Translate

வெள்ளி, 7 மார்ச், 2014

ஸ்ரீ கணேஷ பூஜை , அமெரிக்கா 07.09.1986



ஸ்ரீ கணேஷ பூஜை , அமெரிக்கா 07.09.1986

இறைவன் ஸ்ரீ கிருஷ்ணா அவர்களின் பூமியில் நாம் ஸ்ரீ கணேசரின் பிறந்த நாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இறைவனின் ஸ்ரீ கிருஷ்ணாவின் மகனின் பிறந்த நாள் இம்மண்ணில் கொண்டாடப் பட்டிருப்பது வழக்கத்திற்கு மாறானது. இறைவன் ஸ்ரீ கணேஷர் இந்த பூமியில் ஸ்ரீ மகா விஷ்ணுவாக அவதரித்துள்ளார். அவர் ஸ்ரீ ராதாவின் மகனாகவும் , இறைவன் ஏசு கிறிஸ்துவாகவும் அவதரித்துள்ளார். இந்த பண்டிகையை கொண்டாடுவதால் நாம் இறைவன் ஏசு கிறிஸ்துவை ஸ்ரீ கிருஷ்ணாவின் மகனாக ஏற்றுக் கொள்கிறோம். இதை பற்றிய ஒரு கதை தேவி மகாத்மியத்தை படித்தீர்களானால் இந்த குழந்தை ஒரு முட்டை வடிவத்தை எடுத்ததென்றும், அதில் பாதி ஸ்ரீ கணேஷராகவும் , மீதி ஸ்ரீ மஹா விஷ்ணுவாகவும் மாறியதை அறிகிறோம். பரிணாம வளர்ச்சியில் இத்தகைய நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மனிதர்களால் புரிந்து கொள்ளக் கூடிய இவைகளினால் நான் மிகவும் மகிழ்வடைகிறேன். இறைவன் ஸ்ரீ ஏசு ஸ்ரீ கணேஷருடைய அவதாரமே. அவர் நிரந்தரமான குழந்தை வடிவம். அவர் ஸ்ரீ ஏசுவாக வந்த பொழுது கிருஷ்ணாவின் மகனாக வந்தார். ஸ்ரீ பார்வதி ஸ்ரீ கணேஷரை உருவாக்கிய போது அவர் அன்னை பார்வதிக்கு மட்டுமே குழந்தையாக இருந்தார். அன்னை ஸ்ரீ பார்வதி கணேஷரை தனக்காக படைத்துக் கொண்டார். இறைவன் சிவனிற்கோ, இறைவன் விஷ்ணுவிற்கோ தங்களை ஆட்படுத்திக் கொண்ட தேவதைகள் உள்ளனர். ஆதலால் தனது சக்தியை இந்த உலகத்தில் செயல்படுத்துவதற்க்காக பார்வதி ஸ்ரீ கணேஷரை படைத்தார்.
ஸ்ரீ சக்தி இந்த உலகை படைக்க முற்படும் போது இறைவன் ஸ்ரீ சிவன் பார்த்துக் கொண்டிருக்கும் போது முதலாவதாக படைக்கப் பட்டது குழந்தை தனமே. அதற்கு ஒரு உருவமாக அமைந்தது தான் ஸ்ரீ கணேஷர். இந்த பிரபஞ்சம் முழுவதும் குழந்தைதனத்தால் நிரப்பப் பட்டிருக்கிறது. அதையே நாம் நம்காரம் என்கிறோம். இந்த குழந்தைத்தனம் உலக சிருஷ்டியைக் காத்து அதிலுள்ள எல்லாப் பொருள்களிலும் ஊடுருவி உள்ளது. பொருட்கள் அனைத்தும் குழந்தைத்தனம் பெற்றவையே. பொருட்களை நாம் உதைத்தால் அது நமக்கு ஊறு செய்யும். இது அதனது இயல்பு. அது அண்ட் உனக்கு எந்த வழியிலும் துன்பம் செய்ய விரும்பவில்லை. நீ அதை உதைத்தால் அதனால் நீ துன்பப்படுகிறாய். ஆதலால் அது ஜடம் என்று அழைக்கப்படுகிறது. அது படைக்கப்பட்ட தன் உள் இயல்பினால் அவ்வாறு செயல்படுகிறது.
மிருகங் களிடமுள்ள குழந்தைதனமானது வேறு விதமானது. அவைகள் தாங்கள் தவறு செய்வதை தாங்களே அறியாதவை. அவை மற்ற மிருங்களை கொல்லும் போதோ நமது உடைமைகளின் மீது வரம்பு மீறி செயல்பட்டு நம்மை தொல்லையில் ஆழ்த்தும் போதோ அவைகள் தாங்கள் பாவம் செய்கிறோம் என்றோ சட்ட திட்டங்களுக்கு புறம்பாக செயல்படுகிறோம் என்றோ அறியாதவை. அவைகள் தங்களுக்கு உள்ளே அமைக்கப்பட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு வாழுகின்றன. ஆதலால் அவை பசு என்று அழைக்கப்படுகிறது. இதனது பொருள் கட்டுப்பட்டவை என்பதாகும். 'பாஷா' என்றால் கட்டுப்பாடு என்று அர்த்தம். அவை சிவனின் கட்டுப்பாட்டிற்குள் உள்ளவை. இறைவன் சிவன் பசுபதி என்று அழைக்கப்படுகிறார்.
அகங்காரம் அவைகளிடம் இல்லாததால் அது குழந்தைத்தனம் சரியாக அமைகிறது. ஆதலால் அவைகள் குழந்தைதனமானவை . ஒரு புலி ஒரு பசுவை உண்ணலாம். அப்பொழுதும் குழந்தைதனமானது. யானை ஒரு மனிதனை மிதிக்கலாம், அப்பொழுதும் குழந்தைதனமானது. படைப்பின் மேல் நிலைகளுக்கு செல்லும் போது அன்னை சக்தியானவள், மனிதர்களிடமுள்ள குழந்தைதனத்தைக் காக்க கூடிய தன்மையான படைப்பை செய்ய நினைத்தாள். அது பொருட்களின் படைப்பிற்கு மேலே , படைப்பிற்கு மேலே அமைய வேண்டுமென நினைத்தாள். ஆதலால், ஸ்ரீ கணேஷரை படைத்தாள். நீங்கள் அந்த தலையை அவர் பெற்றதை அறிவீர்கள். அது ஸ்ரீ கணேஷரை நினைவு படுத்துகிறது. கஜானனா என்ற அவரது பெயரை குறிக்கும் வகையில் அவர் மிருக உருவத்தில் ஒத்திருக்கிறார். மிருக குடும்பத்திலேயே யானை தான் மிகவும் மதி நுட்பம் வாய்ந்தது என்ற கருத்தை வலியுறுத்துவதில் இந்த குழந்தைத்தனமான தலையிலே அஹங்காரம் வளர முடியாது. அங்கு அஹங்காரம் இல்லை. அது அஹங்காரம் அற்ற நிலை.  மனிதர்கள் வேறு வகையாகப் படைக்கப்பட்டார்கள். கரி அணு மூலம் அமினோ அமிலங்களின் சுழற்சியில் அமைக்கப்படும் பொழுது ஒரு புது விதமான பரிமாணப் படைப்பு மனிதர்களிடையே விசுத்தி நிலையில் அமைந்தது. ஆதலால் மனிதர்கள் நிமிர்ந்த தலை அமைப்பைப் பெற்றனர்.
ஜெய் ஸ்ரீ மாதாஜி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக