Translate

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

ஸ்ரீ கணேஷ தத்துவம்

ஸ்ரீ கணேஷ பூஜா (10 .8 .1989 )
லஸ் டயாப்னாறேட்ஸ் , ஸ்விட்சர்லாந்து ( ஸ்ரீ மாதாஜி சொற்பொழிவுகள் )







ஸ்ரீ கணேசனின் அடையாளம் குழந்தைத்தன்மை. எல்லாப் பூஜைகளுக்கும் ஆரம்பத்தில் ஸ்ரீ கணேசனை வழிபடுவோம். நம் எல்லோருக்கும் கணேஷர் என்றால் பக்தியும், சிரத்தையும் இருக்கின்றது. ஸ்ரீ கணேஷ தத்துவத்தை நாம் உணரவில்லை என்றால், நாம் பகவான் சாம்ராஜ்யத்தில் நுழைய முடியாது. அதனால் ஸ்ரீ கணேசரின் ஆசிர்வாதத்தை நாம் பெற வேண்டும். நமக்குள் குழந்தை சுபாவம் பரிபூரணமாக பிரகாசமாக இருக்க வேண்டும். அதனால் நாம் ஸ்ரீ கணேசனைத் துதி செய்கின்றோம். அவர் மிகவும் எளிதில் பிரசன்னமாகி வருவார். சஹாஜயோகாவில் சேர்வதற்கு முன் நாம் என்ன தவறுகள் செய்தாலும், அவர் அதை மன்னிப்பார். நீங்கள் குழந்தைகளைக் கவனித்துப் தாருங்கள் நீங்கள் அவர்களை அடித்தாலோ, கோபித்தாலோ, அவர்கள் எளிதில் அதை மறந்து விடுவார்கள். மாதாவின் கர்ப்பத்திலிருந்து இந்தப் பூமிக்கு வந்தது முதல் என்ன நடந்தது என்று குழந்தைகளுக்குத் தெரியாது. அதன் பின்தான் ஞாபக சக்தி வேலை செய்ய ஆரம்பிக்கும். அப்பொழுது அந்தக் குழந்தையானது விஷயங்களை மனதினுள் வைத்துக் கொள்ள ஆரம்பிக்கும். சிறு வயதில் குழந்தைகள் அவர்கள் மீது யார் அன்பு செலுத்துகின்றார்களோ அவர்களைத் தான் நினைவில் வைத்து கொள்வார்கள். வளர்ந்து கொண்டுருக்கும் போது தான் கெடுதல் செய்தவர்களை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டு பழகுவார்கள். அதே போன்று கால போக்கில் அவர்கள் விசித்திரமான. துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளை உருவாக்குவார்கள்.


ஸ்ரீ கணேஷ தத்துவம் மிகவும் நுண்மையானது. அந்த தத்துவம் சிருஷ்டியில் சகல ஜீவராசிகளும் இருக்கும். அந்த தத்துவம் சைத்தன்ய லஹரி ரூபத்தில் இருக்கும். சைத்தன்ய லஹரி இல்லாமல் உலகில் எந்தப் பொருள்களும் இல்லை. எல்லாப் பொருட்களிலும் ஒவ்வொரு அணுவிலும் நுண் அதிர்வுகள் முழுமையாக இருக்கும். ஸ்ரீ கணேஷர் பொருட்களை உருவாக்கும் முழு முதற்கடவுள் . சூரியனில் , சந்திரனில் மொத்தப் பிரபஞ்சத்தில், அவர் இருப்பதை நீம் கவனிக்கலாம். அவர் மனிதர்கள் உள்ளும் குடிகொண்டு இருக்கின்றார். சில மனிதர்கள் இந்த குழந்தை ஸ்பாவத்தை மூடி வைத்துக் கொள்ளும் பாவத்துடன் இருக்கின்றார்கள் . அவர்கள் ஸ்ரீ கணேஷா தத்துவத்தை தங்களுக்குள் மூடிக் கொண்டு அவர் இல்லை என்ற வாதத்தில் இருப்பார்கள். அதனால் தான் பல மனிதர்கள் விரும்பத்தகாத பயங்கரமான காரியங்கள் செய்வதை நாம் காண்கின்றோம் . ஆனால் ஸ்ரீ கணேஷர் அவர் செய்ய வேண்டிய காரியத்தை செய்வார். நம்முடைய பாவ காரியங்களுக்கு ஏற்ற முடிவுகள் வருமாறு அவர் செய்வார். ஸ்ரீ கணேஷருக்குப் பிடிக்காத காரியங்களில் நீங்களில் ஈடுபட்டால் அவர் ஓரளவு உங்களை மன்னிப்பார். அதன்பின் அவர் ஆண்களுக்கு உடல் ரீதியாகவும், பெண்களுக்கு மன ரீதியாகவும், நோய்கள் உற்பத்தி செய்வார். (பிரக்ருதி) - இயற்கையிலும் கூடப் பிரச்சனைகளை உண்டு பண்ணுவார். இயற்கைக்கு விரோதமான அறிகுறிகள் எல்லாமே ஸ்ரீ கணேசனின் சாபத்தின் விளைவுகளே, மனிதர்கள் எப்பொழுது பாவ காரியங்களில் ஈடுபடுவார்களோ, துஷ்ட பாதையில் போக ஆரம்பிப்பார்களோ, அப்பொழுது அவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க ஸ்ரீ கணேஷர் இயற்கை சீற்றத்தை ஏற்படுத்துவார். ஸ்ரீ கணேஷர் உலகின் எல்லாப் பொருள்களிலும், இருந்தாலும் கூட அவருக்குக் கோபம் வந்தால் எல்லாவற்றையும் அழிக்கும் சகதியும் இருக்கின்றது.


ஸ்ரீ கணேஷர் மூஷிக வாகன மேல் பிரயாணம் செய்வதால் சிறிய உருவத்தில் இருப்பார். அவர் எவ்வளவு மகோன்னதமானவரோ அவ்வளவுக்கு சிறிய உருவத்தில் இருப்பார். ஆனால் விவேகத்தின் மூலம் அவர் மற்ற கடவுள்களை விட மேலான இடத்தில் இருப்பவராவார். அவர் ஞானத்தின் இருப்பிடம். நமக்கு ஞானம் வருமாறு செய்வதில் குருவைப் போன்றவர். நாம் எவ்வாறு நடக்க வேண்டுமென்று அவர் கற்றுத் தருவார். ஸ்ரீ கணேசருக்கு எதிராக நடப்பவர்கள் , ஸ்ரீ மாதாஜியும் மன்னிக்க மாட்டார்கள். ஸ்ரீ கணேஷர் ஆதி மாதாவிற்குத் தன்னைப் பரிபூர்ணமாக அர்ப்பணம் செய்து கொண்டவர். அவருக்கு வேறு தேவதைகள் கிடையாது. எல்லாக் கடவுள்களிலும, மேலான கடவுள் சக்தி வாய்ந்தவர் அவர்தான். அவர் சக்தி மேற்பட்ட சக்தி கிடையாது.

குழந்தைகள் வளரும் போது ஸ்ரீ கணேஷரும் அவர்களுடன் வளர்வதைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் வளர்ந்து மனிதராக இருக்கும் போது ஸ்ரீ கநேஷருடைய சக்தியை விட அதிகமாக செய்வதற்கு முயற்சி செய்வார்கள். ஆகையால் பெற்றோர்கள், குழந்தைகளை அந்தக் குணாதிசயங்களை தக்க வைத்துக் கொள்ளுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அது அவர்கள் தலையாய கடமை. ஒரு சிசுவுக்கு முதலில் இருக்க வேண்டிய குணம் ஸ்ரீ கணேஷ தத்துவம். அதாவது விவேகம். விநேகம் இல்லாவிடில் எப்படி நடந்து கொள்வதென்று தெரியாமல் எல்லோருக்கும் தலைவலியாக அந்தக் குழந்தை இருக்கும். இதனால் அந்தக் குழந்தையின் மூலாதார சக்கரம் சரியான நிலையில் இல்லை என்று தெரிகின்றது. அந்தக் காலத்தில் இந்த மாதிரி நிறைய பேர் இருந்தனர். குழந்தை ஸ்வாபம், விவேகம் இந்த இரண்டு ஸ்பாவமும் எப்பொழுதும், பழுதடைந்த நிலையில் இருக்கின்றது. இந்தக் குழந்தைகளைக் கட்டுப்படுத்தப் பெரியவர்களுக்கு எவ்வாளவு தூரம் போகலாம். எவ்வளவு தூரம் போகக் கூடாது என்று தெரியாமல் இருந்தது. ஒரு வரைமுறைக்கு உட்பட்டு அவர்களை வைத்திருப்பது இயலாமல் போகின்றது.
ஸ்ரீ கணேஷர் விவேகத்தை நமக்குக் கொடுப்பவர்கள். அதனால் தாய் தந்தையர்க்கும் விவேகத்தை நமக்குக் கொடுப்பவர்கள். அதனால் தாய் தந்தையர்க்கு விவேகத்தை கொடுப்பவரும், ஸ்ரீ கணேஷர். தாய் தந்தையர் விவேகத்துடன் இருந்தால், குழந்தைகளைப் புரிந்து நடந்து கொள்ளும் ச்பாவம் தாய் தந்தையர்க்கு வரும். இந்த விவேகம் தாய் தந்தையர்க்கு இல்லை என்றால் குழந்தைகள் வழி மாறிப் போக வாய்ப்பு உண்டு. அதிகமாக குழந்தைகளைக் கண்டிக்க கூடாது. எவ்வாறு ஸ்ரீ கணேஷர் தன தாயாரான ஆதிமாதாவை வழிபடுகின்றாரோ அவ்வாறே நீங்களும் உங்கள் குழந்தைக்கு, பெற்றோரை மரியாதையுடன் நடத்தக் கற்றுக் கொடுக்க வேண்டும். குழந்தைகள் தாயாரை மதிக்க வேண்டு. இல்லையென்றால் அந்தக் குழந்தை நல்ல பிரஜையாக உருவாக்க முடியாது . தந்தை விஷயத்திலும் கூட குழந்தைகள் அவர்கள் பொறுப்பை மறக்கக் கூடாது. அதிகாரம் தந்தையின் கையில் இருந்தாலும் தாயை அதிகமாக மதித்தல் வேண்டும். இதே போன்றுதான் மனைவியும், கணவனை மதித்தல் வேண்டும். கணவனும், மனைவியும் குழந்தைகள் எதிரில் சண்டைப் போடக் கூடாது. அது ஸ்ரீ கணேஷ தத்துவத்தை பாதிக்கும். பகவான் கிருபையால், உங்கள் குழந்தைகள் ஆத்ம தரிசனம் பெற்றவர்கள். அதனால் குழந்தைகளை சரியாக வளர்க்க வேண்டும் என்பது சஹஜ யோகத்தில் மிகவும் அவசியமாகிறது. உங்கள் குழந்தைகளை ஞானத்துடன், நீதி தர்மத்துடன், வளர்ப்பதற்கு, நீங்கள் முதலில் அவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும். முதலில் குழந்தையின் விவேகத்தை பாதுகாக்க முயற்சி செய்யுங்கள். குழந்தைகள் ஏதாவது கூறினால் ஊக்கம் கொடுத்து உற்சாகம் செய்யுங்கள். அர்த்தமில்லாமல் பேசினால் அதை சீர்திருத்துங்கள். குழந்தைகள் விவேகத்துடன் இருந்தால் அவர்கள் புத்திசாலித்தனம் சுடர் விட்டுப் பிரகாசிக்கும்.

நமது உடலில் ஸ்ரீ கணேஷர் எவ்வாறு வேலை செய்கின்றார் என்று பார்ப்போம். உதாரணமாக நுண் அதிர்வுகள் கொடுக்கப் கட்ட தண்ணீர் உட்கொண்டால் உங்கள் வயிற்றுக்குள் போனாலும், வேறு எங்கு சென்றாலும் அந்தத் தண்ணீர் அங்கே கணேஷா தத்துவத்தை அதிகரிக்கும். விவசாயத்தில் கணேஷ தத்துவத்தின் அற்புதத்தை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். விதைக்கு நுண் அதிர்வுகள் செய்தால், அந்த விதியின் மூலம் பூமி மாதாவே நுண் அதிர்வுகள் பெறுவார்கள். சஹஜ யோகிகள் பூமி மேல் வெறும் காலுடன் நடந்தால், பூமி மாதாவிற்கு மிகுந்த நுண் அதிர்வுகள் வரும். மரம், செடி, கோடி, வைக்கோல், புல் எதுவானாலும் இந்த நுண் அதிர்வுகள் மிகுந்த பலனைக் கொடுக்கும்.

ஸ்ரீ கணேஷ தத்துவத்தை உணர்ந்து கடை பிடித்தால், நீங்கள் எல்லா விஷயங்களிலும் மிகவும் சரியாக நடந்து கொள்வீர்கள். நுண் அதிர்வுகள் கொடுக்கப்பட்ட விதைகள் அதன் அணுக்கள் மூலம் மண் , தண்ணீர் இருக்கும் இடங்களை அறிந்து அதற்கேற்றவாறு, நீண்டு நெளிந்தும் நிமிர்ந்தும் விரைவாக வளரும். இது மனிதர்களுக்கும் பொருந்தும். கணேஷ தத்துவத்தின் மூலம் மனிதர்களும் எப்படி வாழ வளர வேண்டும் என்பது தெரியும். ஸ்ரீ கணேஷ தத்துவம் ஆக்ஞா சக்கரத்தில் வரும் பொழுது, மிகவும் நுண்மையாக மாறிவிடும். ஏனெனில் ஆக்ஞா சக்கரத்திலிருந்து கணேஷ தத்துவம் மிகவும் தெய்வ ஷக்தி வாய்ந்ததாகி விடும். உதாரணமாக விதையானது வளர்ந்து பெரிய செடி, மரம் ஆவது போன்று கணேஷ தத்துவமானது மேலே செல்ல செல்ல அதிகரிக்கும். அதனால்தான் தியானம் செய்யும் பொழுது கண்களை மூடிக் கொண்டு தியானம் செய்வார்கள். அவர்கள் வெளியில் இருக்கும் பொருட்களைக் காண்பதற்கு விருப்பம் காண்பிக்க மாட்டார்கள். குண்டலினி சக்தியை அதிகரிப்பதற்கு ஸ்ரீ கணேஷ தத்துவத்தை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். கண்களை மூடிக் கொண்டு இருந்தால் தன அதிகமான கணேஷ தத்துவத்தை உணர முடியும். தூங்கும் பொழுது கண்ணின் கருவிழிகளில் அசைவுகள் இருக்கும். நிலையான புத்தி கணேஷ தத்துவத்தைப் பொறுத்து அமைகின்றது. ஸ்திர புத்தி இல்லையென்றால் கணேஷ தத்துவம் பாதிக்கப்படும். ஆண்களும், பெண்களும் இனக் கவர்ச்சியால், அதிகப்படியாய், எந்த நேரமும் ஒரு ஆண் பல பெண்களைப் பார்த்து நினைத்துக் கொண்டிருப்பது, அதே போல் ஒரு பெண் பல ஆண்களை நினைத்துக் கொண்டிருப்பது என்று இருந்தால் கணேஷ தத்துவம் பாதிக்கப்படும். அந்த மாதிரி ஜனங்களுக்கு தெய்வீகத்தன்மை உடைய குணங்கள் வருவது மிகவும் கடினம். அவர்களது ஆக்ஞா சக்கரம் சரியான நிலையில் இல்லாததால் இவ்வாறு உள்ளது. நீங்கள் மிகவும் சுகபோக விரும்பியாக சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் படபடப்பு அடைவது, கோபம் கொள்வது எளிதில் உணர்ச்சி வசப்படுவது என்று இருந்தால் கணேஷ தத்துவம் பாதிக்கப்படும். வெளியிலும் சென்று விடும். நீங்கள் பொருட்கள் வாங்கும் பொழுது மற்றவர்கள் ஆனந்தப் படுமாறு அவர்களோடு போட்டி போடாமல், உங்கள் தேவைக்காக மட்டும் வாங்கி அவர்களது ஆலோசனையையும் , கேட்டு வாங்கினால் உங்கள் கணேஷ தத்துவம் உயரும். அல்லாமல், மற்றவர்கள் வாங்குகின்றார்கள் நாமும் வாங்க வேண்டும் என்று இருந்தால் கணேஷ தத்துவம் பாதிக்கப்படும்.

தாயார் தன குழந்தைகளுக்குப் பல விதமான பொருட்கள் கொடுப்பார்கள். அவ்விதமே கணேஷ தத்துவமும் தாய்மையின் வடிவமானது. நீங்களும் தாய்மையின் வடிவமாக இருந்தால் கணேஷ தத்துவத்தை திருப்தி செய்தவர்கள் ஆவீர்கள். கலைஞர்களைப் பாருங்கள். அவர்கள் பல கலைகளைக் கற்று திறமையுடன் இருப்பாது, கணேஷ தத்துவம் அவர்கள் சுவாதிஷ்டான சக்கரத்தில் நல்ல முறையில் நெல்லை செய்வதால் தான். ஸ்ரீ கணேஷர் சுவாதிஷ்டான சக்கரத்தில் சரியாக வேலை செய்யாவிடில் பொருட்கள் அழகாக அமையாது. இன்றைய தேதியில் கலைஞர்களின் படைப்ப்புகள் விகாரமாக உள்ளது. அதுவும் இன்றையத் தேதிக்கு விற்பனையாகின்றது. சீக்கிரத்தில் உபயோகம் இல்லாமல் போய் விடுகின்றது . நீங்கள் கணேஷ தத்துவத்துடன் கூடிய அழகான பொருட்களையே உபயோகிக்க வேண்டும். அது மனதிற்கு அமைதி, சந்தோசம், சாந்தம் தரத் தக்கதாயிருக்க வேண்டும். இதையே நீங்கள் ஊக்குவிக்க வேண்டும்.

ஸ்ரீ கணேஷா உங்களை ஒரு சிறந்த தலைமகனாக உருவாக்குவார். மட்டரகமான பொருட்கள் சம்பந்தப் பட்டவைகளுக்கு தினம் தினம் வாழ்க்கையில் முக்கியத்துவத்தை கொடுத்து வருபவர்களுக்கு தாழ்ந்த மனப்பான்மை வந்து விடும். நீங்கள் மோனாலிஷா படத்தை ஒரு முறை பாருங்கள். அவர்கள் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் முகப் பொலிவு, பரிசுத்தமான அன்னையை நினைவூட்டும். அதற்குக் காரணம் மோனாலிஷாவிடம் கணேஷ தத்துவம் நிறைந்து காணப்படுவதால் தான். அவர்கள் ஒரு சாதாரணமான தாயார் தான். அவர்களின் ஒரே குழந்தை இறந்து விட்டதால், அதற்குப் பின் அவர்கள் சிரிக்கவுமில்லை. அழவுமில்லை. அந்த துரதிர்ஷ்டமான நேரத்தில் ஒரு சிறிய குழந்தையிடம் மிகவும் பிரியமாக இருந்த நேரத்தில் தான் ஓவியர் லியோனாட் மோனாலிஸாவை ஓவியமாகத் தீட்டினார். லியோனார்ட் ஓவியத்தில் முதலையானது தனக்கு அப்பொழுது தான் பிறந்த குட்டிகளை கண்களில் பாசத்துடன் தாய்மைப் பரிவுடனும், நோக்குமாறு ஒரு ஓவியம் உண்டு. அதே போல் மனிதர்களும் தங்கள் குழந்தைகளைப் பிரியத்துடன் நோக்குவார்கள். ஆனால் சஹஜ யோகத்தில் சொந்தக் குழந்தைகளை மட்டுமல்லாது மற்றக் குழந்தைகளையும் அதே தாய்மை உணர்வுடன் நோக்க வேண்டும்.

உங்கள் அன்பை குழந்தைக்கு எவ்வாறு வெளிப்படுத்துவது என்று நீங்கள் பழகிக் கொள்ள வேண்டும். நீங்கள் அன்பு என்ற பெயரில் குழந்தைக்கு நல்லது செய்கின்றீர்களா, கெட்டது செய்கின்றீர்களா என்று யோசிக்க வேண்டும். குழந்தைகளின் போக்குப்படி நடக்க கூடாது . அன்புடன், அதே சமயம் கண்டிப்புடன் நடக்க வேண்டும். சரியான வழியில் வளர்க்கிறோமா என்று அடிக்கடி சரி பார்த்துக் கொள்ள வேண்டும். சிறிய வயதில் கண்டிப்புடன் வளர்க்க வேண்டும். பெற்றோரிடம் எப்பொழுதும் மரியாதையையாக இருக்குமாறு பழக்க வேண்டும். பெற்றோர் ஒருவருக்கொருவர அன்யோன்யமாக இருக்க வேண்டும். சாதாரணமாகப் பிள்ளைகள் தங்கள் தாய் தந்தையரை இன்றையத் தேதியில் கொடுமைப் படுத்துகின்றார்கள். அதனால் உங்கள் குழந்தைகளை விவேகத்துடனும், சொற் பேச்சுக் கேட்குமாறும் வளர்த்து வாருங்கள். முதலை தன குட்டிகளை எப்படிப் பாசத்துடன் பார்த்துக் கொள்கின்றதோ அதே மாதிரி நீங்கள் உங்கள் குழந்தையின் மீது அன்பு செலுத்த வேண்டும்.

நம்முடைய சுற்றத்தாருடன் சுமூகமான உறவு வைத்துக் கொள்வதற்கு பின்வரும் விஷயங்களைப் புரிந்து கொள்ள சரியாக முயற்சி செய்ய வேண்டும். நம்முடன் குறைந்த வயது உடையவர்கள், செல்வத்தில் பின் தங்கியவர்கள். சஹஜயோகாவில் பின் தங்கியவர்கள் திறமை குறைந்தவர்கள். எல்லோரையும் ஒரு தாயைப் போல், தந்தையைப் போல் அரவணைத்து செல்ல வேண்டும். உங்கள் எல்லோருள்ளும் கணேஷ தத்துவம் இருக்கின்றது. அதை அதிகரிக்க வேண்டும். மற்றவர்கள் உங்களைப் போல் ஆன்ம தரிசனத்தில் முன்னேற்றம் பெற நீங்கள் முதலில் முழுமையான சஹஜ யோகிகளாக மாற வேண்டும். குரு தத்துவம் கணேஷ தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. இது இல்லாதவர்கள், பயங்கரமானவர்களாக மாறி விடுவார்கள்.

மனிதர்களின் வாழ்க்கை ஓடும் நதியைப் போன்றது. மனிதர்கள் எப்பொழுதும் கடவுளிடம் தொடர்பு உள்ளவர்களாக இருக்க வேண்டும். அப்படி இல்லையெனில், பிள்ளைங் கபடமில்லாத பரிசுத்தமான முழுமையை நீங்கள் புரிந்து கொள்ள முடியாது. அப்பா, அம்மா, என்ற வித்தியாசம் தெரியாமல், குழந்தையானது எல்லோரின் மடியிலும் அமர்வதைப் போன்று நீங்கள் கள்ளங்கபடம் இல்லாமல் பரிசுத்தமானவர்களாக வெள்ளை மனத்துடன் இருக்க வேண்டும்.





ஸ்ரீ கணேஷ தத்துவத்தை நுண் அதிர்வுகளைப் பிரபஞ்சம் முழுவதும் பரப்புவதற்கு நீங்கள் ஷக்தி வாய்ந்த கருவியாக இருக்க வேண்டும். ஸ்ரீ கணேஷர் ஓம்கார ஸ்வரூபம். தாய்க்கும் குழந்தைக்கும் நடுவில் இருக்கும் உண்மையான தெய்வீக அன்புதான் சைதன்ய லஹரி. அந்த இடைவெளி தான் சைதன்ய லஹரி.

கடவுளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள தொடர்பானது ஸ்ரீ கணேஷ தத்துவத்தின் மூலமாக வருகிறது. உங்களுக்கும், கடவுளுக்கும் தொடர்பு இருக்கும் பொழுது அங்கே சைதன்ய லஹரி இருக்கின்றது. அதே போல் இந்தப் பூமி முழுவதும் நீங்கள் செய்கின்ற எல்லாக் காரியங்களுக்கும் உங்களுக்கும் நடுவே சைதன்ய லஹரி இருக்க வேண்டும். எது எல்லா காரியமோ அதற்கும் உங்களுக்கும் நடுனே சைதன்ய லஹரி இருக்கும்.





நாம் சதா சர்வகாலமும் கேட்டுக் கொண்டிருக்கின்ற பிரபஞ்ச முழுவதும் உள்ள திவ்ய சக்தியைப் பற்றி உங்களுக்குக் கூற விரும்புகின்றேன். அதுதான் சைதன்ய லஹரி. எங்கு எல்லாம் நான் பெரியவன் நான் முக்கியம் வாய்ந்தவன் என்று நான் என்ற சொல் இல்லாமல் நான் என்ற அடையாளம் மறைந்து போகுமோ அங்கு தான் பரம சைதன்யம் உள்ளது. அது தான் சைதன்ய லஹரி.

எங்கு எல்லாம் அம்மா அப்பா என்று உடல் ரீதியான சம்பந்தம் மட்டுமல்லாமல் எங்கே நுண்மையான அன்பு மட்டுமே நிலைக்கிறதோ அந்த சிருஷ்டியில் சகலப் பொருட்களும் உற்பத்தியாகி அங்கேயே முடிகிறது. அதுதான் சைதன்ய லஹரி. உதாரணத்திற்கு சூரியனின் கதிர்கள் குளோர்பில் உற்பத்தி செய்யும். சமுத்திரத்திலிருந்து நீர் ஆவியாகி மேலே சென்று மேகமாகி பின் அதே நீர் பூமியில் மழையாகப் பெய்து கடலில் கலக்கின்றது. இது எல்லாம் பரம சைதன்யத்தில் தான் இருக்கின்றது. இது தான் ஞானம் . வேறொன்றுமில்லை. இதுதான் உண்மை. வேறொன்றுமில்லை. சர்வம் ஜோதி மயம் தவிர வேறு இல்லை. எப்பொழுது பரம சைதன்யம் சென்று விடுகின்றதோ அப்பொழுது உள்ளுக்குள் ஞானம் விடைப் பெற்று சென்று விடும். அஞ்ஞானம் வந்து சேரும். வெளிச்சம் இல்லையென்றால் அந்த இடத்தில் இருள் இருக்கும். நிஜம் என்ற வெளிச்சம் இருக்குமிடத்தில் அஞ்ஞானம் என்ற இருள் இருப்பதில்லை. ஒரு தடவை நிஜத்தைத் தரிசித்து விட்டால் அஞ்ஞானம் என்ற இருள் வர சந்தர்ப்பம் இல்லை. மனிதர்கள் உடல் ரிஈதியான சம்பந்தங்கள் என்ற குறுகிய வட்டத்திற்குள் இருந்து கொண்டு அவர்களது உண்மையான நிலையை ஆன்மா என்ற அடையாளத்தை மறந்து விடுகின்றார்கள் . நீங்கள் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். எல்லோரும் பரமம் சைதன்யத்தில் இருக்கின்றீர்கள். பரம சைதன்யம் தான் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகின்றது. பரம சைதன்யம் தான் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகின்றது. . உலகிலுள்ள பிரச்சனைகளில் உழன்று நாம் ஆன்மா என்ற அடையாளத்தை நாம் மறந்து விடுகின்றோம். ஏன் அப்படி நடக்கிறது என்றால் நமது சொந்த அஜாக்கிரதையால் தான்.

நீங்கள் இந்தப் பிரபஞ்சத்தின் மொத்தமும், முழுமையிலும் ஐக்கியமாகி தனிப்படுத்தப்பட முடியாதவர்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும். இந்த உலகம் முழுவதும் நடப்பவையெல்லாம் கடவுளின் திருவிளையாடல்களே. அது எப்படி என்றால் உதாரணமாக நீங்கள் சூரியனைப் பார்க்க வேண்டுமென்று நினைக்கின்றீர்கள். அப்பொழுது குளத்திலுள்ள தண்ணீரைப் பார்க்கின்றீர்கள். சூரியனின் பிம்பம் தெரிகின்றது. ஆனால் அது உண்மையான சூரியன் இல்லை. அதே போல் கோடை காலத்தில் சாலையில் செல்லும் போது தூரத்தில் தண்ணீர் ஓடுவது போல் தெரியும். அது கானல் நீர். உண்மையான தண்ணீரில்லை. அதுபோல் பரம சைதன்யம் உண்மையானது என்றாலும், நீங்கள் மாயையால் மூடப் பெற்று மாயைகளை உண்மையென நினைக்கின்றீர்கள். இந்த மாதிரி உலக நாடகம் நடக்கின்றது. நீங்கள் பந்தன் போடுவதால் பரம சைதன்யம் வேலை செய்யத் தொடங்குகின்றது. ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு வேளையிலும் பரம சைத்தன்யம் தான் எல்லாவற்றையும் செய்கின்றது என்று புரிந்து கொள்ள வேண்டும். விழிப்புணர்ச்சியோடு நீங்கள் பரம சைதன்யத்தின் காரியங்களை கவனமாகப் பார்க்க வேண்டும். நீங்கள் பரம சைதன்யத்தின் காரியங்களைப் பற்றிய முழுக் கவனத்தோடு இருக்க முயற்சி செய்ய வேண்டும். பலர் சுற்றி நடக்கும் காரியங்களை அவர்கள் புத்தியால் புரிந்து கொண்டாலும் மனதளவில் உணர்ந்து கொள்ள மாட்டார்கள். அப்படியே உணர்ந்து கொண்டாலும் சித்தத்திர்குல் கொண்டு வர மாட்டார்கள். அதனால் மூன்று முக்கிய விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.




1 . தலைப் பகுதி 2 . இருதயப் பகுதி 3 . குடல் பகுதி மூன்றையும் அபிவிருத்தி செய்ய வேண்டும். நீங்கள் இந்த மூன்றுப் பகுதியையும் அபிவிருத்தி செய்தால் இந்தப் பரம சைதன்யம் எல்லா முறையில் வேலை செய்யும். பணம் சம்பந்தப்பட்ட லளஹிக விஷயங்கள் பரம சைதன்யத்தி ற்கு கிடையாது. பரம சைதன்யம் எல்லாவற்றையும் உங்களுக்கு செய்து காட்டும். அதற்கு மனசு கிடையாது. பரம சைதன்யம் பணத்தை உருவாக்குவதில்லை. ஆனால் பணம் சம்பாதிப்பதற்கான வழிமுறைகளை பரம சைதன்யம் உருவாக்கிக் கொடுக்கின்றது. இந்த விஷயங்களை நீன்கள் அழகாகப் புரிந்து கொள்ள வேண்டும். இது மிகவும் பரமானந்தத்தைக் கொடுக்கின்ற விஷயமாதலால் பரம சைதன்யத்தை சரியாகப் புரிந்து கொண்டு, அனுபவசாலிகள் ஆகலாம். பரம சைதன்யத்திடம் அதிகாரம் செய்யாமல் தேவையானவற்றை அன்புடன் பிரார்த்தித்துக் கேட்டால் அதன் வேலைகளை அது செய்யும் . பரம சைதன்யத்தில் இருந்து நீங்கள் பிரிக்க முடியாத பகுதி என்று புரிந்து கொண்டால் இனிமையானவர்களாகவும், அன்பானவர்களாகவும், விவேகம் உள்ளவர்களாகவும், கருணை உள்ளவர்களாகவும் மாறுவீர்கள் என்பதில் எந்த வித சந்தேகமுமில்லை.

ஜெய் ஸ்ரீ மாதாஜி
திருக்குறள் ஸ்ரீ மாதாஜியின் பொன்மொழிகளுடன் ஒத்து போதல்

"God is nothing but pure science"
தூய அறிவே கடவுள்

" கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன்
நற்றான் தொழா ஆர்எனின் " ---- இறைவனுக்கு கட்டிய முதற் பெயர் தூய அறிவாளி ஆகும்.

" God is REALIZATION OF TRUTH "
உண்மையை உணரும் உயர்நிலையே கடவுள்
சத், சித், ஆனந்தம்
1 . அன்பு வழி
2 . அறிவு வழி, ஞான vazhi
3 . அமைதி வழி, தவ வழி
4 . விழிப்புணர்வு வழி
5 . ஆனந்த வழி
6 . உண்மை வழி