Translate

வெள்ளி, 3 ஜூன், 2011

அனாகத சக்கரம்





மைய தேவதை : ஸ்ரீ ஜெகதாம்பா
ஸ்தூலம் :: இதய நரம்பு சக்தி மையம் , இடது இதய நரம்பு சக்தி மையத்தின் ஒரு பகுதி, நெஞ்சு எலும்புக் கூடு.
வெளிப்பாடு : மூச்சுவிடுதல் , மார்பகங்கள்.
தன்மை : ஜகத்தை ஆளும் அன்னை, அன்னை பாதுகாப்பு, எதிர்ப்பு சக்தி
இதழ்கள் : 12
கனிமம் : காற்று
குறியீடு : ஜோதி
கையில் உள்ள இடம் : சிறுவிரல்
உபாதைகளுக்குக் காரணம் : பாதுகாப்பு அற்ற நிலை, தாய்மை குறைகள், பயம், ஆவி பிடித்தல்


இடது:


தேவதை : சிவா, பார்வதி
ஸ்தூலம் : இதயத்துடிப்பு ( அனாகத் - ஒலி)
தன்மை : அன்பு, பேரின்பம், சத்-சித் ஆனந்தம்
கையிலுள்ள இடம் : இடது சிறிய விரல்
ஸ்தூல வெளிப்பாடு : இதயம், இடது இதய நரம்புகள்
உபாதைகள் : அதிகமான உடலுழைப்பு, மன உளைச்சல், தவறான தாய்மை உறவுகள், அடயோகம், சித்தத்திற்கு வெளியில், மருந்துகள், நாத்திகன், கடவுளுக்கு எதிரான செயல்கள் செய்தல்.


வலது




தேவதை : ஸ்ரீ சீதா ராமா
ஸ்தூல வெளிப்பாடு : இதய நரம்பு மையம் (வலது)
தன்மைகள் : தந்தை, தந்தைக்கு செய்யும் கடமைகள், கணவனாகவும் , சகோதரனாகவும் கடமைகள்.
கையில் இடம் : வலது சிறுவிரல்
உபாதைகள் : தந்தை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், ஆணவம், இரக்கமற்ற தன்மை, சட்டத்திற்கு மாறான வழிகளில் ஈடுபடுதல்.



குழந்தை பிறந்தவுடன் முதலில் தனது தாயைத்தான் அறிந்து கொள்கிறது. பிறக்கும்போது குழந்தை தனது ஆன்மாவை அறிந்திருக்கிறது. கருப்பையிலிருந்து வெளியே வந்தவுடன் குழந்தை அதிர்ச்சி அடைகிறது. அதன் முதல் எதிர்ச்செயல் உடனே கருப்பைக்குள் செல்ல விழைகிறது. இந்த நிலையில் அதன் மனம், கட்டுப்பாடுகள், அகங்காரம் , வளர்ச்சி பெறவில்லை. தூய்மையான ஆன்மாவாக இருக்கிறது. இந்த ஆன்மா தனது தாயின் அரவணைப்பில் புதிய சூழ்நிலையில் சுகத்தைப் பெறுகிறது. இந்த எதிர்செயல்தான் உண்மையான அன்பு அல்லது கட்டுப்பாடற்ற அன்பு, இது கட்டுப்பாட்டுடன் கூடியதல்ல. இது இரண்டு ஆன்மாவின் தூய்மையான சங்கமம். இதை ஆனந்தம் என்றும் கூறலாம்.


தன்மைகள்

இது 'நான்' என்பதற்கான இருப்பிடம். 'ஆன்மா' எல்லாம் ஒன்றைத்தான் குறிக்கிறது. அன்னை அவர்கள் மீண்டும் மீண்டும் இதை வலியுறுத்துகிறார்கள். " நீங்கள் பரிபூரணமான ஆன்மாவே ". இவ்வாறு கூறுகிறார்கள். நாம் நமது ஆன்மாவை அறிந்து கொள்ள முயல வேண்டும். இதற்கு உபயோகமற்ற மாயையை மனத்திலிருந்து விலக்கி விட வேண்டும். நாம் ஆன்மஞானம் பெற்றபின் நமது ஆன்மாவாக மாற முயல வேண்டும். நாம் நமது உடல், மனம், உணவு சம்பந்தப்பட்ட பொய்யான ஸ்தூல வஸ்துக்களைத் தவிர்த்து நமது தூய்மையான சித்தத்தை இதயத்தில் செலுத்தி சுத்திகரிக்க செய்ய வேண்டும். ஆன்ம ஞானத்திற்குப் பிறகு தான் நமது சித்தத்தை இதயத்திற்கு செலுத்தி சுத்திகரிக்க முடியும். நமது இதயம் திறந்த நிலையிலும், தூய்மையாகவும் இருந்தால் தான் ஆன்மா பிரகாசத்துடன் வெளிப்படும். இந்த நிலையில்தான் எல்லா தோற்றத்திற்கும் காரணமான பேரானந்த சுகானுபவத்தை உணர்ந்து அவற்றில் நமது நிலையை அறிந்து கொள்ள முடிகிறது. நாம் நமது தூய்மையான விருப்பத்தின் மூலமாகவும் சித்தத்தின் மூலமாகவும் இதயத்தை சுத்திகரிக்க முடிகிறது. " நான் தான் ஆன்மா" என்ற உறுதிமொழியை உள்ளுணர்வோடு கூற வேண்டும். இது வெறும் இயந்திர செயலாக, வெளிவார்த்தையாக இருக்கக் கூடாது.


அன்பு ( தூய்மையான அன்பு )

இதய சக்கரத்தின் உண்மையான தன்மை என்பது எல்லாவற்றையும் பிரகாசிக்கச்செய்யக் கூடிய தூய்மையான அன்பே ஆகும் . நாம் ஆன்ம விழிப்பு அடையாத நிலையில் மிகவும் குறைவாகவே நாம் அன்பிற்காகவே அன்பு செலுத்துகிறோம். நம்முடைய கட்டுப்பாடுகள் காரணமாக நாம் நமது அன்பை மோகம், காம இச்சை, சுயநலம் ஆகியவற்றுடன் ஒப்பிட்டு குழப்பமடைகிறோம்.



தூய்மையான அன்பு பற்றற்றது. இது எந்த பிரதிபலனையும் எதிர்ப்பார்த்து வெளிப்படுவதில்லை. இது மரம் எவ்வாறு எந்த நோக்கமும் இல்லாமல் வேறுபாடு கருதாமல் எல்லோருக்கும் நிழலைக் கொடுக்கிறதோ அதுபோல அன்பு என்பது சுயநலமில்லாது வெளிப்படக் கூடியது. உண்மையான அன்பு என்பது ஆன்மாவிலிருந்து வெளிப்படக் கூடியது. உடலில் இருந்தோ உள்ளத்திலிருந்தோ வெளிப்படுவதல்ல. நாம் எவரிடமாவது அன்பு செலுத்துகிறோம் என்றால் நாம் இந்த அன்பு எந்த திசையில் செல்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். உடலமைப்பின்பால் செலுத்தும் அன்பு ஸ்தூலத்தன்மை வாய்ந்தது. இது காம இச்சையின் வெளிப்பாடு எனலாம். அல்லது கனவில் தோன்றிய உருவங்களின் வெளிப்ப்பாடாக இருக்கலாம். கற்பனையின் வெளிப்பாடு அல்லது விளம்பரதாரரின் விளம்பரமாகவும் இருக்கலாம்.சில தரம் குறைந்த படைப்புக்கள் மூலமாக பிறரை கவர்ந்திழுக்க முயற்சி செய்யலாம். இதை நாம் சிலரது மிகைப்பட்ட விளம்பரங்களில் காணலாம். இவைகளில் இரண்டு ஆன்மாவின் உறவை வெளிப்படுத்துவதாக இல்லை. எனவே இவர்களிடையே இடர்பாடு ஏற்படத்தான் செய்யும். இது உடல்ரீதியாகவும் உள்ளரீதியாகவும் வெளிப்படுவதேயாகும். இது உண்மையான அன்பு அல்ல. இது உடலுக்கும் மனதிற்கும் வேண்டிய தேவை எனலாம். மனத்தின் தேவை பூர்த்தியான பின்பு அன்பு மாறுகிறது. உதாரணமாக குழந்தைக்கு ஒரு பொம்மை தேவைப்படுகிறது. அது கிடைத்தவுடன் அதை விளையாடியபின் அதைத் தூக்கிப் போட்டு விடுகிறது. இது போல் தான் உடல் ரீதியான அன்பும் வெளிப்படுகிறது.


மணமகள் மணமகனின் வாழ்க்கையில் நுழையும் தருவாயில் அவனுக்குள் இருக்கும் ஆன்மாவை வரவேற்கிறாள். திருமணம் என்பது இரண்டு ஆன்மாக்களின் சங்கமம் எனலாம். ஆன்மாவை அறிந்து கொள்ளாமல் செய்யும் திருமணம் வெறும் சமுதாயச்சடங்கு எனலாம். அல்லது ஒப்பந்தம் எனவும் கூறலாம். இந்த சடங்குகள் மாற்றத்திற்குட்படும் ஒப்பந்தமாக அமைகிறது. இறுதியில் பிளவும் ஏற்படலாம். இது எதிர்மறையாக இதயத்தையும் பாதிக்கலாம். இதனால் பாதுகாப்பற்ற உணர்வும் ஏற்படும். இருவருக்குமிடையே உள்ள நம்பிக்கையை விட கணவன் மனைவிக்கிடையே பாதுகாப்பற்ற உணர்வு ஏற்படும். இன்றும் என் சமுதாயத்தில் பாதுகாப்பற்ற நிலை காரணமாக பல பிரச்சனைகள் ஏற்பட்டுக்கொண்டு இருக்கின்றன. இது பணத்தினால் மட்டும் ஏற்படுவதல்ல.

உண்மையில் அன்பு என்பது எல்லா உயிர்களிலும் உயிரோட்டமாக அமைந்திருப்பது. குழந்தைகள், பெற்றோர்கள், சகோதரிகள், சகோதரர்கள், நண்பர்கள், முதியோர்கள் இவர்களிடையே நிலவுவது. மக்களிடையே பரிவர்த்தனையும், இடுபாடும் இருந்தால் இதயச்சக்கரம் முழுமையாகத் திறக்கப்படும். இது ஒரு கூட்டு சமுதாயமாக மாறி உலகத்தை மாற்றியமைக்கும். இதுதான் அன்பின் சக்தி. எல்லா தோற்றத்திற்கும் காரணமானது அன்புதான். நுண் அதிர்வுகளே இதன் வெளிப்பாடு. நாம் ' கடவுளே அன்பு', 'அன்பே கடவுள் ' என்று கூறுகிறோம். ஏனெனில் ஆழமான அன்பில் நாம் நம்மை இழக்கிறோம். உண்மையில் நாம் என்ற தன்மை மறைந்து ஆன்மாவின் சங்கமம் ஏற்படுகிறது. இந்த நிலையில் நாம் உண்மையான மானிட சங்கமத்தை அனுபவிக்கிறோம். வாழ்க்கையின் உண்மையான பூரணத்துவமாக அமைகிறது. உருவ அமைப்பில் நாம் வெவ்வேறு நிறங்களிலும் வடிவங்களிலும், பணிகளுடனும் இருந்தாலும் ஆன்மாவாக ஆகும்போது எல்லா துளிகளும் பிரம்மசாகரமாக இணைகிறது. இவற்றின் நுண் அதிர்வுகள் மாறுபட்ட விதங்களில் பல வகையான சந்தங்களில் தொடர்ச்சியான பிரபஞ்ச நடனம் மறைந்தும் தோன்றுவதுமாக இருக்கிறது.

வெறுப்பும் , பொறாமையும் பிரபஞ்ச சந்தத்திற்கு மாறான எதிர்சக்தியை ஏற்படுத்துகிறது. அன்பு இருக்குமிடத்தில் வளர்ச்சியும், கொண்டாட்டமும் , மகிழ்ச்சியும் பரிமளிக்கிறது.

பாதுகாப்பு

அச்சத்தின் காரணமாக மிகுதியான பிரச்சனைகள் தோன்றுகிறது. தன்னம்பிக்கை நமக்கு இருக்குமானால் உறுதியான பாதுகாப்பு உடையவராகிறோம். இந்த தன்னம்பிக்கையானது வெளித்தூண்டுதல்களால் வரும் அடிப்படை ஆசைகள் மற்றும் எதிர்மறை சக்திகளிடமிருந்து பாதுகாப்பு தருகிறது. அச்சத்துடன் நாம் வாழ்கிறபோது நமது உடலின் எதிரியக்கம் பலவீனமடைந்து மதன் காரணமாக ஒவ்வாமைகளுக்கும் வியாதிகளுக்கும் உள்ளாகிறோம். நமது இதயம் உறுதியாக இருக்கும் போது நமது தோற்றம் கம்பீரத்துடன் பரிமளிக்கிறது. மேலும் நாம் நமது வாழ்க்கை முறையை ஒரு மாவீரன் வெற்றியை அணுகுவது போல் உறுதியுடன் அணுகுவோம். பலவீனம் அடையும் போது பயம் எனும் கூட்டில் சிறைப்பட்டது போன்றும் வெளியே வரத் தயங்குவது போன்றும் இருப்போம். இதனால் வாழ்க்கையின் பல்வேறு சுக அனுபவங்களை கெலிடியாஸ் கோப்பில் தெரிவது போல் பலவிதமான கோணங்களில் அறிய முயல்வதில்லை. பிறருக்குக் கொடுப்பதனால் நாம் நம்மையே ஈர்க்கிறோம். மன இறுக்கம் உடையவர்களாக நாம் இருப்பின் அவ்வாறு உள்ளவர்களபால் ஈர்க்கப்பட்டு அதன் தொடர்பான பிரச்சனைகளுக்கு தொடர்ச்சியாக உள்ளாகிறோம். எனவே நமது உறவுமுறைகளை வளப்படுத்த உறுதியானவர்களாகவும், திடமானவர்களாகவும் இருப்பது அவசியமாகிறது. குழந்தைப் பருவத்தில் அன்னையின் அன்பு மறுக்கப்பட்டவர்களுக்கு அதை ஈடு செய்வது போன்ற உறவுகளே இந்த இடைவெளியில் இணைக்கும் பாலமாகிறது. உறுதியான இதய மையமே ஆரோக்கியமான தோற்றத்திற்கு ஆதாரமாக அமைகிறது. அன்போடு வளர்க்கப்படும் போது நம்மிடமிருந்து மகிழ்ச்சியும் ஊக்கமும் வெளிப்படுகிறது. அன்பே இயற்கையின் இயல்பாகும். விதையானது அன்பின் காரணமாக மண்ணிலிருந்து வளம் பெற்று உயிரோட்டம் அடைகிறது. ஒரு மருத்துவரின் அன்பும், அரவணைப்புமே நோயைக் குணப்படுத்தும் சக்தியாக அமைகிறது. இவ்வாறாக நோயாளி ஆரோக்கியத்தில் முன்னேற்றம் அடைந்ததை உணர்கிறாள். தேனீ தேனீக்களை ஈர்ப்பது போல் அன்பும் அரவணைப்பும் கொண்ட மக்களிடமிருந்து வெளிப்படும் நுண் அதிர்வுகள் நம்மை ஈர்க்கிறது. அன்புதான் அரவணைப்பாக மாறி மனித இனத்திற்கு வந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்யத் தூண்டுகிறது. இது தன்னிச்சையாக நிகழும் செயல் இது அறிவு பூர்வமான முடிவாக இருப்பதில்லை.

உறவுகள்

நமது பெற்றோருடன் உண்டான உறவுகள் இதய சக்கரத்தில் உள்ளன. நம்மைப் பெற்றதாய் இந்த சக்கரத்தில் இடது பக்கத்தில் இருக்கிறார். நமது தந்தை வலது பக்கத்தில் இருக்கிறார். நாம் நமது பெற்றோர்கள் நமது இதயத்தில் இருப்பதாக அறிந்து கொண்டால் நமது குடும்பப் பிரச்சனையிலிருந்து தப்பிக்க முயலமாட்டோம்.

எல்லா சந்தர்ப்பங்களிலும் அவர்களிடம் அன்புடன் மரியாதை செலுத்துவது நமது கடமையாகும். பொற்றோர்கள் குழந்தைகளுக்கு தூய்மையான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதனால் அவர்கள் ஆன்ம வளர்ச்சி பெறுவார்கள் . அவர்கள் குழந்தைகளை எந்தவித பற்றுதலும் இல்லாமல் பயமும் இல்லாமல் பாதுகாவலரைப் போல் அன்பு செலுத்த வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு என்ன அறிவுரை கூறுகிறார்களோ அதை அவர்கள் பின்பற்ற வேண்டும். பெற்றோர்கள் மதிப்புக்குரியவர்களும், மதிக்கத் தகுதி வாய்ந்தவர்களுமாவார்கள்.

கணவன் மனைவி உறவும் கூட இதயப் பூர்வமானதாகும். ஒருவர் மற்றவரை அடிமைப்படுத்துவது, உடமைப்படுத்திக் கொள்வது போன்றவற்றால் அன்பு தடை செய்யப்படுகிறது. ஆன்மாவிலிருந்து வெளிப்படும் அன்பின் பிரவாகம் ஊற்றிலிருந்து வெளிப்படும் நீர் போல் எல்லா திசையிலும் சுதந்திரமாக செல்லும் தம்பதியர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மதித்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களது வளர்ச்சியை தனித்தன்மையாகவோ தனிப்பட்ட விருப்பத்தாலோ தடை செய்யக் கூடாது. ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு உறவு வலுப்பெறும் போது கணவனும் , மனைவியும் தங்களது சமமான நிலையை உணர்வார்கள். இவர்களும் இந்த சமநிலை பாதிக்கப்படும்போது கணவன் தனது பொருளீட்டும் தகுதியில் மனைவியின் உணர்வுகள் கணவனின் ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டால் அது கோபமாக குழந்தைகளிடம் வெளிப்படும். இதுவே இறுதியில் நியுரூசிஸ் எனும் மனநோயாக மாறும்.


குடும்ப அமைப்பு என்பது ஒரு சமுதாய அமைப்பின் முக்கியமான அங்கம். இந்த அமைப்பின் அடித்தளம் என்பது மரியாதை, அன்பு, உறவுகளுக்கிடையேயான கடமைகள். குடும்ப அமைப்பு பாதிப்புக்குள்ளாகும் போது சுதாயமும் பாதிப்படைகிறது. நாம் பிரச்சனைகளை கண்காணிக்க வேண்டும். ஆகா சுமுதாயப் பிணைப்பு குடும்ப உறவுகளை செயல்பட செய்வது அற்பமாகும். மேற்கத்திய நாடுகளில் பாதுகாப்பற்ற நிலை. இருப்பதற்கு காரணம் அவர்களிடையே உள்ள போட்டி மனப்பான்மையும், முதியோர் இல்லத்தை சென்றடைய வேண்டியிருக்கும் எனும் கவளையுமாகும். இது கவலைப்படக் கூடிய விஷயம். உணர்வுப் பூர்வமான பாதுகாப்பை பணத்தால் பெற முடியாது. குழந்தைகளைப் போல் முதியோர்களைப் பாதுகாக்கும் சமுதாயத்தை பணம் மட்டும் உருவாக்கித் தர முடியாது. பரஸ்பரமான அன்பினால் மட்டுமே இது சாத்தியமாகும்.

மதிக்கத்தக்க ஆன்மீக கலாச்சாரம் முதியவர்களுக்கு ஞாத்தையும் தீர்க்கமான சிந்தனையும் கொடுக்க வல்லது. இதய சக்கரத்தின் இருப்பிடம் பிரம்மரந்தரா என்று அழைக்கப்படும் இடம் உச்சந்தலையில் சகஸ்திராரத்தில் மையத்தில் அமைந்துள்ளது. இங்குதான் ஸ்ரீ கெளரி ( குண்டலினி மாதா) ஸ்ரீ பார்வதி ஸ்ரீ சிவாவுடன் இணைந்து இருக்கும் இடமாகும். ஸ்ரீ சிவா இடது இதய சக்கரத்தின் தேவதையாக சாட்சி பாவத்துடன் இருக்கிறார். நமது இயக்கத்தை நிர்வகிக்கக் கூடிய பொறுப்பு வகிக்கிறார். மிகுந்த மரியாதையுடன் இந்த சக்கரத்தை கவனிக்க வேண்டும். இந்த இந்த இதய சக்கரத்தில் இருக்கும் தேவதை ஸ்ரீ ஜெகதாம்பா , பிரபஞ்ச நாயகி , இதைத் தவிர நமக்கு பாதுகாப்பும், தன்னம்பிக்கையும் கிடைக்கிறது. ஸ்ரீ ராமர் வலது இதயத்தில் தேவதையாக இருக்கிறார். இவர் மரியாதைக்குரிய புருஷராகவும், கணவனாகவும், மகனாகவும், சகோதரனாகவும், ஆட்சியாளராகவும் நடந்து கொண்டார். மனித இனத்திற்கு ஒழுக்கத்தின் எல்லைகளை வரையறுத்து மரியாதைக்குரிய புருஷராக வாழ்ந்து காட்டியவர். இவர் எல்லா நிலைகளிலும் கடமையுணர்வுடன் செயல்பட்டார்.

ஸ்தூல வெளிப்பாடு:
இதயம் நமது சரீரத்திற்கு பம்ப் ஹவுஸ் ஆக செயல்படுகிறது. இதனால் மன அழுத்தத்தினாலும், மன இருக்கங்களினாலும் இந்த சக்கரம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. உடலில் சோர்வு ஏற்படுவதற்கு காரணமான சக்கரம் ஓட்டப்பந்தயங்களில் அதிகம் பங்கு கொள்வதால் இந்த சக்கரம் பழுதடைகிறது. உடற்பயிற்சி விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதால் அகங்காரம் மட்டும் அதிகரிக்கும். அதுபோலவே தற்கால ஹத யோகம் என்பது உடற்பயிற்சி மட்டும்தான். ஆன்மாவுடன் இதற்கு தொடர்பு இல்லை. பண்டைக் காலத்தில் குருக்கள் முதுகுத் தண்டு வடம் பழுதடைந்திருந்தால் சரி செய்வதற்கு இப்பயிற்சி கற்றுக் கொடுக்கப்பட்டது.

உடல் அமைப்பு இயற்கையாகவே ஆன்மாவை அறிந்து கொள்ளும் வகையில் உள்ளது. இவற்றை சில சமயங்களில் சமநிலைப்படுத்த உடலைத் தயார் செய்வார்கள். இவ்வாறு ஹத யோகம் பள்ளி துவக்கப்பட்டு இன்றை நவநாகரீக யுகத்தில் " யோகா " என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. பல மணி நேரங்கள் செலவழித்து யோகாசனம் மக்கள் செய்கிறார்கள். தலைகீழாக ஆசனம் செய்வதால் நாம் இறைவனை அறிந்து கொள்ள முடியாது.
யோகா என்பது சமஸ்கிருதத்தில் இணைதல் என்று பொருள். இங்கு இணைப்பு என்பது குண்டலினி எல்லாம் வல்ல இறைசக்தியுடன் இணைவது என்பதாகும். குண்டலினி, சரியான வாழ்க்கை முறையைப் பின்பற்றியும், எண்ணங்கள், மற்றும் செயல்முறையிலும் தூய்மை அடைந்தும் கடவுளை அறிந்து கொள்ள முடியும்.
நமது உடலை நுட்பமான இயந்திரமாக நாம் நினைத்தால், இயந்திரமாக மாறுகிறோம். மிக அதிகமான வலது பக்க நடவடிக்கை ஒருவரை குளிர்ந்த தன்மை வாய்ந்தவராக மாற்றிவிடும் அன்பை அறியாதவராக்கி விடும். இதனால் இவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. ஏனெனில் ஆன்மா பாதிப்படைகிறது. நாம் சில நேரங்களில் அவதிக்குள்ளாகும் போது தூய்மை அடைவதாக நினைப்போம். ஆன்மாவின் தனித்தன்மை பாதிக்காத வரை நல்லது. நமக்கு திடீரென கிடைக்கும் ஏமாற்றமும், தன்னை வருத்திக் கொள்ளுதல் ஆன்மாவுக்கு எதிரான செயலாகும்.

இதய சக்கரத்தின் செயல்பாடு

பயமும், பாதுகாப்பற்ற நிலையும் இதயத் துடிப்பை அதிகரிக்கும். அதிகமான செயல்பாடுகளும், திட்டங்களும் பலமிழக்க செய்கிறது. இறுதியில் இச்சக்கரத்தை பாதிக்கிறது. கடுமையான நோன்பு முறைகளைப் பின்பற்றினாலோ, ஆன்மா சம்மந்தமில்லாமல் செய்யும் உடல் ரீதியான நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும். மார்பகப் புற்று நோய் மற்றும் இதர பெண்களது பிரட்சனைக்கு காரணம் அவர்கள் ஓடுக்கப்பட்டதாலும் நேர்மையற்ற முறையில் பெண்களை நடத்துவதாலுமாகும். அதிகமான பயமும், பாதுகாப்ப்றி உணர்வும் நிரோசிஸ், அலர்ஜி போன்ற வியாதிகள் ஏற்படும்.

சுத்திகரிப்பு

* விளக்கின் ஒளியை இதய சக்கரத்தில் காட்டுவது.
* மூச்சு இழுத்து மெதுவாக வெளியிடுதல் " ஜெ ஜெகதாம்பா" 12 முறை கூற வேண்டும்.

உறுதிமொழி

" அன்னையே எனது இதயத்தை தங்களது தெய்வீக அன்பினால் நிரப்புங்கள், பயமற்ற உணர்வைக் கொடுக்கவும்".

பொது அறிவுரை

" இதயத்திற்கு முன்னும் , பின்னும், தெய்வீக நுண் அதிர்வுகளை கொடுக்கவும்." பைபிளில் 23 வது அதிகாரத்தைப் படிக்கவும்.
மூன்று மெழுகுவர்த்தி பயன்படுத்தி சுத்திகரிக்கவும்.


இடது இதய சக்கரத்தை சுத்திகரித்தல்

கனிமங்கள் : மெழுகுவர்த்தியை இதயத்தினருகில் காண்பிக்கவும்.
" அன்னையே நான்தான் ஆன்மாவா ! உங்கள் கிருபையால் நான் தான் ஆன்மா!" .
" அன்னையே நான்தான் எதிராக செய்த தவறுகளை மன்னித்து விடுங்கள்"
" அன்னையே தங்கள் கிருபையால் அன்னையின் தூய அன்பிற்கு சாதனமாக அமைகிறோம் ".

பொது அறிவுரை

* தெய்வீக நுண் அதிர்வுகளை இடது இதய சக்கரத்தில் கொடுக்கவும். உங்களது கவனத்தை ஆன்மாவில் நிறுத்துங்கள்.
* அதிகமான செயல்களால் இதயம் பலம் குறைந்திருந்தால் 108 முறை இடது கையை உயர்த்தவும், மேலும் நுண் அதிர்வுகளை பயன்படுத்தி இடது கை அன்னையின் படத்தை நோக்கியும், வலது கை ஆகாசத்தையும் நோக்கி வைத்துக் கொள்ளவும். ஆகாசம் வெப்பத்தை தணிக்கும்.

வலது இதயத்தை சுத்திகரித்தல்

உறுதிமொழி : " அன்னையே உண்மையில் பொறுப்புணர்வோடு எனக்குள் செயல்படுகிறீர்கள்".
" அன்னையே நீங்கள் தான் நல்லொழுக்கத்திற்கு வழிகாட்டுகிறீர்கள் . கருணை உள்ளவர் " .

பொதுவான அறிவுரை :

வலது இதயத்தில் நுண் அதிர்வுகளைக் கொடுக்கவும். மரியாதைக்குரிய புருஷராக இருக்க கற்றுக் கொள்ளுங்கள். அதிகமான பொறுப்புகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். தந்தையிடமும், கணவரிடமும் மரியாதையுடன் நடந்து கொள்ளவும். வலது கை பூமி மீதும், இடது கை அன்னையை நோக்கியும் வைத்துக் கொண்டு, கவனத்தை சகஸ்ராராவில் நிறுத்த வேண்டும். இடது பக்க தடைகளால் வலது இதயம் தடைப்பட்டால் கூட நீங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக