிர்ச்சியான காற்று
தன்மைகள் : பரிபூரணத்துவம், ஒருங்கிணைப்பு , அமைதி , எண்ணங்களற்ற விழிப்புணர்வு.
இதழ்கள் : 1000
குறியீடு : பந்தன்
கைகளில் : உள்ளங்கையின் மையம்.
தடைகளுக்கான காரணம் : நாத்திகம், கடவுளை சந்தேகித்தல், கடவுளுக்கு எதிரான செயல்கள்

சஹஸ்ராரா சக்கரத்தில் தான் மனித இயந்திரம் முழுவதுமாக ஒருங்கிணைக்கப்படுகிறது. ஒவ்வொரு சக்கரத்திற்கும் ஒரு இடம் உள்ளது. விராட்டாவினுள் ஒவ்வொரு தேவதைக்கான இருப்பிடம் இங்குதான் உள்ளது.

தன்மைகள் :

இந்த சக்கரத்தில் தான் நாம் தொடர்புகளுக்கு அப்பாலுள்ள பரிபூரணத்துவத்தை உணர்கிறோம். மூன்று குணங்களுக்கும் அப்பாற்பட்ட பரிபூரணத்துவம் என்ற சுவர்க்கத்தை பூமியிலேயே அடைகிறோம். நமது கற்பனைகளுக்கு அடங்காத வார்த்தைகளால் விவரிக்க இயலாத ஒரு தெய்வீக சாம்ராஜ்ஜியமாக அமையும். இதுவே நமது முடிவானதும், எப்பொழுதும் எங்கும் வியாபித்திருப்பதுமாகும்.

இத்தகைய இலக்கை நோக்கி நாம் முன்னேறுவது வாழ்க்கையின் நோக்கமாக அமைய வேண்டும். விதை முற்றியதும் இயற்கையாகவே முளைக்கத் துவங்கிவிடும். இதை வில்லியம் ப்ளேக் என்பவர் தெளிவாக விவரித்துள்ளார், அது பின்வருமாறு:

குண்டலினி சஹ்ஸ்ராராவை அடைந்தவுடன் தாமரை இதழ்கள் போன்ற இச்சக்கரம் விரிவடைந்து பிரகாசமடைகின்றன. இதைத் தொடர்ந்து உச்சந்தலையில் சக்தி மிக்க துடிப்புகளையும், அதைத் தொல்டர்ந்து உணர்வுகள் உருகி வழிவதும் போலவும், பிரோண்டனால் எலும்பு பகுதியிலிருந்து குளிர்ச்சியான நுண் அதிர்வுகள் பிரவாகமாக வெளிப்படுவதை உணர்வீர்கள். இதை ஞானஸ்நானம் என்னும் இதனால் உண்மையாகவே மீண்டும் பிறப்பெடுக்கிறோம். குண்டலினி நமது தனிப்பட்ட உணர்வைப் பிரபஞ்சப் பேருனர்வுடன் இணைக்கிறது. ( ஆன்மா பரமாத்மாவுடன் இணைதல்) நுண் அதிர்வுகள் தெரிய ஆரம்பிக்கும் இடமாகிறது. இச்சமயத்தில் நாம் உடனடியாக பிரபஞ்ச அதிர்வுகளின் அலைவரிசையுடன் இனைக்கப்படுகிறோம். இந்த அதிர்வுகள் ஆண்ட சராசரங்களில் பரவியுள்ளது. ஆனால் ஆன்ம விழிப்புணர்வு பெறுவதற்கு முன்பு முட்டைக்குள் இருக்கும் கருவிப் போல எதையும் அறியாத நிலையில் இருந்தோம். முட்டைக்குள் இருக்கும் குஞ்சு ஓட்டை உடைத்துக் கொண்டு வெளிவருவது போல் குண்டலினி சக்தியானது விழிப்பு நிலை அடைந்து மேலெழும்பி கடவுளின் ராஜ்ஜியத்தில் பிரவேசிக்கிறோம் . அதாவது கூட்டுப் பேருணர்வு. இந்த நிலையில் தான் நுண் அதிர்வுகள் நமது மனித இயந்திரத்திற்குள் இருந்து செயல்படுகிறது. சந்தேகிக்கும் மனமுடையவனால் இந்நிலையை அடைய முடியாது.



அறிவில்லாத மனிதர்கள் நம்பிக்கை அற்றவர்கள், இயற்கையை சந்தேகிப்பவர்கள் ஆன்மாவிற்கு இந்த உலகில் இடம் இல்லை, அந்த உலகத்திலும் இடம் இல்லை. வாழ்க்கையில் நேர்வழியில் சிந்தனை செலுத்த வேண்டும். சோதனை காலங்களில் சலனமில்லாத நம்பிக்கையை உண்மையை அடைவதற்கான வழி பகவத் கீதை.

மனித உணர்வுகள் தெய்வத்துடன் இணையும்போது நாம் சூட்சும நிலையில் பிரபஞ்சக் கூட்டுப் பேருனர்வுடன் தொடர்பு கொள்கிறோம். பிரபஞ்ச சக்தியாக மாறும் பொது எங்கும் எதிலும் வியாபித்திருக்கும் அந்தந்த தனிப்பட்ட சக்தியாகவும் உணர்கிறோம். நாம் பிறரது ஆன்ம பலத்தையும் அவரிடமுள்ள தனித்தன்மையும் நுண் அதிர்வுகள் மூலமாக அறிந்து கொள்கிறோம். கேள்விகளை கேட்டால் போதும் பதில் குளிர்ச்சியான அதிர்வுகளாகக் கிடைக்கும். தியானத்தில் அமர்ந்து நுண் அதிர்வுகளை வேண்டிக் கேட்டுக் கொள்ளலாம். இதில் மிகவும் நுட்பமானது. சூட்சுமமான நிலையில் இறைசக்தியுடன் கொண்டுள்ளத் தொலைத் தொடர்பு எனலாம்.



சஹஸ்ராரா சக்கரத்தில் உள்ள தேவதை ஸ்ரீ கல்கி இன்னமும் வரவிருக்கும் அவதாரம் 11 அழிக்கும் சக்திகளுடன் இவர்தான் இறுதியானவர். மிகவும் அதிர்ச்சி ஊட்டும் அவதாரமாக ஸ்ரீ விஷ்ணு வரவிருக்கிறார். அவரது நோக்கம் தீமையை அழித்து விடுவது என்பதுதான். அவர்தான் இறுதியாக தீர்ப்பு அளிக்க இருக்கிறார். தீர்ப்பளிக்கும் பணி துவங்கி விட்டது. எண்ணம் மேலேழுவதும் கீழ் இறங்குவதும் குண்டலினியைப் பொருத்தது. அவர்தான் நமக்கு எல்லா விதமான வாய்ப்புகளையும் கொடுத்து சத்தியத்தின் வழியைக் காட்டியிருக்கிறார் . உண்மையில் நுண் அதிர்வுகள் மூலமாகவே நாம் சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெரிந்து கொள்ள முடிகிறது. குர்ரானில் கூறியது போல் உயர்த்தெழும் போது உங்கள் கைகள் பேசும்.

இந்த மகா யோகத்தின் நதி மூலமாக அன்னை ஸ்ரீ மாதாஜி சஹஸ்ராராவில் உள்ளார்கள். அவர்களின் கருணையால் மட்டும் தான் குண்டலினி விழிப்பு நிலை அடைந்துள்ளது. நமது ஆன்மா பிரகாசமடைந்துள்ளது. நம்மால் நுண் அதிர்வுகளை அறிந்து கொள்ள முடிகிறது. பிறரது குண்டலினியையும் விழிப்படைய செய்ய முடிகிறது. பிறரை குணப்படுத்த முடுயும். தெய்வீக உணர்வை அதாவது அன்பை உலக மக்களிடம் பகிர்ந்து கொள்ள முடியும் . இயேசு கிருஸ்து கூறினார், நான் உங்களுக்கு ஆறுதல் அளிப்பவரை, ஆலோசகரை, துன்பத்திலிருந்து விடுவிப்பவரை அனுப்புகிறேன். எல்லா நிலையிலும் தூய ஆன்மா உங்களை வழிநடத்தி செல்லும்.

மானிட உணர்வு பிரபஞ்ச பேருனர்வுடன் இணைக்கப்படும் போது பிரகாசமடைகிறது. இந்த நிலையை ஞானிகள் பாடல்கள் மூலம் மிகவும் தெளிவாக விளக்கியுள்ளனர். புத்தர், இவற்றை வெற்றிடம் என்றும் , மகாவீரர் இவற்றை நிர்வாணம் என்றும் வேதங்கள் இவற்றை மோட்ஷம் என்றும், கிருஸ்து இவற்றை சொர்க்கம் என்றும் கூறியிருக்கின்றனர்.

வரையறுக்கப்பட்ட செயலாற்றல் கொண்ட மூளைப்பகுதி மிகுந்த ஆற்றலைப் பெற்று வரையறுக்கப்படாத நிலையில் செயல்பட்டு கடவுளை அறிந்து கொள்ள உதவுகிறது. நீங்களே சூரியனும் சூரிய ஒளியாகவும் சந்திரனும் சந்திர ஒளியாகவும் இருக்கும் போது இரட்டைத் தன்மை இங்கு இல்லை. பிரிவு என்பதிருக்கும் போது தான் இரட்டைத் தன்மை இருக்கும் . பிரிவின் காரணமாக பற்றுதல் உண்டாகிறது. மூளை தனது வரையறுத்த தன்மையிலிருந்து வரையறையற்ற ஆன்ம சக்தியாக மாறுகிறது.

சுத்திகரிப்பு

உறுதிமொழி

1 . "அன்னையே ஆன்ம விழிப்புணர்வு கொடுத்து அருள்புரிய வேண்டும்.
அன்னை ஆன்ம விழிப்புணர்வில் உறுதி அடைய வேண்டும்."

2 . பிரம்மரந்தராவை இடது கையால் அழுத்தவும் , வலது கை அன்னையின் படத்தை நோக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு கையை மாற்றி அழுத்த வேண்டும்.

கைகளால் தலையில் அழுத்த வேண்டும். முன்னும், பின்னுமாக பலமுறை தலையில் அழுத்தம் குறையும் வரை இத செய்யலாம்.

கை விரல்களை கோப்பையைப் போல் குவித்துக் கொண்டு தலையின் பக்கவாட்டில் அழுத்தம் கொடுக்கலாம். அகங்காரம் காரணமாக இடது சஹாஸ்ராராவில் தடைகள் தெரிய வரும்.

சகஜயோகியின் வினாவிற்கு அன்னையின் பதில்கள்:

சகஜயோகி : சகஸ்திரார சக்கரத்தை திறந்தபடியும், தூய்மையாகவும் வைக்க வேண்டுமா?

ஸ்ரீ மாதாஜி : இது மிகவும் எளிமையானது. சகச்திராராவின் தேவதை மகாமாயா. நீங்கள் உங்கள் கற்பனையினாலும் யுகத்தினாலும் அறிந்து கொள்ள முயல வேண்டாம். ஆனால் முழுமையாக உங்களை சமர்ப்பணம் செய்துய் கொண்டு சகச்திராராவை திறந்து வையுங்கள். இன்னமும் மூடியவாறு இருப்பின் நீங்கள் அன்னையிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும்.
" தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளை மன்னித்து அருள்புரிய வேண்டும்" எனக் கேட்டுக் கொள்ளவும்.

வெள்ளி, 10 ஜூன், 2011

ஆக்ஞா சக்கரம்





தேவதை : ஸ்ரீ இயேசு கிருஸ்து

ஸ்தூல வெளிப்பாடு : ஹைபோ தலமஸ் (பீனியல் மற்றும் பிட்டியூட்டரி சுரபி)

வெளிப்பாடு : கண்பார்வை, கேட்கும் எண்ணங்கள்

தன்மைகள் : மன்னிப்பு, உயிர்த்தெழுதல், எளிமை, இரக்கம்.

இதழ்கள் : 2

கனிமம் : ஒளி

குறியீடு : சிலுவை

கைகள் : மோதிர விரல்

தடைகளுக்கான காரணம் : அலை பாயும் கண்கள், தவறான சேர்க்கை

இடது பக்கம்

தேவதை : ஸ்ரீ மகாவீரா
வெளிப்பாடு : சுயக்கட்டுப்பாடுகள், நினைவுகள் { வலது நெற்றி}
தன்மை : அகங்காரம்
கைகளில் : இடது மோதிர விரல்
தடைகளுக்கான காரணம் : தன்னை வருத்தி கொள்ளுதல், தன்னிரக்கம், மன்னிக்க முடியாத தன்மை, இறந்தகால நினைவுகள்

வலது பக்கம்

தேவதை : ஸ்ரீ புத்தா
வெளிப்பாடு : நான் என்ற அகந்தை { இடது நெற்றி}
தன்மை : மமகாரம்
கைகளில் : வலது மோதிர விரல்
தடைக்கான காரணம் : தவறான கடவுளைப் பற்றிய சிந்தனை, கவலைகள், அகங்காரம், ஆதிக்கம்.

ஆக்ஞா சக்கரம் மூளையின் மையத்தில் அமைந்துள்ளது. மானுட பரிணாமத்தில் ஆறாவது நிலையைப் பெறுகிறது. நெற்றியின் மையம் எனக் கண்டறியலாம். இது சகஸ்ராராவுக்கு நுழைவாயில் போல் அமைந்துள்ளது . எனவே எண்ணங்களில் தூய்மை இல்லாத போது குண்டலினி இந்த சக்கரத்தைத் தாண்டி செல்ல இயலாது. இந்த சக்கரத்தைத் தாண்டி மேலே செல்லும் போது நமது நினைவுகள் விரிவடைந்து எண்ணங்களுக்கிடையே இடைவெளி அதிகரிக்கும். இந்த இடைப்பட்ட இடைவெளி என்பது அமைதியானது. இந்த அமைதி இரண்டு இதழ்களையும் அணைத்துக் கொண்டு விரிவடைகிறது. இதனால் நமது எண்ணங்களைத் தோன்றிய இடத்திற்கு மீண்டும் கொண்டு செல்கிறது. இந்த நிலையில்தான் எண்ணங்களற்ற நிலை ஏற்படுகிறது. மிக ஆழமான, நிர்மலமான அமைதி ஏற்படுகிறது. பிரபஞ்சத் தோற்றத்திற்கு ஆதாரம் இந்த அமைதியே ஆகும்.

தன்மை

ஆக்ஞா சக்கரத்தின் அடிப்படைத் தன்மையானது மன்னிப்பு. மானுடப் பரிணாமத்தின் வளர்ச்சியில், இக்குறிப்பிட்ட நிலையில், மனிதனுக்கு அகங்காரம் வளர்ந்துள்ளது. நான் தான் எல்லாவற்றையும் செய்கிறேன் என்ற உணர்வு மேலோங்கியுருக்கும். இது பொருளாதார ரீதியின் காரணமாக அமைகிறது. இது பலூனைப் போல் பெருத்துக் கொண்டு செல்லும். இது கட்டுப்பாடுகளையும், சூழ்நிலைகளையும் பாதிப்படையக் கூடிய சக்கரம். இதை மமகாரம் என்றும் அழைக்கப்படுகிறது. நம்மை ஆன்மாவிலிருந்து பிரிக்கிறது. ஆகா அகங்காரம், மமகாரம், நம்மை ஆன்மாவிலிருந்து பிரித்து விட சதி செய்கிறது.

மனித மனம்

மனித மனத்தை அகங்காரம், மமகாரம் எனப் பிரிக்கலாம். இவை இட, பிங்கல நாடியின் மேற்பகுதியில் அமைந்துள்ளது. இவை ஆக்ஞா சக்கரத்தில் ஒன்றுக்கொன்று குறுக்காகவும், நெடுக்காகவும் மாறி செல்லும். இறந்த கால நினைவுகள், கட்டுப்பாடுகள், உணர்வுகள் ஆகியவை தேக்கமாக வலது மூளையில் இருக்கிறது. ( எதிர்பக்கத்தில் குறுக்கில் சென்று அடையும்) எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனைகள், திட்டமிடுதல், செயல்பாடுகள், ஆகியவை தேக்கமாக மூளையின் மறுபக்கத்தில் (இடதுபுறம்) அமைந்துள்ளது. இவற்றை வெப்பமான வாயுக்களுடன் ஒப்பிடலாம். மிக அதிகமாக நாம் செயல்படும் போது, சிந்திக்கும் போது, வலது நாடி செயல்படுகிறது. இது உண்மையில் வாயுவைப் பயன்படுத்தும்போது இயற்கையிலுள்ள சமநிலை பாதிக்கப்பட்டு மற்ற நாடியும் சக்தியை இழக்கின்றன. இது மூளையில் பனி மண்டலத்தில் ஏற்படுத்தி ஆத்மா ஞானம் பெறுவதில் தடையை ஏற்படுத்துகிறது. ஆன்ம விழிப்புணர்வு பெரும் முன்னர் நாம் பல்வேறு நிலையில் சமநிலை அற்றவர்களாக இருப்போம். அகங்காரம், மமகாரம் ஆகியவற்றின் சக்தி இழப்பைப் பொறுத்து நமது நாடிகளில் சமநிலை தடைப்பட்டு சுழுமுனை வழியாக ஆன்ம முன்னேற்றம் ஏற்படுவதில்லை. குண்டலினி இந்த பனி மூட்டங்களின் பிணைப்பை ஊடுருவி சகஸ்ராராத்தில் பிரம்மா சைத்த்தன்யத்துடன் இணைய முடிவதில்லை.

இது ஏனெனில் பிரான்டிநெல் போன் எனும் முன் மண்டை ஓடுகளின் கடினத்தன்மையால் தான் எனலாம். நாம் பிறக்கும் போது முன் மூளைகளுக்கிடைப்பட்ட பகுதி பிறக்கும் போது மென்மையான திசுக்களால் மூடப்பட்டிருக்கும். குழந்தை வளர வளர திசுக்கள் கடினமாக்கப்பட்டு விடும் பாதையும் தடைபடுகிறது. இதனால் அகங்காரம் தேக்கமடைந்து " நான்" என்பது வலுப் பெறுகிறது.

நாம் நமது அகங்காரத்தை அழிக்க வேண்டும் என்பதல்ல. அகங்காரம் நமது ஆன்ம வளர்ச்சிக்குத் தேவைதான். இவை இல்லாமல் நாம் செயல்பட முடியாது. மமகாரத்துடன் சமநிலை அடைய செய்து இடைவெளியை ஏற்படுத்திய பின்பு தான் குண்டலினி மேலெழுந்து சகஸ்ராரத்திற்கு வந்து சேரும். இது மிகவும் கடினமானது தான்.

மன்னிப்பு

மன்னிப்பும், ஹாஸ்யமும் இவ்விரண்டும் அகங்காரத்தைக் கட்டுப்படுத்தும் சாதனமாகும். அகங்காரம் செயல்களை உருவாக்குகிறது. தவறுகளுக்கு தண்டனை வழங்குகிறது. மாற்றங்களை ஏற்படுத்துகிறது. விருப்பத்தைத் தோற்றுவிக்கிறது. மன்னிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதால் அகங்காரத்தை கட்டுப்படுத்தும். நாம் நமது அகங்காரத்தை குறைத்துக் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். பொறுமையாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும். ஆன்மா நமக்குள் பிரகாசித்துக் நமது செயல்களில் வெளிப்படுகிறது. இரதத்திற்கு ஓட்டுனராக அகங்காரம் செயல்பட வேண்டும். ஆனால் அவற்றை செயல்பட வைப்பவர் ஆன்மாவாக இருக்க வேண்டும். இறைவனின் கட்டளைகள் ஆன்மாவின் மூலம் செயல்பட்டு முடிவில் நன்மையே ஏற்படுகிறது.

நாம் பிறரை மன்னிக்கும் போது அகங்காரத்தின் மீது நமக்குள்ள செயல்களை திரும்பப் பெறுகிறோம். மன்னிக்க முடியாது என்பது ஒருவிதமான செயல்தான். இதில் நமது முழுமையான கவனத்தை ஒருமுகப்படுத்துகிறோம். நாம் சுலபமாக பிறரை மன்னிக்க முடியாது. இதில் மன்னிப்பதர்குரியவர் பதிப்புக்குள்ளாவதில்லை. நமது கோபம் நமக்கு பின் விளைவுகளை ஏற்படுத்துகிறது. நமது உணர்வுகளை பதிப்புக்குள்ளாக்குகிறது. இது நம்மை அழிக்கக் கூடியது. நாம் உணருகிறோம் மன்னிப்பு என்பது கற்பனையானது.

மன்னிப்புக்குரியவர் பாதிக்கபடுவதில்லை. நாம் நம்மை உணர்வுபூர்வமாக இழக்கிறோம். ஹாஸ்யம் அகங்காரத்திற்கு ஒரு அருமருந்தாக அமைகிறது. அகங்காரம் எனும் பலூனில் வீக்கம் குறைக்க முடியும். ஹாஸ்யத்தின் மூலம் வீக்கத்தை குறைக்க முடியும். சாட்சி பாவத்தில் அகங்காரத்தை கண்காணிக்க வேண்டும். இதன் சூட்சும தந்திரங்களை அறிந்து கொள்ள முடியும். நாம் அகங்காரத்தை எதிர்த்துப் போராட முடியாது. இது எதிர்மறையானது. ஏனெனில் அகங்காரம் என்பது செயல்தன்மையைக் குறிக்கிறது. ஆகா அகங்காரத்தை எதிர்த்து அகங்காரமே போராடுவது போல் ஆகும். நாம் ஹாஸ்யம ஆகா பேசும் போது நம் இதயம் மென்மையாகி இறுக்கமற்றதாக அதாவது லேசாகி விடுகிறது. அகங்காரமும், மமகாரமும், சூட்சும உலகத்தின் இரு கரைகளாக அமைகிறது. மமகாரம் தனி மனிதனின் சூழ்நிலை எனலாம். இங்குதான் கடந்த கால நினைவுகளும் அனுபவங்களும் தேங்கி இருக்கின்றன. இதை கடந்த நிலையிலிருப்பது கூட்டு ஆழ்நிலை உணர்வு ஆகும்.

ஆவிகளின் ஆய்வுகள் செய்பவர்கள் மந்திரவாதிகள். இந்த நிலையிலிருந்து கொண்டு அனுபவங்களை வியாபாரமாக்குகிரார்கள். அகங்காரம் என்பது தனி மனிதனின் மேல் நிலை உணர்வு ஆகும். இது எதிகாலத்தை உணர்த்துவதாகும். இந்த கூட்டு மேல்நிலை உணர்வு நிலையில் தான் அதிகாரத்தை விரும்புவர்களும், புதுமையை விரும்புவர்களும், தங்களது எதிர்கால வியாபாரத்தை நடத்துகிறார்கள். இந்த சூட்சும நிலையில் மிகவும் ஆழமான ஆராய்ச்சி செய்வது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். அன்னையவர்கள் கூறும் போது, கரியிலிருந்து வரும் புகையும் (ஆழ்நிலை உணர்வு) பென்சால் ( Benzol) மேல்நிலை உணர்விலிருந்து வரும் புகை இரண்டுமே சமமாக மூச்சுத் திணறலை ஏற்படுத்தும். ஆகவே ஆவிகளால் பீடிக்க வாய்ப்பு ஏற்படுகிறது.

இடது ஆக்ஞாவின் தேவதை ஸ்ரீ மகாவீரா . இவரது அவதாரம் விரட்டாவின் மமகாரத்தை வெளிப்படுத்தும். இவர் வலது நெற்றியில் அமர்ந்திருக்கிறார். அவர் அஹிம்சையை தனக்கும் வலியுறுத்துகிறார். அவரது கருத்துக்கள் இரக்கமும், அஹிம்சையையும் வலியுறுத்துவது ஆகும்.

வலது ஆக்ஞாவின் தேவதை ஸ்ரீ புத்தா . இவர் விரட்டாவின் அகங்காரத்தை வெளிப்படுத்துகிறார். இடது நெற்றியின் மையத்தில் அமர்ந்திருக்கிறார். இவர் இரக்கத்தையும் அஹிம்சையையும் உலகிற்கு பரப்பினார். இவரும் எட்டு படிகள் கொண்ட வழிதனையும் சமநிலை அடைவதையும் வலியுறுத்தினார்.

இவர் அகங்காரத்தை ஊடுருவி குண்டலினி செல்லும் வழி முறைகளை கூறியுள்ளார். மென்மையான எண்ணங்களையும் , மனதையும் வலியுறுத்தினார். பயங்கரமான எண்ணங்களையும் தவிர்க்க வேண்டுமென்றும் இயற்கையான தெளிவான எண்ணங்களினால் மமகாரம் கரைந்து விடுகிறது. ஸ்தூல எண்ணங்களிலிருந்து சூட்சும் எண்ணங்களினால் எவ்வாறு உயருவது என்பதை கூறியிருக்கிறார்.

சகஸ்திரார சக்கரத்திற்கு மேலெழும் பொது சுழு முனையில் ஆக்ஞா சக்கரத்தின் வழியாக செல்கிறது. இது அன்னை ஜீசஸ் மேரியின் இடமாகும். இயேசு கூறினார். அவர்தான் ஒளியாகவும் பாதையாகவும் இருக்கிறார்கள். இந்த பாதை இறைவனின் ராஜ்ஜியத்திற்கு சென்று சேர்கிறது. மன்னிக்கும் சக்தி யின் மூலம் மனித குலத்திற்கு பாவத்தின் பளு குறைகிறது. உலகத்திற்கு மனிதர்களின் அகங்காரத்தை அறிய வைக்க அவர் சிலுவையில் அரையுண்டார். மனிதன் மனம் திருத்த துவங்கிவிட்டான். இவ்வாறாக தனது எளிமையை அறிந்து கொள்ள முடிந்தது . இயேசு கிருஸ்து எல்லோரையும் மன்னிக்கும் சக்தியை நமக்குக் கொடுத்திருக்கிறார். உள்ளுணர்வோடு மன்னிப்பு கேட்டால் மன்னிக்கப்படுவார்கள். நம்மாலும் பிறரை மன்னிக்க முடிகிறது. இது நமது கடந்த காலத்தை மட்டும் விட்டொழிப்பதில்லை நமது கிரம பலனையும், பாவங்களையும் விட்டொழிக்கிறது. உண்மையில் ஆன்மா கர்மாவையோ , பாவத்தையோ தேக்கி வைப்பதில்லை. குற்ற உணர்வையும் தேக்கி வைப்பதில்லை. அஹங்காரத்தை கடந்து ஆன்மாவாக மாறும் பொது நாம் நமது கடந்த காலத்தை கடந்தவர்களாகிறோம்.

ஆன்ம ஞானத்தில் ஜீசஸ் மிகப் பெரிய மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளார். நமது குற்ற உணர்வுகள் அனைத்தும் கரைக்கப்பட்டு விட்டன. அகங்காரத்தைக் குறைக்கப்பட்டு விட்டது. மன்னிப்பை மக்களுக்குப் போதிக்கப் பட்டு ஆன்மாவுக்கு இறப்பில்லா நிலையை உணர வைத்து விட்டார். அவரது உயிர்த்தெழுதல் மூலமாக அவர் ஆன்மாவாக மீண்டும் பிறந்தார். அன்னைக் குண்டலினி நமக்கு இரண்டாவது பிறப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.


ஸ்தூல வெளிப்பாடு :

ஆக்ஞா சக்கரம் கண் பார்வையை பாதுகாக்கிறது. ஆகவே நாம் கண்களை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். நாம் அவற்றை மிரைய்ற வகையில் பண்படுத்தக் கூடாது. அலைபாயும் கண்களை, பொருட்கள் மீது கொள்ளும் மோகமும் தவிர்த்து இயற்கையைக் கண்களால் கண்டு களிக்க முயல வேண்டும். ஜோதியைக் கண்களால் பார்ப்பதன் மூலம் சுத்திகரிக்கப்பட்டவர்களாவீர்கள்.


உறுதி மொழி:

" அன்னையே ! ஆன்மாவுக்கு எதிராகத் தவறு இழைத்திருந்தால் என்னை மன்னிக்க வேண்டும்".

பொதுவான அறிவுரை:

இடது கை அன்னையை நோக்கியும் , வலது கை தலையின் பின்புறமும் வைத்துக் கொள்ள வேண்டும்.

வலது உள்ளங் கையினால் தலையின் பின்புறத்தில் மென்மையாகத் தட்ட வேண்டும். இடது கை அன்னையின் படத்தை நோக்கி வைக்க வேண்டும்.

மமகாரத்தின் அழுத்தத்தை வலது மேல் நெற்றியில் அழுத்தி தேய்த்து குறைக்க வேண்டும்.

அகங்காரத்தை வலது மேல் நெற்றியின் பின்புறமிருந்து அழுத்தி குறைத்து சுவதிஸ்டானத்தின் வரை இறக்க வேண்டும். கடந்த கால நினைவுகளைத் தவிர்க்க வேண்டும். மூடப் பழக்க வழக்கங்களையும் , கட்டுபாடுகளையும் தவிர்க்கவும். சில நேரங்களில் மமகாரம் விரிவடைந்து அகங்காரத்தை அழுத்தும் பொது வலது விசுத்தியில் உபாதைகள் தோன்றும். எனவே இது மமகாரத்தின் விளைவாக ஏற்பட்டது எனக் கொள்ள வேண்டும்.


வலது ஆக்ஞா சுத்திகரிப்ப்பு:

ஆக்ஞா சக்கரத்தில் மெழுகுவர்த்தி சுவாலை மூலம் ஸ்ரீ மாதாஜியைப் பார்க்க வேண்டும்.

" அன்னையே ! எல்லோரையும் மன்னித்து விட்டேன் . என்னையும் மன்னித்து விட்டேன்."

அறிவுரை:

இடது கை அன்னையின் படத்தை நோக்கி வைத்து கொண்டு வலது கை நெற்றியில் வைத்து மெல்ல அழுத்தியபடி கீழேக் குனிய வேண்டும். தவறான தியான முறையை விட்டு விட வேண்டும். அகங்காரம் அதிகரித்து மமகாரத்தை அழுத்தும் போது ஞாபக மறதி ஏற்படுகிறது.

வியாழன், 9 ஜூன், 2011

விசுத்தி சக்கரம்





தேவதை : ஸ்ரீ ராதா கிருஷ்ணா
ஸ்தூல வெளிப்பாடு : செர்விக்கள் பிளக்சஸ், கழுத்து நரம்பு மையம், கழுத்து, தோள்கள், வாய் , நாக்கு பற்கள், மூக்கு, முகம்.
தன்மைகள் : கூட்டு விழிப்புணர்வு, சாட்சி பாவம், நகைச்சுவை உணர்வு, பற்ற்ற நிலை, இராஜீய உறவுகள்.
இதழ்கள் :16
கனிமம் : ஆகாயம்
கைகள் : ஆள் காட்டி விரல்
தடைக்கான காரணம் : கூட்டு வழிபாடு தவிர்த்தல், தூண்டுதல்களுக்குல்லாதல், சுய மரியாதை இழத்தல், சகோதர சகோதரிகளை நிந்தனை செய்தல், சாட்சி பாவம் இருத்தல்.

இடது விசுத்தி

தேவதை : ஸ்ரீ விஷ்ணு மாயா
தன்மைகள் : சகோதர- சகோதரி உறவுகள் தன்னம்பிக்கை
கைகள் : இடது ஆள் காட்டி விரல்
தடைகளுக்கு காரணம் : குற்ற உணர்வு, தவறான நடத்தை, கடும் சொற்கள், தரக்குறைவான கிண்டல் பேச்சு

வலது விசுத்தி

தேவதை : ஸ்ரீ யசோதா மாதா
தன்மைகள் : பொய் பேசுதல், புறம் பேசுதல், தூய்மையை இழிவு படுத்துதல், இழிவான சொற்களால் பேசுதல்
கைகளில் : வலது ஆள்காட்டி
தடைக்கான காரணம் : தவறான உணவு வகைகள் கல்லிரலுக்கு ஊறுவிளைவிக்கும் உணவு உட்கொள்ளுதல்

மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியில், பரஸ்பரமான கூட்டு, சமுதாய வாழ்க்கை முறையை இந்த விசுத்தி சக்கரம் முக்கியமாகப் பிரதிபலிக்கிறது. எல்லா வகையிலும் இயற்கையாகவே சின்னஞ்சிறு வேறுபாடுகளைத் தவிர்த்து வளர்ச்சியடைந்த சமுதாயமாக ஆத்மரீதியாக இணைந்து வாழ்வதற்கு இந்த சக்கரம் உறுதுணையாக உள்ளது.


தன்மைகள்

நமக்குள் இருக்கும் ஆன்மீக சக்தியை வளப்படுத்திக் கொள்ள நாம் தினம் தினம் சந்திக்கும் பிரச்சனைகளை சாட்சி பாவத்துடன் மலரும் பொது ஆன்ம சாதகருக்கு வாழ்க்கையே நாடக மேடையாக அமைகிறது. சாட்சி உணர்வு வெளிப்படுகிறது. கூட்டு விழிப்புணர்வில் நாம் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் நாம் ஆழமாக தெய்வீக அதிர்வுகளை உணர்ந்து அறிந்து கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். பரிபூரணத்துவத்தின் ஒரு துளியாக நாம் உணரத் துவங்கும் போது ஒவ்வொரு சக்கரத்திலும் உள்ள சூட்சும சக்தியை உணர்ந்து கொள்ள முடிகிறது. அதே போல் பிறரது சக்கரத்திலும் அறிந்து கொள்ள முடிகிறது.

இதைத்தான் செயல்முறைப்படுத்தும் தியானம் என்று சஹஜயோகத்தில் அழைக்கிறோம்.இந்த நேரடியான செயல்முறைதான் நமது கைவிரல் நுனிகளில் சாட்சியாக வெளிப்பட்டு பிரகாசிக்கின்றன. நமது உடலிலும் அறிந்து கொள்ள முடிகிறது. நாம் கூட்டாக விழிப்புணர்வு பெரும் போது பிறரது ஆன்ம நிலையில் செயல்பட முடியும். அவர்களது சக்கரங்களின் அதிர்வு நிலைகளை கைவிரல் நுனிகளில் அல்லது உள்ளங் கைகளில் தெரிந்து கொண்டு நமது தெய்வீக அதிர்வுகளை சொட்சுமமாக பிறரது சக்கரங்களுக்கு தேவைக்கு தக்கபடி செலுத்த முடியும். இது மனித இனம் பெற்றுள்ள புதிய கருத்துணர்வு இயற்கையான உணர்வு. இதுவே சூட்சும அதிர்வுகளாகும்.

இந்த மனித இன சகோதரத்துவம் தான் பல்வேறு கால கட்டங்களிலும் ஜென்ம ஜென்மமாக ஆன்மீக சாதகர்கள் தேடிக் கொண்டிருந்த குறிக்கோள் ஆகும் . இந்த குறிப்பிட்ட காலத்தில் தான் இது வெளிப்படுகிறது. இது வெறும் கற்பனையிலோ அல்லது யூகத்திலோ தோற்றுவிக்கப்பட்டதல்ல. இது சாட்சிப் பூர்வமான பேருண்மையாகும்.

ஹம்ச சக்கரம்

ஹம்ச சக்கரம் என்பது விசுந்தி சக்கரத்தின் ஒரு பகுதியாகும். இது இரண்டு புருவங்களுக்கு இடையில் மூக்கிற்கு மேலாக அமைந்துள்ளது. இந்த சக்கரம் நமக்கு விஷயங்களை வேறுபடுத்தும் உணர்வு , மேற்ரும் தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் உணர்வுகளைத் தருகிறது, இது மேலும் ஆணுக்கும் , பெண்ணுக்கும் இடையே நிலவும் உறவை நிர்ணயிக்கிறது. உலகம் முழுவதும் பொதுவாக நிலவும் புனிதமான சகோதர்-சகோதரி உறவையும் நிர்ணயிக்கிறது. இந்த உறவிலிருந்து திருமண உறவாக மாற்றியமைக்கும் போது தர்மங்களுக்கு கட்டுப்பட்டு, மதிப்பு மிக்க தூய்மையான அமைப்பு ஏற்படுகிறது.

கணவனானாலும், மனிவியானாலும் மற்றவருக்கு மதிப்பும், மரியாதையும் தர வேண்டியது அவசியமாகும். இதில் எந்தக் குழப்பமும் இருக்கக் கூடாது. ஆண் அனங்க இருக்க வேண்டும். பெண் பெண்ணாக இருக்க வேண்டும். புனிதமான திருமண உறவின் அவசியத்தை மறந்து விடக் கூடாது. சமுதாயம் முழுவதுமாக அன்பை வெளிப்படுத்தும் சக்தி வாய்ந்ததாக வளப்படுத்த வேண்டும். குடும்ப அமைப்புகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமும், மரியாதையும் ஊக்கப் படுத்த வேண்டும்.

ஜனன மரண மூலம் மனித இனத்தில் ஏற்படும் பரிணாம வளர்ச்சிக்கு இது ஒரு வாகனமாக அமைகிறது. இந்த சக்கரம் ஐம்புலன்களில் உணர்வுகளை வெளிப்படுத்தும் சாதனமாகவும் அமைகிறது. இதனால் விசுத்தி சக்கரம் ஐம்புலன்களின் செயல்களைக் கட்டுப்படுத்துகிறது.

விசுத்தி சக்கரத்தின் தேவதை ஸ்ரீ கிருஷ்ணா அவர் சாட்சி பாவத்திலுள்ள கடவுளாகப் பரிமளிக்கிறார். இவர் முழுமையாக பற்றில்லாமல் பிரபஞ்ச நாடகத்தைக் கண்டு களிக்கிறார். அவரது அவதாரம் நமக்கெல்லாம் மிக உன்னதமான மானிட நிலையடைய நம்மை ஊக்குவிக்கிறது. அவர் மிகவும் உன்னதமான தீர்க்கமானத் தீர்ப்புகளை அளிப்பவர் . அவர் மிகவும் தன்னடக்கம் கொண்டவராக இருந்து அர்சுனனுக்கு தேரோட்டியாகவும் போரில் செயல்பட்டார். அவர் தான் நமது யோக மார்க்கத்திற்கும், ஆன்ம இணைப்பிற்கும் குருவாக இருந்து வழிகாட்டுகிறார். இச்சக்கரம் விராட்டா சக்தியின் இருப்பிடம் எனலாம். கீதையின் இரண்டாவது அதிகாரத்தில் விளக்கமாக குறிப்பிட்டது போல இந்தப் பிரபஞ்சத்தில் கடவுளின் வெளிப்பாடாக இந்த இடம் அமைகிறது.

பிரபஞ்சத்திலுள்ள பல்வேறு அம்சங்கள் தன்னில் அடக்கிக் கொண்டு, பல்வேறு தெய்வங்களின் ஸ்வரூபங்களையும், அடக்கிக் கொண்டு பிரமானடமான ஸ்ரீ கிருஷ்ணரின் விராட்டா ரூபத்தைக் கண்டு களித்தார். நமது உடலிலுள்ள அணுக்கள் எவ்வாறு குண்டலினி எனும் நூலிழையால் இணைக்கப்பட்டு இயங்குகின்றதோ அது போல் எல்லாம் வல்ல இறை சக்தியும் செயல்படுகிறது. இந்த பரிபூரனத்துவத்தைத் தான் நாம் தியானிக்க வேண்டும். நமது மானிட இனம் ஆத்மரீதியாக இணைக்கப்பட்டு முழுமை அடைந்த சக்தியாக நாம் உணர வேண்டும்.

நாம் நமது மூர்க்கத்தனதாலும், தாழ்வு மனப்பான்மையாலும் செயல்பட்டு நாம் நம்மை பரிபூரனத்துவத்திளிருந்து நம்மை பிரித்துக் கொள்ளக் கூடாது. பழமையான கட்டுப்பாடுகளால் பிணைக்கப்பட்ட தனி மனிதன் தனக்கென்று ஒரு தனிக் கருத்துக்களை ஏற்படுத்திக் கொள்கிறான். நாமாகத் தான் இந்த பிரபஞ்ச சக்தியாக மாற முடியும். மற்றவர்களின், ஆன்மாவை உணர முடியும். இனிமையான உணர்வுடன் மலர்களின் சுகந்தமான வாசனையை அறிந்து கொள்வது போல உணர வேண்டும்.

ஸ்தூல வெளிப்பாடுகள்

விசுத்தி சக்கரம் 16 இதழ்களைக் கொண்டது. ஒவ்வொன்றும் தனித் தன்மை வாய்ந்ததாகவும், தனியாக செயல்படுவதாகவும், அமைந்துள்ளது. ஸ்தூல சரீரத்தில் இது கழுத்து, தொண்டை, தோள்கள், முகம், வாய் பற்கள் ஆகியவற்றைக் கண்காணிக்கிறது. உதாரணமாக நாம் நம்மை அதிகமாக குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்கிறோம். புகையிலை போன்ற பொருட்களால் தொண்டைப் பகுதி பாதிப்படைகிறது. நாம் நமது பற்களை நன்கு பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தற்காலத்தில் இது அவசியமாகிறது. இந்த சக்கரம் மலரும் போது நமக்கு பற்ற்ற தன்மை வளர்கிறது. இதனால் உலக வாழ்க்கையை ஒரு நாடக மேடையாக சாட்சி பாவத்தில் உணர முடிகிறது. இதனால் நமக்கு அதிர்ச்சி தரக்கூடிய விஷயங்களைத் தவிர்ப்பதால் இயற்கையாகவே அவை சிறிய நிகழ்ச்சியாக அமைந்து விடுகின்றன.

இதனால் பிரட்சனைக்கு ஆளாகாமல் மறுபக்கம் சென்று விடிகிறோம். இதனால் நமது செயல்களுக்கான விளைவுகளுக்கு நாம் பொறுப்பேற்பதில்லை என்பது பொருளல்ல. நாம் வாழ்க்கையிலிருந்து விடுபட்டு விட்டோம் என்பதல்ல. இது நமக்கு மிகவும் உணர்ச்சி வயப்பட்ட கால கட்டத்தில் சமனிலையோடும், சீரான உணர்வோடும் செயல்பட உதவுகிறது. நாம் சாட்சி பாவத்தில் நமது விளையாட்டைக் கண்டு களிக்கிறோம். நம்மை, நமது செயல்பாட்டில் இருந்தும் கட்டுப்பாடுகளிலிருந்தும், உணர்ச்சிப் போராட்டத்திலிருந்தும் விலக்கிக் கொள்ள முடிகிறது.

நாம் ஆன்ம விழிப்புணர்வு பெற்ற பின்பு நமது சாட்சி பாவத் தன்மை மிளிர்கிறது. நமக்கு எல்லா விஷயங்களும் வெளிப்புற காட்சியாகத் தென்படுகிறது. இந்த விஷயங்கள், இந்த நிகழ்ச்சிகளுடன் நமது ஆன்மா சம்மந்தப்பட்டதல்ல என்று உணர்கிறோம். இந்த வழிமுறையில் ஆன்மாவின் புறத்தன்மையின் அடுக்குகளைக் கண்டறிந்து களைய முயல்கிறோம். ஸ்ரீ மாதாஜி அவர்கள் கூறியிருக்கிறார்கள் : நாம் நமது நடிப்பைக் கண்டு கொண்டிருக்கிறோம். இந்த உலகமே ஒரு நாடக மேடையாக அமைந்துள்ளது.

இதே கருத்தைத்தான் ஷேக்ஸ்பியர் அவரது நாடகங்களில் கூறியிருக்கிறார். நமது பிரட்சனைகளை நம்மால் தீர்க்க முடியும். அதற்கான ஒரே வழி இந்த பேருண்மைதான். பெரும்பாலோர் பிரட்சனைகளைத் தீர்க்க முடியவில்லை என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் விஷயங்களில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் சாட்சி பாவத்தில் சிறந்த முடிவுகளைத் தர முடியும் ஆன்ம விழிப்புணர்வு பெற்ற பின்பு நமக்குள் இந்த ஆற்றல் வளர்கிறது. எவ்வகையான சூழ்நிலையானாலும், சோதனையினாலும் அவற்றை சந்திக்க தயாராகி விடுகிறோம். நாடகத்தில் நமது கதாபாத்திரத்தை உணர முடியும். மிகவும் தீர்க்கமான தெளிவான முடிவு எடுக்க முடியும்.

ஆன்ம விழிப்புணர்வு பெற்ற பின்பு சிலருக்கு பிரட்சனையை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். ஆச்சரியப்படத் தேவையில்லை. நாம் தூய்மையான புற சூழ்நிலையில் வாழவில்லை என்பது உண்மை. வாழ்க்கை என்பது சோதனைகளையும், பிரச்சனைகளையும் சந்தித்து மிகுந்த ஆற்றலுடனும் ஆன்ம சக்தியுடன் தீர்வு காண்பதுதான், செயற்கையான விஷயங்கள் நாளடையில் மறையத் துவங்கும். நாம் தூய்மை ஆக்கப்பட்ட பின்பு ஆன்மாவாக மாறுகிறோம். இந்த நிலையில் தான் நாம் உண்மையை உணர்ந்து கொள்கிறோம். நமது சகஜயோகம் இந்த தர்ம யுத்தத்தில் போரோட நமக்கு அன்பு என்னும் சிறந்த ஆயுதத்தைக் கொடுத்துள்ளது.

ஆன்மாவாக மாறும் பேரின்ப நிலையினேயே நமக்கு பூரணமான அனுபவத்தைக் கொடுக்கிறது. இது தான் நாம் தேடிக் கொண்டிருக்கும் பேருண்மை.


கூட்டுணர்வு

கூட்டு வாழ்க்கையின் மூலமும் சமுதாயத்தில் இணைந்து வாழ்வதன் மூலமும் மனித இனம் பரிணாம வளர்ச்சி முழுமை அடைந்த கால கட்டத்தைக் குறிப்பது விசுத்தி சக்கரம். நமது செயல் நயம் இந்த சக்கரத்தை செயல்பட செய்கிறது. இது பிறருக்கும் நமக்குமாக செயல் நயத்தை வெளிப்படுத்தும் சக்கரமாக அமைகிறது. பிறரை நாம் மதிக்கவில்லைஎன்றால் அவர்கள் நம்முடன் சகோதர உறவுகளை வைத்துக் கொள்ள மாட்டார்கள். எனவே இந்த சக்கரம் மிகவும் முக்கியமான சக்கரம். இதன் மூலம் தான் நமது கூட்டுணர்வு சக்தியை வளப்படுத்திக் கொள்ள முடியும். நம்மீதே நமக்கு மதிப்புக் குறைந்தால் நமக்குள்ளே குற்ற உணர்வு ஆழ்மனத்தில் சேரும் , இடது விசுத்தியைப் பாதிப்புக்குள்ளாக்கும். இதைத் தொடராவிட்டால் நமது ஆன்ம வளர்ச்சிக்கு தடை ஏற்படுகிறது. சமய சடங்களாலோ, ஒழுக்கக் குறைபாடுகளாலோ நமது ஆன்ம வளர்ச்சிக்கு தடைகள் ஏற்படுவதுண்டு. நாம் குற்ற உணர்வு கொள்ளாமல் பழகிக் கொள்ள வேண்டும். நமக்குள் குற்ற உணர்வுகளைத் தேக்கிக் கொண்டு, நம்மை அதனின்று மறைந்து வாழவும் தேவையில்லை. நாம் நமது ஆன்மாவை உணர்ந்த ஆன்மா குற்ற உணர்வுகளை சேர்த்துக் கொள்வதில்லை. ஆன்ம விழிப்புணர்வு பெற்ற பின்பு நாம் நமது குறைகளை அறிந்து நீக்கி விட வேண்டும். " நான் குற்றமற்றவன்" என்ற உறுதி மொழியைக் கூறுவதன் மூலம் தூய்மைபடுத்தலாம்.


இந்த சக்கரம் சொல்வன்மையேக் குறிக்கிறது. நாம் பயன்படுத்தும் சொற்கள் மிகவும் இனிமையானதாகவும், மேன்மையானதாகவும் இருத்தல் நலம். கடுமையான வார்த்தைகள், கீழ்த்தரமான வார்த்தைகள் இந்த சக்கரத்தைப் பழுது அடைய செய்யும். மிக அதிகமாகப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். இதனால் வலது பக்கமுள்ள விசுத்தி சக்கரம் வலுவிழக்கிறது. நாம் பேசும் போது நமது இதயத்திலுள்ள ஆன்மாவை சாட்சியாக வைத்துக் கொண்டுப் பேசிப் பழக வேண்டும். தேவையற்ற மந்திரங்களை அதிகம் பயன்படுத்துவதால் இச்சக்கரம் பழுதடையும். இது உண்மைதான். இன்று மந்திரங்கள் வாணிகப் பொருளாகி விட்டது. இது சில சமயம் நமது உணர்வுகளை வயப்படுத்தி மயக்க உணர்வு கொடுக்குமே தவிர ஆன்மாவுக்கு எந்த பலனும் கிடைப்பதில்லை.


இது போல் தன்னிச்சையாக மந்திரங்களைப் பிரயோகப்படுத்துவதால் அல்லது தன வயப்படுத்துவதுள், நமது மேலான உணர்வுகளுக்கு எதிர்மறையாக அமையும். நாம் நமக்குள் இருக்கும் ஆன்மாவின் வளர்ச்சியைத் தியானத்தின் மூலம் அனுபவப்பட வேண்டும். இது வெறும் கருத்துக் கோர்வையாக இருக்கக் கூடாது. இது நமக்கு ஆழமான அமைதியையும் எண்ணங்களற்ற நிலையையும் கொடுத்து நமக்குள் சக்தியை உருவாக்கி சமநிலைப்படுத்துகிறது.

விசுத்தி சக்கரத்தின் சமநிலை

இச்சக்கரத்தின் சமநிலை பாதிக்கும் போது பணிகாலங்களில் மூக்கு , தொண்டை சம்மந்தப்பட்ட உதாதைகள் ஏற்படும். இதனால் சில சமயங்களில் தொண்டை வலி , இருமல், பல்வலி, காது வலி, போன்ற உபாதைகள் ஏற்படுவதுண்டு. நாம் சில சமயம் குற்ற உணர்வு பெற்றவர்களாக இருக்கும் போது தோள் இறுக்கம், கழுத்துவலி போன்ற பாதிப்புகள் ஏற்படும் . வழக்கத்துக்கு மாறான கடுமையான வார்த்தைகள் பயன்படுத்துவதாலும் மறைமுகமாக வசை சொற்கள் பயன்படுத்துவதாலும் இச்சக்கரம் தடைப்படும்.

விசுத்தி சக்கரத்தின் சமநிலை

இச்சக்கரத்தின் சமநிலை பாதிக்கும் போது பணிகாலங்களில் மூக்கு , தொண்டை சம்மந்தப்பட்ட உதாதைகள் ஏற்படும். இதனால் சில சமயங்களில் தொண்டை வலி , இருமல், பல்வலி, காது வலி, போன்ற உபாதைகள் ஏற்படுவதுண்டு. நாம் சில சமயம் குற்ற உணர்வு பெற்றவர்களாக இருக்கும் போது தோள் இறுக்கம், கழுத்துவலி போன்ற பாதிப்புகள் ஏற்படும் . வழக்கத்துக்கு மாறான கடுமையான வார்த்தைகள் பயன்படுத்துவதாலும் மறைமுகமாக வசை சொற்கள் பயன்படுத்துவதாலும் இச்சக்கரம் தடைப்படும்.

சுத்திகரிப்பு முறை

கனிமம்: மெழுகுவர்த்தி கழுத்துப் பகுதியில் காட்டுவது சுவாசத்தைக் கண்காணிக்க வேண்டும். உன்னியும், வெளியேயும் இழக்க வேண்டும். இந்த நேரத்தைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும். இறுதியில் உள்ளே , வெளியே இழுக்கும் பயிற்சி நின்று விடும். அந்த நிலைக்கு முயற்சிக்கலாம்.


குறிப்பு

* சுவாசப் பயிற்சி ஹத யோகப் பயிற்சி எனலாம்.

* உறுதி மொழி : " அன்னையே என்னைப் பரிபூரனத்துவத்தில் ஒரு அங்கமாக ஏற்றுக் கொள்ளும்.

பொது அறிவுரை:

பனிக்காலங்களில், கழுத்து, காது, மூக்கு ஆகிய பகுதிகளை கைக் குட்டையைப் பயன்படுத்தி பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
கைகளை நன்றாகக் கழுவ வேண்டும். உப்புக் கரைசலைப் பயன்படுத்தி வாய், தொண்டை ஆகியவற்றைக் கொப்பளிக்க வேண்டும். ஊற வைத்த பச்சரிசியை நன்கு மென்று உண்ண வேண்டும். ஆலிவ் ஆயில் பயன்படுத்தி மசாஜ் செய்ய வேண்டும். தலையில் எண்ணெய் விட்டு மசாஜ் செய்ய வேண்டும். மூக்கில் தினமும் நெய் பச்சைக் கற்பூரம் கலந்து ஒரு துளி விட்டு கொள்ள வேண்டும்.


இடது விசுத்தி:

கனிமம்:
மெழுகுவர்த்தி பயன்படுத்தி கழுத்துப் பகுதியில் சுத்திகரிக்கலாம்.

உறுதிமொழி:
" அன்னையே நான் குற்றமற்றவன்"

பொது அறிவுரை:
* தெய்வீக நுண் அதிர்வுகளை விசுத்தி சக்கரத்தின் இடது பக்கம் செலுத்த வேண்டும். இனிமையான சொற்களைப் பயன்படுத்தவும்.
* முகபாவங்களைத் தெளிவாக வைத்துக் கொள்ளவும்.
* சகோதர, சகோதரி உறவுகள் தூய்மையாக இருக்க வேண்டும்.
* அதிகமாக உங்களைப் பற்றி பேசாதீர்கள்.


வலது விசுத்தி

கனிமம்:
கற்பூரம், ஓமம் பயன்படுத்தி கழுத்துப் பகுதி சுத்திகரிக்கலாம்.

உறுதி மொழி :
" அன்னையே இனிமையான முகபாவத்தையும், சொற்களையும் , செயல்பாடுகளையும் கொடுத்து அருள்புரிய வேண்டும்".

பொது அறிவுரை
தெய்வீக நுண் அதிர்வுகளை செலுத்தும் இனிமையான சொற்களைப் பயன்படுத்தவும். வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். கடுமையான வார்த்தைகளில் கவனத்தை செலுத்த வேண்டாம்.

புதன், 8 ஜூன், 2011

ஸ்ரீ மகாலக்ஷ்மியின் எட்டு அம்சங்கள்






ஸ்ரீ லக்ஷ்மியினுடைய சக்தி மூலமாகத் தான் நாம் படிப்படியாக வளர்ச்சியடைகிறோம் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். அடித்தளத்திலிருந்து மேல்மட்டத்திற்கு முன்னேறுவதற்கான மீட்பு சக்தி ஆகும் . முதலில் நாம் காண்பது லக்ஷ்மி வடிவமே ஆகும். அவளே மேரி ஆகும். கிருஸ்துவின் அன்னையின் பெயரும் மேரி. ஏனெனில் அவள் சமுத்திரத்திலிருந்து தோன்றியவள். கடலிலிருந்து வந்த பிறகு இராஜலக்ஷ்மியாகவும், கிரக லக்ஷ்மியாகவும் விளங்குகிறாள். நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக சேர்ந்து நலமுடன் வாழ வைப்பவள் இராஜலட்சுமி. தனி நபரின் இல்வாழ்க்கைக்கு உதவுபவள் கிரகலட்சுமி.


மனைவியே கிரகலட்சுமி ஆவாள். இல்லத்தில் இருக்கும் பெண் தெய்வமும் அவளே. கிரகலக்ஷ்மியின் மூலமாகவே அமைதி கிடைக்கும். மண்ணீரல் சரியாக சரி செய்து கொள்வதின் மூலம் அமைதி கிடைக்கிறது எனலாம். உடல் முழுவதற்கும் தேவையான ஊட்ட சக்தியை இரத்த அணுக்கள் வழியாக மண்ணீரல் தருகிறது. மண்ணீரல் நமக்குள் இருக்குமிடத்தில் அமைதி இல்லை எனில், மொத்த இயக்கமும் பாதிப்படையும். ஏனெனில் இந்த இயக்கமே நமக்குள் ஊட்டம் தரக்கூடிய இச்சக்தி மையம் அமைதியையும் தருகிறது.

" யா தேவி சர்வ ரூபேனே சமஸ்திதா" என்ற வரிகளைக் கேட்டிருப்பீர்கள். சாந்தி என்ற பெண் தெய்வமே ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அமைதியை தந்து கொண்டிருக்கிறது. இந்த அமைதி பின் வரும் காரணங்களால் தான் பெற முடியும். இல்லத்தரசிகள் தங்களது முக்கியத்துவத்தை உணர்ந்தவர்களாகவும், பொறுமையுடையவர்களாகவும், மன்னிக்க கூடியவர்களாகவும், குடும்ப வாழ்க்கையைத் தக்க வைத்துக் கொள்பவர்களாகவும் இருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையை மீட்பவளாகவும், இருக்க வேண்டும். இவை பாதிப்படையும் போதும் மொத்த இயக்கமும் தடைபட்டு விடுகிறது.


வலது பக்கம் இருப்பவள் இராஜலட்சுமி ஆகும். இந்த இராஜலட்சுமி மேன்மையடையும் பொது மரியாதையை நாம் புரிந்து கொள்வோம். ஏனெனில் நம்மை நாமே மதிக்கின்ற போதுதான் மற்றவர்களையும் மதிக்க ஆரம்பிக்கின்றோம். நீங்கள் அனைவரும் ஆதலால் ஒருவரை ஒருவர் சமமாக மதிக்க வேண்டும். ஒளி மிகவும் முக்கியமான ஒன்று. மனிதன் நெருப்பைக் கண்டு பிடித்த நாளிலிருந்து கிரகலட்சுமி நிலையில் பயன்படுத்தினார்கள்.

உணவை சமைக்க நெருப்பைப் பயன்படுத்தினார்கள். அன்னையின் கவனிப்பு வீட்டில் குழந்தைகளுக்கு உணவு மற்றும் பிற தேவைகளை உணரலாம். பிறகு இவை அனைத்து குணங்களையும் ஒன்றாக்கி ஒளியை ஏற்படுத்தினார்கள். சுதந்திரம் மற்றும் குடியரசு தினங்களைக் கொண்டாட விளக்கேற்றுகிறோம். அல்லது பட்டாசு கொளுத்துகிறோம். நம்மை வெளிப்படுத்திக் கொள்ளும் விதமே இராஜலக்ஷ்மிக்கு வழி வகுக்கிறது. குழந்தைகளிடம் தாயின் பராமரிப்பு, உணவு மற்றும் இன்ன பிற தேவைகளைக் கொடுப்பவள். இராஜலட்சுமி, குடும்பமானாலும், சமுதாயமானாலும் ஒற்றுமையுடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த விழாக் காலங்களில் பயன்படுத்தும் ஒளி, தீபம், மத்தாப்பு, பட்டாசு போன்றவைகளின் மூலம் இராஜலட்சுமி வெளிப்படுகின்றாள்.




எட்டு விதமான மகாலக்ஷ்மியின் அம்சங்கள்

1 . ஆதிலட்சுமி :
ஆதிலட்சுமி என்பவள் மகாலக்ஷ்மியே. குண்டலினி சக்தி மேலெழும்ப சாதனமாக அமைகிறாள்.

2 . வித்யாலட்சுமி :
வித்யா என்பது இங்கு சஹாஜயோகத்தில் கற்றுக் கொள்ள வேண்டிய நுட்பமான யோகா நெறி முறைகளாகும். மற்றவை அவித்யா என்றும் கூறலாம். குண்டலினியை எவ்வாறு மேளிழுப்ப செய்வது, உங்களை நீங்கள் எவ்வாறு தூய்மைப்படுத்திக் கொள்வது, பிறரை எவ்வாறு தூய்மைபடுத்துவது இவை அனைத்தும் " வித்யா" என்று கூறப்படுகிறது. இது இலக்குமியின் கிருபையால் நடைபெறுகிறது.

3 . சௌபாக்ய லக்ஷ்மி :
சௌபாக்கியம் என்றால் நல்ல செழிப்பான காலம் எனலாம். அவள் செல்வத்திலும், ஆரோக்கியத்திலும், உணவு வகைகளிலும், வாழ்க்கை முறையிலும் சிறப்பைக் கொடுப்பவள்.

4 . அமிர்தலக்ஷ்மி :
அமிர்தம் என்றால் இறப்பில்லாதது. இவ்வுலகில் லக்ஷ்மி பொருள் வடிவில் இருக்கிறாள் . பொருட்கள் இறப்பதில்லை. ஆன்மாவின் அருள்வடிவமே அமிர்தலட்சுமி. ஆன்மாவின் அருள்பெற்றவை அழிவதில்லை. ஆன்மாவை திருப்திபடுத்தும் வகையில் எதை செய்தாலும் அது அமிர்தலக்ஷ்மியே உதாரணமாக பிறரை நேசிப்பது, கொடுப்பதனால் ஏற்படும் ஆனந்தம் இதில் மிகவும் சிறப்பானது பிறருக்கு ஆன்ம விழிப்புணர்வு அழிப்பது நுண் அதிர்வுகள் அழிவதில்லை.

5 . கிரகலட்சுமி :
மனைவி தான் கிரகலட்சுமி. வலது பக்கம் இராஜலட்சுமி.


6 . சத்தியலட்சுமி:
சத்தியலட்சுமி உணர்வு உணர்ந்து கொள்ளும் சக்திதான் சக்தியலக்ஷ்மி சத்தியா என்பது உண்மை. உங்கள் உணர்வில் மேன்மை அடையும் பொது உண்மையை அறிந்து கொள்வீர்கள். உண்மை என்றால் என்ன? நீங்கள் என்னை அறிந்து கொள்கிறீர்கள்? நீங்கள்தான் இறைவனின் கருவி என்பதை உணர்கிறீர்கள். ஏனெனில் இது மாயா நரம்பு மண்டலம் வழியாக வழிந்து செல்கிறது. இதுதான் உண்மை என்பதை நீங்கள் உணர்வீர்கள். உண்மையின் இரண்டாம் நிலை என்ன? " நீங்கள் யார்?" நீங்கள் தான் ஆன்மா, உண்மையின் மூன்றாம் நிலை " நான் யார்?"
கடவுள் யார்? உன்னுடைய விதி என்ன? இதை முழுமையாக உணர முடியும். இந்த உணர்வு தான் சத்தியலட்சுமி.

7 . பாக்கியலட்சுமி :
பாக் என்றால் அனுபவித்தல் என்பது பொருள். உங்களை சுற்றிலும் மகிழ்ச்சி எனும் மகா சமுத்திரம் உள்ளது. நீங்கள் பறவையைப் போன்றவர்கள். தாகத்தை தணிக்க முடிவதில்லை. பாக்கியலக்ஷ்மியின் அருளால் தான் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும்.

8 . யோகலட்சுமி :
லக்ஷ்மியின் சக்தி தான் யோக மார்க்கத்தை கொடுக்கிறது. யோகலட்சுமி தான் யோகா சக்தியைக் கொடுப்பவள் . யோகா சாதனையில் முழுமை அடையும் போது இலட்சுமியின் அருள் கிடைக்கும்.


நீங்கள் உடல் , கண், காது, வாய் .... போன்றவை அல்ல. தூய்மையான ஆன்மாவே தான். ஜீவாத்மா என்பது மூளையின் ஆசான். மூளையைக் கட்டுப்படுத்தி செயல்படுவது.

ஆன்மா:- அன்னையின் சொற்பொழிவு (1 .11 .1981 )

ஆன்மா மிகவும் அபூர்வமானது, இது நமக்குள் இருக்கிறது. இதன் மகத்துவத்தை சொற்களால் விளக்க முடியாது, இது தெய்வீக சக்தி வாய்ந்தது, இது எல்லையற்றது, இதை அளவிட முடியாது.
கடவுள் மிகவும் சக்தி வாய்ந்தவர். " சச்சிதானந்தா" ஸ்வரூபமானவர். சத்-சித்-ஆனந்தம் என்றும் கூறலாம். உண்மை என்று மற்றவர்கள் கூறும் போது அது பகுத்தறியபட்டவை எனலாம், ஆனால் நான் கூறுவது முழுமையான உண்மையே.
'சத் 'என்பது ' புருஷ்' சத்தியம் என்று கூறப்படும் கடவுள் ஆவார். இவர் படைப்புகளை செய்பவருமல்ல, அழிப்பவருமல்ல, உதாரணமாக, நான் சிலவற்றை உற்பத்தி செய்து கொடுக்கிறேன். என்னிடத்தில் ஒளி உள்ளது. இந்தப் பணியை செய்ய உதவியதாக இருக்கிறது, சாட்சியாக இருக்கிறது அவ்வளவுதான்.
'சித்' என்பது சித்தம் - கவனம் . இது தூய்மை அடைந்து துடிக்கும் போது படைப்புகளுக்கு ஆதாரமாக அமைகிறது . இந்த சக்தி தான். படைப்புகளை செய்கிறது.
'ஆனந்' என்றால் ஆனந்தம் என்று பொருள். தனது சிந்தனை ஆற்றலால் சித்தத்தை சத்தியத்தின் மீது நிறுத்தும் போது பேரானந்த நிலை ஏற்படுகிறது. ஆகா இந்த மூன்றும் இணைந்த நிலையே சச்சிதானந்த நிலை எனலாம்.
இந்த மூன்றும் இணைந்து இருக்கும் போது அங்கு மௌனம் நிகழும். இப்போது படைப்புகள் ஏற்படுவதில்லை. வெளிப்பாடுகள் இல்லை. சித்தம் சத்தியத்துடன் இணைந்து ஆனந்தத்தை கொடுக்கிறது. சத்தியத்திலிருந்து சித்தம் விலகும் போது மாயையின் தோற்றங்கள் வெளிப்படுகின்றன. படைப்புகள் துவங்குகின்றன. உயிர்கள் மீண்டும் சத்தியம் என்னும் புருஷத்துவத்தை நெருங்க நெருங்க , அதாவது பரிணாம வளர்ச்சியின் காரணமாக மிருகளிளிருந்து மனித நிலைக்கு உயரும் போது ஆனந்தத்தில் வீச்செல்லை அதிகரிக்கும். நாம் இயற்கையை ரசிக்கிறோம். ஆனால் விலங்குகள் அதை ரசிப்பதில்லை. ஆக நாம் சத்தியத்தின் நெருக்கத்தில் இருக்கிறோம். ஆக படைப்புகள் எவ்வாறு தோன்றுகின்றது. சத்தியத்தின் ஒளி எவ்வாறு மனிதனிடத்தில் வந்து அடைகிறது என்பதை நம்மால் உணர முடிகிறது.

----------------- மாதாஜி ஸ்ரீ நிர்மலா தேவி

வெள்ளி, 3 ஜூன், 2011

அனாகத சக்கரம்





மைய தேவதை : ஸ்ரீ ஜெகதாம்பா
ஸ்தூலம் :: இதய நரம்பு சக்தி மையம் , இடது இதய நரம்பு சக்தி மையத்தின் ஒரு பகுதி, நெஞ்சு எலும்புக் கூடு.
வெளிப்பாடு : மூச்சுவிடுதல் , மார்பகங்கள்.
தன்மை : ஜகத்தை ஆளும் அன்னை, அன்னை பாதுகாப்பு, எதிர்ப்பு சக்தி
இதழ்கள் : 12
கனிமம் : காற்று
குறியீடு : ஜோதி
கையில் உள்ள இடம் : சிறுவிரல்
உபாதைகளுக்குக் காரணம் : பாதுகாப்பு அற்ற நிலை, தாய்மை குறைகள், பயம், ஆவி பிடித்தல்


இடது:


தேவதை : சிவா, பார்வதி
ஸ்தூலம் : இதயத்துடிப்பு ( அனாகத் - ஒலி)
தன்மை : அன்பு, பேரின்பம், சத்-சித் ஆனந்தம்
கையிலுள்ள இடம் : இடது சிறிய விரல்
ஸ்தூல வெளிப்பாடு : இதயம், இடது இதய நரம்புகள்
உபாதைகள் : அதிகமான உடலுழைப்பு, மன உளைச்சல், தவறான தாய்மை உறவுகள், அடயோகம், சித்தத்திற்கு வெளியில், மருந்துகள், நாத்திகன், கடவுளுக்கு எதிரான செயல்கள் செய்தல்.


வலது




தேவதை : ஸ்ரீ சீதா ராமா
ஸ்தூல வெளிப்பாடு : இதய நரம்பு மையம் (வலது)
தன்மைகள் : தந்தை, தந்தைக்கு செய்யும் கடமைகள், கணவனாகவும் , சகோதரனாகவும் கடமைகள்.
கையில் இடம் : வலது சிறுவிரல்
உபாதைகள் : தந்தை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், ஆணவம், இரக்கமற்ற தன்மை, சட்டத்திற்கு மாறான வழிகளில் ஈடுபடுதல்.



குழந்தை பிறந்தவுடன் முதலில் தனது தாயைத்தான் அறிந்து கொள்கிறது. பிறக்கும்போது குழந்தை தனது ஆன்மாவை அறிந்திருக்கிறது. கருப்பையிலிருந்து வெளியே வந்தவுடன் குழந்தை அதிர்ச்சி அடைகிறது. அதன் முதல் எதிர்ச்செயல் உடனே கருப்பைக்குள் செல்ல விழைகிறது. இந்த நிலையில் அதன் மனம், கட்டுப்பாடுகள், அகங்காரம் , வளர்ச்சி பெறவில்லை. தூய்மையான ஆன்மாவாக இருக்கிறது. இந்த ஆன்மா தனது தாயின் அரவணைப்பில் புதிய சூழ்நிலையில் சுகத்தைப் பெறுகிறது. இந்த எதிர்செயல்தான் உண்மையான அன்பு அல்லது கட்டுப்பாடற்ற அன்பு, இது கட்டுப்பாட்டுடன் கூடியதல்ல. இது இரண்டு ஆன்மாவின் தூய்மையான சங்கமம். இதை ஆனந்தம் என்றும் கூறலாம்.


தன்மைகள்

இது 'நான்' என்பதற்கான இருப்பிடம். 'ஆன்மா' எல்லாம் ஒன்றைத்தான் குறிக்கிறது. அன்னை அவர்கள் மீண்டும் மீண்டும் இதை வலியுறுத்துகிறார்கள். " நீங்கள் பரிபூரணமான ஆன்மாவே ". இவ்வாறு கூறுகிறார்கள். நாம் நமது ஆன்மாவை அறிந்து கொள்ள முயல வேண்டும். இதற்கு உபயோகமற்ற மாயையை மனத்திலிருந்து விலக்கி விட வேண்டும். நாம் ஆன்மஞானம் பெற்றபின் நமது ஆன்மாவாக மாற முயல வேண்டும். நாம் நமது உடல், மனம், உணவு சம்பந்தப்பட்ட பொய்யான ஸ்தூல வஸ்துக்களைத் தவிர்த்து நமது தூய்மையான சித்தத்தை இதயத்தில் செலுத்தி சுத்திகரிக்க செய்ய வேண்டும். ஆன்ம ஞானத்திற்குப் பிறகு தான் நமது சித்தத்தை இதயத்திற்கு செலுத்தி சுத்திகரிக்க முடியும். நமது இதயம் திறந்த நிலையிலும், தூய்மையாகவும் இருந்தால் தான் ஆன்மா பிரகாசத்துடன் வெளிப்படும். இந்த நிலையில்தான் எல்லா தோற்றத்திற்கும் காரணமான பேரானந்த சுகானுபவத்தை உணர்ந்து அவற்றில் நமது நிலையை அறிந்து கொள்ள முடிகிறது. நாம் நமது தூய்மையான விருப்பத்தின் மூலமாகவும் சித்தத்தின் மூலமாகவும் இதயத்தை சுத்திகரிக்க முடிகிறது. " நான் தான் ஆன்மா" என்ற உறுதிமொழியை உள்ளுணர்வோடு கூற வேண்டும். இது வெறும் இயந்திர செயலாக, வெளிவார்த்தையாக இருக்கக் கூடாது.


அன்பு ( தூய்மையான அன்பு )

இதய சக்கரத்தின் உண்மையான தன்மை என்பது எல்லாவற்றையும் பிரகாசிக்கச்செய்யக் கூடிய தூய்மையான அன்பே ஆகும் . நாம் ஆன்ம விழிப்பு அடையாத நிலையில் மிகவும் குறைவாகவே நாம் அன்பிற்காகவே அன்பு செலுத்துகிறோம். நம்முடைய கட்டுப்பாடுகள் காரணமாக நாம் நமது அன்பை மோகம், காம இச்சை, சுயநலம் ஆகியவற்றுடன் ஒப்பிட்டு குழப்பமடைகிறோம்.



தூய்மையான அன்பு பற்றற்றது. இது எந்த பிரதிபலனையும் எதிர்ப்பார்த்து வெளிப்படுவதில்லை. இது மரம் எவ்வாறு எந்த நோக்கமும் இல்லாமல் வேறுபாடு கருதாமல் எல்லோருக்கும் நிழலைக் கொடுக்கிறதோ அதுபோல அன்பு என்பது சுயநலமில்லாது வெளிப்படக் கூடியது. உண்மையான அன்பு என்பது ஆன்மாவிலிருந்து வெளிப்படக் கூடியது. உடலில் இருந்தோ உள்ளத்திலிருந்தோ வெளிப்படுவதல்ல. நாம் எவரிடமாவது அன்பு செலுத்துகிறோம் என்றால் நாம் இந்த அன்பு எந்த திசையில் செல்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். உடலமைப்பின்பால் செலுத்தும் அன்பு ஸ்தூலத்தன்மை வாய்ந்தது. இது காம இச்சையின் வெளிப்பாடு எனலாம். அல்லது கனவில் தோன்றிய உருவங்களின் வெளிப்ப்பாடாக இருக்கலாம். கற்பனையின் வெளிப்பாடு அல்லது விளம்பரதாரரின் விளம்பரமாகவும் இருக்கலாம்.சில தரம் குறைந்த படைப்புக்கள் மூலமாக பிறரை கவர்ந்திழுக்க முயற்சி செய்யலாம். இதை நாம் சிலரது மிகைப்பட்ட விளம்பரங்களில் காணலாம். இவைகளில் இரண்டு ஆன்மாவின் உறவை வெளிப்படுத்துவதாக இல்லை. எனவே இவர்களிடையே இடர்பாடு ஏற்படத்தான் செய்யும். இது உடல்ரீதியாகவும் உள்ளரீதியாகவும் வெளிப்படுவதேயாகும். இது உண்மையான அன்பு அல்ல. இது உடலுக்கும் மனதிற்கும் வேண்டிய தேவை எனலாம். மனத்தின் தேவை பூர்த்தியான பின்பு அன்பு மாறுகிறது. உதாரணமாக குழந்தைக்கு ஒரு பொம்மை தேவைப்படுகிறது. அது கிடைத்தவுடன் அதை விளையாடியபின் அதைத் தூக்கிப் போட்டு விடுகிறது. இது போல் தான் உடல் ரீதியான அன்பும் வெளிப்படுகிறது.


மணமகள் மணமகனின் வாழ்க்கையில் நுழையும் தருவாயில் அவனுக்குள் இருக்கும் ஆன்மாவை வரவேற்கிறாள். திருமணம் என்பது இரண்டு ஆன்மாக்களின் சங்கமம் எனலாம். ஆன்மாவை அறிந்து கொள்ளாமல் செய்யும் திருமணம் வெறும் சமுதாயச்சடங்கு எனலாம். அல்லது ஒப்பந்தம் எனவும் கூறலாம். இந்த சடங்குகள் மாற்றத்திற்குட்படும் ஒப்பந்தமாக அமைகிறது. இறுதியில் பிளவும் ஏற்படலாம். இது எதிர்மறையாக இதயத்தையும் பாதிக்கலாம். இதனால் பாதுகாப்பற்ற உணர்வும் ஏற்படும். இருவருக்குமிடையே உள்ள நம்பிக்கையை விட கணவன் மனைவிக்கிடையே பாதுகாப்பற்ற உணர்வு ஏற்படும். இன்றும் என் சமுதாயத்தில் பாதுகாப்பற்ற நிலை காரணமாக பல பிரச்சனைகள் ஏற்பட்டுக்கொண்டு இருக்கின்றன. இது பணத்தினால் மட்டும் ஏற்படுவதல்ல.

உண்மையில் அன்பு என்பது எல்லா உயிர்களிலும் உயிரோட்டமாக அமைந்திருப்பது. குழந்தைகள், பெற்றோர்கள், சகோதரிகள், சகோதரர்கள், நண்பர்கள், முதியோர்கள் இவர்களிடையே நிலவுவது. மக்களிடையே பரிவர்த்தனையும், இடுபாடும் இருந்தால் இதயச்சக்கரம் முழுமையாகத் திறக்கப்படும். இது ஒரு கூட்டு சமுதாயமாக மாறி உலகத்தை மாற்றியமைக்கும். இதுதான் அன்பின் சக்தி. எல்லா தோற்றத்திற்கும் காரணமானது அன்புதான். நுண் அதிர்வுகளே இதன் வெளிப்பாடு. நாம் ' கடவுளே அன்பு', 'அன்பே கடவுள் ' என்று கூறுகிறோம். ஏனெனில் ஆழமான அன்பில் நாம் நம்மை இழக்கிறோம். உண்மையில் நாம் என்ற தன்மை மறைந்து ஆன்மாவின் சங்கமம் ஏற்படுகிறது. இந்த நிலையில் நாம் உண்மையான மானிட சங்கமத்தை அனுபவிக்கிறோம். வாழ்க்கையின் உண்மையான பூரணத்துவமாக அமைகிறது. உருவ அமைப்பில் நாம் வெவ்வேறு நிறங்களிலும் வடிவங்களிலும், பணிகளுடனும் இருந்தாலும் ஆன்மாவாக ஆகும்போது எல்லா துளிகளும் பிரம்மசாகரமாக இணைகிறது. இவற்றின் நுண் அதிர்வுகள் மாறுபட்ட விதங்களில் பல வகையான சந்தங்களில் தொடர்ச்சியான பிரபஞ்ச நடனம் மறைந்தும் தோன்றுவதுமாக இருக்கிறது.

வெறுப்பும் , பொறாமையும் பிரபஞ்ச சந்தத்திற்கு மாறான எதிர்சக்தியை ஏற்படுத்துகிறது. அன்பு இருக்குமிடத்தில் வளர்ச்சியும், கொண்டாட்டமும் , மகிழ்ச்சியும் பரிமளிக்கிறது.

பாதுகாப்பு

அச்சத்தின் காரணமாக மிகுதியான பிரச்சனைகள் தோன்றுகிறது. தன்னம்பிக்கை நமக்கு இருக்குமானால் உறுதியான பாதுகாப்பு உடையவராகிறோம். இந்த தன்னம்பிக்கையானது வெளித்தூண்டுதல்களால் வரும் அடிப்படை ஆசைகள் மற்றும் எதிர்மறை சக்திகளிடமிருந்து பாதுகாப்பு தருகிறது. அச்சத்துடன் நாம் வாழ்கிறபோது நமது உடலின் எதிரியக்கம் பலவீனமடைந்து மதன் காரணமாக ஒவ்வாமைகளுக்கும் வியாதிகளுக்கும் உள்ளாகிறோம். நமது இதயம் உறுதியாக இருக்கும் போது நமது தோற்றம் கம்பீரத்துடன் பரிமளிக்கிறது. மேலும் நாம் நமது வாழ்க்கை முறையை ஒரு மாவீரன் வெற்றியை அணுகுவது போல் உறுதியுடன் அணுகுவோம். பலவீனம் அடையும் போது பயம் எனும் கூட்டில் சிறைப்பட்டது போன்றும் வெளியே வரத் தயங்குவது போன்றும் இருப்போம். இதனால் வாழ்க்கையின் பல்வேறு சுக அனுபவங்களை கெலிடியாஸ் கோப்பில் தெரிவது போல் பலவிதமான கோணங்களில் அறிய முயல்வதில்லை. பிறருக்குக் கொடுப்பதனால் நாம் நம்மையே ஈர்க்கிறோம். மன இறுக்கம் உடையவர்களாக நாம் இருப்பின் அவ்வாறு உள்ளவர்களபால் ஈர்க்கப்பட்டு அதன் தொடர்பான பிரச்சனைகளுக்கு தொடர்ச்சியாக உள்ளாகிறோம். எனவே நமது உறவுமுறைகளை வளப்படுத்த உறுதியானவர்களாகவும், திடமானவர்களாகவும் இருப்பது அவசியமாகிறது. குழந்தைப் பருவத்தில் அன்னையின் அன்பு மறுக்கப்பட்டவர்களுக்கு அதை ஈடு செய்வது போன்ற உறவுகளே இந்த இடைவெளியில் இணைக்கும் பாலமாகிறது. உறுதியான இதய மையமே ஆரோக்கியமான தோற்றத்திற்கு ஆதாரமாக அமைகிறது. அன்போடு வளர்க்கப்படும் போது நம்மிடமிருந்து மகிழ்ச்சியும் ஊக்கமும் வெளிப்படுகிறது. அன்பே இயற்கையின் இயல்பாகும். விதையானது அன்பின் காரணமாக மண்ணிலிருந்து வளம் பெற்று உயிரோட்டம் அடைகிறது. ஒரு மருத்துவரின் அன்பும், அரவணைப்புமே நோயைக் குணப்படுத்தும் சக்தியாக அமைகிறது. இவ்வாறாக நோயாளி ஆரோக்கியத்தில் முன்னேற்றம் அடைந்ததை உணர்கிறாள். தேனீ தேனீக்களை ஈர்ப்பது போல் அன்பும் அரவணைப்பும் கொண்ட மக்களிடமிருந்து வெளிப்படும் நுண் அதிர்வுகள் நம்மை ஈர்க்கிறது. அன்புதான் அரவணைப்பாக மாறி மனித இனத்திற்கு வந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்யத் தூண்டுகிறது. இது தன்னிச்சையாக நிகழும் செயல் இது அறிவு பூர்வமான முடிவாக இருப்பதில்லை.

உறவுகள்

நமது பெற்றோருடன் உண்டான உறவுகள் இதய சக்கரத்தில் உள்ளன. நம்மைப் பெற்றதாய் இந்த சக்கரத்தில் இடது பக்கத்தில் இருக்கிறார். நமது தந்தை வலது பக்கத்தில் இருக்கிறார். நாம் நமது பெற்றோர்கள் நமது இதயத்தில் இருப்பதாக அறிந்து கொண்டால் நமது குடும்பப் பிரச்சனையிலிருந்து தப்பிக்க முயலமாட்டோம்.

எல்லா சந்தர்ப்பங்களிலும் அவர்களிடம் அன்புடன் மரியாதை செலுத்துவது நமது கடமையாகும். பொற்றோர்கள் குழந்தைகளுக்கு தூய்மையான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதனால் அவர்கள் ஆன்ம வளர்ச்சி பெறுவார்கள் . அவர்கள் குழந்தைகளை எந்தவித பற்றுதலும் இல்லாமல் பயமும் இல்லாமல் பாதுகாவலரைப் போல் அன்பு செலுத்த வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு என்ன அறிவுரை கூறுகிறார்களோ அதை அவர்கள் பின்பற்ற வேண்டும். பெற்றோர்கள் மதிப்புக்குரியவர்களும், மதிக்கத் தகுதி வாய்ந்தவர்களுமாவார்கள்.

கணவன் மனைவி உறவும் கூட இதயப் பூர்வமானதாகும். ஒருவர் மற்றவரை அடிமைப்படுத்துவது, உடமைப்படுத்திக் கொள்வது போன்றவற்றால் அன்பு தடை செய்யப்படுகிறது. ஆன்மாவிலிருந்து வெளிப்படும் அன்பின் பிரவாகம் ஊற்றிலிருந்து வெளிப்படும் நீர் போல் எல்லா திசையிலும் சுதந்திரமாக செல்லும் தம்பதியர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மதித்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களது வளர்ச்சியை தனித்தன்மையாகவோ தனிப்பட்ட விருப்பத்தாலோ தடை செய்யக் கூடாது. ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு உறவு வலுப்பெறும் போது கணவனும் , மனைவியும் தங்களது சமமான நிலையை உணர்வார்கள். இவர்களும் இந்த சமநிலை பாதிக்கப்படும்போது கணவன் தனது பொருளீட்டும் தகுதியில் மனைவியின் உணர்வுகள் கணவனின் ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டால் அது கோபமாக குழந்தைகளிடம் வெளிப்படும். இதுவே இறுதியில் நியுரூசிஸ் எனும் மனநோயாக மாறும்.


குடும்ப அமைப்பு என்பது ஒரு சமுதாய அமைப்பின் முக்கியமான அங்கம். இந்த அமைப்பின் அடித்தளம் என்பது மரியாதை, அன்பு, உறவுகளுக்கிடையேயான கடமைகள். குடும்ப அமைப்பு பாதிப்புக்குள்ளாகும் போது சுதாயமும் பாதிப்படைகிறது. நாம் பிரச்சனைகளை கண்காணிக்க வேண்டும். ஆகா சுமுதாயப் பிணைப்பு குடும்ப உறவுகளை செயல்பட செய்வது அற்பமாகும். மேற்கத்திய நாடுகளில் பாதுகாப்பற்ற நிலை. இருப்பதற்கு காரணம் அவர்களிடையே உள்ள போட்டி மனப்பான்மையும், முதியோர் இல்லத்தை சென்றடைய வேண்டியிருக்கும் எனும் கவளையுமாகும். இது கவலைப்படக் கூடிய விஷயம். உணர்வுப் பூர்வமான பாதுகாப்பை பணத்தால் பெற முடியாது. குழந்தைகளைப் போல் முதியோர்களைப் பாதுகாக்கும் சமுதாயத்தை பணம் மட்டும் உருவாக்கித் தர முடியாது. பரஸ்பரமான அன்பினால் மட்டுமே இது சாத்தியமாகும்.

மதிக்கத்தக்க ஆன்மீக கலாச்சாரம் முதியவர்களுக்கு ஞாத்தையும் தீர்க்கமான சிந்தனையும் கொடுக்க வல்லது. இதய சக்கரத்தின் இருப்பிடம் பிரம்மரந்தரா என்று அழைக்கப்படும் இடம் உச்சந்தலையில் சகஸ்திராரத்தில் மையத்தில் அமைந்துள்ளது. இங்குதான் ஸ்ரீ கெளரி ( குண்டலினி மாதா) ஸ்ரீ பார்வதி ஸ்ரீ சிவாவுடன் இணைந்து இருக்கும் இடமாகும். ஸ்ரீ சிவா இடது இதய சக்கரத்தின் தேவதையாக சாட்சி பாவத்துடன் இருக்கிறார். நமது இயக்கத்தை நிர்வகிக்கக் கூடிய பொறுப்பு வகிக்கிறார். மிகுந்த மரியாதையுடன் இந்த சக்கரத்தை கவனிக்க வேண்டும். இந்த இந்த இதய சக்கரத்தில் இருக்கும் தேவதை ஸ்ரீ ஜெகதாம்பா , பிரபஞ்ச நாயகி , இதைத் தவிர நமக்கு பாதுகாப்பும், தன்னம்பிக்கையும் கிடைக்கிறது. ஸ்ரீ ராமர் வலது இதயத்தில் தேவதையாக இருக்கிறார். இவர் மரியாதைக்குரிய புருஷராகவும், கணவனாகவும், மகனாகவும், சகோதரனாகவும், ஆட்சியாளராகவும் நடந்து கொண்டார். மனித இனத்திற்கு ஒழுக்கத்தின் எல்லைகளை வரையறுத்து மரியாதைக்குரிய புருஷராக வாழ்ந்து காட்டியவர். இவர் எல்லா நிலைகளிலும் கடமையுணர்வுடன் செயல்பட்டார்.

ஸ்தூல வெளிப்பாடு:
இதயம் நமது சரீரத்திற்கு பம்ப் ஹவுஸ் ஆக செயல்படுகிறது. இதனால் மன அழுத்தத்தினாலும், மன இருக்கங்களினாலும் இந்த சக்கரம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. உடலில் சோர்வு ஏற்படுவதற்கு காரணமான சக்கரம் ஓட்டப்பந்தயங்களில் அதிகம் பங்கு கொள்வதால் இந்த சக்கரம் பழுதடைகிறது. உடற்பயிற்சி விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதால் அகங்காரம் மட்டும் அதிகரிக்கும். அதுபோலவே தற்கால ஹத யோகம் என்பது உடற்பயிற்சி மட்டும்தான். ஆன்மாவுடன் இதற்கு தொடர்பு இல்லை. பண்டைக் காலத்தில் குருக்கள் முதுகுத் தண்டு வடம் பழுதடைந்திருந்தால் சரி செய்வதற்கு இப்பயிற்சி கற்றுக் கொடுக்கப்பட்டது.

உடல் அமைப்பு இயற்கையாகவே ஆன்மாவை அறிந்து கொள்ளும் வகையில் உள்ளது. இவற்றை சில சமயங்களில் சமநிலைப்படுத்த உடலைத் தயார் செய்வார்கள். இவ்வாறு ஹத யோகம் பள்ளி துவக்கப்பட்டு இன்றை நவநாகரீக யுகத்தில் " யோகா " என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. பல மணி நேரங்கள் செலவழித்து யோகாசனம் மக்கள் செய்கிறார்கள். தலைகீழாக ஆசனம் செய்வதால் நாம் இறைவனை அறிந்து கொள்ள முடியாது.
யோகா என்பது சமஸ்கிருதத்தில் இணைதல் என்று பொருள். இங்கு இணைப்பு என்பது குண்டலினி எல்லாம் வல்ல இறைசக்தியுடன் இணைவது என்பதாகும். குண்டலினி, சரியான வாழ்க்கை முறையைப் பின்பற்றியும், எண்ணங்கள், மற்றும் செயல்முறையிலும் தூய்மை அடைந்தும் கடவுளை அறிந்து கொள்ள முடியும்.
நமது உடலை நுட்பமான இயந்திரமாக நாம் நினைத்தால், இயந்திரமாக மாறுகிறோம். மிக அதிகமான வலது பக்க நடவடிக்கை ஒருவரை குளிர்ந்த தன்மை வாய்ந்தவராக மாற்றிவிடும் அன்பை அறியாதவராக்கி விடும். இதனால் இவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. ஏனெனில் ஆன்மா பாதிப்படைகிறது. நாம் சில நேரங்களில் அவதிக்குள்ளாகும் போது தூய்மை அடைவதாக நினைப்போம். ஆன்மாவின் தனித்தன்மை பாதிக்காத வரை நல்லது. நமக்கு திடீரென கிடைக்கும் ஏமாற்றமும், தன்னை வருத்திக் கொள்ளுதல் ஆன்மாவுக்கு எதிரான செயலாகும்.

இதய சக்கரத்தின் செயல்பாடு

பயமும், பாதுகாப்பற்ற நிலையும் இதயத் துடிப்பை அதிகரிக்கும். அதிகமான செயல்பாடுகளும், திட்டங்களும் பலமிழக்க செய்கிறது. இறுதியில் இச்சக்கரத்தை பாதிக்கிறது. கடுமையான நோன்பு முறைகளைப் பின்பற்றினாலோ, ஆன்மா சம்மந்தமில்லாமல் செய்யும் உடல் ரீதியான நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும். மார்பகப் புற்று நோய் மற்றும் இதர பெண்களது பிரட்சனைக்கு காரணம் அவர்கள் ஓடுக்கப்பட்டதாலும் நேர்மையற்ற முறையில் பெண்களை நடத்துவதாலுமாகும். அதிகமான பயமும், பாதுகாப்ப்றி உணர்வும் நிரோசிஸ், அலர்ஜி போன்ற வியாதிகள் ஏற்படும்.

சுத்திகரிப்பு

* விளக்கின் ஒளியை இதய சக்கரத்தில் காட்டுவது.
* மூச்சு இழுத்து மெதுவாக வெளியிடுதல் " ஜெ ஜெகதாம்பா" 12 முறை கூற வேண்டும்.

உறுதிமொழி

" அன்னையே எனது இதயத்தை தங்களது தெய்வீக அன்பினால் நிரப்புங்கள், பயமற்ற உணர்வைக் கொடுக்கவும்".

பொது அறிவுரை

" இதயத்திற்கு முன்னும் , பின்னும், தெய்வீக நுண் அதிர்வுகளை கொடுக்கவும்." பைபிளில் 23 வது அதிகாரத்தைப் படிக்கவும்.
மூன்று மெழுகுவர்த்தி பயன்படுத்தி சுத்திகரிக்கவும்.


இடது இதய சக்கரத்தை சுத்திகரித்தல்

கனிமங்கள் : மெழுகுவர்த்தியை இதயத்தினருகில் காண்பிக்கவும்.
" அன்னையே நான்தான் ஆன்மாவா ! உங்கள் கிருபையால் நான் தான் ஆன்மா!" .
" அன்னையே நான்தான் எதிராக செய்த தவறுகளை மன்னித்து விடுங்கள்"
" அன்னையே தங்கள் கிருபையால் அன்னையின் தூய அன்பிற்கு சாதனமாக அமைகிறோம் ".

பொது அறிவுரை

* தெய்வீக நுண் அதிர்வுகளை இடது இதய சக்கரத்தில் கொடுக்கவும். உங்களது கவனத்தை ஆன்மாவில் நிறுத்துங்கள்.
* அதிகமான செயல்களால் இதயம் பலம் குறைந்திருந்தால் 108 முறை இடது கையை உயர்த்தவும், மேலும் நுண் அதிர்வுகளை பயன்படுத்தி இடது கை அன்னையின் படத்தை நோக்கியும், வலது கை ஆகாசத்தையும் நோக்கி வைத்துக் கொள்ளவும். ஆகாசம் வெப்பத்தை தணிக்கும்.

வலது இதயத்தை சுத்திகரித்தல்

உறுதிமொழி : " அன்னையே உண்மையில் பொறுப்புணர்வோடு எனக்குள் செயல்படுகிறீர்கள்".
" அன்னையே நீங்கள் தான் நல்லொழுக்கத்திற்கு வழிகாட்டுகிறீர்கள் . கருணை உள்ளவர் " .

பொதுவான அறிவுரை :

வலது இதயத்தில் நுண் அதிர்வுகளைக் கொடுக்கவும். மரியாதைக்குரிய புருஷராக இருக்க கற்றுக் கொள்ளுங்கள். அதிகமான பொறுப்புகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். தந்தையிடமும், கணவரிடமும் மரியாதையுடன் நடந்து கொள்ளவும். வலது கை பூமி மீதும், இடது கை அன்னையை நோக்கியும் வைத்துக் கொண்டு, கவனத்தை சகஸ்ராராவில் நிறுத்த வேண்டும். இடது பக்க தடைகளால் வலது இதயம் தடைப்பட்டால் கூட நீங்கும்.