Translate

புதன், 8 ஜூன், 2011

ஸ்ரீ மகாலக்ஷ்மியின் எட்டு அம்சங்கள்






ஸ்ரீ லக்ஷ்மியினுடைய சக்தி மூலமாகத் தான் நாம் படிப்படியாக வளர்ச்சியடைகிறோம் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். அடித்தளத்திலிருந்து மேல்மட்டத்திற்கு முன்னேறுவதற்கான மீட்பு சக்தி ஆகும் . முதலில் நாம் காண்பது லக்ஷ்மி வடிவமே ஆகும். அவளே மேரி ஆகும். கிருஸ்துவின் அன்னையின் பெயரும் மேரி. ஏனெனில் அவள் சமுத்திரத்திலிருந்து தோன்றியவள். கடலிலிருந்து வந்த பிறகு இராஜலக்ஷ்மியாகவும், கிரக லக்ஷ்மியாகவும் விளங்குகிறாள். நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக சேர்ந்து நலமுடன் வாழ வைப்பவள் இராஜலட்சுமி. தனி நபரின் இல்வாழ்க்கைக்கு உதவுபவள் கிரகலட்சுமி.


மனைவியே கிரகலட்சுமி ஆவாள். இல்லத்தில் இருக்கும் பெண் தெய்வமும் அவளே. கிரகலக்ஷ்மியின் மூலமாகவே அமைதி கிடைக்கும். மண்ணீரல் சரியாக சரி செய்து கொள்வதின் மூலம் அமைதி கிடைக்கிறது எனலாம். உடல் முழுவதற்கும் தேவையான ஊட்ட சக்தியை இரத்த அணுக்கள் வழியாக மண்ணீரல் தருகிறது. மண்ணீரல் நமக்குள் இருக்குமிடத்தில் அமைதி இல்லை எனில், மொத்த இயக்கமும் பாதிப்படையும். ஏனெனில் இந்த இயக்கமே நமக்குள் ஊட்டம் தரக்கூடிய இச்சக்தி மையம் அமைதியையும் தருகிறது.

" யா தேவி சர்வ ரூபேனே சமஸ்திதா" என்ற வரிகளைக் கேட்டிருப்பீர்கள். சாந்தி என்ற பெண் தெய்வமே ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அமைதியை தந்து கொண்டிருக்கிறது. இந்த அமைதி பின் வரும் காரணங்களால் தான் பெற முடியும். இல்லத்தரசிகள் தங்களது முக்கியத்துவத்தை உணர்ந்தவர்களாகவும், பொறுமையுடையவர்களாகவும், மன்னிக்க கூடியவர்களாகவும், குடும்ப வாழ்க்கையைத் தக்க வைத்துக் கொள்பவர்களாகவும் இருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையை மீட்பவளாகவும், இருக்க வேண்டும். இவை பாதிப்படையும் போதும் மொத்த இயக்கமும் தடைபட்டு விடுகிறது.


வலது பக்கம் இருப்பவள் இராஜலட்சுமி ஆகும். இந்த இராஜலட்சுமி மேன்மையடையும் பொது மரியாதையை நாம் புரிந்து கொள்வோம். ஏனெனில் நம்மை நாமே மதிக்கின்ற போதுதான் மற்றவர்களையும் மதிக்க ஆரம்பிக்கின்றோம். நீங்கள் அனைவரும் ஆதலால் ஒருவரை ஒருவர் சமமாக மதிக்க வேண்டும். ஒளி மிகவும் முக்கியமான ஒன்று. மனிதன் நெருப்பைக் கண்டு பிடித்த நாளிலிருந்து கிரகலட்சுமி நிலையில் பயன்படுத்தினார்கள்.

உணவை சமைக்க நெருப்பைப் பயன்படுத்தினார்கள். அன்னையின் கவனிப்பு வீட்டில் குழந்தைகளுக்கு உணவு மற்றும் பிற தேவைகளை உணரலாம். பிறகு இவை அனைத்து குணங்களையும் ஒன்றாக்கி ஒளியை ஏற்படுத்தினார்கள். சுதந்திரம் மற்றும் குடியரசு தினங்களைக் கொண்டாட விளக்கேற்றுகிறோம். அல்லது பட்டாசு கொளுத்துகிறோம். நம்மை வெளிப்படுத்திக் கொள்ளும் விதமே இராஜலக்ஷ்மிக்கு வழி வகுக்கிறது. குழந்தைகளிடம் தாயின் பராமரிப்பு, உணவு மற்றும் இன்ன பிற தேவைகளைக் கொடுப்பவள். இராஜலட்சுமி, குடும்பமானாலும், சமுதாயமானாலும் ஒற்றுமையுடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த விழாக் காலங்களில் பயன்படுத்தும் ஒளி, தீபம், மத்தாப்பு, பட்டாசு போன்றவைகளின் மூலம் இராஜலட்சுமி வெளிப்படுகின்றாள்.




எட்டு விதமான மகாலக்ஷ்மியின் அம்சங்கள்

1 . ஆதிலட்சுமி :
ஆதிலட்சுமி என்பவள் மகாலக்ஷ்மியே. குண்டலினி சக்தி மேலெழும்ப சாதனமாக அமைகிறாள்.

2 . வித்யாலட்சுமி :
வித்யா என்பது இங்கு சஹாஜயோகத்தில் கற்றுக் கொள்ள வேண்டிய நுட்பமான யோகா நெறி முறைகளாகும். மற்றவை அவித்யா என்றும் கூறலாம். குண்டலினியை எவ்வாறு மேளிழுப்ப செய்வது, உங்களை நீங்கள் எவ்வாறு தூய்மைப்படுத்திக் கொள்வது, பிறரை எவ்வாறு தூய்மைபடுத்துவது இவை அனைத்தும் " வித்யா" என்று கூறப்படுகிறது. இது இலக்குமியின் கிருபையால் நடைபெறுகிறது.

3 . சௌபாக்ய லக்ஷ்மி :
சௌபாக்கியம் என்றால் நல்ல செழிப்பான காலம் எனலாம். அவள் செல்வத்திலும், ஆரோக்கியத்திலும், உணவு வகைகளிலும், வாழ்க்கை முறையிலும் சிறப்பைக் கொடுப்பவள்.

4 . அமிர்தலக்ஷ்மி :
அமிர்தம் என்றால் இறப்பில்லாதது. இவ்வுலகில் லக்ஷ்மி பொருள் வடிவில் இருக்கிறாள் . பொருட்கள் இறப்பதில்லை. ஆன்மாவின் அருள்வடிவமே அமிர்தலட்சுமி. ஆன்மாவின் அருள்பெற்றவை அழிவதில்லை. ஆன்மாவை திருப்திபடுத்தும் வகையில் எதை செய்தாலும் அது அமிர்தலக்ஷ்மியே உதாரணமாக பிறரை நேசிப்பது, கொடுப்பதனால் ஏற்படும் ஆனந்தம் இதில் மிகவும் சிறப்பானது பிறருக்கு ஆன்ம விழிப்புணர்வு அழிப்பது நுண் அதிர்வுகள் அழிவதில்லை.

5 . கிரகலட்சுமி :
மனைவி தான் கிரகலட்சுமி. வலது பக்கம் இராஜலட்சுமி.


6 . சத்தியலட்சுமி:
சத்தியலட்சுமி உணர்வு உணர்ந்து கொள்ளும் சக்திதான் சக்தியலக்ஷ்மி சத்தியா என்பது உண்மை. உங்கள் உணர்வில் மேன்மை அடையும் பொது உண்மையை அறிந்து கொள்வீர்கள். உண்மை என்றால் என்ன? நீங்கள் என்னை அறிந்து கொள்கிறீர்கள்? நீங்கள்தான் இறைவனின் கருவி என்பதை உணர்கிறீர்கள். ஏனெனில் இது மாயா நரம்பு மண்டலம் வழியாக வழிந்து செல்கிறது. இதுதான் உண்மை என்பதை நீங்கள் உணர்வீர்கள். உண்மையின் இரண்டாம் நிலை என்ன? " நீங்கள் யார்?" நீங்கள் தான் ஆன்மா, உண்மையின் மூன்றாம் நிலை " நான் யார்?"
கடவுள் யார்? உன்னுடைய விதி என்ன? இதை முழுமையாக உணர முடியும். இந்த உணர்வு தான் சத்தியலட்சுமி.

7 . பாக்கியலட்சுமி :
பாக் என்றால் அனுபவித்தல் என்பது பொருள். உங்களை சுற்றிலும் மகிழ்ச்சி எனும் மகா சமுத்திரம் உள்ளது. நீங்கள் பறவையைப் போன்றவர்கள். தாகத்தை தணிக்க முடிவதில்லை. பாக்கியலக்ஷ்மியின் அருளால் தான் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும்.

8 . யோகலட்சுமி :
லக்ஷ்மியின் சக்தி தான் யோக மார்க்கத்தை கொடுக்கிறது. யோகலட்சுமி தான் யோகா சக்தியைக் கொடுப்பவள் . யோகா சாதனையில் முழுமை அடையும் போது இலட்சுமியின் அருள் கிடைக்கும்.


நீங்கள் உடல் , கண், காது, வாய் .... போன்றவை அல்ல. தூய்மையான ஆன்மாவே தான். ஜீவாத்மா என்பது மூளையின் ஆசான். மூளையைக் கட்டுப்படுத்தி செயல்படுவது.

ஆன்மா:- அன்னையின் சொற்பொழிவு (1 .11 .1981 )

ஆன்மா மிகவும் அபூர்வமானது, இது நமக்குள் இருக்கிறது. இதன் மகத்துவத்தை சொற்களால் விளக்க முடியாது, இது தெய்வீக சக்தி வாய்ந்தது, இது எல்லையற்றது, இதை அளவிட முடியாது.
கடவுள் மிகவும் சக்தி வாய்ந்தவர். " சச்சிதானந்தா" ஸ்வரூபமானவர். சத்-சித்-ஆனந்தம் என்றும் கூறலாம். உண்மை என்று மற்றவர்கள் கூறும் போது அது பகுத்தறியபட்டவை எனலாம், ஆனால் நான் கூறுவது முழுமையான உண்மையே.
'சத் 'என்பது ' புருஷ்' சத்தியம் என்று கூறப்படும் கடவுள் ஆவார். இவர் படைப்புகளை செய்பவருமல்ல, அழிப்பவருமல்ல, உதாரணமாக, நான் சிலவற்றை உற்பத்தி செய்து கொடுக்கிறேன். என்னிடத்தில் ஒளி உள்ளது. இந்தப் பணியை செய்ய உதவியதாக இருக்கிறது, சாட்சியாக இருக்கிறது அவ்வளவுதான்.
'சித்' என்பது சித்தம் - கவனம் . இது தூய்மை அடைந்து துடிக்கும் போது படைப்புகளுக்கு ஆதாரமாக அமைகிறது . இந்த சக்தி தான். படைப்புகளை செய்கிறது.
'ஆனந்' என்றால் ஆனந்தம் என்று பொருள். தனது சிந்தனை ஆற்றலால் சித்தத்தை சத்தியத்தின் மீது நிறுத்தும் போது பேரானந்த நிலை ஏற்படுகிறது. ஆகா இந்த மூன்றும் இணைந்த நிலையே சச்சிதானந்த நிலை எனலாம்.
இந்த மூன்றும் இணைந்து இருக்கும் போது அங்கு மௌனம் நிகழும். இப்போது படைப்புகள் ஏற்படுவதில்லை. வெளிப்பாடுகள் இல்லை. சித்தம் சத்தியத்துடன் இணைந்து ஆனந்தத்தை கொடுக்கிறது. சத்தியத்திலிருந்து சித்தம் விலகும் போது மாயையின் தோற்றங்கள் வெளிப்படுகின்றன. படைப்புகள் துவங்குகின்றன. உயிர்கள் மீண்டும் சத்தியம் என்னும் புருஷத்துவத்தை நெருங்க நெருங்க , அதாவது பரிணாம வளர்ச்சியின் காரணமாக மிருகளிளிருந்து மனித நிலைக்கு உயரும் போது ஆனந்தத்தில் வீச்செல்லை அதிகரிக்கும். நாம் இயற்கையை ரசிக்கிறோம். ஆனால் விலங்குகள் அதை ரசிப்பதில்லை. ஆக நாம் சத்தியத்தின் நெருக்கத்தில் இருக்கிறோம். ஆக படைப்புகள் எவ்வாறு தோன்றுகின்றது. சத்தியத்தின் ஒளி எவ்வாறு மனிதனிடத்தில் வந்து அடைகிறது என்பதை நம்மால் உணர முடிகிறது.

----------------- மாதாஜி ஸ்ரீ நிர்மலா தேவி

1 கருத்து: