Translate

வெள்ளி, 10 ஜூன், 2011

ஆக்ஞா சக்கரம்





தேவதை : ஸ்ரீ இயேசு கிருஸ்து

ஸ்தூல வெளிப்பாடு : ஹைபோ தலமஸ் (பீனியல் மற்றும் பிட்டியூட்டரி சுரபி)

வெளிப்பாடு : கண்பார்வை, கேட்கும் எண்ணங்கள்

தன்மைகள் : மன்னிப்பு, உயிர்த்தெழுதல், எளிமை, இரக்கம்.

இதழ்கள் : 2

கனிமம் : ஒளி

குறியீடு : சிலுவை

கைகள் : மோதிர விரல்

தடைகளுக்கான காரணம் : அலை பாயும் கண்கள், தவறான சேர்க்கை

இடது பக்கம்

தேவதை : ஸ்ரீ மகாவீரா
வெளிப்பாடு : சுயக்கட்டுப்பாடுகள், நினைவுகள் { வலது நெற்றி}
தன்மை : அகங்காரம்
கைகளில் : இடது மோதிர விரல்
தடைகளுக்கான காரணம் : தன்னை வருத்தி கொள்ளுதல், தன்னிரக்கம், மன்னிக்க முடியாத தன்மை, இறந்தகால நினைவுகள்

வலது பக்கம்

தேவதை : ஸ்ரீ புத்தா
வெளிப்பாடு : நான் என்ற அகந்தை { இடது நெற்றி}
தன்மை : மமகாரம்
கைகளில் : வலது மோதிர விரல்
தடைக்கான காரணம் : தவறான கடவுளைப் பற்றிய சிந்தனை, கவலைகள், அகங்காரம், ஆதிக்கம்.

ஆக்ஞா சக்கரம் மூளையின் மையத்தில் அமைந்துள்ளது. மானுட பரிணாமத்தில் ஆறாவது நிலையைப் பெறுகிறது. நெற்றியின் மையம் எனக் கண்டறியலாம். இது சகஸ்ராராவுக்கு நுழைவாயில் போல் அமைந்துள்ளது . எனவே எண்ணங்களில் தூய்மை இல்லாத போது குண்டலினி இந்த சக்கரத்தைத் தாண்டி செல்ல இயலாது. இந்த சக்கரத்தைத் தாண்டி மேலே செல்லும் போது நமது நினைவுகள் விரிவடைந்து எண்ணங்களுக்கிடையே இடைவெளி அதிகரிக்கும். இந்த இடைப்பட்ட இடைவெளி என்பது அமைதியானது. இந்த அமைதி இரண்டு இதழ்களையும் அணைத்துக் கொண்டு விரிவடைகிறது. இதனால் நமது எண்ணங்களைத் தோன்றிய இடத்திற்கு மீண்டும் கொண்டு செல்கிறது. இந்த நிலையில்தான் எண்ணங்களற்ற நிலை ஏற்படுகிறது. மிக ஆழமான, நிர்மலமான அமைதி ஏற்படுகிறது. பிரபஞ்சத் தோற்றத்திற்கு ஆதாரம் இந்த அமைதியே ஆகும்.

தன்மை

ஆக்ஞா சக்கரத்தின் அடிப்படைத் தன்மையானது மன்னிப்பு. மானுடப் பரிணாமத்தின் வளர்ச்சியில், இக்குறிப்பிட்ட நிலையில், மனிதனுக்கு அகங்காரம் வளர்ந்துள்ளது. நான் தான் எல்லாவற்றையும் செய்கிறேன் என்ற உணர்வு மேலோங்கியுருக்கும். இது பொருளாதார ரீதியின் காரணமாக அமைகிறது. இது பலூனைப் போல் பெருத்துக் கொண்டு செல்லும். இது கட்டுப்பாடுகளையும், சூழ்நிலைகளையும் பாதிப்படையக் கூடிய சக்கரம். இதை மமகாரம் என்றும் அழைக்கப்படுகிறது. நம்மை ஆன்மாவிலிருந்து பிரிக்கிறது. ஆகா அகங்காரம், மமகாரம், நம்மை ஆன்மாவிலிருந்து பிரித்து விட சதி செய்கிறது.

மனித மனம்

மனித மனத்தை அகங்காரம், மமகாரம் எனப் பிரிக்கலாம். இவை இட, பிங்கல நாடியின் மேற்பகுதியில் அமைந்துள்ளது. இவை ஆக்ஞா சக்கரத்தில் ஒன்றுக்கொன்று குறுக்காகவும், நெடுக்காகவும் மாறி செல்லும். இறந்த கால நினைவுகள், கட்டுப்பாடுகள், உணர்வுகள் ஆகியவை தேக்கமாக வலது மூளையில் இருக்கிறது. ( எதிர்பக்கத்தில் குறுக்கில் சென்று அடையும்) எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனைகள், திட்டமிடுதல், செயல்பாடுகள், ஆகியவை தேக்கமாக மூளையின் மறுபக்கத்தில் (இடதுபுறம்) அமைந்துள்ளது. இவற்றை வெப்பமான வாயுக்களுடன் ஒப்பிடலாம். மிக அதிகமாக நாம் செயல்படும் போது, சிந்திக்கும் போது, வலது நாடி செயல்படுகிறது. இது உண்மையில் வாயுவைப் பயன்படுத்தும்போது இயற்கையிலுள்ள சமநிலை பாதிக்கப்பட்டு மற்ற நாடியும் சக்தியை இழக்கின்றன. இது மூளையில் பனி மண்டலத்தில் ஏற்படுத்தி ஆத்மா ஞானம் பெறுவதில் தடையை ஏற்படுத்துகிறது. ஆன்ம விழிப்புணர்வு பெரும் முன்னர் நாம் பல்வேறு நிலையில் சமநிலை அற்றவர்களாக இருப்போம். அகங்காரம், மமகாரம் ஆகியவற்றின் சக்தி இழப்பைப் பொறுத்து நமது நாடிகளில் சமநிலை தடைப்பட்டு சுழுமுனை வழியாக ஆன்ம முன்னேற்றம் ஏற்படுவதில்லை. குண்டலினி இந்த பனி மூட்டங்களின் பிணைப்பை ஊடுருவி சகஸ்ராராத்தில் பிரம்மா சைத்த்தன்யத்துடன் இணைய முடிவதில்லை.

இது ஏனெனில் பிரான்டிநெல் போன் எனும் முன் மண்டை ஓடுகளின் கடினத்தன்மையால் தான் எனலாம். நாம் பிறக்கும் போது முன் மூளைகளுக்கிடைப்பட்ட பகுதி பிறக்கும் போது மென்மையான திசுக்களால் மூடப்பட்டிருக்கும். குழந்தை வளர வளர திசுக்கள் கடினமாக்கப்பட்டு விடும் பாதையும் தடைபடுகிறது. இதனால் அகங்காரம் தேக்கமடைந்து " நான்" என்பது வலுப் பெறுகிறது.

நாம் நமது அகங்காரத்தை அழிக்க வேண்டும் என்பதல்ல. அகங்காரம் நமது ஆன்ம வளர்ச்சிக்குத் தேவைதான். இவை இல்லாமல் நாம் செயல்பட முடியாது. மமகாரத்துடன் சமநிலை அடைய செய்து இடைவெளியை ஏற்படுத்திய பின்பு தான் குண்டலினி மேலெழுந்து சகஸ்ராரத்திற்கு வந்து சேரும். இது மிகவும் கடினமானது தான்.

மன்னிப்பு

மன்னிப்பும், ஹாஸ்யமும் இவ்விரண்டும் அகங்காரத்தைக் கட்டுப்படுத்தும் சாதனமாகும். அகங்காரம் செயல்களை உருவாக்குகிறது. தவறுகளுக்கு தண்டனை வழங்குகிறது. மாற்றங்களை ஏற்படுத்துகிறது. விருப்பத்தைத் தோற்றுவிக்கிறது. மன்னிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதால் அகங்காரத்தை கட்டுப்படுத்தும். நாம் நமது அகங்காரத்தை குறைத்துக் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். பொறுமையாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும். ஆன்மா நமக்குள் பிரகாசித்துக் நமது செயல்களில் வெளிப்படுகிறது. இரதத்திற்கு ஓட்டுனராக அகங்காரம் செயல்பட வேண்டும். ஆனால் அவற்றை செயல்பட வைப்பவர் ஆன்மாவாக இருக்க வேண்டும். இறைவனின் கட்டளைகள் ஆன்மாவின் மூலம் செயல்பட்டு முடிவில் நன்மையே ஏற்படுகிறது.

நாம் பிறரை மன்னிக்கும் போது அகங்காரத்தின் மீது நமக்குள்ள செயல்களை திரும்பப் பெறுகிறோம். மன்னிக்க முடியாது என்பது ஒருவிதமான செயல்தான். இதில் நமது முழுமையான கவனத்தை ஒருமுகப்படுத்துகிறோம். நாம் சுலபமாக பிறரை மன்னிக்க முடியாது. இதில் மன்னிப்பதர்குரியவர் பதிப்புக்குள்ளாவதில்லை. நமது கோபம் நமக்கு பின் விளைவுகளை ஏற்படுத்துகிறது. நமது உணர்வுகளை பதிப்புக்குள்ளாக்குகிறது. இது நம்மை அழிக்கக் கூடியது. நாம் உணருகிறோம் மன்னிப்பு என்பது கற்பனையானது.

மன்னிப்புக்குரியவர் பாதிக்கபடுவதில்லை. நாம் நம்மை உணர்வுபூர்வமாக இழக்கிறோம். ஹாஸ்யம் அகங்காரத்திற்கு ஒரு அருமருந்தாக அமைகிறது. அகங்காரம் எனும் பலூனில் வீக்கம் குறைக்க முடியும். ஹாஸ்யத்தின் மூலம் வீக்கத்தை குறைக்க முடியும். சாட்சி பாவத்தில் அகங்காரத்தை கண்காணிக்க வேண்டும். இதன் சூட்சும தந்திரங்களை அறிந்து கொள்ள முடியும். நாம் அகங்காரத்தை எதிர்த்துப் போராட முடியாது. இது எதிர்மறையானது. ஏனெனில் அகங்காரம் என்பது செயல்தன்மையைக் குறிக்கிறது. ஆகா அகங்காரத்தை எதிர்த்து அகங்காரமே போராடுவது போல் ஆகும். நாம் ஹாஸ்யம ஆகா பேசும் போது நம் இதயம் மென்மையாகி இறுக்கமற்றதாக அதாவது லேசாகி விடுகிறது. அகங்காரமும், மமகாரமும், சூட்சும உலகத்தின் இரு கரைகளாக அமைகிறது. மமகாரம் தனி மனிதனின் சூழ்நிலை எனலாம். இங்குதான் கடந்த கால நினைவுகளும் அனுபவங்களும் தேங்கி இருக்கின்றன. இதை கடந்த நிலையிலிருப்பது கூட்டு ஆழ்நிலை உணர்வு ஆகும்.

ஆவிகளின் ஆய்வுகள் செய்பவர்கள் மந்திரவாதிகள். இந்த நிலையிலிருந்து கொண்டு அனுபவங்களை வியாபாரமாக்குகிரார்கள். அகங்காரம் என்பது தனி மனிதனின் மேல் நிலை உணர்வு ஆகும். இது எதிகாலத்தை உணர்த்துவதாகும். இந்த கூட்டு மேல்நிலை உணர்வு நிலையில் தான் அதிகாரத்தை விரும்புவர்களும், புதுமையை விரும்புவர்களும், தங்களது எதிர்கால வியாபாரத்தை நடத்துகிறார்கள். இந்த சூட்சும நிலையில் மிகவும் ஆழமான ஆராய்ச்சி செய்வது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். அன்னையவர்கள் கூறும் போது, கரியிலிருந்து வரும் புகையும் (ஆழ்நிலை உணர்வு) பென்சால் ( Benzol) மேல்நிலை உணர்விலிருந்து வரும் புகை இரண்டுமே சமமாக மூச்சுத் திணறலை ஏற்படுத்தும். ஆகவே ஆவிகளால் பீடிக்க வாய்ப்பு ஏற்படுகிறது.

இடது ஆக்ஞாவின் தேவதை ஸ்ரீ மகாவீரா . இவரது அவதாரம் விரட்டாவின் மமகாரத்தை வெளிப்படுத்தும். இவர் வலது நெற்றியில் அமர்ந்திருக்கிறார். அவர் அஹிம்சையை தனக்கும் வலியுறுத்துகிறார். அவரது கருத்துக்கள் இரக்கமும், அஹிம்சையையும் வலியுறுத்துவது ஆகும்.

வலது ஆக்ஞாவின் தேவதை ஸ்ரீ புத்தா . இவர் விரட்டாவின் அகங்காரத்தை வெளிப்படுத்துகிறார். இடது நெற்றியின் மையத்தில் அமர்ந்திருக்கிறார். இவர் இரக்கத்தையும் அஹிம்சையையும் உலகிற்கு பரப்பினார். இவரும் எட்டு படிகள் கொண்ட வழிதனையும் சமநிலை அடைவதையும் வலியுறுத்தினார்.

இவர் அகங்காரத்தை ஊடுருவி குண்டலினி செல்லும் வழி முறைகளை கூறியுள்ளார். மென்மையான எண்ணங்களையும் , மனதையும் வலியுறுத்தினார். பயங்கரமான எண்ணங்களையும் தவிர்க்க வேண்டுமென்றும் இயற்கையான தெளிவான எண்ணங்களினால் மமகாரம் கரைந்து விடுகிறது. ஸ்தூல எண்ணங்களிலிருந்து சூட்சும் எண்ணங்களினால் எவ்வாறு உயருவது என்பதை கூறியிருக்கிறார்.

சகஸ்திரார சக்கரத்திற்கு மேலெழும் பொது சுழு முனையில் ஆக்ஞா சக்கரத்தின் வழியாக செல்கிறது. இது அன்னை ஜீசஸ் மேரியின் இடமாகும். இயேசு கூறினார். அவர்தான் ஒளியாகவும் பாதையாகவும் இருக்கிறார்கள். இந்த பாதை இறைவனின் ராஜ்ஜியத்திற்கு சென்று சேர்கிறது. மன்னிக்கும் சக்தி யின் மூலம் மனித குலத்திற்கு பாவத்தின் பளு குறைகிறது. உலகத்திற்கு மனிதர்களின் அகங்காரத்தை அறிய வைக்க அவர் சிலுவையில் அரையுண்டார். மனிதன் மனம் திருத்த துவங்கிவிட்டான். இவ்வாறாக தனது எளிமையை அறிந்து கொள்ள முடிந்தது . இயேசு கிருஸ்து எல்லோரையும் மன்னிக்கும் சக்தியை நமக்குக் கொடுத்திருக்கிறார். உள்ளுணர்வோடு மன்னிப்பு கேட்டால் மன்னிக்கப்படுவார்கள். நம்மாலும் பிறரை மன்னிக்க முடிகிறது. இது நமது கடந்த காலத்தை மட்டும் விட்டொழிப்பதில்லை நமது கிரம பலனையும், பாவங்களையும் விட்டொழிக்கிறது. உண்மையில் ஆன்மா கர்மாவையோ , பாவத்தையோ தேக்கி வைப்பதில்லை. குற்ற உணர்வையும் தேக்கி வைப்பதில்லை. அஹங்காரத்தை கடந்து ஆன்மாவாக மாறும் பொது நாம் நமது கடந்த காலத்தை கடந்தவர்களாகிறோம்.

ஆன்ம ஞானத்தில் ஜீசஸ் மிகப் பெரிய மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளார். நமது குற்ற உணர்வுகள் அனைத்தும் கரைக்கப்பட்டு விட்டன. அகங்காரத்தைக் குறைக்கப்பட்டு விட்டது. மன்னிப்பை மக்களுக்குப் போதிக்கப் பட்டு ஆன்மாவுக்கு இறப்பில்லா நிலையை உணர வைத்து விட்டார். அவரது உயிர்த்தெழுதல் மூலமாக அவர் ஆன்மாவாக மீண்டும் பிறந்தார். அன்னைக் குண்டலினி நமக்கு இரண்டாவது பிறப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.


ஸ்தூல வெளிப்பாடு :

ஆக்ஞா சக்கரம் கண் பார்வையை பாதுகாக்கிறது. ஆகவே நாம் கண்களை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். நாம் அவற்றை மிரைய்ற வகையில் பண்படுத்தக் கூடாது. அலைபாயும் கண்களை, பொருட்கள் மீது கொள்ளும் மோகமும் தவிர்த்து இயற்கையைக் கண்களால் கண்டு களிக்க முயல வேண்டும். ஜோதியைக் கண்களால் பார்ப்பதன் மூலம் சுத்திகரிக்கப்பட்டவர்களாவீர்கள்.


உறுதி மொழி:

" அன்னையே ! ஆன்மாவுக்கு எதிராகத் தவறு இழைத்திருந்தால் என்னை மன்னிக்க வேண்டும்".

பொதுவான அறிவுரை:

இடது கை அன்னையை நோக்கியும் , வலது கை தலையின் பின்புறமும் வைத்துக் கொள்ள வேண்டும்.

வலது உள்ளங் கையினால் தலையின் பின்புறத்தில் மென்மையாகத் தட்ட வேண்டும். இடது கை அன்னையின் படத்தை நோக்கி வைக்க வேண்டும்.

மமகாரத்தின் அழுத்தத்தை வலது மேல் நெற்றியில் அழுத்தி தேய்த்து குறைக்க வேண்டும்.

அகங்காரத்தை வலது மேல் நெற்றியின் பின்புறமிருந்து அழுத்தி குறைத்து சுவதிஸ்டானத்தின் வரை இறக்க வேண்டும். கடந்த கால நினைவுகளைத் தவிர்க்க வேண்டும். மூடப் பழக்க வழக்கங்களையும் , கட்டுபாடுகளையும் தவிர்க்கவும். சில நேரங்களில் மமகாரம் விரிவடைந்து அகங்காரத்தை அழுத்தும் பொது வலது விசுத்தியில் உபாதைகள் தோன்றும். எனவே இது மமகாரத்தின் விளைவாக ஏற்பட்டது எனக் கொள்ள வேண்டும்.


வலது ஆக்ஞா சுத்திகரிப்ப்பு:

ஆக்ஞா சக்கரத்தில் மெழுகுவர்த்தி சுவாலை மூலம் ஸ்ரீ மாதாஜியைப் பார்க்க வேண்டும்.

" அன்னையே ! எல்லோரையும் மன்னித்து விட்டேன் . என்னையும் மன்னித்து விட்டேன்."

அறிவுரை:

இடது கை அன்னையின் படத்தை நோக்கி வைத்து கொண்டு வலது கை நெற்றியில் வைத்து மெல்ல அழுத்தியபடி கீழேக் குனிய வேண்டும். தவறான தியான முறையை விட்டு விட வேண்டும். அகங்காரம் அதிகரித்து மமகாரத்தை அழுத்தும் போது ஞாபக மறதி ஏற்படுகிறது.

வியாழன், 9 ஜூன், 2011

விசுத்தி சக்கரம்





தேவதை : ஸ்ரீ ராதா கிருஷ்ணா
ஸ்தூல வெளிப்பாடு : செர்விக்கள் பிளக்சஸ், கழுத்து நரம்பு மையம், கழுத்து, தோள்கள், வாய் , நாக்கு பற்கள், மூக்கு, முகம்.
தன்மைகள் : கூட்டு விழிப்புணர்வு, சாட்சி பாவம், நகைச்சுவை உணர்வு, பற்ற்ற நிலை, இராஜீய உறவுகள்.
இதழ்கள் :16
கனிமம் : ஆகாயம்
கைகள் : ஆள் காட்டி விரல்
தடைக்கான காரணம் : கூட்டு வழிபாடு தவிர்த்தல், தூண்டுதல்களுக்குல்லாதல், சுய மரியாதை இழத்தல், சகோதர சகோதரிகளை நிந்தனை செய்தல், சாட்சி பாவம் இருத்தல்.

இடது விசுத்தி

தேவதை : ஸ்ரீ விஷ்ணு மாயா
தன்மைகள் : சகோதர- சகோதரி உறவுகள் தன்னம்பிக்கை
கைகள் : இடது ஆள் காட்டி விரல்
தடைகளுக்கு காரணம் : குற்ற உணர்வு, தவறான நடத்தை, கடும் சொற்கள், தரக்குறைவான கிண்டல் பேச்சு

வலது விசுத்தி

தேவதை : ஸ்ரீ யசோதா மாதா
தன்மைகள் : பொய் பேசுதல், புறம் பேசுதல், தூய்மையை இழிவு படுத்துதல், இழிவான சொற்களால் பேசுதல்
கைகளில் : வலது ஆள்காட்டி
தடைக்கான காரணம் : தவறான உணவு வகைகள் கல்லிரலுக்கு ஊறுவிளைவிக்கும் உணவு உட்கொள்ளுதல்

மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியில், பரஸ்பரமான கூட்டு, சமுதாய வாழ்க்கை முறையை இந்த விசுத்தி சக்கரம் முக்கியமாகப் பிரதிபலிக்கிறது. எல்லா வகையிலும் இயற்கையாகவே சின்னஞ்சிறு வேறுபாடுகளைத் தவிர்த்து வளர்ச்சியடைந்த சமுதாயமாக ஆத்மரீதியாக இணைந்து வாழ்வதற்கு இந்த சக்கரம் உறுதுணையாக உள்ளது.


தன்மைகள்

நமக்குள் இருக்கும் ஆன்மீக சக்தியை வளப்படுத்திக் கொள்ள நாம் தினம் தினம் சந்திக்கும் பிரச்சனைகளை சாட்சி பாவத்துடன் மலரும் பொது ஆன்ம சாதகருக்கு வாழ்க்கையே நாடக மேடையாக அமைகிறது. சாட்சி உணர்வு வெளிப்படுகிறது. கூட்டு விழிப்புணர்வில் நாம் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் நாம் ஆழமாக தெய்வீக அதிர்வுகளை உணர்ந்து அறிந்து கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். பரிபூரணத்துவத்தின் ஒரு துளியாக நாம் உணரத் துவங்கும் போது ஒவ்வொரு சக்கரத்திலும் உள்ள சூட்சும சக்தியை உணர்ந்து கொள்ள முடிகிறது. அதே போல் பிறரது சக்கரத்திலும் அறிந்து கொள்ள முடிகிறது.

இதைத்தான் செயல்முறைப்படுத்தும் தியானம் என்று சஹஜயோகத்தில் அழைக்கிறோம்.இந்த நேரடியான செயல்முறைதான் நமது கைவிரல் நுனிகளில் சாட்சியாக வெளிப்பட்டு பிரகாசிக்கின்றன. நமது உடலிலும் அறிந்து கொள்ள முடிகிறது. நாம் கூட்டாக விழிப்புணர்வு பெரும் போது பிறரது ஆன்ம நிலையில் செயல்பட முடியும். அவர்களது சக்கரங்களின் அதிர்வு நிலைகளை கைவிரல் நுனிகளில் அல்லது உள்ளங் கைகளில் தெரிந்து கொண்டு நமது தெய்வீக அதிர்வுகளை சொட்சுமமாக பிறரது சக்கரங்களுக்கு தேவைக்கு தக்கபடி செலுத்த முடியும். இது மனித இனம் பெற்றுள்ள புதிய கருத்துணர்வு இயற்கையான உணர்வு. இதுவே சூட்சும அதிர்வுகளாகும்.

இந்த மனித இன சகோதரத்துவம் தான் பல்வேறு கால கட்டங்களிலும் ஜென்ம ஜென்மமாக ஆன்மீக சாதகர்கள் தேடிக் கொண்டிருந்த குறிக்கோள் ஆகும் . இந்த குறிப்பிட்ட காலத்தில் தான் இது வெளிப்படுகிறது. இது வெறும் கற்பனையிலோ அல்லது யூகத்திலோ தோற்றுவிக்கப்பட்டதல்ல. இது சாட்சிப் பூர்வமான பேருண்மையாகும்.

ஹம்ச சக்கரம்

ஹம்ச சக்கரம் என்பது விசுந்தி சக்கரத்தின் ஒரு பகுதியாகும். இது இரண்டு புருவங்களுக்கு இடையில் மூக்கிற்கு மேலாக அமைந்துள்ளது. இந்த சக்கரம் நமக்கு விஷயங்களை வேறுபடுத்தும் உணர்வு , மேற்ரும் தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் உணர்வுகளைத் தருகிறது, இது மேலும் ஆணுக்கும் , பெண்ணுக்கும் இடையே நிலவும் உறவை நிர்ணயிக்கிறது. உலகம் முழுவதும் பொதுவாக நிலவும் புனிதமான சகோதர்-சகோதரி உறவையும் நிர்ணயிக்கிறது. இந்த உறவிலிருந்து திருமண உறவாக மாற்றியமைக்கும் போது தர்மங்களுக்கு கட்டுப்பட்டு, மதிப்பு மிக்க தூய்மையான அமைப்பு ஏற்படுகிறது.

கணவனானாலும், மனிவியானாலும் மற்றவருக்கு மதிப்பும், மரியாதையும் தர வேண்டியது அவசியமாகும். இதில் எந்தக் குழப்பமும் இருக்கக் கூடாது. ஆண் அனங்க இருக்க வேண்டும். பெண் பெண்ணாக இருக்க வேண்டும். புனிதமான திருமண உறவின் அவசியத்தை மறந்து விடக் கூடாது. சமுதாயம் முழுவதுமாக அன்பை வெளிப்படுத்தும் சக்தி வாய்ந்ததாக வளப்படுத்த வேண்டும். குடும்ப அமைப்புகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமும், மரியாதையும் ஊக்கப் படுத்த வேண்டும்.

ஜனன மரண மூலம் மனித இனத்தில் ஏற்படும் பரிணாம வளர்ச்சிக்கு இது ஒரு வாகனமாக அமைகிறது. இந்த சக்கரம் ஐம்புலன்களில் உணர்வுகளை வெளிப்படுத்தும் சாதனமாகவும் அமைகிறது. இதனால் விசுத்தி சக்கரம் ஐம்புலன்களின் செயல்களைக் கட்டுப்படுத்துகிறது.

விசுத்தி சக்கரத்தின் தேவதை ஸ்ரீ கிருஷ்ணா அவர் சாட்சி பாவத்திலுள்ள கடவுளாகப் பரிமளிக்கிறார். இவர் முழுமையாக பற்றில்லாமல் பிரபஞ்ச நாடகத்தைக் கண்டு களிக்கிறார். அவரது அவதாரம் நமக்கெல்லாம் மிக உன்னதமான மானிட நிலையடைய நம்மை ஊக்குவிக்கிறது. அவர் மிகவும் உன்னதமான தீர்க்கமானத் தீர்ப்புகளை அளிப்பவர் . அவர் மிகவும் தன்னடக்கம் கொண்டவராக இருந்து அர்சுனனுக்கு தேரோட்டியாகவும் போரில் செயல்பட்டார். அவர் தான் நமது யோக மார்க்கத்திற்கும், ஆன்ம இணைப்பிற்கும் குருவாக இருந்து வழிகாட்டுகிறார். இச்சக்கரம் விராட்டா சக்தியின் இருப்பிடம் எனலாம். கீதையின் இரண்டாவது அதிகாரத்தில் விளக்கமாக குறிப்பிட்டது போல இந்தப் பிரபஞ்சத்தில் கடவுளின் வெளிப்பாடாக இந்த இடம் அமைகிறது.

பிரபஞ்சத்திலுள்ள பல்வேறு அம்சங்கள் தன்னில் அடக்கிக் கொண்டு, பல்வேறு தெய்வங்களின் ஸ்வரூபங்களையும், அடக்கிக் கொண்டு பிரமானடமான ஸ்ரீ கிருஷ்ணரின் விராட்டா ரூபத்தைக் கண்டு களித்தார். நமது உடலிலுள்ள அணுக்கள் எவ்வாறு குண்டலினி எனும் நூலிழையால் இணைக்கப்பட்டு இயங்குகின்றதோ அது போல் எல்லாம் வல்ல இறை சக்தியும் செயல்படுகிறது. இந்த பரிபூரனத்துவத்தைத் தான் நாம் தியானிக்க வேண்டும். நமது மானிட இனம் ஆத்மரீதியாக இணைக்கப்பட்டு முழுமை அடைந்த சக்தியாக நாம் உணர வேண்டும்.

நாம் நமது மூர்க்கத்தனதாலும், தாழ்வு மனப்பான்மையாலும் செயல்பட்டு நாம் நம்மை பரிபூரனத்துவத்திளிருந்து நம்மை பிரித்துக் கொள்ளக் கூடாது. பழமையான கட்டுப்பாடுகளால் பிணைக்கப்பட்ட தனி மனிதன் தனக்கென்று ஒரு தனிக் கருத்துக்களை ஏற்படுத்திக் கொள்கிறான். நாமாகத் தான் இந்த பிரபஞ்ச சக்தியாக மாற முடியும். மற்றவர்களின், ஆன்மாவை உணர முடியும். இனிமையான உணர்வுடன் மலர்களின் சுகந்தமான வாசனையை அறிந்து கொள்வது போல உணர வேண்டும்.

ஸ்தூல வெளிப்பாடுகள்

விசுத்தி சக்கரம் 16 இதழ்களைக் கொண்டது. ஒவ்வொன்றும் தனித் தன்மை வாய்ந்ததாகவும், தனியாக செயல்படுவதாகவும், அமைந்துள்ளது. ஸ்தூல சரீரத்தில் இது கழுத்து, தொண்டை, தோள்கள், முகம், வாய் பற்கள் ஆகியவற்றைக் கண்காணிக்கிறது. உதாரணமாக நாம் நம்மை அதிகமாக குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்கிறோம். புகையிலை போன்ற பொருட்களால் தொண்டைப் பகுதி பாதிப்படைகிறது. நாம் நமது பற்களை நன்கு பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தற்காலத்தில் இது அவசியமாகிறது. இந்த சக்கரம் மலரும் போது நமக்கு பற்ற்ற தன்மை வளர்கிறது. இதனால் உலக வாழ்க்கையை ஒரு நாடக மேடையாக சாட்சி பாவத்தில் உணர முடிகிறது. இதனால் நமக்கு அதிர்ச்சி தரக்கூடிய விஷயங்களைத் தவிர்ப்பதால் இயற்கையாகவே அவை சிறிய நிகழ்ச்சியாக அமைந்து விடுகின்றன.

இதனால் பிரட்சனைக்கு ஆளாகாமல் மறுபக்கம் சென்று விடிகிறோம். இதனால் நமது செயல்களுக்கான விளைவுகளுக்கு நாம் பொறுப்பேற்பதில்லை என்பது பொருளல்ல. நாம் வாழ்க்கையிலிருந்து விடுபட்டு விட்டோம் என்பதல்ல. இது நமக்கு மிகவும் உணர்ச்சி வயப்பட்ட கால கட்டத்தில் சமனிலையோடும், சீரான உணர்வோடும் செயல்பட உதவுகிறது. நாம் சாட்சி பாவத்தில் நமது விளையாட்டைக் கண்டு களிக்கிறோம். நம்மை, நமது செயல்பாட்டில் இருந்தும் கட்டுப்பாடுகளிலிருந்தும், உணர்ச்சிப் போராட்டத்திலிருந்தும் விலக்கிக் கொள்ள முடிகிறது.

நாம் ஆன்ம விழிப்புணர்வு பெற்ற பின்பு நமது சாட்சி பாவத் தன்மை மிளிர்கிறது. நமக்கு எல்லா விஷயங்களும் வெளிப்புற காட்சியாகத் தென்படுகிறது. இந்த விஷயங்கள், இந்த நிகழ்ச்சிகளுடன் நமது ஆன்மா சம்மந்தப்பட்டதல்ல என்று உணர்கிறோம். இந்த வழிமுறையில் ஆன்மாவின் புறத்தன்மையின் அடுக்குகளைக் கண்டறிந்து களைய முயல்கிறோம். ஸ்ரீ மாதாஜி அவர்கள் கூறியிருக்கிறார்கள் : நாம் நமது நடிப்பைக் கண்டு கொண்டிருக்கிறோம். இந்த உலகமே ஒரு நாடக மேடையாக அமைந்துள்ளது.

இதே கருத்தைத்தான் ஷேக்ஸ்பியர் அவரது நாடகங்களில் கூறியிருக்கிறார். நமது பிரட்சனைகளை நம்மால் தீர்க்க முடியும். அதற்கான ஒரே வழி இந்த பேருண்மைதான். பெரும்பாலோர் பிரட்சனைகளைத் தீர்க்க முடியவில்லை என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் விஷயங்களில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் சாட்சி பாவத்தில் சிறந்த முடிவுகளைத் தர முடியும் ஆன்ம விழிப்புணர்வு பெற்ற பின்பு நமக்குள் இந்த ஆற்றல் வளர்கிறது. எவ்வகையான சூழ்நிலையானாலும், சோதனையினாலும் அவற்றை சந்திக்க தயாராகி விடுகிறோம். நாடகத்தில் நமது கதாபாத்திரத்தை உணர முடியும். மிகவும் தீர்க்கமான தெளிவான முடிவு எடுக்க முடியும்.

ஆன்ம விழிப்புணர்வு பெற்ற பின்பு சிலருக்கு பிரட்சனையை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். ஆச்சரியப்படத் தேவையில்லை. நாம் தூய்மையான புற சூழ்நிலையில் வாழவில்லை என்பது உண்மை. வாழ்க்கை என்பது சோதனைகளையும், பிரச்சனைகளையும் சந்தித்து மிகுந்த ஆற்றலுடனும் ஆன்ம சக்தியுடன் தீர்வு காண்பதுதான், செயற்கையான விஷயங்கள் நாளடையில் மறையத் துவங்கும். நாம் தூய்மை ஆக்கப்பட்ட பின்பு ஆன்மாவாக மாறுகிறோம். இந்த நிலையில் தான் நாம் உண்மையை உணர்ந்து கொள்கிறோம். நமது சகஜயோகம் இந்த தர்ம யுத்தத்தில் போரோட நமக்கு அன்பு என்னும் சிறந்த ஆயுதத்தைக் கொடுத்துள்ளது.

ஆன்மாவாக மாறும் பேரின்ப நிலையினேயே நமக்கு பூரணமான அனுபவத்தைக் கொடுக்கிறது. இது தான் நாம் தேடிக் கொண்டிருக்கும் பேருண்மை.


கூட்டுணர்வு

கூட்டு வாழ்க்கையின் மூலமும் சமுதாயத்தில் இணைந்து வாழ்வதன் மூலமும் மனித இனம் பரிணாம வளர்ச்சி முழுமை அடைந்த கால கட்டத்தைக் குறிப்பது விசுத்தி சக்கரம். நமது செயல் நயம் இந்த சக்கரத்தை செயல்பட செய்கிறது. இது பிறருக்கும் நமக்குமாக செயல் நயத்தை வெளிப்படுத்தும் சக்கரமாக அமைகிறது. பிறரை நாம் மதிக்கவில்லைஎன்றால் அவர்கள் நம்முடன் சகோதர உறவுகளை வைத்துக் கொள்ள மாட்டார்கள். எனவே இந்த சக்கரம் மிகவும் முக்கியமான சக்கரம். இதன் மூலம் தான் நமது கூட்டுணர்வு சக்தியை வளப்படுத்திக் கொள்ள முடியும். நம்மீதே நமக்கு மதிப்புக் குறைந்தால் நமக்குள்ளே குற்ற உணர்வு ஆழ்மனத்தில் சேரும் , இடது விசுத்தியைப் பாதிப்புக்குள்ளாக்கும். இதைத் தொடராவிட்டால் நமது ஆன்ம வளர்ச்சிக்கு தடை ஏற்படுகிறது. சமய சடங்களாலோ, ஒழுக்கக் குறைபாடுகளாலோ நமது ஆன்ம வளர்ச்சிக்கு தடைகள் ஏற்படுவதுண்டு. நாம் குற்ற உணர்வு கொள்ளாமல் பழகிக் கொள்ள வேண்டும். நமக்குள் குற்ற உணர்வுகளைத் தேக்கிக் கொண்டு, நம்மை அதனின்று மறைந்து வாழவும் தேவையில்லை. நாம் நமது ஆன்மாவை உணர்ந்த ஆன்மா குற்ற உணர்வுகளை சேர்த்துக் கொள்வதில்லை. ஆன்ம விழிப்புணர்வு பெற்ற பின்பு நாம் நமது குறைகளை அறிந்து நீக்கி விட வேண்டும். " நான் குற்றமற்றவன்" என்ற உறுதி மொழியைக் கூறுவதன் மூலம் தூய்மைபடுத்தலாம்.


இந்த சக்கரம் சொல்வன்மையேக் குறிக்கிறது. நாம் பயன்படுத்தும் சொற்கள் மிகவும் இனிமையானதாகவும், மேன்மையானதாகவும் இருத்தல் நலம். கடுமையான வார்த்தைகள், கீழ்த்தரமான வார்த்தைகள் இந்த சக்கரத்தைப் பழுது அடைய செய்யும். மிக அதிகமாகப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். இதனால் வலது பக்கமுள்ள விசுத்தி சக்கரம் வலுவிழக்கிறது. நாம் பேசும் போது நமது இதயத்திலுள்ள ஆன்மாவை சாட்சியாக வைத்துக் கொண்டுப் பேசிப் பழக வேண்டும். தேவையற்ற மந்திரங்களை அதிகம் பயன்படுத்துவதால் இச்சக்கரம் பழுதடையும். இது உண்மைதான். இன்று மந்திரங்கள் வாணிகப் பொருளாகி விட்டது. இது சில சமயம் நமது உணர்வுகளை வயப்படுத்தி மயக்க உணர்வு கொடுக்குமே தவிர ஆன்மாவுக்கு எந்த பலனும் கிடைப்பதில்லை.


இது போல் தன்னிச்சையாக மந்திரங்களைப் பிரயோகப்படுத்துவதால் அல்லது தன வயப்படுத்துவதுள், நமது மேலான உணர்வுகளுக்கு எதிர்மறையாக அமையும். நாம் நமக்குள் இருக்கும் ஆன்மாவின் வளர்ச்சியைத் தியானத்தின் மூலம் அனுபவப்பட வேண்டும். இது வெறும் கருத்துக் கோர்வையாக இருக்கக் கூடாது. இது நமக்கு ஆழமான அமைதியையும் எண்ணங்களற்ற நிலையையும் கொடுத்து நமக்குள் சக்தியை உருவாக்கி சமநிலைப்படுத்துகிறது.

விசுத்தி சக்கரத்தின் சமநிலை

இச்சக்கரத்தின் சமநிலை பாதிக்கும் போது பணிகாலங்களில் மூக்கு , தொண்டை சம்மந்தப்பட்ட உதாதைகள் ஏற்படும். இதனால் சில சமயங்களில் தொண்டை வலி , இருமல், பல்வலி, காது வலி, போன்ற உபாதைகள் ஏற்படுவதுண்டு. நாம் சில சமயம் குற்ற உணர்வு பெற்றவர்களாக இருக்கும் போது தோள் இறுக்கம், கழுத்துவலி போன்ற பாதிப்புகள் ஏற்படும் . வழக்கத்துக்கு மாறான கடுமையான வார்த்தைகள் பயன்படுத்துவதாலும் மறைமுகமாக வசை சொற்கள் பயன்படுத்துவதாலும் இச்சக்கரம் தடைப்படும்.

விசுத்தி சக்கரத்தின் சமநிலை

இச்சக்கரத்தின் சமநிலை பாதிக்கும் போது பணிகாலங்களில் மூக்கு , தொண்டை சம்மந்தப்பட்ட உதாதைகள் ஏற்படும். இதனால் சில சமயங்களில் தொண்டை வலி , இருமல், பல்வலி, காது வலி, போன்ற உபாதைகள் ஏற்படுவதுண்டு. நாம் சில சமயம் குற்ற உணர்வு பெற்றவர்களாக இருக்கும் போது தோள் இறுக்கம், கழுத்துவலி போன்ற பாதிப்புகள் ஏற்படும் . வழக்கத்துக்கு மாறான கடுமையான வார்த்தைகள் பயன்படுத்துவதாலும் மறைமுகமாக வசை சொற்கள் பயன்படுத்துவதாலும் இச்சக்கரம் தடைப்படும்.

சுத்திகரிப்பு முறை

கனிமம்: மெழுகுவர்த்தி கழுத்துப் பகுதியில் காட்டுவது சுவாசத்தைக் கண்காணிக்க வேண்டும். உன்னியும், வெளியேயும் இழக்க வேண்டும். இந்த நேரத்தைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும். இறுதியில் உள்ளே , வெளியே இழுக்கும் பயிற்சி நின்று விடும். அந்த நிலைக்கு முயற்சிக்கலாம்.


குறிப்பு

* சுவாசப் பயிற்சி ஹத யோகப் பயிற்சி எனலாம்.

* உறுதி மொழி : " அன்னையே என்னைப் பரிபூரனத்துவத்தில் ஒரு அங்கமாக ஏற்றுக் கொள்ளும்.

பொது அறிவுரை:

பனிக்காலங்களில், கழுத்து, காது, மூக்கு ஆகிய பகுதிகளை கைக் குட்டையைப் பயன்படுத்தி பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
கைகளை நன்றாகக் கழுவ வேண்டும். உப்புக் கரைசலைப் பயன்படுத்தி வாய், தொண்டை ஆகியவற்றைக் கொப்பளிக்க வேண்டும். ஊற வைத்த பச்சரிசியை நன்கு மென்று உண்ண வேண்டும். ஆலிவ் ஆயில் பயன்படுத்தி மசாஜ் செய்ய வேண்டும். தலையில் எண்ணெய் விட்டு மசாஜ் செய்ய வேண்டும். மூக்கில் தினமும் நெய் பச்சைக் கற்பூரம் கலந்து ஒரு துளி விட்டு கொள்ள வேண்டும்.


இடது விசுத்தி:

கனிமம்:
மெழுகுவர்த்தி பயன்படுத்தி கழுத்துப் பகுதியில் சுத்திகரிக்கலாம்.

உறுதிமொழி:
" அன்னையே நான் குற்றமற்றவன்"

பொது அறிவுரை:
* தெய்வீக நுண் அதிர்வுகளை விசுத்தி சக்கரத்தின் இடது பக்கம் செலுத்த வேண்டும். இனிமையான சொற்களைப் பயன்படுத்தவும்.
* முகபாவங்களைத் தெளிவாக வைத்துக் கொள்ளவும்.
* சகோதர, சகோதரி உறவுகள் தூய்மையாக இருக்க வேண்டும்.
* அதிகமாக உங்களைப் பற்றி பேசாதீர்கள்.


வலது விசுத்தி

கனிமம்:
கற்பூரம், ஓமம் பயன்படுத்தி கழுத்துப் பகுதி சுத்திகரிக்கலாம்.

உறுதி மொழி :
" அன்னையே இனிமையான முகபாவத்தையும், சொற்களையும் , செயல்பாடுகளையும் கொடுத்து அருள்புரிய வேண்டும்".

பொது அறிவுரை
தெய்வீக நுண் அதிர்வுகளை செலுத்தும் இனிமையான சொற்களைப் பயன்படுத்தவும். வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். கடுமையான வார்த்தைகளில் கவனத்தை செலுத்த வேண்டாம்.

புதன், 8 ஜூன், 2011

ஸ்ரீ மகாலக்ஷ்மியின் எட்டு அம்சங்கள்






ஸ்ரீ லக்ஷ்மியினுடைய சக்தி மூலமாகத் தான் நாம் படிப்படியாக வளர்ச்சியடைகிறோம் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். அடித்தளத்திலிருந்து மேல்மட்டத்திற்கு முன்னேறுவதற்கான மீட்பு சக்தி ஆகும் . முதலில் நாம் காண்பது லக்ஷ்மி வடிவமே ஆகும். அவளே மேரி ஆகும். கிருஸ்துவின் அன்னையின் பெயரும் மேரி. ஏனெனில் அவள் சமுத்திரத்திலிருந்து தோன்றியவள். கடலிலிருந்து வந்த பிறகு இராஜலக்ஷ்மியாகவும், கிரக லக்ஷ்மியாகவும் விளங்குகிறாள். நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக சேர்ந்து நலமுடன் வாழ வைப்பவள் இராஜலட்சுமி. தனி நபரின் இல்வாழ்க்கைக்கு உதவுபவள் கிரகலட்சுமி.


மனைவியே கிரகலட்சுமி ஆவாள். இல்லத்தில் இருக்கும் பெண் தெய்வமும் அவளே. கிரகலக்ஷ்மியின் மூலமாகவே அமைதி கிடைக்கும். மண்ணீரல் சரியாக சரி செய்து கொள்வதின் மூலம் அமைதி கிடைக்கிறது எனலாம். உடல் முழுவதற்கும் தேவையான ஊட்ட சக்தியை இரத்த அணுக்கள் வழியாக மண்ணீரல் தருகிறது. மண்ணீரல் நமக்குள் இருக்குமிடத்தில் அமைதி இல்லை எனில், மொத்த இயக்கமும் பாதிப்படையும். ஏனெனில் இந்த இயக்கமே நமக்குள் ஊட்டம் தரக்கூடிய இச்சக்தி மையம் அமைதியையும் தருகிறது.

" யா தேவி சர்வ ரூபேனே சமஸ்திதா" என்ற வரிகளைக் கேட்டிருப்பீர்கள். சாந்தி என்ற பெண் தெய்வமே ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அமைதியை தந்து கொண்டிருக்கிறது. இந்த அமைதி பின் வரும் காரணங்களால் தான் பெற முடியும். இல்லத்தரசிகள் தங்களது முக்கியத்துவத்தை உணர்ந்தவர்களாகவும், பொறுமையுடையவர்களாகவும், மன்னிக்க கூடியவர்களாகவும், குடும்ப வாழ்க்கையைத் தக்க வைத்துக் கொள்பவர்களாகவும் இருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையை மீட்பவளாகவும், இருக்க வேண்டும். இவை பாதிப்படையும் போதும் மொத்த இயக்கமும் தடைபட்டு விடுகிறது.


வலது பக்கம் இருப்பவள் இராஜலட்சுமி ஆகும். இந்த இராஜலட்சுமி மேன்மையடையும் பொது மரியாதையை நாம் புரிந்து கொள்வோம். ஏனெனில் நம்மை நாமே மதிக்கின்ற போதுதான் மற்றவர்களையும் மதிக்க ஆரம்பிக்கின்றோம். நீங்கள் அனைவரும் ஆதலால் ஒருவரை ஒருவர் சமமாக மதிக்க வேண்டும். ஒளி மிகவும் முக்கியமான ஒன்று. மனிதன் நெருப்பைக் கண்டு பிடித்த நாளிலிருந்து கிரகலட்சுமி நிலையில் பயன்படுத்தினார்கள்.

உணவை சமைக்க நெருப்பைப் பயன்படுத்தினார்கள். அன்னையின் கவனிப்பு வீட்டில் குழந்தைகளுக்கு உணவு மற்றும் பிற தேவைகளை உணரலாம். பிறகு இவை அனைத்து குணங்களையும் ஒன்றாக்கி ஒளியை ஏற்படுத்தினார்கள். சுதந்திரம் மற்றும் குடியரசு தினங்களைக் கொண்டாட விளக்கேற்றுகிறோம். அல்லது பட்டாசு கொளுத்துகிறோம். நம்மை வெளிப்படுத்திக் கொள்ளும் விதமே இராஜலக்ஷ்மிக்கு வழி வகுக்கிறது. குழந்தைகளிடம் தாயின் பராமரிப்பு, உணவு மற்றும் இன்ன பிற தேவைகளைக் கொடுப்பவள். இராஜலட்சுமி, குடும்பமானாலும், சமுதாயமானாலும் ஒற்றுமையுடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த விழாக் காலங்களில் பயன்படுத்தும் ஒளி, தீபம், மத்தாப்பு, பட்டாசு போன்றவைகளின் மூலம் இராஜலட்சுமி வெளிப்படுகின்றாள்.




எட்டு விதமான மகாலக்ஷ்மியின் அம்சங்கள்

1 . ஆதிலட்சுமி :
ஆதிலட்சுமி என்பவள் மகாலக்ஷ்மியே. குண்டலினி சக்தி மேலெழும்ப சாதனமாக அமைகிறாள்.

2 . வித்யாலட்சுமி :
வித்யா என்பது இங்கு சஹாஜயோகத்தில் கற்றுக் கொள்ள வேண்டிய நுட்பமான யோகா நெறி முறைகளாகும். மற்றவை அவித்யா என்றும் கூறலாம். குண்டலினியை எவ்வாறு மேளிழுப்ப செய்வது, உங்களை நீங்கள் எவ்வாறு தூய்மைப்படுத்திக் கொள்வது, பிறரை எவ்வாறு தூய்மைபடுத்துவது இவை அனைத்தும் " வித்யா" என்று கூறப்படுகிறது. இது இலக்குமியின் கிருபையால் நடைபெறுகிறது.

3 . சௌபாக்ய லக்ஷ்மி :
சௌபாக்கியம் என்றால் நல்ல செழிப்பான காலம் எனலாம். அவள் செல்வத்திலும், ஆரோக்கியத்திலும், உணவு வகைகளிலும், வாழ்க்கை முறையிலும் சிறப்பைக் கொடுப்பவள்.

4 . அமிர்தலக்ஷ்மி :
அமிர்தம் என்றால் இறப்பில்லாதது. இவ்வுலகில் லக்ஷ்மி பொருள் வடிவில் இருக்கிறாள் . பொருட்கள் இறப்பதில்லை. ஆன்மாவின் அருள்வடிவமே அமிர்தலட்சுமி. ஆன்மாவின் அருள்பெற்றவை அழிவதில்லை. ஆன்மாவை திருப்திபடுத்தும் வகையில் எதை செய்தாலும் அது அமிர்தலக்ஷ்மியே உதாரணமாக பிறரை நேசிப்பது, கொடுப்பதனால் ஏற்படும் ஆனந்தம் இதில் மிகவும் சிறப்பானது பிறருக்கு ஆன்ம விழிப்புணர்வு அழிப்பது நுண் அதிர்வுகள் அழிவதில்லை.

5 . கிரகலட்சுமி :
மனைவி தான் கிரகலட்சுமி. வலது பக்கம் இராஜலட்சுமி.


6 . சத்தியலட்சுமி:
சத்தியலட்சுமி உணர்வு உணர்ந்து கொள்ளும் சக்திதான் சக்தியலக்ஷ்மி சத்தியா என்பது உண்மை. உங்கள் உணர்வில் மேன்மை அடையும் பொது உண்மையை அறிந்து கொள்வீர்கள். உண்மை என்றால் என்ன? நீங்கள் என்னை அறிந்து கொள்கிறீர்கள்? நீங்கள்தான் இறைவனின் கருவி என்பதை உணர்கிறீர்கள். ஏனெனில் இது மாயா நரம்பு மண்டலம் வழியாக வழிந்து செல்கிறது. இதுதான் உண்மை என்பதை நீங்கள் உணர்வீர்கள். உண்மையின் இரண்டாம் நிலை என்ன? " நீங்கள் யார்?" நீங்கள் தான் ஆன்மா, உண்மையின் மூன்றாம் நிலை " நான் யார்?"
கடவுள் யார்? உன்னுடைய விதி என்ன? இதை முழுமையாக உணர முடியும். இந்த உணர்வு தான் சத்தியலட்சுமி.

7 . பாக்கியலட்சுமி :
பாக் என்றால் அனுபவித்தல் என்பது பொருள். உங்களை சுற்றிலும் மகிழ்ச்சி எனும் மகா சமுத்திரம் உள்ளது. நீங்கள் பறவையைப் போன்றவர்கள். தாகத்தை தணிக்க முடிவதில்லை. பாக்கியலக்ஷ்மியின் அருளால் தான் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும்.

8 . யோகலட்சுமி :
லக்ஷ்மியின் சக்தி தான் யோக மார்க்கத்தை கொடுக்கிறது. யோகலட்சுமி தான் யோகா சக்தியைக் கொடுப்பவள் . யோகா சாதனையில் முழுமை அடையும் போது இலட்சுமியின் அருள் கிடைக்கும்.


நீங்கள் உடல் , கண், காது, வாய் .... போன்றவை அல்ல. தூய்மையான ஆன்மாவே தான். ஜீவாத்மா என்பது மூளையின் ஆசான். மூளையைக் கட்டுப்படுத்தி செயல்படுவது.

ஆன்மா:- அன்னையின் சொற்பொழிவு (1 .11 .1981 )

ஆன்மா மிகவும் அபூர்வமானது, இது நமக்குள் இருக்கிறது. இதன் மகத்துவத்தை சொற்களால் விளக்க முடியாது, இது தெய்வீக சக்தி வாய்ந்தது, இது எல்லையற்றது, இதை அளவிட முடியாது.
கடவுள் மிகவும் சக்தி வாய்ந்தவர். " சச்சிதானந்தா" ஸ்வரூபமானவர். சத்-சித்-ஆனந்தம் என்றும் கூறலாம். உண்மை என்று மற்றவர்கள் கூறும் போது அது பகுத்தறியபட்டவை எனலாம், ஆனால் நான் கூறுவது முழுமையான உண்மையே.
'சத் 'என்பது ' புருஷ்' சத்தியம் என்று கூறப்படும் கடவுள் ஆவார். இவர் படைப்புகளை செய்பவருமல்ல, அழிப்பவருமல்ல, உதாரணமாக, நான் சிலவற்றை உற்பத்தி செய்து கொடுக்கிறேன். என்னிடத்தில் ஒளி உள்ளது. இந்தப் பணியை செய்ய உதவியதாக இருக்கிறது, சாட்சியாக இருக்கிறது அவ்வளவுதான்.
'சித்' என்பது சித்தம் - கவனம் . இது தூய்மை அடைந்து துடிக்கும் போது படைப்புகளுக்கு ஆதாரமாக அமைகிறது . இந்த சக்தி தான். படைப்புகளை செய்கிறது.
'ஆனந்' என்றால் ஆனந்தம் என்று பொருள். தனது சிந்தனை ஆற்றலால் சித்தத்தை சத்தியத்தின் மீது நிறுத்தும் போது பேரானந்த நிலை ஏற்படுகிறது. ஆகா இந்த மூன்றும் இணைந்த நிலையே சச்சிதானந்த நிலை எனலாம்.
இந்த மூன்றும் இணைந்து இருக்கும் போது அங்கு மௌனம் நிகழும். இப்போது படைப்புகள் ஏற்படுவதில்லை. வெளிப்பாடுகள் இல்லை. சித்தம் சத்தியத்துடன் இணைந்து ஆனந்தத்தை கொடுக்கிறது. சத்தியத்திலிருந்து சித்தம் விலகும் போது மாயையின் தோற்றங்கள் வெளிப்படுகின்றன. படைப்புகள் துவங்குகின்றன. உயிர்கள் மீண்டும் சத்தியம் என்னும் புருஷத்துவத்தை நெருங்க நெருங்க , அதாவது பரிணாம வளர்ச்சியின் காரணமாக மிருகளிளிருந்து மனித நிலைக்கு உயரும் போது ஆனந்தத்தில் வீச்செல்லை அதிகரிக்கும். நாம் இயற்கையை ரசிக்கிறோம். ஆனால் விலங்குகள் அதை ரசிப்பதில்லை. ஆக நாம் சத்தியத்தின் நெருக்கத்தில் இருக்கிறோம். ஆக படைப்புகள் எவ்வாறு தோன்றுகின்றது. சத்தியத்தின் ஒளி எவ்வாறு மனிதனிடத்தில் வந்து அடைகிறது என்பதை நம்மால் உணர முடிகிறது.

----------------- மாதாஜி ஸ்ரீ நிர்மலா தேவி

வெள்ளி, 3 ஜூன், 2011

அனாகத சக்கரம்





மைய தேவதை : ஸ்ரீ ஜெகதாம்பா
ஸ்தூலம் :: இதய நரம்பு சக்தி மையம் , இடது இதய நரம்பு சக்தி மையத்தின் ஒரு பகுதி, நெஞ்சு எலும்புக் கூடு.
வெளிப்பாடு : மூச்சுவிடுதல் , மார்பகங்கள்.
தன்மை : ஜகத்தை ஆளும் அன்னை, அன்னை பாதுகாப்பு, எதிர்ப்பு சக்தி
இதழ்கள் : 12
கனிமம் : காற்று
குறியீடு : ஜோதி
கையில் உள்ள இடம் : சிறுவிரல்
உபாதைகளுக்குக் காரணம் : பாதுகாப்பு அற்ற நிலை, தாய்மை குறைகள், பயம், ஆவி பிடித்தல்


இடது:


தேவதை : சிவா, பார்வதி
ஸ்தூலம் : இதயத்துடிப்பு ( அனாகத் - ஒலி)
தன்மை : அன்பு, பேரின்பம், சத்-சித் ஆனந்தம்
கையிலுள்ள இடம் : இடது சிறிய விரல்
ஸ்தூல வெளிப்பாடு : இதயம், இடது இதய நரம்புகள்
உபாதைகள் : அதிகமான உடலுழைப்பு, மன உளைச்சல், தவறான தாய்மை உறவுகள், அடயோகம், சித்தத்திற்கு வெளியில், மருந்துகள், நாத்திகன், கடவுளுக்கு எதிரான செயல்கள் செய்தல்.


வலது




தேவதை : ஸ்ரீ சீதா ராமா
ஸ்தூல வெளிப்பாடு : இதய நரம்பு மையம் (வலது)
தன்மைகள் : தந்தை, தந்தைக்கு செய்யும் கடமைகள், கணவனாகவும் , சகோதரனாகவும் கடமைகள்.
கையில் இடம் : வலது சிறுவிரல்
உபாதைகள் : தந்தை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், ஆணவம், இரக்கமற்ற தன்மை, சட்டத்திற்கு மாறான வழிகளில் ஈடுபடுதல்.



குழந்தை பிறந்தவுடன் முதலில் தனது தாயைத்தான் அறிந்து கொள்கிறது. பிறக்கும்போது குழந்தை தனது ஆன்மாவை அறிந்திருக்கிறது. கருப்பையிலிருந்து வெளியே வந்தவுடன் குழந்தை அதிர்ச்சி அடைகிறது. அதன் முதல் எதிர்ச்செயல் உடனே கருப்பைக்குள் செல்ல விழைகிறது. இந்த நிலையில் அதன் மனம், கட்டுப்பாடுகள், அகங்காரம் , வளர்ச்சி பெறவில்லை. தூய்மையான ஆன்மாவாக இருக்கிறது. இந்த ஆன்மா தனது தாயின் அரவணைப்பில் புதிய சூழ்நிலையில் சுகத்தைப் பெறுகிறது. இந்த எதிர்செயல்தான் உண்மையான அன்பு அல்லது கட்டுப்பாடற்ற அன்பு, இது கட்டுப்பாட்டுடன் கூடியதல்ல. இது இரண்டு ஆன்மாவின் தூய்மையான சங்கமம். இதை ஆனந்தம் என்றும் கூறலாம்.


தன்மைகள்

இது 'நான்' என்பதற்கான இருப்பிடம். 'ஆன்மா' எல்லாம் ஒன்றைத்தான் குறிக்கிறது. அன்னை அவர்கள் மீண்டும் மீண்டும் இதை வலியுறுத்துகிறார்கள். " நீங்கள் பரிபூரணமான ஆன்மாவே ". இவ்வாறு கூறுகிறார்கள். நாம் நமது ஆன்மாவை அறிந்து கொள்ள முயல வேண்டும். இதற்கு உபயோகமற்ற மாயையை மனத்திலிருந்து விலக்கி விட வேண்டும். நாம் ஆன்மஞானம் பெற்றபின் நமது ஆன்மாவாக மாற முயல வேண்டும். நாம் நமது உடல், மனம், உணவு சம்பந்தப்பட்ட பொய்யான ஸ்தூல வஸ்துக்களைத் தவிர்த்து நமது தூய்மையான சித்தத்தை இதயத்தில் செலுத்தி சுத்திகரிக்க செய்ய வேண்டும். ஆன்ம ஞானத்திற்குப் பிறகு தான் நமது சித்தத்தை இதயத்திற்கு செலுத்தி சுத்திகரிக்க முடியும். நமது இதயம் திறந்த நிலையிலும், தூய்மையாகவும் இருந்தால் தான் ஆன்மா பிரகாசத்துடன் வெளிப்படும். இந்த நிலையில்தான் எல்லா தோற்றத்திற்கும் காரணமான பேரானந்த சுகானுபவத்தை உணர்ந்து அவற்றில் நமது நிலையை அறிந்து கொள்ள முடிகிறது. நாம் நமது தூய்மையான விருப்பத்தின் மூலமாகவும் சித்தத்தின் மூலமாகவும் இதயத்தை சுத்திகரிக்க முடிகிறது. " நான் தான் ஆன்மா" என்ற உறுதிமொழியை உள்ளுணர்வோடு கூற வேண்டும். இது வெறும் இயந்திர செயலாக, வெளிவார்த்தையாக இருக்கக் கூடாது.


அன்பு ( தூய்மையான அன்பு )

இதய சக்கரத்தின் உண்மையான தன்மை என்பது எல்லாவற்றையும் பிரகாசிக்கச்செய்யக் கூடிய தூய்மையான அன்பே ஆகும் . நாம் ஆன்ம விழிப்பு அடையாத நிலையில் மிகவும் குறைவாகவே நாம் அன்பிற்காகவே அன்பு செலுத்துகிறோம். நம்முடைய கட்டுப்பாடுகள் காரணமாக நாம் நமது அன்பை மோகம், காம இச்சை, சுயநலம் ஆகியவற்றுடன் ஒப்பிட்டு குழப்பமடைகிறோம்.



தூய்மையான அன்பு பற்றற்றது. இது எந்த பிரதிபலனையும் எதிர்ப்பார்த்து வெளிப்படுவதில்லை. இது மரம் எவ்வாறு எந்த நோக்கமும் இல்லாமல் வேறுபாடு கருதாமல் எல்லோருக்கும் நிழலைக் கொடுக்கிறதோ அதுபோல அன்பு என்பது சுயநலமில்லாது வெளிப்படக் கூடியது. உண்மையான அன்பு என்பது ஆன்மாவிலிருந்து வெளிப்படக் கூடியது. உடலில் இருந்தோ உள்ளத்திலிருந்தோ வெளிப்படுவதல்ல. நாம் எவரிடமாவது அன்பு செலுத்துகிறோம் என்றால் நாம் இந்த அன்பு எந்த திசையில் செல்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். உடலமைப்பின்பால் செலுத்தும் அன்பு ஸ்தூலத்தன்மை வாய்ந்தது. இது காம இச்சையின் வெளிப்பாடு எனலாம். அல்லது கனவில் தோன்றிய உருவங்களின் வெளிப்ப்பாடாக இருக்கலாம். கற்பனையின் வெளிப்பாடு அல்லது விளம்பரதாரரின் விளம்பரமாகவும் இருக்கலாம்.சில தரம் குறைந்த படைப்புக்கள் மூலமாக பிறரை கவர்ந்திழுக்க முயற்சி செய்யலாம். இதை நாம் சிலரது மிகைப்பட்ட விளம்பரங்களில் காணலாம். இவைகளில் இரண்டு ஆன்மாவின் உறவை வெளிப்படுத்துவதாக இல்லை. எனவே இவர்களிடையே இடர்பாடு ஏற்படத்தான் செய்யும். இது உடல்ரீதியாகவும் உள்ளரீதியாகவும் வெளிப்படுவதேயாகும். இது உண்மையான அன்பு அல்ல. இது உடலுக்கும் மனதிற்கும் வேண்டிய தேவை எனலாம். மனத்தின் தேவை பூர்த்தியான பின்பு அன்பு மாறுகிறது. உதாரணமாக குழந்தைக்கு ஒரு பொம்மை தேவைப்படுகிறது. அது கிடைத்தவுடன் அதை விளையாடியபின் அதைத் தூக்கிப் போட்டு விடுகிறது. இது போல் தான் உடல் ரீதியான அன்பும் வெளிப்படுகிறது.


மணமகள் மணமகனின் வாழ்க்கையில் நுழையும் தருவாயில் அவனுக்குள் இருக்கும் ஆன்மாவை வரவேற்கிறாள். திருமணம் என்பது இரண்டு ஆன்மாக்களின் சங்கமம் எனலாம். ஆன்மாவை அறிந்து கொள்ளாமல் செய்யும் திருமணம் வெறும் சமுதாயச்சடங்கு எனலாம். அல்லது ஒப்பந்தம் எனவும் கூறலாம். இந்த சடங்குகள் மாற்றத்திற்குட்படும் ஒப்பந்தமாக அமைகிறது. இறுதியில் பிளவும் ஏற்படலாம். இது எதிர்மறையாக இதயத்தையும் பாதிக்கலாம். இதனால் பாதுகாப்பற்ற உணர்வும் ஏற்படும். இருவருக்குமிடையே உள்ள நம்பிக்கையை விட கணவன் மனைவிக்கிடையே பாதுகாப்பற்ற உணர்வு ஏற்படும். இன்றும் என் சமுதாயத்தில் பாதுகாப்பற்ற நிலை காரணமாக பல பிரச்சனைகள் ஏற்பட்டுக்கொண்டு இருக்கின்றன. இது பணத்தினால் மட்டும் ஏற்படுவதல்ல.

உண்மையில் அன்பு என்பது எல்லா உயிர்களிலும் உயிரோட்டமாக அமைந்திருப்பது. குழந்தைகள், பெற்றோர்கள், சகோதரிகள், சகோதரர்கள், நண்பர்கள், முதியோர்கள் இவர்களிடையே நிலவுவது. மக்களிடையே பரிவர்த்தனையும், இடுபாடும் இருந்தால் இதயச்சக்கரம் முழுமையாகத் திறக்கப்படும். இது ஒரு கூட்டு சமுதாயமாக மாறி உலகத்தை மாற்றியமைக்கும். இதுதான் அன்பின் சக்தி. எல்லா தோற்றத்திற்கும் காரணமானது அன்புதான். நுண் அதிர்வுகளே இதன் வெளிப்பாடு. நாம் ' கடவுளே அன்பு', 'அன்பே கடவுள் ' என்று கூறுகிறோம். ஏனெனில் ஆழமான அன்பில் நாம் நம்மை இழக்கிறோம். உண்மையில் நாம் என்ற தன்மை மறைந்து ஆன்மாவின் சங்கமம் ஏற்படுகிறது. இந்த நிலையில் நாம் உண்மையான மானிட சங்கமத்தை அனுபவிக்கிறோம். வாழ்க்கையின் உண்மையான பூரணத்துவமாக அமைகிறது. உருவ அமைப்பில் நாம் வெவ்வேறு நிறங்களிலும் வடிவங்களிலும், பணிகளுடனும் இருந்தாலும் ஆன்மாவாக ஆகும்போது எல்லா துளிகளும் பிரம்மசாகரமாக இணைகிறது. இவற்றின் நுண் அதிர்வுகள் மாறுபட்ட விதங்களில் பல வகையான சந்தங்களில் தொடர்ச்சியான பிரபஞ்ச நடனம் மறைந்தும் தோன்றுவதுமாக இருக்கிறது.

வெறுப்பும் , பொறாமையும் பிரபஞ்ச சந்தத்திற்கு மாறான எதிர்சக்தியை ஏற்படுத்துகிறது. அன்பு இருக்குமிடத்தில் வளர்ச்சியும், கொண்டாட்டமும் , மகிழ்ச்சியும் பரிமளிக்கிறது.

பாதுகாப்பு

அச்சத்தின் காரணமாக மிகுதியான பிரச்சனைகள் தோன்றுகிறது. தன்னம்பிக்கை நமக்கு இருக்குமானால் உறுதியான பாதுகாப்பு உடையவராகிறோம். இந்த தன்னம்பிக்கையானது வெளித்தூண்டுதல்களால் வரும் அடிப்படை ஆசைகள் மற்றும் எதிர்மறை சக்திகளிடமிருந்து பாதுகாப்பு தருகிறது. அச்சத்துடன் நாம் வாழ்கிறபோது நமது உடலின் எதிரியக்கம் பலவீனமடைந்து மதன் காரணமாக ஒவ்வாமைகளுக்கும் வியாதிகளுக்கும் உள்ளாகிறோம். நமது இதயம் உறுதியாக இருக்கும் போது நமது தோற்றம் கம்பீரத்துடன் பரிமளிக்கிறது. மேலும் நாம் நமது வாழ்க்கை முறையை ஒரு மாவீரன் வெற்றியை அணுகுவது போல் உறுதியுடன் அணுகுவோம். பலவீனம் அடையும் போது பயம் எனும் கூட்டில் சிறைப்பட்டது போன்றும் வெளியே வரத் தயங்குவது போன்றும் இருப்போம். இதனால் வாழ்க்கையின் பல்வேறு சுக அனுபவங்களை கெலிடியாஸ் கோப்பில் தெரிவது போல் பலவிதமான கோணங்களில் அறிய முயல்வதில்லை. பிறருக்குக் கொடுப்பதனால் நாம் நம்மையே ஈர்க்கிறோம். மன இறுக்கம் உடையவர்களாக நாம் இருப்பின் அவ்வாறு உள்ளவர்களபால் ஈர்க்கப்பட்டு அதன் தொடர்பான பிரச்சனைகளுக்கு தொடர்ச்சியாக உள்ளாகிறோம். எனவே நமது உறவுமுறைகளை வளப்படுத்த உறுதியானவர்களாகவும், திடமானவர்களாகவும் இருப்பது அவசியமாகிறது. குழந்தைப் பருவத்தில் அன்னையின் அன்பு மறுக்கப்பட்டவர்களுக்கு அதை ஈடு செய்வது போன்ற உறவுகளே இந்த இடைவெளியில் இணைக்கும் பாலமாகிறது. உறுதியான இதய மையமே ஆரோக்கியமான தோற்றத்திற்கு ஆதாரமாக அமைகிறது. அன்போடு வளர்க்கப்படும் போது நம்மிடமிருந்து மகிழ்ச்சியும் ஊக்கமும் வெளிப்படுகிறது. அன்பே இயற்கையின் இயல்பாகும். விதையானது அன்பின் காரணமாக மண்ணிலிருந்து வளம் பெற்று உயிரோட்டம் அடைகிறது. ஒரு மருத்துவரின் அன்பும், அரவணைப்புமே நோயைக் குணப்படுத்தும் சக்தியாக அமைகிறது. இவ்வாறாக நோயாளி ஆரோக்கியத்தில் முன்னேற்றம் அடைந்ததை உணர்கிறாள். தேனீ தேனீக்களை ஈர்ப்பது போல் அன்பும் அரவணைப்பும் கொண்ட மக்களிடமிருந்து வெளிப்படும் நுண் அதிர்வுகள் நம்மை ஈர்க்கிறது. அன்புதான் அரவணைப்பாக மாறி மனித இனத்திற்கு வந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்யத் தூண்டுகிறது. இது தன்னிச்சையாக நிகழும் செயல் இது அறிவு பூர்வமான முடிவாக இருப்பதில்லை.

உறவுகள்

நமது பெற்றோருடன் உண்டான உறவுகள் இதய சக்கரத்தில் உள்ளன. நம்மைப் பெற்றதாய் இந்த சக்கரத்தில் இடது பக்கத்தில் இருக்கிறார். நமது தந்தை வலது பக்கத்தில் இருக்கிறார். நாம் நமது பெற்றோர்கள் நமது இதயத்தில் இருப்பதாக அறிந்து கொண்டால் நமது குடும்பப் பிரச்சனையிலிருந்து தப்பிக்க முயலமாட்டோம்.

எல்லா சந்தர்ப்பங்களிலும் அவர்களிடம் அன்புடன் மரியாதை செலுத்துவது நமது கடமையாகும். பொற்றோர்கள் குழந்தைகளுக்கு தூய்மையான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதனால் அவர்கள் ஆன்ம வளர்ச்சி பெறுவார்கள் . அவர்கள் குழந்தைகளை எந்தவித பற்றுதலும் இல்லாமல் பயமும் இல்லாமல் பாதுகாவலரைப் போல் அன்பு செலுத்த வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு என்ன அறிவுரை கூறுகிறார்களோ அதை அவர்கள் பின்பற்ற வேண்டும். பெற்றோர்கள் மதிப்புக்குரியவர்களும், மதிக்கத் தகுதி வாய்ந்தவர்களுமாவார்கள்.

கணவன் மனைவி உறவும் கூட இதயப் பூர்வமானதாகும். ஒருவர் மற்றவரை அடிமைப்படுத்துவது, உடமைப்படுத்திக் கொள்வது போன்றவற்றால் அன்பு தடை செய்யப்படுகிறது. ஆன்மாவிலிருந்து வெளிப்படும் அன்பின் பிரவாகம் ஊற்றிலிருந்து வெளிப்படும் நீர் போல் எல்லா திசையிலும் சுதந்திரமாக செல்லும் தம்பதியர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மதித்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களது வளர்ச்சியை தனித்தன்மையாகவோ தனிப்பட்ட விருப்பத்தாலோ தடை செய்யக் கூடாது. ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு உறவு வலுப்பெறும் போது கணவனும் , மனைவியும் தங்களது சமமான நிலையை உணர்வார்கள். இவர்களும் இந்த சமநிலை பாதிக்கப்படும்போது கணவன் தனது பொருளீட்டும் தகுதியில் மனைவியின் உணர்வுகள் கணவனின் ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டால் அது கோபமாக குழந்தைகளிடம் வெளிப்படும். இதுவே இறுதியில் நியுரூசிஸ் எனும் மனநோயாக மாறும்.


குடும்ப அமைப்பு என்பது ஒரு சமுதாய அமைப்பின் முக்கியமான அங்கம். இந்த அமைப்பின் அடித்தளம் என்பது மரியாதை, அன்பு, உறவுகளுக்கிடையேயான கடமைகள். குடும்ப அமைப்பு பாதிப்புக்குள்ளாகும் போது சுதாயமும் பாதிப்படைகிறது. நாம் பிரச்சனைகளை கண்காணிக்க வேண்டும். ஆகா சுமுதாயப் பிணைப்பு குடும்ப உறவுகளை செயல்பட செய்வது அற்பமாகும். மேற்கத்திய நாடுகளில் பாதுகாப்பற்ற நிலை. இருப்பதற்கு காரணம் அவர்களிடையே உள்ள போட்டி மனப்பான்மையும், முதியோர் இல்லத்தை சென்றடைய வேண்டியிருக்கும் எனும் கவளையுமாகும். இது கவலைப்படக் கூடிய விஷயம். உணர்வுப் பூர்வமான பாதுகாப்பை பணத்தால் பெற முடியாது. குழந்தைகளைப் போல் முதியோர்களைப் பாதுகாக்கும் சமுதாயத்தை பணம் மட்டும் உருவாக்கித் தர முடியாது. பரஸ்பரமான அன்பினால் மட்டுமே இது சாத்தியமாகும்.

மதிக்கத்தக்க ஆன்மீக கலாச்சாரம் முதியவர்களுக்கு ஞாத்தையும் தீர்க்கமான சிந்தனையும் கொடுக்க வல்லது. இதய சக்கரத்தின் இருப்பிடம் பிரம்மரந்தரா என்று அழைக்கப்படும் இடம் உச்சந்தலையில் சகஸ்திராரத்தில் மையத்தில் அமைந்துள்ளது. இங்குதான் ஸ்ரீ கெளரி ( குண்டலினி மாதா) ஸ்ரீ பார்வதி ஸ்ரீ சிவாவுடன் இணைந்து இருக்கும் இடமாகும். ஸ்ரீ சிவா இடது இதய சக்கரத்தின் தேவதையாக சாட்சி பாவத்துடன் இருக்கிறார். நமது இயக்கத்தை நிர்வகிக்கக் கூடிய பொறுப்பு வகிக்கிறார். மிகுந்த மரியாதையுடன் இந்த சக்கரத்தை கவனிக்க வேண்டும். இந்த இந்த இதய சக்கரத்தில் இருக்கும் தேவதை ஸ்ரீ ஜெகதாம்பா , பிரபஞ்ச நாயகி , இதைத் தவிர நமக்கு பாதுகாப்பும், தன்னம்பிக்கையும் கிடைக்கிறது. ஸ்ரீ ராமர் வலது இதயத்தில் தேவதையாக இருக்கிறார். இவர் மரியாதைக்குரிய புருஷராகவும், கணவனாகவும், மகனாகவும், சகோதரனாகவும், ஆட்சியாளராகவும் நடந்து கொண்டார். மனித இனத்திற்கு ஒழுக்கத்தின் எல்லைகளை வரையறுத்து மரியாதைக்குரிய புருஷராக வாழ்ந்து காட்டியவர். இவர் எல்லா நிலைகளிலும் கடமையுணர்வுடன் செயல்பட்டார்.

ஸ்தூல வெளிப்பாடு:
இதயம் நமது சரீரத்திற்கு பம்ப் ஹவுஸ் ஆக செயல்படுகிறது. இதனால் மன அழுத்தத்தினாலும், மன இருக்கங்களினாலும் இந்த சக்கரம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. உடலில் சோர்வு ஏற்படுவதற்கு காரணமான சக்கரம் ஓட்டப்பந்தயங்களில் அதிகம் பங்கு கொள்வதால் இந்த சக்கரம் பழுதடைகிறது. உடற்பயிற்சி விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதால் அகங்காரம் மட்டும் அதிகரிக்கும். அதுபோலவே தற்கால ஹத யோகம் என்பது உடற்பயிற்சி மட்டும்தான். ஆன்மாவுடன் இதற்கு தொடர்பு இல்லை. பண்டைக் காலத்தில் குருக்கள் முதுகுத் தண்டு வடம் பழுதடைந்திருந்தால் சரி செய்வதற்கு இப்பயிற்சி கற்றுக் கொடுக்கப்பட்டது.

உடல் அமைப்பு இயற்கையாகவே ஆன்மாவை அறிந்து கொள்ளும் வகையில் உள்ளது. இவற்றை சில சமயங்களில் சமநிலைப்படுத்த உடலைத் தயார் செய்வார்கள். இவ்வாறு ஹத யோகம் பள்ளி துவக்கப்பட்டு இன்றை நவநாகரீக யுகத்தில் " யோகா " என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. பல மணி நேரங்கள் செலவழித்து யோகாசனம் மக்கள் செய்கிறார்கள். தலைகீழாக ஆசனம் செய்வதால் நாம் இறைவனை அறிந்து கொள்ள முடியாது.
யோகா என்பது சமஸ்கிருதத்தில் இணைதல் என்று பொருள். இங்கு இணைப்பு என்பது குண்டலினி எல்லாம் வல்ல இறைசக்தியுடன் இணைவது என்பதாகும். குண்டலினி, சரியான வாழ்க்கை முறையைப் பின்பற்றியும், எண்ணங்கள், மற்றும் செயல்முறையிலும் தூய்மை அடைந்தும் கடவுளை அறிந்து கொள்ள முடியும்.
நமது உடலை நுட்பமான இயந்திரமாக நாம் நினைத்தால், இயந்திரமாக மாறுகிறோம். மிக அதிகமான வலது பக்க நடவடிக்கை ஒருவரை குளிர்ந்த தன்மை வாய்ந்தவராக மாற்றிவிடும் அன்பை அறியாதவராக்கி விடும். இதனால் இவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. ஏனெனில் ஆன்மா பாதிப்படைகிறது. நாம் சில நேரங்களில் அவதிக்குள்ளாகும் போது தூய்மை அடைவதாக நினைப்போம். ஆன்மாவின் தனித்தன்மை பாதிக்காத வரை நல்லது. நமக்கு திடீரென கிடைக்கும் ஏமாற்றமும், தன்னை வருத்திக் கொள்ளுதல் ஆன்மாவுக்கு எதிரான செயலாகும்.

இதய சக்கரத்தின் செயல்பாடு

பயமும், பாதுகாப்பற்ற நிலையும் இதயத் துடிப்பை அதிகரிக்கும். அதிகமான செயல்பாடுகளும், திட்டங்களும் பலமிழக்க செய்கிறது. இறுதியில் இச்சக்கரத்தை பாதிக்கிறது. கடுமையான நோன்பு முறைகளைப் பின்பற்றினாலோ, ஆன்மா சம்மந்தமில்லாமல் செய்யும் உடல் ரீதியான நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும். மார்பகப் புற்று நோய் மற்றும் இதர பெண்களது பிரட்சனைக்கு காரணம் அவர்கள் ஓடுக்கப்பட்டதாலும் நேர்மையற்ற முறையில் பெண்களை நடத்துவதாலுமாகும். அதிகமான பயமும், பாதுகாப்ப்றி உணர்வும் நிரோசிஸ், அலர்ஜி போன்ற வியாதிகள் ஏற்படும்.

சுத்திகரிப்பு

* விளக்கின் ஒளியை இதய சக்கரத்தில் காட்டுவது.
* மூச்சு இழுத்து மெதுவாக வெளியிடுதல் " ஜெ ஜெகதாம்பா" 12 முறை கூற வேண்டும்.

உறுதிமொழி

" அன்னையே எனது இதயத்தை தங்களது தெய்வீக அன்பினால் நிரப்புங்கள், பயமற்ற உணர்வைக் கொடுக்கவும்".

பொது அறிவுரை

" இதயத்திற்கு முன்னும் , பின்னும், தெய்வீக நுண் அதிர்வுகளை கொடுக்கவும்." பைபிளில் 23 வது அதிகாரத்தைப் படிக்கவும்.
மூன்று மெழுகுவர்த்தி பயன்படுத்தி சுத்திகரிக்கவும்.


இடது இதய சக்கரத்தை சுத்திகரித்தல்

கனிமங்கள் : மெழுகுவர்த்தியை இதயத்தினருகில் காண்பிக்கவும்.
" அன்னையே நான்தான் ஆன்மாவா ! உங்கள் கிருபையால் நான் தான் ஆன்மா!" .
" அன்னையே நான்தான் எதிராக செய்த தவறுகளை மன்னித்து விடுங்கள்"
" அன்னையே தங்கள் கிருபையால் அன்னையின் தூய அன்பிற்கு சாதனமாக அமைகிறோம் ".

பொது அறிவுரை

* தெய்வீக நுண் அதிர்வுகளை இடது இதய சக்கரத்தில் கொடுக்கவும். உங்களது கவனத்தை ஆன்மாவில் நிறுத்துங்கள்.
* அதிகமான செயல்களால் இதயம் பலம் குறைந்திருந்தால் 108 முறை இடது கையை உயர்த்தவும், மேலும் நுண் அதிர்வுகளை பயன்படுத்தி இடது கை அன்னையின் படத்தை நோக்கியும், வலது கை ஆகாசத்தையும் நோக்கி வைத்துக் கொள்ளவும். ஆகாசம் வெப்பத்தை தணிக்கும்.

வலது இதயத்தை சுத்திகரித்தல்

உறுதிமொழி : " அன்னையே உண்மையில் பொறுப்புணர்வோடு எனக்குள் செயல்படுகிறீர்கள்".
" அன்னையே நீங்கள் தான் நல்லொழுக்கத்திற்கு வழிகாட்டுகிறீர்கள் . கருணை உள்ளவர் " .

பொதுவான அறிவுரை :

வலது இதயத்தில் நுண் அதிர்வுகளைக் கொடுக்கவும். மரியாதைக்குரிய புருஷராக இருக்க கற்றுக் கொள்ளுங்கள். அதிகமான பொறுப்புகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். தந்தையிடமும், கணவரிடமும் மரியாதையுடன் நடந்து கொள்ளவும். வலது கை பூமி மீதும், இடது கை அன்னையை நோக்கியும் வைத்துக் கொண்டு, கவனத்தை சகஸ்ராராவில் நிறுத்த வேண்டும். இடது பக்க தடைகளால் வலது இதயம் தடைப்பட்டால் கூட நீங்கும்.

வியாழன், 2 ஜூன், 2011

தியானத்தைப் பற்றி அன்னையின் அருளுரை




அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, டீ அருந்திவிட்டுப் பேசாமல் அன்னையின் படத்திற்கு முன்பு அமர வேண்டும். தீபம், பத்திகள் ஏற்றிக் கொள்ள வேண்டும். அதிகாலையில் தெய்வீக அதிர்வுகள் அதிகமாக கிடைக்கும். பறவைகள் விழித்தெழும். சூரியன் உதயமாகும். மலர்கள் மலர ஆரம்பிக்கும். மனத்தில் தெளிவாக சுறுசுறுப்பாக இருப்பீர்கள். பத்து வயது குறைவாக தென்படுவீர்கள். உறக்கத்தைப் பற்றி நான் கூற வேண்டியதில்லை. அது தன்னிச்சையாக நிகழக் கூடியது.

தியானத்தில் எண்ணங்களை நிலை நிறுத்துவார்கள். எனது படத்தைக் கண்களால் பார்த்து கவனத்தை நிறுத்துங்கள். தியானத்தைத் துவக்கவும். லார்ட்ஸ் பிரேயரைக் கூறவும். எண்ணங்கள் அடங்கும். அதுதான் ஆக்ஞாவின் நிலை. நான் எல்லோரையும் மன்னித்து விட்டேன் , என்னையும் மன்னித்து விட்டேன்" என்று கூறவும். இப்போது தியானம் செய்யவும். " நான் இதி செய்ய வேண்டும், அதை செய்ய வேண்டும்" என்ற எண்ணம் தோன்றலாம். உங்கள் அன்னையிடம் சமர்ப்பணம் செய்யவும். நீங்கள் எண்ணங்களற்ற நிலையில்தான் ஆன்ம வளர்ச்சி பெற முடியும். உங்கள் சக்கரங்களில் சிலத் தடைகள் மறுக்கலாம் மறந்து விடுங்கள்.

இப்போது சரணடையுங்கள், ஏதாவது சக்கரம் தடைப்பட்டால் " அன்னையே தங்களிடம் இதை சமர்ப்பிக்கிறேன்" என்று கூற வேண்டும் . பகுத்தறிவுடன் சரணடையக் கூடாது. . கவலைகள் கூடாது. புனிதமான அன்பு மட்டும் தான் நம்மை சரியாக வழிநடத்தும். எல்லாக் கவலைகளையும் அன்னையிடம் ஒப்படைக்க வேண்டும். அகங்காரம் நிறைந்த சமுதாயம் இது. சரணடைதல் மிகவும் கடினமானது. ஏதாவது சக்கரங்கள் தடைப்பட்டால் சமர்ப்பணம் செய்து விடுங்கள்.

சக்கரங்களின் தூய்மை அடைவதை உணர்வீர்கள். காலையில் அதிகமாக எந்த செயல்களையும் , செய்ய வேண்டியதில்லை. கைகளை அதிகமாக அசைக்காதீர்கள். உங்கள் சக்கரங்கள் தியானத்தின் மூலம் தூய்மை அடையும்.




உங்களது இதயத்தில் அன்பை விதையுங்கள். உங்கள் குருவை அங்கு ஆசனம் கொடுத்து அமர செய்யவும். அதன் பிறகு தரையில் நெறிபடும் வகையில் கைகளை மேல் நோக்கி வைத்துக் கொண்டு வணங்கிக் கொள்ள வேண்டும். நீங்கள் ஆன்ம விழிப்புணர்வு பெற்ற பிறகு, தோன்றும் எண்ணங்கள் எல்லாம் கற்பனையல்ல. உங்கள் மனமும் பிரகாசமடைந்த நிலை பெறுகிறது. உங்களை தயார் செய்து கொண்டு, குருவிடம் சரணடையுங்கள். தியானத்திற்குரிய சூழ்நிலைக்காக, அன்னையிடம் வேண்டிக் கொள்ள வேண்டும்.


__ மாதாஜி ஸ்ரீ நிர்மலா தேவி